என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Air Pollution"

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் முகக்கவசத்துடன் வந்தனர்.

    இந்த நிலையில் டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்று முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    காங்கிரஸ் பாராளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரியங்கா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது சோனியா காந்தி நிருபர்களிடம் கூறும்போது, 'குழந்தைகள் இறந்து கொண்டு இருப்பதால் அரசு காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்ற வயதானவர்களும் காற்று மாசு'வால் சிரமப்படுகிறார்கள் என்றார்.

    பிரியங்கா கூறும்போது, 'காற்று மாசுபாடு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் காற்று மாசுடன் தான் இருக்கிறோம். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.

    காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர். மேலும் பிரதமர் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினமும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக நேற்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    3-வது நாளாக இன்று டெல்லி காற்று மாசு பிரச்சனையை தடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




    • 2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.
    • டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன.

    நாட்டின் தலைநகரமான டெல்லி உலகின் மிகவும் காற்று மாசு கொண்ட நகரங்களில் பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக ஆண்டின் கடைசி மாதங்களில் குளிர்காலத்தில் டெல்லியின் காற்று மாசு மிகவும் மோசமடைகிறது.

    இதனால் சுவாசப் பிரச்சனைகள் உள்ளிட்ட மோசமான உடல்நலப் பிரச்சனைகளை டெல்லி மக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு காற்று விஷமாக மாறும் நிலையை எட்டும் தருவாயில் உள்ளது.

    2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.

    மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி 130 ஆக இருந்த டெல்லியின் காற்றின் தரம் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் 428 என்ற அபாயகரமான நிலையை எட்டியது. 

    இன்றும் டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400க்கும் அதிகம் என்ற மோசமான நிலையிலேயே உள்ளது. அடுத்த வாரத்திலும் இந்த நிலையே நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் மாதத்தில் டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் பயிர்கழிவுகளை எரிப்பதில் இருந்து வரும் புகையே டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக பொதுவான கருத்து நிலவுகிறது.

    ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இதை நிராகரிக்கிறது. அதாவது டெல்லி காற்று மாசுக்கு விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு காரணமே தவிர அதுவே முக்கிய காரணம் கிடையாது.

    மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்டிருக்கும் முடிவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் பயிர்க் கழிவுகளுக்கு தீ வைப்பதால் டெல்லிக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அக்டோபரில் பயிர்க் கழிவு தீ வைப்பால் டெல்லி காற்றுக்கு 2.62 சதவீத பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது.

    அந்த சமயம் டெல்லி காற்று தரக் குறியீடு 250 என்ற அளவிலேயே இருந்தது. இந்த நவம்பர் 12 டெல்லி காற்று தரக் குறியீடு 418 என்ற 'மிகவும் அபாய' நிலையை எட்டிய நிலையில் இதில் பயிர்க் கழிவுகள் எரிப்பின் பங்கு 22.47 சதவீதம் மட்டுமே ஆகும்.

    நவம்பர் 3 ஆம் வாரத்தில் பயிர்க் கழிவுகள் எரிப்பது குறைந்த போதும் டெல்லி காற்று மாசு குறையவில்லை.

    நவம்பர் 18 முதல் 20 வரை டெல்லி காற்று மாசில் பயிர்த் கழிவுகள் எரிப்பதன் பங்கு 5.4 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை குறைந்தபோதிலும் டெல்லி காற்று தரக் குறியீடு 325-க்கு மேலேயே நீடித்தது.

     இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பயிர்க் கழிவுகளை எரிப்பது டெல்லி காற்று மாசுக்கு ஒரு காரணிதான் என்றபோதிலும் முக்கிய காரணம் அல்ல என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

    மாறாக டெல்லிக்கு காற்று மாசுக்கு காரணமாக மத்திய புவி அறிவியல் துறை குறிப்பிடும் தரவுகளில், டெல்லி காற்று மாசுக்கு சுற்றுப்புற நகரங்களாக கவுதம் புத்தா நகர், குர்கான், கர்னால், மீரட் உள்ளிட்ட டெல்லியைச் சுற்றியுள்ள நகரங்களின் பங்களிப்பு 29.5 சதவீதம் ஆகும்.

    டெல்லி போக்குவரத்தில் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, காற்று மாசுக்கு 19.7 சதவீதம் பங்களிக்கிறது.

    காற்று மாசுக்கு குடியிருப்புகளின் பங்களிப்பு 4.8 சதவீதம் ஆகவும், புறத் தொழிற்சாலைகளின் பங்களிப்பு 3.7 சதவீதம் ஆகவும், மற்றும் கட்டுமானப் தூசு 2.9 சதவீதம் ஆகவும் உள்ளன.

    மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் டெல்லி காற்று மாசுக்கு, காரணமே அறியப்படாத, அடையாளம் காணப்படாத காரணிகளின் பங்களிப்பு 34.8 சதவீதம் உள்ளது.

    இந்த மூலங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால், மாசைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் அவை என்னவென்றே தெரியாமல் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றது என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதன்மூலம் டெல்லி காற்று மாசுக்கு பல காரணிகள் கூட்டுப் பங்களிப்பை செய்கின்றன. மேலும் டெல்லியின் புவியியலும் காற்று மாசு அதிகளவில் காணப்பட முக்கிய காரணமாகவும்.

    டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன. இதனால் குளிர்காலத்தில் தூய காற்று நுழைவதை இந்த இரு அரண்கள் தடுக்கிறது.

    எனவே டெல்லியில் மாசுபாடு காற்றில் தேக்க நிலையை அடைந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு தரம் குறைவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    தூய காற்றை சுவாசிப்பது மக்களின் உரிமையாகும். இந்த பிரச்சனைக்கு டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒருமித்த கருத்துடன் தீர்வை நோக்கிய வியூகத்தை வகுத்து செயல்படுவதே முழுமுதற் தீர்வாகவும். மேலும் மக்களின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியமாகும்.    

    • இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது.
    • 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நேற்று டெல்லியில் காற்றின் தரம் கடுமையான நிலையை எட்டியது.

    அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் அளவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து டெல்லியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்தியா கேட் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெற்றோர்களும், குழந்தைகளும் இதில் கலந்து கொண்டனர். எங்களுக்கு சுவாசிக்க உதவுங்கள் என்ற வாசகத்துடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாசு நெருக்கடியின் அடையாள நினைவூட்டல்களான நெபுலைசர்கள் மற்றும் மருந்து சீட்டுகளுடன் பெண்கள் பங்கேற்றனர்.

    இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அதையும் மீறி மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் பங்கேற்ற ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறும்போது, 'காற்றின் தரத்தை மதிப்பிடுவதற்காக காற்றின் தரக் குறியீட்டுத் திரைகளில் தண்ணீரை பா.ஜ.க. அரசு தெளித்தது. தரவுகளை கையாளுகிறது. இது பா.ஜ.க.வின் நேர்மையையும் நம்பகத் தன்மையையும் குறைக்கிறது.

    பா.ஜ.க.வினர் கூட எங்களுடன் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் தங்கள் காற்று சுத்திகரிப்பான்களுடன் வீட்டில் அமர்ந்து இருக்கிறார்கள், காற்றும், நீரும் அரசியலின் விஷயம் அல்ல என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

    • தீபாவளி பண்டிகையிலிருந்து குறைந்த காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது.
    • காற்றின் தரநிலைபடி புள்ளி 301-400 வரை இருப்பது காற்று மாசு மிகவும் மோசம் என்பதை குறிப்பதாகும்.

    இந்தியாவில் வேகமாக நகர்மாயமாகிய நகரங்களில் ஒன்று டெல்லி. காலநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் பெருக்கத்தால் தொடர்ந்து காற்று மாசு இங்கு அதிகரித்து வருகிறது. இது தற்போது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

    தீபாவளி பண்டிகையிலிருந்து குறைந்த காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது. காற்றின் தரநிலைபடி புள்ளி 301-400 வரை இருப்பது காற்று மாசு மிகவும் மோசம் என்பதை குறிப்பதாகும்.

    டெல்லியில் உள்ள நொய்டா, காஜியாபாத்தில் 329-கவும், அலிப்பூரில் 421-கவும், வஜீர்பூர் மற்றும் ஜகாங்கிர்புரியில் 404-கவும், உள்ளது. காற்றின் தரம் மோசமாக உள்ளதால் தொடர்ந்து மூடுபனி நிலவி வருகிறது. நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியாக உயர்ந்தது. பருவ கால வெப்பநிலை சராசரியை விட 1.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக டெல்லி மாசுகட்டுப் பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    • டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.
    • டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது

    தீபாவளி பண்டிகையன்று டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.

    காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது.

    அவ்வகையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைக்க உத்தரபிரதேசத்தின் IIT கான்பூரிலிருந்து நேற்று ஒரு விமானம் புறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசை குறைக்க ரூ.3.2 கோடி செலவில் செயற்கை மழை பெய்விக்க IIT கான்பூர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதுகுறித்து விளக்கம் அளித்த IIT கான்பூர் இயக்குநர், "6,000 அடி உயரத்தில் பறந்த விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து மழை பெய்விக்க முயன்ற நிலையில், மேகங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தோல்வி அடைந்தது" என்று தெரிவித்தார். 

    • டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.
    • டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டம்

    தீபாவளி பண்டிகையன்று டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.

    காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

    அவ்வகையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைக்க உத்தரபிரதேசத்தின் கான்பூரிலிருந்து விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

    • டெல்லியில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடு உள்ளது.
    • பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்று மாசு மோசடைந்ததாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றச்சாட்டு.

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் இரவில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை மற்றும் இரவு அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    என்றாலும், பட்டாசு வெடிக்கப்பட்டால் காற்று மாசு அதிகரித்தது. இன்று காலை காற்றின் தரநிலை மிகவும் மோசடைந்திருந்தது. இதனால ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அரசு, காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறி விட்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிக்க ஆம் ஆத்மி கட்சி அவர்களை கட்டாயப்படுத்துகிறது என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மஜிந்தர் சிங் சிஸ்ரா கூறியதாவது:-

    டெல்லியில் காற்று மாசு மோசமடைந்துள்ளதால். தீபாவளி கொண்டாடியதற்காகவும், பட்டாசு வெடித்ததற்காகவும் டெல்லி முதல்வர், பாஜக மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் காற்று மாசுவிற்கான உண்மையான காரணம் பஞ்சாபில் பயிர்க்கழிவுகளை எரித்ததுதான்.

    தீபாவளிக்கு முன்னதாக காற்றின் தரநிலை 341 (AQI) ஆக இருந்தது. தீபாவளிக்குப் பிறகு 356 ஆக அதிகரித்துள்ளது. வெறும் 15 புள்ளிகள் தான் அதிகரித்துள்ளது. பாரம்பரிய முறையில் தீபாவளியைக் கொண்டாட மக்களுக்கு எங்கள் அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது என்பதை பெருமையுடன் ஒப்புக்கொள்கிறோம். பட்டாசு வெடித்ததால் 11 புள்ளிகள் மட்டுமே அதிகரித்துள்ளது.

    ஆம் ஆத்மி அரசால் பஞ்சாபில் விவசாயிகள் அவர்கள் நிலத்தில் பயிர்க்கழிவுகளை எரிக்க வற்றுவத்தபடுகிறார்கள். ஆத் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் தீபாவளி இரவு அதிக அளவில் பயிர்க்கழிவுகள் எரிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

    உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு இருந்தபோதிலும் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளால், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மாசுபாட்டின் தாக்கத்தை டெல்லி தாங்கி வருகிறது,

    இவ்வாறு மஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
    • பழைய CNG வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

    டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் ஜூலை 1 முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடை உத்தரவை மீறி இயக்கப்படும் 2 சக்கர வாகங்களுக்கு 5000 ரூபாயும் 4 சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும் அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் தற்போது, 15 ஆண்டுகளுக்கும் மேலான CNG வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

    இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 80 பழைய வாகனங்களைப் பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக பெட்ரோல் பங்குகள் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளன.

    • மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார்.
    • மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை காரணம்.

    புதுடெல்லி:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

    அப்போது, டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாடு அளவீடுகளை குறிப்பிட்ட அவர், டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும், வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்றும் சொன்னார். "3 நாட்கள் அங்கு தங்கினீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்" என்று கூட்டத்தினரைப் பார்த்து அவர் கூறினார்.

    மாசுபாட்டில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாகவும், இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு நிலையை அவசரமாக கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார்.

    மேலும், "மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை காரணம். நாங்கள் கிட்டத்தட்ட ரூ. 22 லட்சம் கோடி மதிப்புக்கு புதை படிவ எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். இதற்கு பதிலாக மாற்று எரிபொருளை நான் ஆதரிக்கிறேன். புதை படிவ எரிபொருள் இறக்குமதியை குறைத்து, பசுமை எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்து விவசாயிகளின் பைகளில் ரூ.12 லட்சம் கோடி வரை சேமிக்க விரும்புகிறேன்" என்றார்.

    அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் தயாரித்த காற்று தர குறியீட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, மேற்கண்ட எச்சரிக்கை விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.

    • டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மோசமான நிலையில் உள்ளது.
    • அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும் என கெஜ்ரிவால் தகவல்

    புதுடெல்லி:

    தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மேலும், டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில், வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்ற காரணிகளால் டெல்லி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.

    இந்நிலையில் காற்று மாசுபாடு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    காற்று மாசுபாடு என்பது அகில இந்திய அளவில் உள்ள பிரச்சனை. வட இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்கொண்டுள்ளன. டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மோசமான நிலையில் உள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருவதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம். ஆனால், பஞ்சாபில் நாங்கள் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களே ஆகின்றன. அதைக் கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும்.

    காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு ஒரு கூட்டு செயல் திட்டத்தை கொண்டு வர வேண்டும். இது மற்றவர்கள் மீது குறை சொல்லும் நேரம் அல்ல. மோசமான காற்றின் தரத்திற்கு கெஜ்ரிவால் அரசு மட்டுமே பொறுப்பல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது.
    • வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 2 வாரம் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளிக்கு முன்னர் காற்று மாசு ஓரளவு குறைந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசால் மீண்டும் காற்று மாசு அதிகரித்தது. காற்றின் தரம் குறைந்து நகரம் முழுவதையும் மூடு பனி ஆக்கிரமித்து இருப்பது போல் காணப்படுகிறது.

    எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளில் இருந்து காற்று மாசு டெல்லியின் மைய பகுதியிலும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. வரலாறு காணாத வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

    நேற்று மதியம் மத்திய அரசின் ஷபார் செயலியின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ) 445 ஆக இருந்தது, சில இடங்களில் 520-க்கு மேல் பதிவாகியது.

    101 மற்றும் 200-க்கு இடைப்பட்ட நிலைகள் மிதமானதாகக் கருதப்படுகின்றன.

    அதே சமயம் 201 மற்றும் 300-க்கு இடைப்பட்டவை மோசமானவை. 301 மற்றும் 400 க்கு இடையில் மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 400 ஐ விட அதிகமான எண்ணிக்கை கடுமையானது என்று கருதப்படுகிறது.

    ஆனால் சில பகுதிகளில் டெல்லியின் காற்றின்தரம் (ஏ.கியூ.ஐ) பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது.

    டெல்லியின் நச்சுக் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 ல் இருந்து 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று நுரையீரல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    அதிக அளவு மாசுபாடுகளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

    இது தோல் மற்றும் கண் எரிச்சலைத் தூண்டும் மற்றும் ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் திறன் இழப்பு, எம்பிஸிமா, புற்றுநோய் மற்றும் கடுமையான நரம்பியல், இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும்.

    டெல்லி அரசு கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி அதிகளவிலான பட்டாசு வெடித்ததே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாகும் என கூறப்படுகிறது.

    வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார். எல்லையில் சோதனை நடத்தினார்.

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மட்டுமே நகருக்குள் அனுமதித்தார். மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினார். இதனை கடுமையாக பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தீபாவளிக்கு முன்பு காற்று மாசு குறைவாக இருந்தது. பட்டாசு அதிகளவில் வெடித்ததால் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று மாநில அரசும், மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 445 என்ற அளவில் உள்ளதாகவும் அது உலகளவில் காற்று மாசு பட்டியலில் டெல்லி முதலிடத்தைபிடித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

    இந்த பட்டியலில் 6-வது இடத்தில் மும்பையும், 7-வது இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது.

    • காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
    • கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் இருந்தது.

    காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லியில் தற்போது காற்று மாசு குறைந்துள்ளது. கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் நாளை (20-ந்தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்து உள்ளது.

    அதேபோல் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து இருந்த நேரத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் டெல்லியில் நுழைய தேசிய காற்றுத்தர மேலாண்மை ஆணையம் தடை விதித்து இருந்தது.

    தற்போது காற்று மாசு குறைந்ததை தொடர்ந்து டெல்லி நகருக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையும் நீக்கப்பட்டு உள்ளது.

    ×