என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய்கள்"

    • ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதேபோல், மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தெருநாய் பிரச்சனை அதிகரித்து வருவதை தடுக்க கோரிய வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் விலங்குகள் நல வாரியக் கூட்டம் நடைபெற்றது.
    • ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பது இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் (UNDP) இணைந்து டெல்லியில் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் என்று மேம்பாட்டு அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற விலங்குகள் நல வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    வரும் செப்டம்பர் 28-ந்தேதி உலக ரேபிஸ் தினத்திற்கு முன்பு, நாய் கடி சம்பவங்களைத் தடுப்பது மற்றும் தடுப்பூசி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவது உள்ளிட்ட விலங்குகள் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பதும் இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக, டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது. நாய் ஆர்வலர்கள், நாய் எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வந்தனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்ற சுப்ரீம் கோர்ட் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, திருத்தப்பட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதில், தெருவில் திரியும் நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும், மீண்டும் தெருக்களில் விடக் கூடாது என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்தது. அத்துடன், நாய் ஆர்வலர்கள் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது, அதற்கென உள்ளாட்சி அமைப்புகளால் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம்.
    • 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,

    ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றவில்லை.

    இதேபோல, பராமரிக்க முடியவில்லை என்றால் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வளர்ப்பு நாய்களின் உடலில் 'மைக்ரோ சிப்' பொருத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கத்திற்கு மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயமாகிறது.

    இதுகுறித்து, மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம். இதேபோல, சென்னையில் 12,500 பேர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சென்னையில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயம்.

    இதற்காக 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வரும் போது 'மைக்ரோ சிப்' பொருத்தவில்லை என்றால் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும். அவ்வாறு பொறுத்தாத நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 'மைக்ரோ சிப்' பொருத்தப்படும் நாய்கள் அதற்கான செயலி மூலம் கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை.
    • நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.

    நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தெருநாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தீர்வு ரொம்ப சிம்பிள்-ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னன்னு தெரிந்தவர்கள், கழுதை எங்க காணோம் என்று எங்கேயாவது கவலைப்படுகிறார்களா?

    கழுதைகள் எல்லாம் காணாமல் போய்டுச்சு? நமக்காக எவ்வளவு பொதி சுமைந்திருக்கு? இப்ப பார்க்கிறதே இல்லையே... கழுதைய காப்பத்தணும்னு யாராவது பேசுறாங்களா?. எல்லா உயிர்களையும் காப்பத்தணும்னு, எவ்வளவு முடியுமோ காப்பத்தணும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்றார்.

    மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதை பா.ஜ.க. விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை. நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான். நாளைக்கு அவர்கள் நல்லது செய்தால் சொல்லத்தான் போகிறோம் என்றார். 

    • மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.
    • அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது.

    திருவனந்தபுரம்:

    கேரளா, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தெருவில் நடந்துசெல்லும் பாதசாரிகள் மற்றும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் யாரும் வெளியில் அச்சமின்றி சென்றுவர முடியாத நிலை தற்போது உள்ளது.

    தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் தெருநாய் கடிக்கு உள்ளாகி ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் அதிகமாக இருப்பதால், தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் அங்கு மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

    இந்தநிலையில் தெரு நாய்களை விரட்டும் மந்திரக்கோல் ஒன்றை கேரள அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதற்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரிக்கோடு. இங்குள்ள வடசேரி என்ற இடத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அபிஷேக், நிஹால், சதீன் முகம்மது சுபைர்.

    இந்த மாணவர்கள் தான் தெருநாய்களை விரட்டக்கூடிய எலக்ட்ரானிக் சர்க்கியூட் பொருத்தப்பட்ட மந்திரக்கோலை தயாரித்துள்ளனர். இதில் உள்ள சுவிட்சை அழுத்தினால், அதிலிருந்து விலங்குகளுக்கு விரும்பமில்லாத மீயொலி ஒலி மற்றும் ஒருவித வாசனை வெளியாகும்.

    மேலும் லேசான அதிர்வலைகளையும் வெளியிடும். இதனால் தெருநாய்கள் அந்த மந்திரக்கோல் வைத்திருக்கும் நபரின் அருகில் செல்லாமல் அங்கிருந்து ஓடிவிடும். மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.

    மேலும் அதிலிருந்து வெளியாகும் வாசனையும் மனிதர்களால் உணர முடியாது. இதனால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது. மேலும் பாதிக்கவும் செய்யாது.

    தெருநாய்களை விரட்டும் மந்திரக்கோலை அரசு பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பிரகித் என்பவரின் மேற்பார்வையில் செய்துள்ளனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு டெல்லியில் நடைபெற்ற புதுமை மாரத்தான் என்ற நிகழ்வில் பரிசு கிடைத்துள்ளது.

    இதன் மூலம் அவர்களின் தயாரிப்பு தேசியஅளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும் அதனை வணிக ரீதியாக கொண்டுவரும் வகையில் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தங்களின் கண்டு பிடிப்புக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால், அதற்கு காப்புரிமை பெற்று தொழில் தொடங்கும் முயற்சியில் அதனை கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஈடுபட்டு வருகின்றனர். 

    • படுகாயம் அடைந்தவர்கள் செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் கொல்லிமலை அரியூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாட்டுபட்டி, நம் அருவி, சோளக்காடு, டெம்பிள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் நம் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை திடீரென தெரு நாய்கள் துரத்தி, துரத்தி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊராட்சி துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று 13 வெறிநாய்களை பிடித்து ஒரு அரங்கத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களை கடித்து குதறிய தெருநாய்கள் பிடிக்கப்பட்டு ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்கள் மூலம் அவைகளுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படும் என்றனர்.

    • சூரிய வெப்பத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாக நாய்கள் குழப்பமடையக்கூடும்.
    • வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு முன்கூட்டியே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.

    கோடை வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.பொதுமக்களுடன் சேர்ந்து விலங்குகளும் இந்த வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள், பறவைகள் மற்றும் தெருநாய்கள் மீது கோடையின் தாக்கம் கடுமையாக உள்ளது.

    தெரு நாய்களுக்கு இது மிகவும் கடினமான நேரம். தெரு நாய்கள் வெயிலின் வெப்பத்தால் அவதிப்படுகின்றன. மனிதர்களின் உடல் சூடாகும்போது குளிர்விக்க வியர்வை சுரக்கிறது. நாய்களுக்கு அந்த நிலை இல்லை. இதனால் அவை விரைவாக வெயில் பாதிப்புக்கு ஆளாகின்றன.

    இதனால் நாய்களின் குணநலன் பாதிக்கப்பட்டு கோபம் அடைகிறது. அவற்றின் நடத்தை ஆவேசமாக மாறுகிறது. இந்த நேரத்தில் நாய்களை அணுகினாலோ அல்லது தூண்டிவிட்டாலோ ஓடி வந்து கடித்து விடும்.

    மற்ற நாட்களை விட கோடை காலத்தில் நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒவ்வொரு மாதமும் 2,500 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அந்த எண்ணிக்கை 3,000-க்கும் அதிகமாக இருக்கும்.

    கோடை காலத்தில் தெரு நாய்கள் மற்றும் செல்ல நாய்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.

    ஒரு நாயின் காதில் ஒரு சிறிய வெட்டு (காது வெட்டு) இருந்தால் அது குடும்பக் கட்டுப்பாட்டுடன் ரேபிஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அர்த்தம். அத்தகைய நாய்களால் எந்த ஆபத்தும் இல்லை.

    உங்கள் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் இருந்தால் உடனடியாக மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் நாய்களை பிடித்து குடும்பக் கட்டுப்பாட்டுடன் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளையும் வழங்குகிறார்கள்.

    குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால், நாய்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தி குறைந்து தங்கள் ஆக்ரோஷமான தன்மையை இழந்து விடும். அவை மனிதர்களைத் தாக்குவதில்லை. நீங்கள் நடந்து செல்லும் போது நாய்களைக் கண்டால், அவற்றின் கண்களைப் பார்க்கவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது. நாம் அவைகளை புறக்கணித்தால், நாய்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடும்.

    99 சதவீத நாய்கள் நன்றி உள்ளவை. அதன் மீது கொஞ்சம் பரிதாபப்பட்டாலும் உண்மையுள்ளவர்களாகவே மாறிவிடும். உடலில் ஏற்படும் மாற்றங்களால் சில சமயங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. இது போன்ற நேரங்களில் கவனமாக இருங்கள்.

    சூரிய வெப்பத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாக நாய்கள் குழப்பமடையக்கூடும். நீங்கள் அவற்றை நெருங்கும்போது அவை தாக்குகின்றன.

    குழந்தைகளின் கையில் ஏதாவது உணவு இருந்தால் அதைப் பறிப்பதற்காக அவை தாக்கும். ஒரு நாய் உங்களைக் கடித்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள் காயத்தை உடனடியாக சோப்பு போட்டு கழுவவும். காயத்தின் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ரேபிஸை ஏற்படுத்தும் வைரஸை நீக்கும்.

    வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு முன்கூட்டியே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். அவை கடித்தால் கூட நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெருக்களில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று நாய் கடித்து குதறுகிறது.
    • தெரு நாய்களை கொல்லக்கூடாது என்பதால் கருத்தடை செய்து மீண்டும் அந்த பகுதியிலேயே விடப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் கவுன்சிலர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது 134-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் உமா சரமாரி கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது:-

    சென்னையில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடித்து குதறுகிறது. சிறுவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. கருத்தடை செய்த பிறகும் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரிப்பது ஏன்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதற்கு கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பதில் அளித்து கூறியதாவது:-

    புதியமன்ற கூட்டம் கூடிய பிறகு தெரு நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் தெரு நாய்களின் இன உற்பத்தியை தடுக்க சிகிச்சை மையங்கள் மேம்படுத்தப்படுகிறது. கண்ணம்மாபேட்டை கால்நடை மருத்துவ மையத்துக்கு ரூ.7 கோடி, லாயிட்ஸ் காலனியில் உள்ள மையத்துக்கு ரூ.6 கோடியே 64 லட்சம், புளியந்தோப்பில் உள்ள சிகிச்சை மையத்துக்கு ரூ.6 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் கிளை மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தெரு நாய்களை கொல்லக்கூடாது என்பதால் கருத்தடை செய்து மீண்டும் அந்த பகுதியிலேயே விடப்படுகிறது. வாரத்திற்கு 400 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி கவுன்சில் கூட்டம் அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர் சதீஷ் குமார் பேசுகையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஆணையாளரிடம் புகார் செய்தால் ஊழியர் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள்.ஆணையாளரை சந்தித்து கோரிக்கை குறித்து பேச காத்திருக்கும் நிலை உள்ளது என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் தெய்வேந்திரன் பேசுகையில், புதிய வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு விண்ணப் பித்தால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை.இந்த நிலை நீடித்து வருகிறது என்றார்.இதற்கு பதில் அளித்த ஆணையாளர், சொத்து வரி மாற்றம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

    ஏற்கனவே அலுவலகத்தில் தேங்கி யிருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. கட்டிட வரைபட அனுமதிக்கு முன்னர் மனையிட வரி செலுத்தினால்மட்டுமே கட்டிட வரைபட அனுமதி பெற முடியும்.

    இனி வரும் காலங்களில் இன்னும் விரைந்து இந்த விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி பேசுகையில் எனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து வலியுறுத்தினால் கண்டுகொள்வது கிடையாது. டெண்டர் சம்பந்தமான தகவல்கள் தரமறுக்கின்றனர் என்றார்.

    அதைத் தொடர்ந்து பேசிய பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் மின்விளக்கு வசதி, வடிகால் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசுதொல்லை அதிகரித்து விட்டது.

    வார்டு முழுவதும் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நாய் தொல்லை அதிகரித்து விட்டது. தினமும் 10 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகின்றனர்.நாய்களிடம்இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலளித்த தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த தொந்தரவு உள்ளது. நாய்களை கொல்ல முடியாது.நாய்களை கட்டுப்படுத்த புளு கிராஸ் நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    • மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள் தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.
    • தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரபகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சிபகுதியில் தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களையும் பள்ளி குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் என பலதரப்பினரும் மாநகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில்தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள்தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.அதன்படி திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து அகற்றினர்.

    • நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.
    • நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.

     வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் ரோட்டில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்து பாளையம், காடையூரான் வலசு, சேனாபதிபாளையம் ஆகிய ஊர்களில் தெரு நாய்கள் 100க்கும் மேற்பட்ட பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை கடித்து கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.தற்போது தெரு நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு பொதுமக்கள் மற்றும் தன்னார்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன.
    • விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை நாய்கள் தொடர்பானவை.

    நாய்கள் தொடர்பாக 1913 உதவி எண்ணில் தினமும் 80 புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்கள் தொடர்பானவை ஆகும்.

    சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுகிறது. ஆனால் இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிடிபட்ட 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியிலேயே நாய்களுக்கு நாய் பிரியர்கள் உணவளிப்பதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

    இதையடுத்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக இடம் ஒதுக்குவது குறித்து சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விலங்குகள் நல தன்னார்வலர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குடியிருப்போர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க குடிமை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.

    ஆனால் அதை மீறுபவர்களுக்கு தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×