என் மலர்
நீங்கள் தேடியது "Singapore Badminton Open"
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் சோ வூய் யிக் - ஆரோன் சியா ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 19-21, 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்தத் தோல்வியின் மூலம் இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து, வென் யு ஜாங்குடன் மோதினார்.
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங்குடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 21-14, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்து சுற்றுக்கு பிவி சிந்து முன்னேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரியான்ஷு ராஜாவத் தோல்வியடைந்தார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அன்மோல் கார்ப், மாள்விகா பான்சோத், ரக்ஷிதா ராம்ராஜ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரியான்ஷு ராஜாவத்- ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.
முதல் செட்ட இந்திய வீரரும் அடுத்த 2 செட்டை ஜப்பான் வீரரும் வென்றனர். இதன்மூலம் ராஜாவத் 21-14, 10-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர். அதன்படி இந்தியாவின் அன்மோல் கார்ப், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சென் யு பெய்யுடன் மோதினார். இதில் 11-21, 24-22 என்ற செட் கணக்கில் வெளியேறினார்.
ரக்ஷிதா ராம்ராஜ் 14-8, 8-21 என்ற செட் கணக்கில் படுமோசமாக தோல்வியடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான மாள்விகா பான்சோத், தாய்லாந்து வீராங்கனை சுபனிதாவுடன் மோதினார். முதல் செட்டை கைப்பற்றிய மாள்விகா அடுத்த 2 செட்டுகளையும் இழந்தார். இதனால் 21-14, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பிச்சா சோகீவாங்கை எதிர் கொண்டார்.
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பிச்சா சோகீவாங்கை எதிர் கொண்டார்.
முதல் செட்டை 19-21 என்ற செட் கணக்கில் ஆகர்ஷி இழந்தார். இதனால் 2-வது செட்டை வெல்ல கடுமையாக போராடிய அவர் 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் 19-21, 20-22 என்ற கணக்கில் முதல் சுற்றில் ஆகர்ஷி தோல்வியடைந்தார்.






