என் மலர்tooltip icon

    ஹாங்காங்

    • அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27ம் தேதி மாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி சாங் ஷுக் கூறியுள்ளார்.

    சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பிடித்து கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. இதில் பலத்த காற்று காரணமாக 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

    ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் கரும்புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இதுவரை 75 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. 104 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி சாங் ஷுக் கூறியுள்ளார்.

    • ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தாய்போ:

    சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பிடித்து கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. இதில் பலத்த காற்று காரணமாக 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

    ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் கரும்புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இதுவரை 75 பேர் பலியானதாக தெரிவிக்கப் பட்டது. ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. 70-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாயமான 200 தேடும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    தீ விபத்து தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தாய்போ:

    சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பிடித்து கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. இதில் பலத்த காற்று காரணமாக 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

    ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் கரும்புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் உள்பட 36 பேர் பலியானதாக தெரிவிக்கப் பட்டது. ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 300 தேடும் பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • இந்தக் குடியிருப்பில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் வாங் பெக் கோர்ட் காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் 2.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் மேல்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

    தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்னும் 279 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்றது.
    • இதன் இறுதிச்சுற்றில் கனடா வீராங்கனை எம்போகா வெற்றி பெற்றார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் கனடாவின் விக்டொரியா எம்போகா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புஸ்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எம்போகா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக கிறிஸ்டினா 2வது செட்டை 7-6 (11-9)

    என போராடி வென்றார்.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை எம்போகா 6-2 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதன் அரையிறுதி சுற்றில் கனடா வீராங்கனை எம்போகா வெற்றி பெற்றார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் கனடாவின் விக்டொரியா எம்போகா, சக நாட்டு வீராங்கனையான லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

    இதில் 2-6 என முதல் செட்டை இழந்த எம்போகா அடுத்த இரு செட்களில் அதிரடி காட்டி 6-3, 6-2 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கனடாவின் எம்போகா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புஸ்கா உடன் மோதுகிறார்.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா காயத்தால் வெளியேறினார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எம்போகா 6-1 என முதல் செட்டை வென்றார். அடுத்த செட்டில் 3-1 என முன்னிலை பெற்றிருந்தபோது கலின்ஸ்கயா காயத்தால் விலகினார். இதையடுத்து, எம்போகா அரையிறுது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா வெற்றி பெற்றார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, சக நாட்டு வீராங்கனை கமீலா ராகிமோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கலின்ஸ்கயா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • துபாயில் இருந்த வந்த சரக்கு விமானம் ரன்வேயில் தரையிறங்கியது.
    • திடீரென ரன்வேயில் இருந்து விலகி கடலுக்குள் பாய்ந்தது.

    துபாயில் இருந்து போயிங் 747 கார்கோ விமானம் துபாயில் இருந்து ஹாங்காங் விமான நிலையத்திற்கு வந்தது. ரன்வேயில் இறங்கி வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரன்வேயில் இருந்து விலகி அருகில் உள்ள கடலுக்குள் பாய்ந்தது.

    விமானத்தின் பாதி பகுதியில் கடலில் மூழ்கியது. என்றாலும் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஆனால் ரன்வே அருகே பணிபுரிந்து கொண்ட ஊழியர்கள் இருவர் விமானத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஹாங்காங் விமானத்துறை தெரிவித்துள்ளது.

    ஹாங்காங்கின் வடக்கு ரன்வே பரபரப்பாக இயங்கும் சர்வதேச விமான நிலையம் ஆகும். ஆனால், தெற்கு மற்றும் மத்திய ரன்வே தொடங்கு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
    • இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

    சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹாங் காங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    குவாரி பே (Quarry Bay) பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஆய்வில், இது 1.5 மீட்டர் நீளமும், 450 கிலோகிராம் எடையும் கொண்ட அமெரிக்க குண்டு என்று கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆண்டி சான் டின்-சு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு என்பதை உறுதி செய்துள்ளோம்.

    இதை செயலிழக்கச் செய்யும் பணி மிகவும் ஆபத்தானது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,900 வீடுகளில் வசிக்கும் சுமார் 6,000 பேரை வெளியேற்றினோம்" என்று தெரிவித்தார்.

    வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் பல மணி நேரம் போராடி குண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

    அந்தத் தாக்குதல்களில் வெடிக்காமல் பூமியில் புதைந்துபோன குண்டுகள், இன்றும் கட்டுமானப் பணிகளின் போது அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டிலும், வான் சாய் பகுதியில் இதேபோன்ற ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்தது.
    • இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி இறுதிக்கு முன்னேறியது.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்றது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் லின் பிங் வெய்-சென் செங் குவான் ஜோடி உடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி முதல் செட்டை 21-19 என போராடி கைப்பற்றியது.

    இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய தைவான் ஜோடி அடுத்த இரு செட்களை 21-14, 21-17 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்தது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் லீ ஷிபெங் உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய லீ ஷிபெங் 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். லக்ஷயா சென் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

    ×