என் மலர்
நீங்கள் தேடியது "பிரேசில் அதிபர்"
- போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
- அர்ஜென்டினாவுக்கு தப்பியோடும் அவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது.
பிரேசில் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிதக்கப்படட்டது.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த பிரேசில் தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ தோல்வியடைந்தார்.
தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் தோல்வி அடைந்ததாக குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இடையில் அர்ஜென்டினாவுக்கு தப்பியோடும் அவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்ததால் அவருக்கு தண்டனை விதிக்கப்ட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் போல்சனாரோ தீர்ப்பை எதிர்த்து 11 நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
- பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரேசிலிய பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள சூழ்நிலையில், இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது
- அதிபர் டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை என்றார்.
- பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன் என்றார் பிரேசில் அதிபர்.
பிரேசிலியா:
பிரேசில் மீது அமெரிக்கா கூடுதலாக 40 சதவீதம் வரி விதித்தது. இதனால் பிரேசிலிய இறக்குமதிகள் மீதான மொத்த வரி 50 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா பேசியதாவது:
பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உள்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும்.
அதிபர் டொனால்டு டிரம்பை நான் அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை.
அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன். நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைப்பேன். புதினால் இப்போது பயணம் செய்ய முடியாததால் நான் அவரை அழைக்க மாட்டேன். நான் பல அதிபர்களுடன் பேசுவேன் என தெரிவித்தார்.
- பிரேசில் நாட்டில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
- தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து பயமில்லை என்ற பிரேசில் அதிபரின் மனைவி தெரிவித்தார்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் வரும் 18, 19 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பிரதமர் மோடியும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதனையொட்டி ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டா சில்வா பேசினார்.
அப்போது திடீரென அங்குக் கப்பலின் ஹார்ன் சத்தம் கேட்டது. உடனே ஜன்ஜா டா சில்வா, "இது எலான் மஸ்க் தான் என்று நினைக்கிறேன்" என்று கிண்டல் செய்தார். தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து பயமில்லை என்ற கூறிய அவர், மஸ்க்கை கெட்ட வார்த்தையிலும் திட்டினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், எலான் மஸ்க் தனது மற்றொரு பதிவில், "ஜன்ஜா டா சில்வாவின் கணவரும் பிரேசில் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூயிஸ் அடுத்த தேர்தலில் தோற்கப் போகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரேசிலில், இந்தாண்டு ஒரு மாதத்திற்கு மேலாக எக்ஸ் சமூக வலைத்தளம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனால், பிரேசில் அரசுக்கும், மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலைமையில் எலான் மஸ்க்கை பிரேசில் அதிபரின் மனைவி கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
பிரேசிலியா:
பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி அதிபரான ஜெயிர் போல்சனரோவை தோற்கடித்து, இடதுசாரி வேட்பாளரான லுலா டி சில்வா வெற்றிப் பெற்றார். இதையடுத்து, அவரது தலைமையில் புதிய அரசு அமைந்தது.
இந்த நிலையில் 2022-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் அதிபர் லுலா டி சில்வா தலைமையிலான அரசை கவிழ்க்க பெரும் சதி நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது. ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் டி சில்வா, துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோரை படுகொலை செய்யவும் சதி திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- தற்போதைய அதிபர் ஜெயீர்போல்சனரோ 43.5 சதவீத ஓட்டுகள் பெற்றார்.
- தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் லூயிஸ் இனாசியோ லுலாடாசில்வாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது.
உலகில் 4-வது பெரிய ஜனாநாயக நாடாக பிரேசில் திகழ்ந்து வருகிறது. இந்த நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறை தண்டணை அனுபவித்த லூயிஸ் இனாசி யோலுலாடா சில்வா உள்பட 9 பேர் போட்டியிட்டனர்.
9 பேர் களத்தில் இருந்தாலும் இந்நாள் மற்றும் முன்னாள் அதிபர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவியது. உள்ளூர் நேரப்படி நேற்று 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். நாடு முழுவதும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்தது. இதனால் 98.8 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.
பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் ஆரம்பம் முதல் லூயிஸ் இனாசியோலுலாடா சில்வா முன்னிலை வகித்தார். மொத்தம் பதிவான ஓட்டுக்களில் அவர் 48.1 சதவீத வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த படியாக தற்போதைய அதிபர் ஜெயீர்போல்சனரோ 43.5 சதவீத ஓட்டுகள் பெற்றார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதால் குறைந்த சதவீத ஓட்டுகள் தான் வித்தியாசம் இருந்தது. போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் குறைந்த சதவீத ஓட்டுகளே பெற்றனர்.
பிரேசில் தேர்தல் நடைமுறைப்படி அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 சதவீத ஓட்டுகள் பெற வேண்டும். இல்லையென்றால் அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 வேட்பாளர்களுக்கு இடையே 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். நேற்று நடந்த தேர்தலில் யாருக்கும் 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதனால் 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் லூயிஸ் இனாசியோ லுலாடாசில்வாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. அதன்படியே அவர் முதல் சுற்று தேர்தலில் முன்னிலை வகிக்கிறார். 2-வது சுற்று தேர்தலில்தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவரும்.






