search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HongKong"

    • இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் அதிகரிக்கும்.
    • சிங்கப்பூர், ஹாங்காங்கில் 4 சதவீதம் மட்டுமே சம்பள அதிகரிப்பு இருக்கும் என்கிறது ஆய்வு.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்த புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அமைப்பு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், புளூம்பெர்க் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சீனப் பொருளாதாரம் மந்தமாகியுள்ள நிலையில், நிறுவனங்கள் இந்தியப் பொருளியல் வளர்ச்சியைச் சாதகமாக்கிக்கொள்ள முனைந்திருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது.

    இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் அதிகரிக்கும். ஆனால் சிங்கப்பூர், ஹாங்காங்கில் 4 சதவீதம் மட்டுமே சம்பள அதிகரிப்பு இருக்கும் என்கிறது.

    சிங்கப்பூர், ஹாங்காங் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் முதலீட்டாளர்கள் அதிகப் பொருள்களை வாங்குகின்றனர்.

    இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளம் ஹாங்காங் ஊழியர்களைவிட 4.5 சதவீதம் அதிகம். சிங்கப்பூர் ஊழியர்களைவிட அது 7.7 சதவீதம் அதிகம் என கூறுகிறது.

    உயர் பதவிகளுக்கான ஊழியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாலும் தொழில்நுட்பம், தொழிலில் ஏற்படக்கூடிய இடையூறுகளை மதிப்பிடுதல் போன்ற பிரிவுகளில் திறனாளர் பற்றாக்குறையாலும் இந்தியாவில் சம்பளம் தொடர்ந்து உயரும் என தெரிவித்துள்ளது.

    ×