search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Air Pollution"

    • காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
    • கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் இருந்தது.

    காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லியில் தற்போது காற்று மாசு குறைந்துள்ளது. கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் நாளை (20-ந்தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்து உள்ளது.

    அதேபோல் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து இருந்த நேரத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் டெல்லியில் நுழைய தேசிய காற்றுத்தர மேலாண்மை ஆணையம் தடை விதித்து இருந்தது.

    தற்போது காற்று மாசு குறைந்ததை தொடர்ந்து டெல்லி நகருக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையும் நீக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது.
    • வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 2 வாரம் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளிக்கு முன்னர் காற்று மாசு ஓரளவு குறைந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசால் மீண்டும் காற்று மாசு அதிகரித்தது. காற்றின் தரம் குறைந்து நகரம் முழுவதையும் மூடு பனி ஆக்கிரமித்து இருப்பது போல் காணப்படுகிறது.

    எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளில் இருந்து காற்று மாசு டெல்லியின் மைய பகுதியிலும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. வரலாறு காணாத வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

    நேற்று மதியம் மத்திய அரசின் ஷபார் செயலியின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ) 445 ஆக இருந்தது, சில இடங்களில் 520-க்கு மேல் பதிவாகியது.

    101 மற்றும் 200-க்கு இடைப்பட்ட நிலைகள் மிதமானதாகக் கருதப்படுகின்றன.

    அதே சமயம் 201 மற்றும் 300-க்கு இடைப்பட்டவை மோசமானவை. 301 மற்றும் 400 க்கு இடையில் மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 400 ஐ விட அதிகமான எண்ணிக்கை கடுமையானது என்று கருதப்படுகிறது.

    ஆனால் சில பகுதிகளில் டெல்லியின் காற்றின்தரம் (ஏ.கியூ.ஐ) பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது.

    டெல்லியின் நச்சுக் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 ல் இருந்து 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று நுரையீரல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    அதிக அளவு மாசுபாடுகளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

    இது தோல் மற்றும் கண் எரிச்சலைத் தூண்டும் மற்றும் ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் திறன் இழப்பு, எம்பிஸிமா, புற்றுநோய் மற்றும் கடுமையான நரம்பியல், இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும்.

    டெல்லி அரசு கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி அதிகளவிலான பட்டாசு வெடித்ததே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாகும் என கூறப்படுகிறது.

    வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார். எல்லையில் சோதனை நடத்தினார்.

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மட்டுமே நகருக்குள் அனுமதித்தார். மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினார். இதனை கடுமையாக பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தீபாவளிக்கு முன்பு காற்று மாசு குறைவாக இருந்தது. பட்டாசு அதிகளவில் வெடித்ததால் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று மாநில அரசும், மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 445 என்ற அளவில் உள்ளதாகவும் அது உலகளவில் காற்று மாசு பட்டியலில் டெல்லி முதலிடத்தைபிடித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

    இந்த பட்டியலில் 6-வது இடத்தில் மும்பையும், 7-வது இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது.

    • டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மோசமான நிலையில் உள்ளது.
    • அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும் என கெஜ்ரிவால் தகவல்

    புதுடெல்லி:

    தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மேலும், டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில், வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்ற காரணிகளால் டெல்லி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.

    இந்நிலையில் காற்று மாசுபாடு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    காற்று மாசுபாடு என்பது அகில இந்திய அளவில் உள்ள பிரச்சனை. வட இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்கொண்டுள்ளன. டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மோசமான நிலையில் உள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருவதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம். ஆனால், பஞ்சாபில் நாங்கள் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களே ஆகின்றன. அதைக் கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும்.

    காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு ஒரு கூட்டு செயல் திட்டத்தை கொண்டு வர வேண்டும். இது மற்றவர்கள் மீது குறை சொல்லும் நேரம் அல்ல. மோசமான காற்றின் தரத்திற்கு கெஜ்ரிவால் அரசு மட்டுமே பொறுப்பல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவைப்பட்டால் காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது.  டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால், காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என, டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து, டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தும் டெல்லி அரசு உத்தவிட்டது. மேலும் முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. 

    டெல்லி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நகரங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

    இந்நிலையில், காற்றின் தரம் சீரடையாததால் பள்ளகிள் அனைத்தும்ட தொடர்ந்து மூப்பட்டிருக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் கிடையாது, ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
    ×