என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
- மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள் தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.
- தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரபகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சிபகுதியில் தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களையும் பள்ளி குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் என பலதரப்பினரும் மாநகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில்தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள்தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.அதன்படி திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து அகற்றினர்.
Next Story