search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi government"

    • சொத்துப் பதிவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையை தவிர்க்கும்.
    • ஊழலைத் தடுக்க வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும்.

    டெல்லியில் உள்ள சொத்துக்களை எந்த துணை பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம் என டெல்லி வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி இன்று அறிவித்துள்ளார், மேலும், அதற்கான 'எங்கும் பதிவு' என்கிற கொள்கையை அவர் அறிமுகம் செய்தார்.

    இந்தக் கொள்கையின் மூலம், சொத்துப் பதிவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையை தவிர்க்கும், ஊழலைத் தடுக்க வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

    இந்த கொள்கைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்து, அதற்கான கோப்பு துணை நிலை ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    கொள்கையின்படி, தங்கள் சொத்துக்களை பதிவு செய்ய விரும்பும் நபர்கள் டெல்லியில் உள்ள எந்த துணை பதிவாளர் அலுவலகத்திற்கும் செல்லலாம். சொத்துப் பதிவுக்காக தனிநபர்கள் ஒரு குறிப்பிட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு வரம்பிடப்பட மாட்டார்கள்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "அலுவலகங்களுக்கு வெளியே பணம் கேட்கும் இடைத்தரகர்கள் உள்ளனர். அதே அலுவலகத்தில் தங்கள் பதிவேடு வேலைகளை செய்ய இந்த இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த பிரச்சினைகளை தீர்க்க, வருவாய் துறை இந்த புதிய கொள்கையை தொடங்கியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள அனைத்து துணை பதிவாளர்களும் இப்போது கூட்டு துணை பதிவாளர்களாக செயல்படுவார்கள் மற்றும் அவர்களின் அதிகார வரம்பு டெல்லி முழுவதையும் உள்ளடக்கும். டெல்லியில் வசிக்கும் எவரும் டெல்லியின் 22 துணைப் பதிவாளர் அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் சொத்துப் பதிவுக்கான ஆன்லைன் வழியை மேற்கொள்ளலாம்.

    • டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் - ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
    • மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும், துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    அரசியல் சாசன அமர்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீர்ப்பு வெளியான மறுதினமே சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது.

    இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்தது.

    யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளான டானிக்ஸ் பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதில் டெல்லி முதல்-மந்திரி தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது என்றும் ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அவர் (கெஜ்ரிவால்) அதிகாரம் பெற்றால் டெல்லிக்கு அசாதாரண பணிகளை செய்வார் என்று அவர்கள் பயப்படுவார்கள்.

    டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆணையத்தில் இருக்கும் தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.

    மத்திய அரசுக்கு பிடிக்காத எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதை மாற்றுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    டெல்லியில் பழமையான 40 லட்சம் வாகனங்களின் பதிவெண்களை ரத்து செய்துவிட்டதாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது. #DelhiPollution #SupremeCourt #OldVehiclesDeregisterd
    புதுடெல்லி:

    டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி-என்சிஆர் சாலைகளில் இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.

    ‘தடையை மீறி இயக்கப்படும் பழைய வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும். பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க வேண்டும்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காற்று மாசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. மாசு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக பேஸ்புக், டுவிட்டரில் தனி பக்கம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதன் வாயிலாக 18 புகார்கள் வந்திருப்பதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பட்டு வாரியம் கூறியது.

    10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் என மொத்தம் 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்களை, உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பயத்தின் உத்தரவின்படி, ரத்து செய்துவிட்டதாக டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், நவம்பர் 30 முதல் டிசம்பர் 30 வரை டெல்லிக்குள் நுழையும் சரக்கு வாகனங்களை அடையாளம் காண்பதற்காக, 13 நுழைவு வாயில்களிலும் ரேடியோ அதிர்வெண் சாதனம் பொருத்தப்பட உள்ளதாகவும் டெல்லி அரசு கூறியது. #DelhiPollution #SupremeCourt #OldVehiclesDeregisterd
    ×