என் மலர்
இந்தியா

குழந்தைகளின் உயிர்களை பறித்த Coldrif இருமல் மருந்துக்கு தடை விதித்த டெல்லி அரசு
- மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
- கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் பிற மாநிலங்களில் தாரிக்கப்டும் ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய இருமல் மருந்துகளில், 'டை-எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரேசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் ம.பி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
இதற்கிடையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை விதித்தித்தன.
இந்நிலையில் இந்த வரிசையில் டெல்லி அரசும் கோல்ட்ரிஃப் மருந்துக்க்கு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப்பின் விற்பனை, கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கு டெல்லி அரசு தடை விதித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பின் நலன் கருதி, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.






