24 இடங்களில் குண்டு வைத்த பயங்கரவாதிகள்

‘உல்பா’ அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
24 இடங்களில் குண்டு வைத்த பயங்கரவாதிகள்
Published on

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் 78-வது சுதந்திர தின விழாவில் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது உரையை முடித்த சில நிமிடங்களில் 'உல்பா' அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 'அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்த திட்டமிடப்பட்டி ருந்ததது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை' எனத் தெரிவித்தனா்.

மேலும், அதனுடன் 19 குண்டுகள் வைக்கப்பட்ட சரியான இடங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பட்டியலை 'உல்பா' அமைப்பு வெளியிட்டது. ஆனால், மீதமுள்ள 5 இடங்களை சுட்டிக்காட்ட முடியவில்லை என மின் அஞ்சலில் தெரிவித்தனா்.

இதையடுத்து, ராணுவம் உள்பட பாதுகாப்புப் படையினா் மற்றும் வெடி குண்டு செயலிழப்பு படைகள் இணைந்து மாநிலம் முழுவதும் 'உல்பா' அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அதில், குண்டு வெடிப்பு நடத்த திட்டமிடப்பட்ட 24 இடங்களில் கவுகாத்தியில் உள்ள 8 இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன என போலீசாா் தெரிவித்தனா்.

இதில், அசாம் முதல்வா், பிற அமைச்சர்களின் அதிகாரபூா்வ இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலும் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் சாதனங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தொழில்நுட்ப கோளாறால் வெடிகுண்டுகள் வெடிக்காததால் உல்பா அமைப்பே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு தகவலை அளித்ததால், வெடிகுண்டுகளை காவல் துறையினா் கண்டெடுத்தனா். இதனால் பெரும் நாசவேலை தவிா்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com