என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுக்குமாடி குடியிருப்பு"

    • ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தாய்போ:

    சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பிடித்து கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. இதில் பலத்த காற்று காரணமாக 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

    ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் கரும்புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இதுவரை 75 பேர் பலியானதாக தெரிவிக்கப் பட்டது. ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. 70-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாயமான 200 தேடும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    தீ விபத்து தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • இந்தக் குடியிருப்பில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் வாங் பெக் கோர்ட் காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் 2.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் மேல்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

    தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்னும் 279 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானது

    ஹாங்காங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த தீவிபத்தினால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • மான்செஸ்டர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
    • இதை புனரமைக்கும் பணி கடந்த சில மாதமாக நடைபெற்று வந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

    அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. எனவே அந்தக் கட்டிடத்தின் இடிபாடுகள் இர்வெல் ஆற்றில் விழும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து சுமார் 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதையடுத்து அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது அங்கு வசிக்கும் மக்கள் பயங்கர அதிர்வை உணர்ந்தனர். இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக கருதி பீதியடைந்தனர்.

    • வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு மேலுள்ள தளங்களுக்கும் பரவியது.
    • அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை

    டெல்லியில் மாநிலங்களவை எம்.பி.களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்று மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    பிஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு  மேலுள்ள தளங்களுக்கும் பரவியது. உடனே உள்ளிருந்த மக்கள் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவரிக்கப்பட்டது.

    மதியம் 1:20 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தன.

    காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, தீயணைப்பு வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

    இதுவரை மூன்று பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர்.
    • 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தஹிசர் பகுதியில் உள்ள 23 மாடி கட்டிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்தனர்.

    பிற்பகல் 3 மணியளவில் குடியிருபின் ஏழாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் தகவலறிந்து அங்கு விரைந்தனர்.

    கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மாலை 6:10 மணிக்கு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    மீட்புக் குழுவினர் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர். இவர்களில் 19 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. 

    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அருகில் வசிக்கும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியியுள்ளனர்.
    • கட்டிடத்தின் 3 மாடிகளும் இடிந்து விழுந்துள்ளன.

    டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெல்கம் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

    இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிடத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அருகில் வசிக்கும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியியுள்ளனர்.

    மீட்பு பணிகளில் ஒரு ஆன் மற்றும் ஒரு பெண்ணின் உடல் மீட்க்கப்பட்டது. மேலும் ஒரு வயது குழந்தை உட்பட 8 பேர் காய்நகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மற்றவர்களை மீட்கும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிடத்தின் 3 மாடிகளும் இடிந்து விழுந்துள்ளன.

    • குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    • கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது.

    குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜ்கோட் 150 ரிங் ரோட்டில் அமைந்துள்ள அட்லான்டிஸ் என்ற 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் 6 ஆவது மாடியில் இன்று காலை தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து அங்கு வசித்த 50 பேரை பத்திரமாக மீட்க்கப்பட்டனர்.

    ஆனால் துரதிஷ்டவசமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவரை இன்னும் காணவில்லை என்று காவல் கண்காணிப்பாளர் சௌத்ரி தெரிவித்தார். மேலும் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    சார்ட் சர்கியூட் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.  

    • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நக ராட்சிக்குட்பட்ட பூண்டிநகர் பகுதியில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.18 கோடியே 80 லட்சத்தில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட் டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதே நேரம் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் காயத்ரி, ராஜன், யுவராஜ், முருகசாமி, செல்வராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

    • அடுக்குமாடி குடியிருப்பை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் ,மின்சாரம் ,மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.12. 78 கோடி மதிப்பீட்டில் 156 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை, குளியலறை, கழிவறை ஆகிய வசதியுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் ,மின்சாரம் ,மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சர்க்கார் கண்ணாடிப்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் ,திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல. பத்மநாபன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் முபாரக் அலி ,ஒன்றிய குழு தலைவர் காவியா ,பேரூராட்சி தலைவர் கலைவாணி ,துணைத் தலைவர் ரங்கநாதன் ,மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாகுல் ஹமீது, மேற்கு ஒன்றிய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் ,பேரூர் செயலாளர்கள் பாலமுருகன், சாதிக் அலி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 5 ஆண்டுகள் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம்-குனியமுத்துார் இடையே சுகுணாபுரம் அருகே, குறிச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது அரசு அடுக்குமாடி குடியிருப்பு.

    மலையின் உச்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பார்ப்பதற்கு பிரம்மாணடமாக காட்சியளிக்கிறது. சுமார் 3.45 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.15 கோடி மதிப்பில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது.

    புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்காக தமிழக அரசு கட்டிய இந்த குடியிருப்பில் மொத்தம் 224 வீடுகள் உள்ளன. மொத்தம் 14 பிளாக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வீடும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல்அறை, பால்கனி, கழிப்பிடம் என 400 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் மின் இணைப்பும் இந்த குடியிருப்புக்கு வழங்கப்பட்டுவிட்டது.

    ஆனால், இந்த குடியிருப்பில் தற்போது வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை. இந்த 224 வீடுகளும் திருநங்கைகளுக்கும், நலிந்த மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இங்கு பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமாக இருப்பதால் இதுவரை யாரும் இங்கு குடியேறாமல் உள்ளனர்.

    5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடில்லாமல் இருக்கும் இந்த குடியிருப்பில் மர்ம நபர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 224 குடியிருப்புகளிலும் மது பாட்டிகள், சுவர்களில் அருவருக்கத்தக்க படங்கள் வரையப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் இங்கு விபசாரமும் நடைபெறுவதாக சுற்றுவட்டார பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு வயர்கள், தண்ணீர் குழாய்கள், இரும்பு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடபட்டுள்ளது.

    புதர் மண்டி கிடக்கும் இந்த குடியிருப்பை புனரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 10 மற்றும் 9-வது வார்டுக்குட்பட்ட நல்லாறு, செட்டிபாளையம் பகுதிகளில் 187 வீடுகள் நீர்வழி ஆக்கிரமிப்பாக இருப்பதாக கண்டறியப்பட்டது. மேலும் சென்னை நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படாததால் இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் ஆத்துப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நீர்ப்பாசனத்துறை உதவி பொறியாளர் நல்லதம்பி வரவேற்றார்.

    இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- நீதிமன்ற உத்தரவின்படி இந்த பகுதியில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும், இங்கு வசிக்கும் அனைவருக்கும் நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

    திருப்பூர் 9 மற்றும் 10-வது வார்டுகளில் நீர்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும் அங்கு வசிப்பவர்களுக்கு அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.அந்த வீடுகளுக்கு வழங்க வேண்டிய தொகைக்கான வங்கிக் கடன் வசதியையும் அதிகாரிகளே சுயஉதவிக்குழுக்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் திருப்பூர் வடக்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×