search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவிந்த் கெஜ்ரிவால்"

    • 15 கோடி ரூபாய், மந்திரி பதவி வழங்குவதாக ஆம் ஆத்மி வேட்பாளர்களை பாஜக அணுகியதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
    • கெஜ்ரிவால் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் உத்தரவு.

    டெல்லி மாநில சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 60.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களை (தற்போது எம்.எல்.ஏ.-க்கள்) பாஜக தொடர்பு கொண்டு, 15 கோடி ரூபாய் தருகிறோம். அத்துடன் மந்திரி பதவியும் வழங்குவதாக பாஜக-வினர் கூறியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    மேலும், "55 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏன் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்க முயற்சிக்க வேண்டும். ஆம் ஆத்மி வேட்பாளர்களை உடைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான சதிதான் இந்த போலி கருத்து கணிப்பு. ஆனால் எங்களுடைய வேட்பாளர்கள் ஒருவர் கூட கட்சி தாவமாட்டார்கள்" என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

    கெஜ்ரிவால் குற்றச்சாட்டு டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த குற்றச்சாட்டு விசாரணைக்கு தகுதியானது எனத் தெரிவித்த துணை நிலை ஆளுநர் சக்சேனா, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு (Anti-Corruption Bureau) அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர்கள் கெஜ்ரிவால் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    கெஜ்ரிவால் வழக்கறிஞர் "ஏசிபி-க்கு நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் இல்லை. அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இவை அனைத்தும் ஒரு அரசியல் நாடகத்தை உருவாக்க பாஜக செய்யும் சதி" என்றார்.

    இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அந்த நோட்டீசில் "பாஜக அணுகியதாக கூறப்படும் 16 எம்.எல்.ஏ.-க்களின் பெயரை தாக்கல் செய்ய வேண்டும். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்களை தொடர்பு கொண்டவர்கள் போன் நம்பர்கள், மற்ற விவரங்களையும் அளிக்க வேண்டும்.

    பல்வேறு ஊடகங்கள்/சமூக ஊடக தளங்களில் நீங்களும் உங்கள் கட்சி உறுப்பினர்களும் கூறிய லஞ்ச குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைக்கவும்.

    டெல்லி மக்களிடையே அச்சத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தகவல்களை ஊடகங்கள்/சமூக ஊடக தளங்களில் பரப்பும் நபர்கள் மீது ஏன் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்துங்கள்" குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக-விடம் இருந்து 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன.
    • கட்சி தாவினால் மந்திரி பதவி மற்றும் 15 கோடி ரூபாய் வழங்குவதாக பாஜக தெரிவித்துள்ளது.

    டெல்லியில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், பாஜக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் 27 வருடங்களுக்கு பின் டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சியை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம், கட்சி தாவினால் 15 கோடி ரூபாய் தருகிறோம் என பாஜக கூறியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    "துஷ்பிரயோகம் செய்யும் கட்சி (பாஜக) தேர்தலில் 55-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் என சில கருத்து கணிப்பு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. பாஜக-விடம் இருந்து 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன. கட்சி தாவினால் மந்திரி பதவி மற்றும் 15 கோடி ரூபாய் வழங்குவதாக பாஜக தெரிவித்துள்ளது" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    மேலும், "அவர்கள் உண்மையில் 55 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவார்கள் என்றால், எங்களுடைய வேட்பாளர்களை ஏன் அழைக்க வேண்டும்?. ஆம் ஆத்மி வேட்பாளர்களை உடைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான சதிதான் இந்த போலி கருத்து கணிப்பு. ஆனால் எங்களுடைய வேட்பாளர்கள் ஒருவர் கூட கட்சி தாவமாட்டார்கள்" என்றார்.

    இந்த நிலையில் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு விசாரணைக்கு தகுதியானது எனத் தெரிவித்த டெல்லி மாநில துணைநிலை ஆளுநர், இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    • நீங்கள் உங்கள் பதவி ஆசைக்காக நாட்டை அடமானம் வைக்க வேண்டாம்
    • தொடர்ந்து விமர்சனங்கள் செய்யப்பட்டு வருவதை கவனித்து வருகிறோம்.

    நாளை டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் மீது ஆம் ஆத்மி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

    தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில்  பதவிக்கு ஆசைப்பட்டு ராஜீவ் குமார் பாஜகவுக்கு ஆதரவாக அவர்களின் நடத்தை விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

    "நீங்கள் உங்கள் பதவி ஆசைக்காக நாட்டை அடமானம் வைக்க வேண்டாம். பதவிக்காக நாட்டின் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டி விடாதீர்கள். உங்களுக்கு எந்த மாதிரியான பதவி காத்திருக்கிறது.. ஆளுநர் பதவியா? இல்லை ஜனாதிபதி பதவியா?" என கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார்.

    இந்நிலையில் கெஜ்ரிவால் விமர்சனத்துக்குத் தேர்தல் ஆணையம் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது.

    அதில், "டெல்லி தேர்தலை மையமாக வைத்து மூன்று பேர் கொண்ட ஆணையம் மீது அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து விமர்சனங்கள் செய்யப்பட்டு வருவதை கவனித்து வருகிறோம்.

    தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பு போல கருதிக் கொண்டு இத்தகைய செயல்கள் நடந்துள்ளன.  எதனோடும் சாராத  ஆணையமாக செயல்படும் அமைப்பை திசைமாற்ற முயலும் செயல் இது.  நாங்கள் அரசமைப்பு வரம்புக்கு உட்பட்டு செயலாற்றி வருகிறோம்" என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    • பா.ஜ.க. சந்தேகப்படும்படியாக எதையும் செய்வதை நீங்கள் கண்டால், அதை பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடுங்கள்.
    • அரசின் கஜானாவை மக்கள் பக்கம் திருப்பிய ஒரே அரசியல்வாதி அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே.

    டெல்லி மாநிலத்தில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. முதல்-மந்திரியாக அதிஷி உள்ளார். சட்டசபையில் பதவிக்காலம் பிப்ரவரி 23-ந்தேதி நிறைவடைகிறது.

    எனவே 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., டெல்லியில் தற்போது ஆட்சிக்கட்டிலில் இருக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    டெல்லி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது.

    இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில்,

    டெல்லியில் பா.ஜ.க. ஒவ்வொரு தீய செயல்களை முயற்சித்தாலும், தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டு இருந்தாலும், நேர்மறையான பார்வை கொண்ட டெல்லி மக்கள் நேர்மையான கட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள்.

    படித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். தேர்தலுக்கு முந்தைய இரவு ஃபார்ம் 17 சி-ஐ பொருத்துவதற்கான இணையதளத்தை உருவாக்கியுள்ளோம்.

    வாக்குச்சாவடியில் ஸ்பை கேமராக்கள் உள்ளன. பா.ஜ.க. சந்தேகப்படும்படியாக எதையும் செய்வதை நீங்கள் கண்டால், அதை பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடுங்கள்.

    அரசின் கஜானாவை மக்கள் பக்கம் திருப்பிய ஒரே அரசியல்வாதி அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே... குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பதால் பா.ஜ.க. குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியாது என்று அவர் கூறினார்.

    • வாக்கு எந்திரங்களில் பதிவான 10 சதவீத வாக்குகளை வேறுபடுத்தி காட்ட முடியும் என்பதை ஆதாரங்கள் மூலம் தெரிந்திருக்கிறேன்.
    • நாம் 15 சதவீதம் வாக்குகள் முன்னிலை பெற்றால், 5 சதவீதம் வாக்குகளில் வெற்றி பெறுவோம்.

    டெல்லி மாநில சட்டசபை தேர்தல் நாளைமறுதினம் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைவர் கெஜ்ரிவால் இன்று டெல்லி மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வாக்கு எந்திரங்களில் பதிவான 10 சதவீத வாக்குகளை வேறுபடுத்தி காட்ட முடியும் என்பதை ஆதாரங்கள் மூலம் தெரிந்திருக்கிறேன் என்பதை டெல்லி மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மிகப்பெரிய அளவில் வாக்குகள் பதிவாக, ஒவ்வொரு வாக்குகளும் ஆம் ஆத்மிக்கு செல்ல வேண்டும்.

    ஆகவே, நாம் 15 சதவீதம் வாக்குகள் முன்னிலை பெற்றால், 5 சதவீதம் வாக்குகளில் வெற்றி பெறுவோம்.

    எல்லா இடங்களிலும் 10 சதவீதத்திற்கு மேல் முன்னிலை பெற வேண்டும். இது மட்டுமே இயந்திரங்களை எதிர்கொள்ள ஒரரேவழி. அதனால் நீங்கள் மிகப்பெரிய அளவில் வாக்களிக்க வேண்டும். முன்னெச்சரிச்சை நடவடிக்கையாக நாம் இணையதளம் உருவாக்கியுள்ளோம்.

    மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டோம். அதனடிப்படையில் பிப்ரவரி 5-ந்தேதி ஒவ்வொரு வாக்குச்சாவடியின் 6 விவரங்களை அப்லோடு செய்ய இருக்கிறோம். இந்த புள்ளி விவரங்களோடு எந்திரங்கள் முறைகேட்டில் ஈடுபட முடியாது. வாக்கு எண்ணிக்கை நாளில் ஏதேனும் முறண்பாடு ஏற்பட்டால், இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடலாம்.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    • பாஜகவினர் வீடு வீடாகச் சென்று மக்களிடம் ஓட்டுக்காக ரூ. 3,000 கொடுப்பதாக கூறுகின்றனர்.
    • பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசை குடியிருப்புகளை இடித்து அகற்றுவார்கள்.

    டெல்லியில் வரும் புதன்கிழமை [பிப்ரவரி 5] சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய உள்ள நிலையில் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜகவினர் சேரிகளில் வசிப்பவர்களுக்கு ஓட்டுக்கு ரூ.3000 கொடுப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய கெஜ்ரிவால், "இன்று, சேரியில் இருந்து எனக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. பாஜக கட்சியினர் வீடு வீடாகச் சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் ரூ. 3,000 கொடுப்பதாகவும் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையாயம் செய்து கொடுக்கும் என்றும் என்று தெரிவித்ததாக அவர்கள் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

    அவர்கள் விரிக்கும் வலையில் நீங்கள் விழுந்து விட வேண்டாம் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தால், அவர்கள் உங்கள் மீது வழக்குப் போட்டு கைது செய்வார்கள்

    அவர்கள் உங்களுக்கு இலவசமாக பணம் தருகிறார்கள் என்றால், அதை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசை குடியிருப்புகளை இடித்து அகற்றுவார்கள். மும்பையில், ஆசியாவின் மிகப்பெரிய சேரியான தாராவியை தங்கள் நண்பர் ஒருவருக்கு அவர்கள் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

    • இன்று பிரதமர் மோடி பிரசாரம் நிகழ உள்ளது.
    • 'ஜாடு' (ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பம்) மூலம் துடைத்தெறியப் போகிறார்கள்.

    டெல்லியில் வரும் புதன்கிழமை [பிப்ரவரி 5] சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓயும் நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிரதமர் மோடி பிரசாரம் நிகழ உள்ளது.

    இதற்கிடையே நேற்று முஸ்தபாபாத் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மக்கள் இந்த முறை டெல்லியில் 3ஜி அரசாங்கம் நடத்தும் ஆம் ஆத்மி கட்சியை 'ஜாடு' (ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பம்) மூலம் துடைத்தெறியப் போகிறார்கள்.

    முதல் ஜி என்பது 'கொடலே வாலி சர்கார்' (ஊழல்களைச் செய்யும் அரசு), இரண்டாவது ஜி என்பது 'குஸ்பைதியோன் கோ பனா தேனே வாலி சர்க்கார்' (ஊடுருவுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசு) மற்றும் மூன்றாவது ஜி என்பது 'கப்லே கர்னே வாலி சர்க்கார்' (ஊழலில் ஈடுபடும் அரசாங்கம்) என்று பேசியுள்ளார்.

    • கூட்டத்தில் புகுந்து அவரை சிலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
    • டெல்லி தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது

    டெல்லியில் வரும் புதன்கிழமை [பிப்ரவரி 5] சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய உள்ள நிலையில் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏவும், டெல்லியின் ரிதாலா தொகுதியின் வேட்பாளருமான மொஹிந்தர் கோயல் மீது தாக்குதல் நடத்நியுள்ளது. கூட்டத்தில் புகுந்து அவரை சிலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    இந்நிலையில் தேர்தல் தோல்வி பயத்தில் பாஜகவினர் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், `டெல்லி தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது. தோல்வி விரக்தியில் இப்போது வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

    • ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
    • டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இந்த பட்ஜெட் குறித்து டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாட்டின் கருவூலத்தின் பெரும் பகுதி, ஒரு சில பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கே செலவிடப்படுகிறது. இனிமேல் எந்த கோடீஸ்வரரின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படாது என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்று நான் கோரியிருந்தேன்.

    இதிலிருந்து சேமிக்கப்பட்ட பணத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி விகிதங்களை பாதியாகக் குறைக்க வேண்டும் என்று கூறியிருந்த எதுவும் செய்யப்படாததற்கு வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தேர்தலை சந்திக்க உள்ள பீகாருக்கும் டெல்லிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். தவிர, ஏராளமான ராணுவ முகாம்களின் அதிகாரிகளும் டெல்லியின் வாக்காளர்களாக உள்ளனர். டெல்லியில் மொத்த வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர்.

    இந்த நடுத்தர வர்க்க வாக்காளர்கள்தான் டெல்லி வாக்குகளில் தீர்மானிக்கும் சக்தி.  அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஊழல்க்கு எதிரான வெளிப்படையான மனிதன்' மற்றும் 'சாமானியர்களின் பிரதிநிதி' என்ற பிம்பம் டெல்லி நடுத்தர வர்க்கத்தினரிடம் மிகவும் பிரசித்தம்.

     

    ஆனால் மதுபான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கெஜ்ரிவால் கைதான பிறகு இந்த இரண்டு பிம்பங்களும் சற்றே சிதைந்துள்ளது. மேலும் விலையுயர்ந்த கார்கள் மற்றும் சொகுசுமாளிகை வாசம் என கெஜ்ரிவால் மீது பாஜக மேற்கொண்ட பிரசாரத்தால் ஆம் ஆத்மி இமேஜை கேள்விக்குறியாகியுள்ளது.

    இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரிச்சலுகை டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளது என்றார் கெஜ்ரிவால்.
    • இது குறித்து உரிய பதிலளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    அரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். டெல்லி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் அவரது குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து, டெல்லியில் யமுனை ஆற்றில் விஷம் கலப்பு பற்றி பேசியதற்கு உரிய பதிலளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தல் ஆணையம் அரசியல் செய்துவருகிறது. ஓய்வுக்கு பின் தேர்தல் ஆணைய தலைவர் ராஜிவ்குமாருக்கு ஒரு வேலை வேண்டும் என விரும்புகிறார். ராஜிவ்குமாரிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், வரலாறு உங்களை மன்னிக்காது. தேர்தல் ஆணையத்தில் அவர் குழப்பம் ஏற்படுத்தி விட்டார். ராஜிவ் குமார் அரசியல் செய்ய விரும்பினால் டெல்லியில் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் ஆணையம் மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.
    • தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டுக்கொள்கிறது.

    அரியானா அரசு யமுனையில் "விஷத்தை கலப்பதாக" கூறியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்தார். அதில், சமீப காலங்களில் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட பச்சை நீர் மனித ஆரோக்கியத்திற்கு "மிகவும் மாசுபட்டதாகவும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது," என்று தெரிவித்து இருந்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பதிலை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இந்த விவகாரத்தில் உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இதற்காக நாளை காலை 11 மணி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "நல்லிணக்கம், வெவ்வேறு குழுக்கள் இடையே பகையை ஏற்படுத்துவது, பொது அமைதி மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் அவருக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது.

    யமுனையில் அம்மோனியா அதிகரித்தது தொடர்பான பிரச்சினையை, யமுனையில் விஷத்தன்மை அதிகரித்த பிரச்சினையையுடன் சம்பந்தப்படுத்தாமல் தக்க ஆதாரத்தை வழங்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், யமுனை நதியில் நச்சுத் தன்மையின் அளவு, அதன் தன்மை மற்றும் ஏற்படும் விதத்தை விளக்க வேண்டும். நதிநீரில் உள்ள விஷத்தன்மையை கண்டறியும் வழிமுறையை டெல்லி ஜல் போர்டு பொறியாளர்கள் நாளை காலை 11 மணிக்குள் வழங்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தக்க முடிவை எடுக்கும். போதுமான மற்றும் சுத்தமான நீர் கிடைக்க வழி செய்வது நிர்வாக ரீதியிலான பிரச்சினை. இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்கங்களும் எல்லா நேரங்களிலும் அனைத்து மக்களுக்கும், இதை பாதுகாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    • மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது என்றார்.
    • பிரச்சினையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    தேர்தல் ஆணையத்திற்கு பதிலளித்த கெஜ்ரிவால், ஹரியானாவிலிருந்து பெறப்பட்ட தண்ணீர் மனித ஆரோக்கியத்திற்கு 'மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது' என்று கூறுகிறார்

    அரியானா அரசு யமுனையில் "விஷத்தை கலப்பதாக" கூறியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்தார். அதில், சமீப காலங்களில் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட பச்சை நீர் மனித ஆரோக்கியத்திற்கு "மிகவும் மாசுபட்டதாகவும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது," என்றார்.

    இது தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்திற்கு 14 பக்கங்கள் கொண்ட பதிலை அனுப்பியுள்ளார். அத்தகைய "விஷ நீர்" மக்களால் உட்கொள்ள அனுமதிக்கப்பட்டால் அது கடுமையான உடல்நலக் கேடு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    நகரத்தில் குடிநீரின் தரம் காரணமாக "அவசர பொது சுகாதார நெருக்கடியை" மட்டுமே முன்னிலைப்படுத்த விரும்புவதாகவும், எந்த சட்டத்தையும் அல்லது மாதிரி நடத்தை விதிகளையும் அவர் மீறவில்லை என்றும், எனவே இந்த பிரச்சினையை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

    அரியானாவிலிருந்து பெறப்பட்ட நீரில் அம்மோனியா அளவு மிகவும் "மிக அதிகமாக" இருந்ததால், டெல்லியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் அதை பதப்படுத்தி மனித பயன்பாட்டுக்கு பாதுகாப்பான மற்றும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு ஏற்ற வகையில் குறைக்க முடியவில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. தாக்கல் செய்த புகாரை தொடர்ந்து, இது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் செவ்வாய் கிழமை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசுக்கு அவர் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணிக்குள் பதில் அளிக்க அவருக்கு அவகாசம் அளித்தது.

    ×