என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street Dogs"

    • ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.
    • மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் கஜகூட்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் மெட்டில்டா. இவர் செங்கோட்டுக்கோணம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்து வந்தார்.

    அவர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யாமல், சுகாதார விதிகளை கடைபிடிக்காமல் தனது வீட்டில் 70-க்கும் மேற்பட்ட தெருநாய்களை சட்டவிரோதமாக வளர்த்திருக்கிறார். ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.

    மெட்டில்டா வளர்த்த தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தபடி இருந்ததாலும், அவை அடிக்கடி ஒன்றாக குறைத்தபடியும், ஊளையிட்டபடியும் இருந்ததாலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாலும் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

    ஆகவே அது குறித்து அவர்கள், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குடியிருப்புவாசிகளுக்கு உறுதியளித்தார்.

    மேலும் அவர் நேரடியாக களத்தில் இறங்கினார். அவர் பெண் போலீஸ்காரர் மெட்டில்டாவின் வீட்டுக்கு மாநகராட்சி பணியாளர்களுடன் சென்றார். பின்பு அங்கு வளர்க்கப்பட்ட தெருநாய்கள் அனைத்தையும் மாநராட்சி பணியாளர்கள் வலையை பயன்படுத்தி பிடித்தனர். பின்பு அவை பிரத்யேக வாகனத்தில் ஏற்றப்பட்டு, பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அந்த பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.

    தெருநாய்கள் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், ஒரே இடத்தில் 3 ஆயிரம் தெருநாய்களை பராமரிக்கவும் வசதியாக புதிய காப்பகம் அமைக்க திருவனந்தபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெருநாய்கள் கடித்தால் ஏற்படும் காயம் அல்லது இறப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்கள் ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும்
    • தெருநாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. உங்களுக்கு நாய் வேண்டுமென்றால், உரிமம் பெற்று வளர்க்கலாமே

    தெருநாய்கள் கடித்தால் ஏற்படும் காயம் அல்லது இறப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்கள் ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தெருநாய்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், அவற்றை பொது இடங்களில் நடமாடவிட்டு மக்களை அச்சுறுத்தவோ அல்லது கடிக்கவோ விடாமல், தங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்று வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தது.

    தெருநாய்கள் தொடர்பாக வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும்நிலையில், விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.

    "குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு நாய்க்கடி, மரணம் அல்லது காயத்திற்கும், தகுந்த நடவடிக்கை எடுக்காததற்காக அரசாங்கம் அதிகப்படியான இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட வாய்ப்புள்ளது. அதேபோல், நாய்களுக்கு உணவளிப்பதாக சொல்பவர்களுக்கும் இதற்கான பொறுப்பையும், கடமையையும் நிர்ணயிப்போம்.

    அவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென்றால், உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நாய்கள் ஏன் பொது இடங்களில் சுற்றித் திரிந்து மக்களைக் கடித்து அச்சுறுத்த வேண்டும்?" என்று நீதிபதி விக்ரம் நாத் கேள்வி எழுப்பினார். "9 வயது குழந்தையை நாய்கள் தாக்கும்போது அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? அவர்களுக்கு உணவளிக்கும் அமைப்பா? இந்தப் பிரச்சனையை நாங்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?" என்று நீதிபதி மேத்தா கேள்வி எழுப்பினார்.

    மேலும் "தெருநாய் ஒருவரைத் தாக்கும்போது அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? தெருநாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. உங்களுக்கு நாய் வேண்டுமென்றால், உரிமம் பெற்று வளர்க்கலாமே" என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஒரு அமைப்பிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், நவம்பர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆதரித்துப் பேசினார். அந்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருப்பதாக அவர் வாதிட்டார். ஏற்கனவே பல்வேறு கமிட்டிகளின் அறிக்கைகள் நீதிமன்றத்திடம் உள்ளதால், இது குறித்து ஆராயப் புதிய நிபுணர் குழு எதுவும் தேவையில்லை என்றும் கூறினார்.

    இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி மேத்தா, "நீதிமன்ற உத்தரவை (நவம்பர் 7 உத்தரவு) பாதுகாக்க வந்த முதல் நபர் இவர்தான்" என்று பாராட்டினார். தெருநாய்களுக்குப் பொது இடங்களிலோ அல்லது நிறுவன வளாகங்களிலோ தங்குவதற்கு எந்தச் சட்டபூர்வ உரிமையும் இல்லை என்று தத்தார் வாதிட்டார். ஒரு மனிதர் தங்க அனுமதி இல்லாத இடத்தில் விலங்குகளும் இருக்க முடியாது என்றும், நாய்களை மீண்டும் அதே இடத்திற்கு அழைத்துச் செல்வது "விலங்கு அத்துமீறல்" ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். சாலைகளில் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்ட உரிமை குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    நகர்ப்புறங்களைத் தாண்டி வனப்பகுதிகளில் உள்ள காட்டு நாய்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். லடாக்கில் சுமார் 55,000 காட்டு நாய்கள் சுற்றித் திரிவதாகவும், அவை அழியும் நிலையில் உள்ள அபூர்வ வனவிலங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார். முறையான நடவடிக்கைகளை எடுத்தால், சில ஆண்டுகளிலேயே நாய் கடியையும் அதன் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.

    தெருநாய் பிரச்சனை இப்போது நீதிமன்ற வளாகம் வரை வந்துவிட்டதாக நீதியரசர் மேத்தா கவலை தெரிவித்தார். சமீபத்தில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை நாய் கடித்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், அங்கு நாயைப் பிடிக்க வந்த நகராட்சி ஊழியர்களை "நாய் விரும்பிகள்" என்று சொல்லிக் கொள்ளும் சில வழக்கறிஞர்களே தாக்கியதை வேதனையுடன் பதிவு செய்தார்.

    விலங்கு நல அமைப்புகளின் வேண்டுகோள்: 

    ஒரு விலங்கு நல அறக்கட்டளைக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்தப் பிரச்சனையை 'மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதலாக' மட்டும் பார்க்காமல், சூழலியல் சமநிலை (Ecological balance) என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகள் தொடர்பான தரவுகளைக் குறிப்பிட்ட அவர், எலிகளைக் கட்டுப்படுத்துவதிலும் சுற்றுச்சூழலைச் சமன்படுத்துவதிலும் நாய்களுக்குப் பங்கு உண்டு என்று வாதிட்டார்.

    மனிதாபிமான அணுகுமுறை:

    மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், விலங்குகளைக் கருணையுடன் நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது என்பதை வலியுறுத்தினார். நாய்களைக் கொல்வது போன்ற நடவடிக்கைகளை அவர் எச்சரித்தார். போதிய எண்ணிக்கையில் ABC (விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு) மையங்கள் இல்லாதது போன்ற உள்கட்டமைப்பு குறைபாடுகளே இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று அவர் வாதிட்டார். மேலும், ஒரு இடத்திலிருந்து நாய்களை அகற்றினால், அந்த இடத்தை விட அதிக ஆக்ரோஷமான மற்ற விலங்குகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும் என்றும் எச்சரித்தார்.

    உணர்ச்சிப்பூர்வமான விவாதம்:

    மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி இப்பிரச்சனையை ஒரு "உணர்ச்சிப்பூர்வமான விஷயம்" என்று விவரித்தார். அதற்கு நீதியரசர் மேத்தா, இதுவரை வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் அனைத்தும் "நாய்களுக்காக மட்டுமே" இருப்பதாகத் தெரிகிறது என்று கருத்து தெரிவித்தார். குருசாமி தனது வாதங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற விவாதங்களை முன்வைத்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் "மேல்தட்டு வர்க்கத்தினர்" என்று நீதியரசர் மேத்தா குறிப்பிட்டார்.

    நீதிபதிகளின் கண்டிப்பு:

    நீண்டகாலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்பிரச்சனை பலமடங்கு பெருகிவிட்டதாக நீதியரசர் விக்ரம் நாத் குறிப்பிட்டார். எனவே, அதிகாரிகளை வேலை வாங்கவும், இதற்கான தீர்வைத் தொடங்கவும் நீதிமன்றத்தை அனுமதிக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த விவாதம் ஒரு நீதிமன்ற விசாரணை போல இல்லாமல், ஒரு பொது மேடை (Public platform) விவாதம் போல மாறி வருவதாக நீதியரசர் மேத்தா அதிருப்தி தெரிவித்தார்.

    மூத்த வழக்கறிஞர் பெர்சிவல் பில்லிமோரியா வாதிடுகையில், தெருநாய்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு (Census) இல்லாததும், ABC (கருத்தடை) திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படாததுமே அடிப்படைப் பிரச்சனை என்றார். அட்டர்னி ஜெனரல் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவும், திட்டச் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் அவர் பரிந்துரைத்தார்.

    ஆனால், இந்த வாதங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டவை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். முறையான கணக்கெடுப்பு இல்லாதபோது, நாய்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எப்படி உறுதியாகக் கூறப்படுகிறது? அத்தகைய வாதங்கள் "யதார்த்தத்திற்குப் புறம்பானவை" என்று நீதியரசர் மேத்தா கேள்வி எழுப்பினார்.

    ஊடகச் செய்திகளை ஆதாரமாக நம்பக்கூடாது என்று பில்லிமோரியா எச்சரித்தார். அதற்கு நீதியரசர் நாத், "அப்படியென்றால் இந்த மனுக்களையே பதிவு செய்திருக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு விளக்கமளித்த பில்லிமோரியா, ஊடகச் செய்திகளை மட்டுமே அதிகமாகச் சார்ந்திருப்பது ஒரு "எதிரொலி அறை" போன்ற மாயையை உருவாக்கிவிடும் என்பதே தனது கவலை என்று கூறினார்.

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம்:

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட காம்னா பாண்டே என்பவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாய் தன்னைத் தாக்கியதாகவும், பின்னர் அந்த நாய் நீண்டகாலமாக மக்களால் (கல்லால் அடித்தும், உதைத்தும்) துன்புறுத்தப்பட்டதை தான் அறிந்ததாகவும் கூறினார்.

    பயத்தினால் ஏற்படும் 'தற்காப்பு ஆக்ரோஷம்' (Defensive aggression) தான் நாய்கள் கடிக்க முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். தன்னை கடித்த நாயையே தான் தத்தெடுத்ததாகவும், அதன் பிறகு அந்த நாய் யாரையும் கடிக்கவில்லை என்றும் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    நாய்களைக் கூண்டில் அடைப்பதற்குப் பதிலாக, நிறுவன வளாகங்களிலேயே அவற்றுக்கான இல்லங்களை (Dog homes) அமைப்பது போன்ற ஒரு முழுமையான அணுகுமுறை தேவை என்று அவர் வலியுறுத்தினார். மற்றொரு வழக்கறிஞர், பொது இடங்களிலிருந்து நாய்களை அகற்ற வேண்டும் என்ற நவம்பர் 7-ம் தேதி உத்தரவை கிராமப்புறங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து வழக்கு ஜன.20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

     

     

    • ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது
    • 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

    உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கையிலெடுத்துள்ள தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.

    இந்நிலையில் இந்தக் கருத்தை குறிப்பிட்டு, "ஆண்களின் மனதையும் கணிக்க முடியாது, அவர்கள் எப்போது குற்றம் செய்வார்கள் என்று தெரியாது, அதற்காக எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்க முடியுமா? என நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது -- அவன் எப்போது பாலியல் வன்கொடுமை/கொலை செய்வான் என்று தெரியவில்லை, எனவே எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா?" எனக் குறிப்பிட்டுள்ளார். இது இணையத்தில் பெரும் விவாதத்தையே தூண்டியுள்ளது. பலரும் இந்த ஒப்பீடே முதலில் தவறு எனக்கூறி வருகின்றனர்.

    நடிகை திவ்யா தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான AppleBox Studios மூலம் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விலங்கு நல ஆர்வலரான இவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்து தனது கருத்துகளை துணிச்சலாகப் பதிவு செய்து வருகிறார்.


    திவ்யா ஸ்பந்தனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி


    • தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.
    • மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.

    தெருநாய்கள் பிரச்சனையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார். கடந்த 2006 -ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.

    திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

    தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார். மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.

    இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மனைவிக்கு ரூ. 15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார்.

    இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதேபோல், மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தெருநாய் பிரச்சனை அதிகரித்து வருவதை தடுக்க கோரிய வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் விலங்குகள் நல வாரியக் கூட்டம் நடைபெற்றது.
    • ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பது இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் (UNDP) இணைந்து டெல்லியில் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் என்று மேம்பாட்டு அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற விலங்குகள் நல வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    வரும் செப்டம்பர் 28-ந்தேதி உலக ரேபிஸ் தினத்திற்கு முன்பு, நாய் கடி சம்பவங்களைத் தடுப்பது மற்றும் தடுப்பூசி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவது உள்ளிட்ட விலங்குகள் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பதும் இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக, டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது. நாய் ஆர்வலர்கள், நாய் எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வந்தனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்ற சுப்ரீம் கோர்ட் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, திருத்தப்பட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதில், தெருவில் திரியும் நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும், மீண்டும் தெருக்களில் விடக் கூடாது என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்தது. அத்துடன், நாய் ஆர்வலர்கள் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது, அதற்கென உள்ளாட்சி அமைப்புகளால் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம்.
    • 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,

    ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றவில்லை.

    இதேபோல, பராமரிக்க முடியவில்லை என்றால் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வளர்ப்பு நாய்களின் உடலில் 'மைக்ரோ சிப்' பொருத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கத்திற்கு மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயமாகிறது.

    இதுகுறித்து, மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம். இதேபோல, சென்னையில் 12,500 பேர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சென்னையில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயம்.

    இதற்காக 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வரும் போது 'மைக்ரோ சிப்' பொருத்தவில்லை என்றால் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும். அவ்வாறு பொறுத்தாத நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 'மைக்ரோ சிப்' பொருத்தப்படும் நாய்கள் அதற்கான செயலி மூலம் கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை.
    • நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.

    நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தெருநாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தீர்வு ரொம்ப சிம்பிள்-ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னன்னு தெரிந்தவர்கள், கழுதை எங்க காணோம் என்று எங்கேயாவது கவலைப்படுகிறார்களா?

    கழுதைகள் எல்லாம் காணாமல் போய்டுச்சு? நமக்காக எவ்வளவு பொதி சுமைந்திருக்கு? இப்ப பார்க்கிறதே இல்லையே... கழுதைய காப்பத்தணும்னு யாராவது பேசுறாங்களா?. எல்லா உயிர்களையும் காப்பத்தணும்னு, எவ்வளவு முடியுமோ காப்பத்தணும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்றார்.

    மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதை பா.ஜ.க. விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை. நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான். நாளைக்கு அவர்கள் நல்லது செய்தால் சொல்லத்தான் போகிறோம் என்றார். 

    • புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல தலைநகர் டெல்லியிலும் தெருநாய்கள் தொந்தரவு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கிடையே திருமண விழாவில் தெருநாய்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விலங்குகள் நல ஆர்வலரான அவர், தனது திருமணத்தில் தெருநாய்கள் இடம் பெற வேண்டும் என விரும்பினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக நண்பர்கள் உறுதியளித்தனர். அதன்படி திருமணநாளின்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த அனைத்து நாய்களையும் அங்கே திரட்டினர்.

    பின்னர் அவற்றை குளிப்பாட்டி, திருமண விருந்து பரிமாறினர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள் தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.
    • தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரபகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சிபகுதியில் தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களையும் பள்ளி குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் என பலதரப்பினரும் மாநகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில்தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள்தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.அதன்படி திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து அகற்றினர்.

    • சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை காரணமாக நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
    • சாலைகளில் நடந்து செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களை கடந்த காலங்களில் பிடித்து சென்று கருத்தடை சிகிச்சை கொடுத்து மாற்று இடங் களில் விட்டுவிடும் பணி வழக்கமாக நடந்து வந்தது.

    ஆனால் சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரண ங்களுக்காக சாலைகளில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதன் காரணமாக மாநகரின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றின் தொந்தரவும் கூடி வருகிறது.

    இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் நாள்தோறும் சாலைகளில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் பலர் அவதிக்குள்ளா கின்றனர். சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் சாலைகளில் செல்வோரை வெறிநாய்கள் கடிக்கும் அவல நிலையும் நாள்தோறும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் உள்ள உணவ கத்தில் உணவு வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது நாய்கள் அவரை துரத்திச் சென்று காலில் கடித்துவிட்டது.

    இதனால் காயமடைந்த அவரை மீட்டு அப்பகுதி மக்களால் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதே போல் பலரையும் சாலை களில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் கடித்து வருவ தாகவும், எனவே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.
    • நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.

     வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் ரோட்டில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்து பாளையம், காடையூரான் வலசு, சேனாபதிபாளையம் ஆகிய ஊர்களில் தெரு நாய்கள் 100க்கும் மேற்பட்ட பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை கடித்து கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.தற்போது தெரு நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு பொதுமக்கள் மற்றும் தன்னார்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×