search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lashkar--e--Taiba"

    மும்பை தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்கர் கைது செய்யப்பட்டார். நியூயார்க்கில் விமானம் ஏற சென்றபோது அவர் சிக்கினார்.
    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாத இயக்கங்களில் முக்கியமானது, லஷ்கர் இ தொய்பா ஆகும். இந்த இயக்கத்தினர்தான் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி மும்பையில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 160-க்கு மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

    இந்த இயக்கத்தில் சேருவதற்காக அமெரிக்க இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் வேலை நடந்து வருகிறது.

    அந்த வகையில் நியூயார்க்கின் மேன்ஹட்டன் பகுதியை சேர்ந்த ஜீசஸ் வில்பிரெடோ என்கார்னேசியன் (வயது 29) என்பவர் பாகிஸ்தானுக்கு போய், அங்கு லஷ்கர் இதொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்கான நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கினார்.

    ஆனால் இதுபற்றி அமெரிக்காவின் மத்திய புலனாய்வு படையான எப்.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு படையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில், என்கார்னேசியன் கடந்த 7-ந்தேதி பாகிஸ்தான் செல்வது என முடிவு எடுத்தார். இதற்காக அவர் விமானம் ஏறுவதற்காக நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார்.

    அங்கு அவரை மத்திய புலனாய்வு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    இதுபற்றி அமெரிக்க அரசு வக்கீல் ஜான் டெமர்ஸ் கூறும்போது, “பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்கு என்கார்னேசியன் ஆன்லைன் மூலம் முயற்சி செய்தார். அவர் மற்றொருவருடன் சேர்ந்து லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு பொருட்கள் வினியோகம் செய்யவும் சதி செய்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

    மற்றொரு அரசு வக்கீலான ஜெப்ரி பெர்மான் கூறும்போது, “என்கார்னேசியன் பாகிஸ்தானுக்கு சென்று, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்” என்றார்.

    நியூயார்க் போலீஸ் கமிஷனர் ஜேம்ஸ் ஓ நீல் கூறுகையில், “என்கார்னேசியன் நோக்கம், அமெரிக்காவில் தாக்குதல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற வேண்டும் என்பதுதான்” என குறிப்பிட்டார்.

    கைது செய்யப்பட்ட என்கார்னேசியனிடம் மத்திய புலனாய்வு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

    இதற்கிடையே அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதே லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் சார்பில் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு, இளைஞர்களை கவர்ந்து பாகிஸ்தானுக்கு பயங்கரவாத பயிற்சி பெற வைக்கும் வேலைகளில் ஒரு இளைஞர் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    அவரது பெயர் மைக்கேல் கிலே சீவெல் (வயது 18). இவரையும் மத்திய புலனாய்வு படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்துள்ளார். #LashkareTaiba

    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்புகள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களையும், படித்த வாலிபர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து வருகிறது.

    இந்த நிலையில் காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்துள்ளார்.

    அந்த வாலிபரின் பெயர் இஷ்பக் வாணி. 26 வயதான அவர் தெற்கு காஷ்மீர் பகுதி புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த வாலிபருக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் ‘அபுதுராப்’ என்ற குறியீடு பெயர் வழங்கப்பட்டுள்ளது.

    பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இஷ்பக் வாணி ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இஷ்பக் மாயமானதாக அவரது குடும்பத்தினர் கடந்த 22-ந்தேதி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் பி.எச்.டி. மாணவர் பஷீர்வாணி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருந்தார். கடந்த 6 மாதத்தில் மட்டும் 100 இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #LashkareTaiba

    ×