கோவில் சுற்றுச்சுவரில் நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவில் சுற்றுச்சுவரில் நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கஞ்சா, வெடிகுண்டு கலாச்சாரத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பாகூரில் உள்ள பழமையான மூல நாதர் கோவிலின் பின்புறம் உள்ள சுற்றுசுவரில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க செய்து சோதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. அந்த வீடியோவை வெளியிட்டுள்ள நபர் வெடிகுண்டு வீசும் கும்பலுக்கு ஆதரவாக ஒருவர் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகூர் மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் செல்போனில் பரவும் வீடியோ வைத்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இதே போல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் வில்லியனூரில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com