என் மலர்
நீங்கள் தேடியது "எச்எஸ் பிரனாய்"
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்ரையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாடு வீரர் கவின் தங்கம் உடன் மோதினார்.
இதில் கிடாம்பி அதிரடியாக ஆடி 21-13, 21-10 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 21-15, 21-10 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான ஷஷ்வத் தலாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சூ லீ-யாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 6-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் மார்சிலினோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் வாங் உடன் மோதினார்.
முதல் செட்டை லக்ஷயா சென்னும், 2வது செட்டை வாங்கும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீனாவின் லூ குகான்சு உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய பிரனாய் 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவானின் சூ டின்-சென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-18 என இந்திய வீரர் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-15, 21-8 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
- இதில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் கான்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பானின் கோகி வடனாபே உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-8 என ஜப்பான் வீரர் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் அடுத்த இரு செட்களை 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு நட்சத்திர வீரரான இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் ஷி யுகி உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 11-22, 22-20, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்..
மற்றொரு போட்டியில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசியாவின் பர்கான் உடன் மோதினார். இதில் பர்கான் 21-17, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தினார்.
- பி.வி.சிந்து ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
- டென்னிசில் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
பிரனாய் வரும் புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் மோதுகிறார்.
- பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் டகாஹஷி உடன் மோதினார்.
இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவான் வீரர் வாங் உடன் மோதினார். இதில் பிரனாய் 21-11, 20-22, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் , பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.
- மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.
பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் டோமா 21-19, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் பிரணாயை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே பிரனாய் வெளியேறியது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார். அந்த போட்டி மாலை 6.25 மணிக்கு தொடங்குகிறது.






