என் மலர்
நீங்கள் தேடியது "Street Dogs"
- தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.
- மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.
தெருநாய்கள் பிரச்சனையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார். கடந்த 2006 -ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.
திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.
தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார். மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.
இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மனைவிக்கு ரூ. 15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
- ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
பேருந்து நிலையங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தெருநாய் பிரச்சனை அதிகரித்து வருவதை தடுக்க கோரிய வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் விலங்குகள் நல வாரியக் கூட்டம் நடைபெற்றது.
- ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பது இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் (UNDP) இணைந்து டெல்லியில் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் என்று மேம்பாட்டு அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கபில் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற விலங்குகள் நல வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வரும் செப்டம்பர் 28-ந்தேதி உலக ரேபிஸ் தினத்திற்கு முன்பு, நாய் கடி சம்பவங்களைத் தடுப்பது மற்றும் தடுப்பூசி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவது உள்ளிட்ட விலங்குகள் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரேபிஸுக்கு எதிரான உறுதியான செயல் திட்டத்தை தயாரிப்பதும் இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது. நாய் ஆர்வலர்கள், நாய் எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்ற சுப்ரீம் கோர்ட் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, திருத்தப்பட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதில், தெருவில் திரியும் நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும், மீண்டும் தெருக்களில் விடக் கூடாது என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்தது. அத்துடன், நாய் ஆர்வலர்கள் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது, அதற்கென உள்ளாட்சி அமைப்புகளால் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம்.
- 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை:
சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,
ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றவில்லை.
இதேபோல, பராமரிக்க முடியவில்லை என்றால் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வளர்ப்பு நாய்களின் உடலில் 'மைக்ரோ சிப்' பொருத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கத்திற்கு மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயமாகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம். இதேபோல, சென்னையில் 12,500 பேர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சென்னையில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயம்.
இதற்காக 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வரும் போது 'மைக்ரோ சிப்' பொருத்தவில்லை என்றால் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும். அவ்வாறு பொறுத்தாத நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 'மைக்ரோ சிப்' பொருத்தப்படும் நாய்கள் அதற்கான செயலி மூலம் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை.
- நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.
நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தெருநாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தீர்வு ரொம்ப சிம்பிள்-ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னன்னு தெரிந்தவர்கள், கழுதை எங்க காணோம் என்று எங்கேயாவது கவலைப்படுகிறார்களா?
கழுதைகள் எல்லாம் காணாமல் போய்டுச்சு? நமக்காக எவ்வளவு பொதி சுமைந்திருக்கு? இப்ப பார்க்கிறதே இல்லையே... கழுதைய காப்பத்தணும்னு யாராவது பேசுறாங்களா?. எல்லா உயிர்களையும் காப்பத்தணும்னு, எவ்வளவு முடியுமோ காப்பத்தணும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்றார்.
மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதை பா.ஜ.க. விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை. நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான். நாளைக்கு அவர்கள் நல்லது செய்தால் சொல்லத்தான் போகிறோம் என்றார்.
- புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல தலைநகர் டெல்லியிலும் தெருநாய்கள் தொந்தரவு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கிடையே திருமண விழாவில் தெருநாய்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விலங்குகள் நல ஆர்வலரான அவர், தனது திருமணத்தில் தெருநாய்கள் இடம் பெற வேண்டும் என விரும்பினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக நண்பர்கள் உறுதியளித்தனர். அதன்படி திருமணநாளின்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த அனைத்து நாய்களையும் அங்கே திரட்டினர்.
பின்னர் அவற்றை குளிப்பாட்டி, திருமண விருந்து பரிமாறினர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள் தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.
- தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரபகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சிபகுதியில் தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களையும் பள்ளி குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் என பலதரப்பினரும் மாநகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில்தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 60வார்டுகளிலும் சுழற்சிமுறைகளில் மாநகராட்சி பணியாளர்கள்தெரு நாய்களை பிடித்துவருகின்றனர்.அதன்படி திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து அகற்றினர்.
- சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை காரணமாக நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
- சாலைகளில் நடந்து செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களை கடந்த காலங்களில் பிடித்து சென்று கருத்தடை சிகிச்சை கொடுத்து மாற்று இடங் களில் விட்டுவிடும் பணி வழக்கமாக நடந்து வந்தது.
ஆனால் சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரண ங்களுக்காக சாலைகளில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதன் காரணமாக மாநகரின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றின் தொந்தரவும் கூடி வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் நாள்தோறும் சாலைகளில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் பலர் அவதிக்குள்ளா கின்றனர். சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.
மேலும் சாலைகளில் செல்வோரை வெறிநாய்கள் கடிக்கும் அவல நிலையும் நாள்தோறும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் உள்ள உணவ கத்தில் உணவு வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது நாய்கள் அவரை துரத்திச் சென்று காலில் கடித்துவிட்டது.
இதனால் காயமடைந்த அவரை மீட்டு அப்பகுதி மக்களால் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதே போல் பலரையும் சாலை களில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் கடித்து வருவ தாகவும், எனவே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.
- நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் ரோட்டில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. நாய்கள் தெருவில் சுற்றி திரியும் பகுதியை சிறுவர் முதல் முதியோர் வரை ஒரு வகையான அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்து பாளையம், காடையூரான் வலசு, சேனாபதிபாளையம் ஆகிய ஊர்களில் தெரு நாய்கள் 100க்கும் மேற்பட்ட பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை கடித்து கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.தற்போது தெரு நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு பொதுமக்கள் மற்றும் தன்னார்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.
- மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்லும் என தெரிவித்துள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா வந்தனர்.
அப்போது அங்குள்ள அஸ்ஸி காட் என்ற தெரு ஒன்றில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சில ஒன்று சேர்ந்து பெண் நாய் ஒன்றை விரட்டி துன்புறுத்தியதை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி வேரா லாசரெட்டி பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தெரு நாய்களை விரட்டி அதன் பிடியில் சிக்கிய பெண் நாயை மீட்டார்.
இதே போல வாரணாசியில் உள்ள முன்சிகாட் பகுதியில் நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டெல்பால் என்ற பயணி சென்ற போது அங்கும் ஒரு பெண் நாயை தெரு நாய்கள் கடித்து தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தெரு நாய்களை விரட்டி, பெண் நாயை மீட்டுள்ளார். பின்னர் வாரணாசி தளமாக கொண்டு இயங்கும் அனிமோடெல் கேர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நாடியுள்ளனர். இந்த நிறுவனம் நோய் வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற தெரு நாய்களை மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தினர் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளால் மீட்கப்பட்ட 2 பெண் நாய்களுக்கும் மோதி, ஜெயா என பெயரிட்டு வளர்த்தனர். மேலும் அந்த 2 நாய்களுக்கும் தேவையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டது.
இதன் பயனாக பூரண குணமடைந்த மோடி என பெயரிடப்பட்ட நாயை இத்தாலியை சேர்ந்த வேரா லாசரெட்டி தத்தெடுத்தார். இதேபோல ஜெயா என பெயரிடப்பட்ட நாயை நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டேல்பால் தத்தெடுத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த 2 நாய்களையும் அவற்றை தத்தெடுத்தவர்களுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அனிமோடெல் கேர் டிரஸ்ட் மேற்கொண்டது. அதன்படி 2 நாய்களுக்கும் பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது. அவற்றை இத்தாலி மற்றும் போர்ச்சுகல்லுக்கு அனுப்பி உள்ளனர்.
6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.
இதேபோல மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்ல உள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுண்டிலிப் சென்குப்தா தெரிவித்துள்ளார்.
- தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இருந்து வடமாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய மாநகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையம் இரவு , பகல் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகிறார்கள்.
தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் பல்வேறு புகார்கள் தெரிவித்து வருகின்றனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக நாய் தொல்லையில் இருந்து விடுபட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தெரு நாய்கள் திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
- ஆட்டு இறைச்சி குடலில் விஷம் வைத்து அப்பகுதி முழுவதும் தூவி நாய்களைக் கொன்றுள்ளார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல சுமார் 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபிநாத் என்பவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாரின் தீவிர விசாரணையில், லட்சுமி நகரில் உணவகம் நடத்திவரும் பாலு என்பவர் நாய்களுக்கு ஆட்டு இறைச்சி குடலில் விஷம் வைத்து அப்பகுதி முழுவதும் தூவி நாய்களைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






