என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi"

    • கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர்.
    • இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி.

    டெல்லியில் 2021இல் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது வகுக்கப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    இதில் அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    கெஜ்ரிவாலும், சிசோடியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட மாதம் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இடையில் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. 

    இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு:

    தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டமோ குற்றவியல் நோக்கமோ இல்லை

    ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

    எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா பிஆர்எஸ் முன்னாள் தலைவர் கே. கவிதா மற்றும் விஜய் நாயர், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 23 பேரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.

    மேலும், வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

     ஆனந்தக் கண்ணீர்:

    தான் குற்றமற்றவர் என தீர்ப்பு வெளியானதும் கெஜ்ரிவால் நீதிமன்றத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதார். மணீஷ் சிசோடியா மற்றும் தனது வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோரைக் கட்டிப்பிடித்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது.

    அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். உண்மை வென்றது.

    இந்தத் தீர்ப்பு சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீதான அனைத்துப் பொய்க் குற்றச்சாட்டுகளும் இன்று தகர்ந்துவிட்டன" என்று தெரிவித்தார்.

    தீர்ப்பு வெளியானவுடன் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சமூக வலைதளங்களில் இது நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.

    கெஜ்ரிவாலின் இந்த விடுதலை, டெல்லி அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் மீதான இந்த ஊழல் வழக்கை முன்வைத்தே மேடை தோறும் பிரசாரம் செய்து பாஜக ஆட்சியை பிடித்தது.

    இந்த தீர்ப்பு மூலம் கெஜ்ரிவால் மீண்டும் முழு வீச்சில் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் தீர்ப்பு கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 

    • ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது.
    • மொத்தம் 23 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.

    டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.

    புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக 2022 இல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மதுபான கொள்கையில் லாபி செய்து ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

    முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலும் , துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவையும் சிபிஐ கைது செய்தது. வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டமோ குற்றவியல் நோக்கமோ இல்லை

    ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

    எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா பிஆர்எஸ் முன்னாள் தலைவர் கே. கவிதா மற்றும் விஜய் நாயர், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 23 பேரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.

    மேலும், வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

    நீதிமன்றம் அனைவரையும் விடுவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

    • அனிதா மற்றும் அவரின் 5, 4 மற்றும் 3 வயதுடைய மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
    • நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அனிதா (27) என்ற பெண் தனது கணவர் முன்சுன் கெவாட் மற்றும் 5, 4 மற்றும் 3 வயதுடைய மூன்று மகள்களுடன் டெல்லியில் வசித்து வந்தார்.

    முன்சுன் கெவாட் ஆசாத்பூர் மண்டியில் காய்கறி வியாபாரியாகப் பணியாற்றி வந்தார். அனிதா 2 மாத கர்பிணியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை 8:07 மணியளவில் காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அனிதா மற்றும் அவரின் 3 மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

    நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்திற்குப் பிறகு பெண்ணின் கணவரான முன்சுன் கெவாட் தலைமறைவாகியுள்ளார். அவரே இந்த கொலையை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

    கொலை செய்வதற்கு முன்னதாக, மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கணவர் மது அருந்தச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆண் குழந்தை இல்லை என்ற ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் புலனாகி உள்ளது.

    கொலை வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான முன்சுன் கெவாட்டை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
    • சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் உதய் பானு சிப் கைது

    டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.

    பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த போராட்டத்தில் டுபட்ட இளைஞர் காங்கிரஸார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் மனு அளித்துள்ளது.

    • இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
    • போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணி காட்சிகளுக்கு நன்றி.

    டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.

    பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது நாட்டின் இளைஞர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நமோ பாரத் ரயில் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றியபோது இந்த சம்பவத்தை கண்டித்தார்.

    அவர் கூறியதாவது, "டெல்லியில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டை காங்கிரஸ் தனது தரம் தாழ்ந்த மற்றும் நிர்வாண அரசியலுக்கு ஒரு களமாகப் பயன்படுத்தியுள்ளது.

    வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்தியதன் மூலம் காங்கிரஸ்  கொள்கை ரீதியான திவாலானது உறுதி ஆகி உள்ளது.

    வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியா கடுமையாக உழைத்து வரும் வேளையில், இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.

    இது தனிப்பட்ட முறையில் எனக்கு எதிரான போராட்டம் அல்ல, மாறாக நாட்டின் கௌரவத்திற்கு எதிரானது

    காங்கிரஸ் தலைவர்களே, உங்கள் நிர்வாணத்தை நாடு ஏற்கனவே நன்கு அறியும். இப்போது மீண்டும் சட்டையைக் கழற்றி அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், காங்கிரஸின் இத்தகைய அநாகரீகமான போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்டவற்றுக்கு நன்றி என்றும் மோடி குறிப்பிட்டார்.  

    • தற்கொலைப்படை தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர் அமைப்பு இதனை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • கடந்த நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

    தலைநகர் டெல்லியில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை, பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரித்த நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர் அமைப்பு இதனைத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சூழலில் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு IED வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ராய்யா புறக்காவல் நிலையம் அருகே ஒரு சந்தேகத்திற்கிடமான பையில் IED வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

    வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.

    அதேபோல ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சபபோரா பகுதியில் மற்றொரு IED கண்டறியப்பட்டது. ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து அதை செயலிழக்கச் செய்தனர்.

    கடந்த ஒரு வாரத்தில் வட காஷ்மீரில் கண்டெடுக்கப்படும் மூன்றாவது IED இதுவாகும். இதற்கு முன் பாரமுல்லா மற்றும் டாங்மார்க் சாலைகளிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

    முன்னதாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த  தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக கருதப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. 

    • காலி செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.
    • மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்.

    டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள குடிசை வாசிகள் மார்ச் 6ம் தேதிக்குள் அங்கிருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை பகுதி, டெல்லியின் மிக முக்கியமான பாதுகாப்பு வளையத்திற்குள் வருகிறது.

    எனவே அங்கு அமைந்துள்ள பாய் ராம் முகாம், மஸ்ஜித் முகாம், டி.ஐ.டி முகாம் ஆகியவற்றில் உள்ள குடிசைவாசிகள் காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் அவழங்கியுள்ளது.

    மார்ச் 6-க்குள் காலி செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    வெளியேற்றப்படும் குடும்பங்களுக்குப் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ், வடமேற்கு டெல்லியில் உள்ள சாவ்தா கெவ்ரா பகுதியில் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    டெல்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், தகுதியுள்ள 717 குடும்பங்களுக்கு ஏற்கனவே பிளாட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக 2025 அக்டோபரில் நோட்டீஸ் அளிக்கப்பட்டபோது, இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது.

    சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றி வெளியேற்றத்தை மேற்கொள்ளுமாறு நவம்பர் 13, 2025 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு மாற்று இடமாக வழங்கியுள்ள 'சாவ்தா கெவ்ரா' பகுதி, தற்போதைய ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது.

    இதனால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    • பிரேசில் அதிபர் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபர் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.

    புதுடெல்லி:

    பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவர் டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி-பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

    முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது பிரேசில் அதிபரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் பாரம்பரிய வரவேற்பை லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஏற்றுக்கொண்டார். 

    • டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அனு ரகுமார திசநாயகாவை பிரதமர் மோடி சந்தித்தார்.
    • செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசநாயகா பாராட்டினார்.

    இந்தியா சார்பில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தலைவர்கள் நேரில் வந்து இதில் கலந்து கொண்டனர். இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவும் பங்கேற்றார்.

    இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அனு ரகுமார திசநாயகாவை பிரதமர் மோடி சந்தித்தார்.

    இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசநாயகா பாராட்டினார். இதுபோல இந்திய அரசின் பல்வேறு அணுகுமுறைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், டிட்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

    இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டு இருந்தார். "எங்கள் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார, வர்த்தகம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம். சமீபத்திய டிட்வா சூறாவளியின்போது இந்தியாவின் விதிவிலக்கான ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

    இதுபோல பிரதமர் மோடியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவர் "எரிசக்தி, இணைப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு, கலாசாரம், நீலப்பொருளாதாரம் மற்றும் பலவற்றில் ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

    டிட்வா புயல் பாதிப்புக்காக இலங்கைக்கு இந்தியா முதல் ஆளாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் மறுசீரமைப்பு தொகுப்புக்காக உறுதி செய்தது. இதில் சாலைகள், ரெயில்வே மற்றும் பாலங்கள் மறுசீரமைப்பு, வீடுகள் மறுகட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளுக்கு ஆதரவாக இருந்தது.

    • பாரத் மண்டப பகுதிக்குள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இளைஞர் காங்கிரசார் புகுந்தனர்.
    • மேலாடையை கழற்றி அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    டெல்லி ஏஐ மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார், தங்கள் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த டெல்லி காவல்துறை, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

    அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக ராகுல் காந்தி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது
    • உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 6 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 21-ந்தேதி முடிவடைகிறது.

    70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள Google CEO சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.

    தொழில்நுட்பம், AI, புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை.

    டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20-ந்தேதி முடிவடைகிறது.

    70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் ஏஐ தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பிப்.20-ந்தேதியுடன் நிறைவடைய இருந்த ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பிற உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை. பிப்.20, 21 ஆகிய நாட்கள் ஏஐ உச்சி மாநாட்டிற்கு பொதுமக்கள் தாராளமாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×