என் மலர்
நீங்கள் தேடியது "delhi government"
- மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
- கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் பிற மாநிலங்களில் தாரிக்கப்டும் ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய இருமல் மருந்துகளில், 'டை-எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரேசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் ம.பி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
இதற்கிடையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை விதித்தித்தன.
இந்நிலையில் இந்த வரிசையில் டெல்லி அரசும் கோல்ட்ரிஃப் மருந்துக்க்கு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப்பின் விற்பனை, கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கு டெல்லி அரசு தடை விதித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பின் நலன் கருதி, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் விலங்குகள் நல வாரியக் கூட்டம் நடைபெற்றது.
- ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பது இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் (UNDP) இணைந்து டெல்லியில் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் என்று மேம்பாட்டு அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற விலங்குகள் நல வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வரும் செப்டம்பர் 28-ந்தேதி உலக ரேபிஸ் தினத்திற்கு முன்பு, நாய் கடி சம்பவங்களைத் தடுப்பது மற்றும் தடுப்பூசி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவது உள்ளிட்ட விலங்குகள் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பதும் இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது. நாய் ஆர்வலர்கள், நாய் எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்ற சுப்ரீம் கோர்ட் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, திருத்தப்பட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதில், தெருவில் திரியும் நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும், மீண்டும் தெருக்களில் விடக் கூடாது என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்தது. அத்துடன், நாய் ஆர்வலர்கள் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது, அதற்கென உள்ளாட்சி அமைப்புகளால் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
- பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்.
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டது.
தற்போது பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை டெல்லியில் உள்ள அரசு அலுவலர்கள் அனைவருக்கும் விடுப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் - ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
- மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும், துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
அரசியல் சாசன அமர்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீர்ப்பு வெளியான மறுதினமே சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது.
இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்தது.
யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளான டானிக்ஸ் பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் டெல்லி முதல்-மந்திரி தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது என்றும் ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அவர் (கெஜ்ரிவால்) அதிகாரம் பெற்றால் டெல்லிக்கு அசாதாரண பணிகளை செய்வார் என்று அவர்கள் பயப்படுவார்கள்.
டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆணையத்தில் இருக்கும் தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.
மத்திய அரசுக்கு பிடிக்காத எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதை மாற்றுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சொத்துப் பதிவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையை தவிர்க்கும்.
- ஊழலைத் தடுக்க வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும்.
டெல்லியில் உள்ள சொத்துக்களை எந்த துணை பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம் என டெல்லி வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி இன்று அறிவித்துள்ளார், மேலும், அதற்கான 'எங்கும் பதிவு' என்கிற கொள்கையை அவர் அறிமுகம் செய்தார்.
இந்தக் கொள்கையின் மூலம், சொத்துப் பதிவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையை தவிர்க்கும், ஊழலைத் தடுக்க வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கொள்கைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்து, அதற்கான கோப்பு துணை நிலை ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
கொள்கையின்படி, தங்கள் சொத்துக்களை பதிவு செய்ய விரும்பும் நபர்கள் டெல்லியில் உள்ள எந்த துணை பதிவாளர் அலுவலகத்திற்கும் செல்லலாம். சொத்துப் பதிவுக்காக தனிநபர்கள் ஒரு குறிப்பிட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு வரம்பிடப்பட மாட்டார்கள்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "அலுவலகங்களுக்கு வெளியே பணம் கேட்கும் இடைத்தரகர்கள் உள்ளனர். அதே அலுவலகத்தில் தங்கள் பதிவேடு வேலைகளை செய்ய இந்த இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த பிரச்சினைகளை தீர்க்க, வருவாய் துறை இந்த புதிய கொள்கையை தொடங்கியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்து துணை பதிவாளர்களும் இப்போது கூட்டு துணை பதிவாளர்களாக செயல்படுவார்கள் மற்றும் அவர்களின் அதிகார வரம்பு டெல்லி முழுவதையும் உள்ளடக்கும். டெல்லியில் வசிக்கும் எவரும் டெல்லியின் 22 துணைப் பதிவாளர் அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் சொத்துப் பதிவுக்கான ஆன்லைன் வழியை மேற்கொள்ளலாம்.
- சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகை.
- சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சத் பூஜை கொண்டாட்டத்திற்காக டெல்லியில் நவம்பர் 7-ந்தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் அதிஷி அறிவித்துள்ளார்.
டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்.
சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகை, பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. இது சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
உண்ணாநோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட நான்கு நாள் சடங்குகள் மற்றும் மரபுகளின் கடுமையான வழக்கத்தை உள்ளடக்கியது.
இதுதொடர்பாக முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தள பதிவில், இந்த முடிவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சத் பண்டிகைக்காக நவம்பர் 7-ந்தேதி விடுமுறை அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . பூர்வாஞ்சலின் சகோதரிகள் விழாவை சிறப்பாக கொண்டாட முடியும். விடுமுறையை உறுதிப்படுத்தும் தனது கையொப்பமிடப்பட்ட உத்தரவையும் அவர் பகிர்ந்துள்ளார்.







