search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arvind Kejriwal"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் போபாலில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
    • அப்போது, ஆம் ஆத்மியின் நேர்மையை எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர் என கூறினார்.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோர் பேரணியாக சென்று வாக்கு கேட்டனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

    75 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் பாஜ.க ஆகிய கட்சிகளால் சாதிக்க முடியாததை ஆம் ஆத்மி கட்சி 5 ஆண்டுகளில் சாதித்துள்ளது.

    டெல்லி மக்களுக்கு மின்சாரம் கூட இலவசமாக வழங்கப்படுகிறது.

    சுதந்திரத்திற்குப் பிறகு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என 2 கட்சிகள் மட்டுமே இருந்தன. இரு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கஜானாவை நிரப்புவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் நாங்கள் ஆம் ஆத்மியை உருவாக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது என குறிப்பிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
    • மீண்டும் சம்மன் அனுப்பப்படடு விசாரணைக்குப்பின் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.

    டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி சம்மன் அனுப்பி கெஜ்ரிவால் விசாரணைக்காக ஆஜரானால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    இதற்கிடையே நேற்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி எல்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒருவேளை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டால், நீங்கள் ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்த வேண்டும். நீங்கள் தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டும் என கெஜ்ரிவாலிடம் வேண்டுகோள் வைத்தனர்.

    மேலும், கைது செய்யப்பட்டால் ஜெயிலில் இருந்து முதல்வருக்கான வேலையை தொடர, உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்க இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    "நாங்கள் மக்கள் மத்தியில் செல்கிறோம். ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அட்டூழியங்கள் நடப்பதாக மக்கள் கூறுகின்றனர். அதனால்தான் சிறைக்கு சென்றாலும் முதல்வராக இருக்க வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் இன்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

    டெல்லி மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர், அவர் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று, ஜெயலில் கேபினட் கூட்டத்தை நடத்த அனுமதி கேட்போம்" என்று டெல்லி மந்திரி ஆதிஷி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனை கூட்டத்தில் காற்று சூழல் மந்திரி கோபால்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வருவது (488 தரக்குறியீடு) மோசமான நிலையை காட்டுகிறது. டெல்லியின் நியூ மோதி பாக் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 488 ஆக உள்ளது. பட்பர் கஞ்ச் பகுதியில் 471 ஆகவும், ஆர்.கே.புரத்தில் 466 ஆகவும் இருந்தது.

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காற்று சூழல் மந்திரி கோபால்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் டார்கெட் செய்யப்பட்டது
    • மக்களவை தேர்தல் வர இருப்பதால் இன்னும் அதிகமானோர் மீது குறி வைக்கப்பட்டலாம்

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் பா.ஜனதா அரசை விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் கூறியதாவது:-

    அவர்கள் (பா.ஜனதா) தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்துள்ளனர். மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. அவர்கள் இன்னும் பலர் மீது குறிவைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதாவை டார்கெட் செய்வார்கள் என்ற அச்சம் உள்ளது.

    அவர்கள் சிபுசோரனை டார்கெட் செய்தார்கள். சிபுசோரன் மற்றும் 30 முதல் 40 அதிகாரிகளை சத்தீஸ்கரில் டார்கெட் செய்தார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். மத்திய பிரதேசம், தெலுங்கானாவில் அவர்கள் செய்ததையும் பார்த்து இருப்பீர்கள்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலில் அடைத்தார்கள். மேற்கு வங்காளத்தில் அபிஷேக் பானர்ஜி டார்கெட் செய்யப்பட்டுள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றங்கள் ஏன் விழித்துக் கொள்ளவில்லை?

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கெஜ்ரிவால் அரசாங்கம் சராய் காலே கான் மற்றும் ஆசிரமம் இடையே உள்ள பகுதியை மாற்றியுள்ளது.
    • சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்.

    டெல்லியில் மூன்று வழிச்சாலை கொண்ட சராய் காலே கான் மேம்பாலத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கடந்த 5 ஆண்டுகளில் 30 மேம்பாலங்கள் கட்டியதில் 557 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், "கெஜ்ரிவால் அரசாங்கம் சராய் காலே கான் மற்றும் ஆசிரமம் இடையே உள்ள பகுதியை மாற்றியுள்ளது.

    முன்பு, ஆசிரமத்திற்குச் செல்வது என்பது நெரிசலில் சிக்கி மணிக்கணக்கான நேரம் ஆகும். ஆனால் ஆசிரமம் வரையிலான மேம்பாலம் நீட்டிப்பு மற்றும் சுரங்கப்பாதை ஆகியவை அந்த சிக்கலைத் தீர்த்துவிட்டன. இந்த மேம்பாலம் திறப்பது சாராய் காலே கானை நெரிசல் இல்லாத பகுதியாக மாற்றும்" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம்.

    டெல்லி:

    டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க.-விற்கு எதிராக பல கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளன
    • நாடு 140 கோடி இந்தியர்களுக்கும் சொந்தம் என்கிறார் கெஜ்ரிவால்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.

    இக்கூட்டத்தொடர் குறித்து ஆகஸ்ட் 31-ல் அறிவிக்கும் போது, "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். கூட்டத்தொடரில் என்னென்ன முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து சிறப்புக் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இச்செய்திக்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திற்கான அழைப்பிதழில், அவர் பெயரை குறிப்பிடும் இடத்தில் "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) எதிராக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து இ.ந்.தி.யா. (I.N.D.I.A.) எனும் கூட்டணியை உருவாக்கின. இதில் ஆம் ஆத்மி கட்சி (AAP) எனப்படும் புது டெல்லியின் ஆளும் கட்சியும் அடக்கம்.

    "இந்தியா" எனும் பெயரை "பாரத்" என மாற்றும் முயற்சி நடைபெற போவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், புது டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    இது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல் எனக்கு வரவில்லை. 140 கோடி மக்களுக்கான இந்நாடு ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சிகள் இ.ந்.தி.யா. என ஒரு கூட்டணி அமைத்து விட்டால், இந்தியாவின் பெயரையே 'பாரத்' என மாற்றுகிறீர்கள். எங்கள் கூட்டணியின் பெயரை 'பாரத்' என மாற்றினால், நாட்டின் பெயரை 'பாரத்' என்பதிலிருந்து 'பா.ஜ.க.' (BJP) என நீங்கள் மாற்றுவீர்களா என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத போதிலும் இந்த சர்ச்சையில் பா.ஜ.க. பிரமுகர்களும், எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கடுமையான கருத்துக்களை முன்வைத்து விவாதித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • இதனால் டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறைவிட கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கும்படி டெல்லி தலைமை செயலாளரிடம் டெல்லி போலீசார் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர்.

    இதேபோல், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு உட்பட்ட வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

    இந்நிலையில், போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பொது விடுமுறை என அறிவிக்க முதல் மந்திரி கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த நாட்களில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி.
    • அரசியலமைப்பு கொள்கைகள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள நம்பிக்கை நினைவுகூரப்படும்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி. மசோதாவை எதிர்த்து வாக்களித்த தி.மு.க.விற்கு 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றிகள். அரசியலமைப்பு கொள்கைகள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள நம்பிக்கை நினைவுகூரப்படும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo