மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

உண்மையை உரக்க பேச வைத்த மரியாதைக்குரிய நண்பர் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு வாழ்த்துகள்.குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது.
மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
Published on

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

* டெல்லி மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி மத்திய பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும்.

* உண்மையை உரக்க பேச வைத்த மரியாதைக்குரிய நண்பர் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு வாழ்த்துகள்.

* மத்திய பா.ஜ.க. அரசு குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது.

* மத்திய அரசின் பழிவாங்கல் போக்கை எதிர்த்த கெஜ்ரிவாலின் இறுதி வரை உறுதியான போராட்டத்திற்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com