என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bomb"

    • கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
    • இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

    சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹாங் காங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    குவாரி பே (Quarry Bay) பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஆய்வில், இது 1.5 மீட்டர் நீளமும், 450 கிலோகிராம் எடையும் கொண்ட அமெரிக்க குண்டு என்று கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆண்டி சான் டின்-சு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு என்பதை உறுதி செய்துள்ளோம்.

    இதை செயலிழக்கச் செய்யும் பணி மிகவும் ஆபத்தானது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,900 வீடுகளில் வசிக்கும் சுமார் 6,000 பேரை வெளியேற்றினோம்" என்று தெரிவித்தார்.

    வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் பல மணி நேரம் போராடி குண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

    அந்தத் தாக்குதல்களில் வெடிக்காமல் பூமியில் புதைந்துபோன குண்டுகள், இன்றும் கட்டுமானப் பணிகளின் போது அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டிலும், வான் சாய் பகுதியில் இதேபோன்ற ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே

    சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் நடிகர் டிஎஸ்கே (TSK).. சின்னத்திரையின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறார். அந்தவகையில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'லப்பர் பந்து' படத்தில் கவனிக்கத்தக்க நெகடிவ் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். ரசிகர்களிடம் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

    தற்போது வெளியாகியுள்ள 'பாம்' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டிஎஸ்கே. 'லப்பர் பந்து' படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் 'பாம்' படத்தில் நடித்தது குறித்தும் அடுத்தடுத்து வரவிருக்கும் தனது படங்கள் குறித்தும் தகவல்களை பகிர்ந்து கொண்டார் டிஎஸ்கே..

    "லப்பர் பந்து படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். 'பாம்' படத்தில் அப்படியே முற்றிலும் மாறான பாசிட்டிவான கதாபாத்திரம். ஆனாலும் இந்த படத்திற்கான கதாபாத்திரம் எனக்கு லப்பர் பந்து படத்திற்கு முன்பாகவே தேடி வந்த ஒன்று.. 'பாம்' படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கிய 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை பார்த்து வியந்துபோய் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அவரது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற என்னுடைய ஆர்வத்தையும் வெளிப்படுத்தினேன். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

    ஆனால் திடீரென ஒரு நாள் என்னை அழைத்து பாம் படத்தின் கதாபாத்திரம் குறித்து சொல்லி இதில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என்று சொன்னது மட்டுமல்ல, இந்த கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறேன் என்று சொன்னபோது என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஆச்சரியப்பட வைத்தது. அவரும் என்னைப் போல அடிப்படையில் ஒரு மிமிக்ரி கலைஞர் தான் என்பதால் மறக்காமல் என்னை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்தார். படம் பார்த்த பலரும் லப்பர் பந்து, பாம் இரண்டு படங்களுக்கும் நடிப்பில் நல்ல வித்தியாசம் காட்டி இருக்கிறீர்கள், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நீங்கள் அதில் பொருந்தி விடுவீர்கள் என பாராட்டியபோது இயக்குநர் விஷால் வெங்கட்டின் நம்பிக்கையை காப்பாற்றிய திருப்தி ஏற்பட்டது.

    லப்பர் பந்து படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதன்முறையாக தேடி வந்தது. அங்கே 'விலாயத் புத்தா' என்கிற படத்தில் முன்னணி ஹீரோவான நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து, அவரது நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாள படம் என்றாலும் இந்த படத்தில் நான் தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன்..

    படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டியதுடன் மலையாள திரையுலகுக்கு உங்களை வரவேற்கிறேன் என ஆட்டோகிராப் போட்டும் கொடுத்தார் பிரித்விராஜ். அது மட்டுமல்ல இயக்குநரிடம் என்னைப் பற்றி பேசும்போது 'ஈ ஆள் வலிய வேலைக்காரன்' என்றும் பாராட்டியுள்ளார். என்னடா வேலைக்காரன் என்று சொல்கிறாரே என நான் குழம்பியபோது, படத்தின் இயக்குநர் அவர் உங்கள் நடிப்பு திறமையை பாராட்டி தான் அப்படி கூறினார் என்று சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.

    தமிழில் அமீர், அருள்நிதி இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில், மீண்டும் லப்பர் பந்து படத்தில் நடித்தது போன்ற ஒரு தனித்தன்மை கொண்ட நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். செல்வகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது ஜனவரியில் வெளியாக இருக்கிறது.

    இது தவிர டியர் ஜீவா, ஹி இஸ் பிரக்னண்ட் என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். கனா, லேபிள், அடங்காதே உள்ளிட்ட படங்களில் இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம் துணை இயக்குநராக பணியாற்றிய' பிரகாஷ் பாஸ்கர் டியர் ஜீவா படத்தை இயக்குகிறார்.

    ஹி இஸ் பிரக்னண்ட் ஒரு பேண்டஸி படமாக உருவாகிறது. தற்போது பாலாஜி சக்திவேல் சாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அது என்னுடைய 25வது படமாக உருவாகி வருகிறது. அந்தவகையில் அடுத்தடுத்து என்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாக இருக்கின்றன.

    தமிழ் சினிமாவில் குணசசித்திர கதாபாத்திரம் பண்ணுகின்ற நடிகர்கள், அதிலும் 35 வயதுக்கு உட்பட்ட நடிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கான தேவையும் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு இடத்தை எனக்கென நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் தான் நான் தீவிரமாக இருக்கிறேன். தற்போது எனக்கு வருகின்ற படங்களும் கதாபாத்திரங்களும் அதை வலுப்படுத்தும் விதமாகவே தேடி வருவது கூடுதல் சந்தோஷம்" என்கிறார் டிஎஸ்கே..

    நாயகன் அர்ஜுன் தாஸ் வாழ்ந்து வரும் கிராமம், இரண்டாக பிரிந்து இருக்கிறது.

    கதைக்களம்

    நாயகன் அர்ஜுன் தாஸ் வாழ்ந்து வரும் கிராமம், இரண்டாக பிரிந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக இரு கிராமத்தினரும் அடிதடி, வெட்டுக்குத்து என விரோத மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இரண்டு கிராமத்தையும் ஒன்று சேர்க்க அர்ஜுன் தாசும், காளி வெங்கட்டும் முயற்சி செய்கிறார்கள்.

    ஒருகட்டத்தில் காளி வெங்கட் திடீரென உயிரிழந்து போகிறார். ஆனால், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட்டுக்கு உயிர் இருப்பதாக நம்புகிறார். மேலும், அர்ஜுன் தாசை தவிர வேறு யாராலும் காளி வெங்கட்டின் உடலை தூக்க முடியாமல் போகிறது.

    காளி வெங்கட்டின் உடலில் சாமி இறங்கியிருப்பதாக ஊர் பூசாரி குறியாடி சொல்கிறார். அதன்பின் இரண்டு ஊர்மக்களும் காளி வெங்கட் உடலை ஊருக்கு நடுவே வைத்து தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.

    இறுதியில் காளி வெங்கட் உடலுக்கு என்ன ஆனது? ஊர் மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அர்ஜுன் தாஸ், தன் வழக்கமான ஸ்டைலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்து இருக்கிறார். கத்தி பேசாமல் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக சாமி ஆடும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். நாற்காலியில் உட்கார்ந்தே சாதித்து இருக்கிறார் காளி வெங்கட். முதல் பாதியில் துணிச்சலான பேச்சாலும், இரண்டாம் பாதியில் பேசாமலும் நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிவாத்மிகா ராஜசேகர், பாசம், சென்டிமென்ட், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டி.எஸ்.கே., கிச்சா ரவி, பூவையார் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    பிரிவினை உள்ள கிராமத்தை ஒன்று சேர்க்கும் கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். ஆன்மிகமும், அறிவியலும் கலந்து திரைக்கதை சொல்லி இருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களிடையை திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இரண்டு, மூன்று இடங்களில் வாவ் சொல்ல வைத்திருக்கிறார். ஆனால், ஒரு சில இடங்களில் முகம் சுழிக்கும் காட்சிகளும், மெதுவாக செல்லும் திரைக்கதையும் பலவினமாக அமைந்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.

    இசை

    டி.இமான் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது.

    தயாரிப்பு

    ஜெம்பிரி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரேட்டிங் - 2.5/5

    ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ப்ளாக்மெயில்

    வாரம் வாரம் தமிழ் சினிமா துறையில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சிலவை ஹிட்டாகிரது சில திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் இன்ரு வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களை இப்பதிவில் பார்ப்போம்.

    ப்ளாக்மெயில்

    ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம். இப்படத்தை மு மாறன் எழுதி இயக்கியுள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். இது ஒரு அதிரடி கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

    பாம்

    விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளி வெங்கட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் உருவாகியுள்ளது பாம் திரைப்படம். இது ஒரு நகைச்சுவையான திரைப்படமாக வெளியாகியுள்ளது.

    தணல்

    அறிமுக இயக்குநரான ரவீந்தர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் தணல் திரைப்படம் உருவாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் அதிரடி திரில்லராக உருவாகியுள்ளது.

    யோலோ

    சாம் எஸ் இயக்கத்தில் தேவிகா, ஆகாஷ் மற்றும் கிரி த்வாரகிஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ளது யோலோ திரைப்படம்.

    குமாரசம்பவம்

    பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் தங்கராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் பாயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், பால சரவணன் , கி.எம் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டீமன் ஸ்லேயர்

    ஜபானிய மாங்கா தொடரின் அடுத்த பாகமாக டீமன் ஸ்லேயர் படத்தை உருவாக்கியுள்ளனர். அனிமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. 

    இத்திரைப்படங்களுடன் மிராய், காயல், உருட்டு உருட்டு போன்ற திரைப்படங்களும் வெளியாகியுள்ளது.

    அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர். மணி முத்து என்ற கதாப்பாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார்.

    • விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார்.

    இந்நிலையில், 'பாம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக இடம் பெற்றுள்ளது. 

    • விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார்.

    இந்நிலையில், 'பாம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.

    • BOMB படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
    • ஷிவாத்மிகா ராஜசேகர் அர்ஜூன் தாஸ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.

    இந்நிலையில், 'பாம்' படத்தின் 'இன்னும் எத்தன காலம்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

    • விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB)என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB)என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.

    பாம்ப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. டைட்டில் டீசர் மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

    • சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.

    இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு நேற்று அறிவித்தது. பாம்ப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. டைட்டில் டீசர் மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் டைட்டில் டீசர் யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    • BOMB படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
    • ஷிவாத்மிகா ராஜசேகர் அர்ஜூன் தாஸ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.

    இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு நேற்று அறிவித்தது.

    இந்நிலையில், பாம்ப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    • விஷால் வெங்கட் பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • பாம்ப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மாலை 4:56 மணிக்கு பாம் படத்தின் டீசர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×