search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indonesia Open"

    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இந்திய அணி மலேசிய உலக சாம்பியன் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தென் கொரியா கேங், சியோ ஜோடியுடன் போட்டியிட்டனர்.

    இந்த ஆட்டத்தில், தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி வெற்றிப்பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை மலேசிய உலக சாம்பியன் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.

    இந்த போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி இணை 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஆரோன் சியா-சோ வூய்யிக் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    • இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    • தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்.

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன், முகம்மது ரியான் ஆர்டியான்டோவுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தென் கொரியா கேங், சியோ ஜோடியுடன் போட்டியிட்டனர்.

    இந்த ஆட்டத்தில், தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி வெற்றிப்பெற்றது.

    • இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியுடன் மோதியது.
    • இதில் 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வென்றது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன், முகம்மது ரியான் ஆர்டியான்டோவுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரருடன் மோதினார்.
    • இதில் 21-18, 21-16 என்ற செட் கணக்கில் பிரனாய் வென்றார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரர் நராகோவை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் அக்செல்சென்னை எதிர்கொள்கிறார்.

    • இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஹாங்காங் வீரருடன் மோதினார்.
    • இதில் 21-18, 21-16 என்ற செட் கணக்கில் பிரனாய் வென்றார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச் எஸ் பிரனாய் ஹாங்காங் வீரர் ஆங்க்சை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் நரகோடாவை எதிர்கொள்கிறார்.

    • இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி சீன வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் மலேசியா வீரரை எதிர்கொண்டார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் மலேசிய வீரரை 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    இதேபோல், மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த் கிடாம்பியை நாளை எதிர்கொள்கிறார்.

    • இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரணாய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.
    • இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.

    இந்தோனேசியா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் இன்று துவங்கி அடுத்த மாதம் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரனோய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் 8-ம் நிலை வீரரான பிரனோய் முதல் சுற்றில் 21-16, 21-14 என்ற செட் கணக்கில் உலகின் 11-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.


    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 21-15, என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை முதல் சுற்றில் வீழ்த்தினார்
    • இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினார்

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் எச்.எஸ்.பிரனோய், ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    காலிறுதியில் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன், பிரனோய் மோத உள்ளார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேசிய ஜோடியிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.
    பாலி:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். 

    இதில், பி.வி.சிந்து 21-15, 9-21, 14-21 என்ற செட் கணக்கில் ராட்சனோக்கிடம் வீழ்ந்து தோல்வியைச் சந்தித்தார்.

    சமீபத்தில் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ், பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் பி.வி.சிந்து அரையிறுதியில் தோற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி மலேசிய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    பாலி:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சிம் யுஜினுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 21-19, 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

    ஆண்கள் இரட்டையர் போட்டி ஒன்றில், இந்தியாவின் சாத்விக்சாய் ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, மலேசியா நாட்டின் கோ ஜே பெய் மற்றும் நூர் இஜுதீன் இணையை எதிர்த்து விளையாடியது. இதில் 21-19, 21-19 என்ற செட் கணக்கில் போராடி இந்திய இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
    பாலி:

    இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள யோனி லியை (ஜெர்மனி) சந்தித்தார். 37 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-18 என்ற நேர்செட்டில் யோனி லியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 14-21, 21-19 என்ற செட் கணக்கில் கிறிஸ்டோ போபோவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.
    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் காலிறுதியில் பிவி சிந்து, பிரணாய் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர். #IndonesiaOpen
    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்தாவில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் ஒற்றையருக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 14-21, 15-21 நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் எச்எஸ் பிரணாய் சீனாவைச் சேர்ந்த ஷி யுகியை எதிர்கொண்டார். இதில் பிரணாய் 17-21, 18-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். ஷி யுகி உடன் பிராணய் நான்கு முறை மோதியுள்ளார். இதில் மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளார்.



    பிவி சிந்து முதல் செட்டில் இரண்டு முறை சமநிலை அடைந்தார். ஆனால் முதல் பாதி நேரத்தில் 10-11 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்தங்கினார். 2-வது பாதி நேரத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோ தொடர்ச்சியாக 6 புள்ளிகள் பெற்றதால் பிவி சிந்து 14-21 எனத் தோல்வியடைந்தார்.

    2-வது செட்டில் பிவி சிந்து 6-3 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் ஸ்கோர் 7-7 என சமநிலை அடைந்தது. அதன்பின் ஹி பிங்ஜியாவோ 11-8 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து முன்னிலை பெற முயன்றார். ஆனால் ஹி பிங்ஜியாவோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சிந்து 15-21 என 2-வது செட்டை இழந்தார்.
    ×