என் மலர்
நீங்கள் தேடியது "Syed Modi International"
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, துருக்கியின் நல்ஜியான் இன்சி-பென்கிசு எர்டின் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ரக்ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-15, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 21-13, 21-19 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையான லோ சின் யானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சக நாட்டின் ஜெனித் அபிகைல்-லிதிகா ஸ்ரீவஸ்தவா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-17, 21-12 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாட்டு வீரர் சனீத் தயானந்த் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-6, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 21-16, 10-21, 21-12 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான ராகௌல் பரத்வாஜை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-12, 21-14 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான ஷ்ரேயா லீலேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்ரையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாடு வீரர் கவின் தங்கம் உடன் மோதினார்.
இதில் கிடாம்பி அதிரடியாக ஆடி 21-13, 21-10 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 21-15, 21-10 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான ஷஷ்வத் தலாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-14, 21-9 என்ற நேர்செட்டில் சக வீராங்கனை அமோலிகா சிங் சிசோடியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் காஷ்யப் 9-21, 22-20, 21-8 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் பிர்மான் அப்துல்கோலிக்கையும், சாய் பிரனீத் 21-12, 21-10 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரேன் ருஸ்தாவிதோவையும், சமீர் வர்மா 22-20, 21-17 என்ற நேர்செட்டில் சீன வீரர் ஜாவ் ஜன்பெங்கையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். #SyedModiInternational #SainaNehwal #Kashyap






