search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dogs"

    • மனிதர்களை மோப்பம் பிடித்து சுவாசத்தின் மூலம் இதனை நாய்கள் கண்டுபிடிக்கிறது.
    • இரண்டு நாய்களும் மன அழுத்தத்தை கண்டுபிடிப்பதில் 90 சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.

    புதுச்சேரி:

    வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளில் நாய்களுக்கு முதலிடம் எப்போதும் உண்டு. மனிதர்களின் நண்பன் போல் எப்போதும் நாய்கள் சுற்றி சுற்றியே வரும்.

    மனிதர்களிடம் விசுவாசமாக இருக்கும். மோப்ப சக்தி நாய்களுக்கு அதிகளவில் உண்டு. குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்கள் போலீசாருக்கு கைகொடுக்கும்.

    இப்போது ஆய்வு அதைவிட அதிகமாகவும் மனிதர்களுக்கு உதவ முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நாய்கள் மனிதர்களுக்கு வரவிருக்கும் மன அழுத்தத்தை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த எச்சரிக்கையின் மூலம் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபருக்கு முன் கூட்டியே மருத்துவ சிகிச்சைகளை அளிக்கலாம். மனிதர்களை மோப்பம் பிடித்து சுவாசத்தின் மூலம் இதனை நாய்கள் கண்டுபிடிக்கிறது.

    இதற்காக நாய்களுக்கு பிரத்தியேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்று டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை பேராசிரியர் லாராகிரோஜா கூறியுள்ளார்.

    மோப்ப சுவாச பயிற்சி 25 நாய்களுக்கு அளிக்கப்பட்டது. இதில் ஐவி மற்றும் கால்லி ஆகிய இரண்டு நாய்கள் இயல்பாகவே மோப்ப சக்தியில் திறம்பட இருந்தது.

    இரண்டு நாய்களும் மன அழுத்தத்தை கண்டுபிடிப்பதில் 90 சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை பயிற்சிகள் மூலம் ஐவி 74 சதவீதமும், கால்லி 81 சதவீதமும் துல்லியமாக முடிவுகளை காட்டியது. மேலும் இது போல் ஆய்வு தொடர்ந்து நடத்த உள்ளனர்.

    • அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.
    • கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. நாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அவற்றிற்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்தாலும் அதன் எண்ணிக்கை குறையவில்லை. அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.

    குறிப்பாக ராயபுரம், கொடுங்கையூர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்களை மிரட்டி வருகின்றன. இரவு 7 மணிக்கு மேல் சாலை மற்றும் தெருக்களில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி, விரட்டி கடிக்க பாய்கின்றன.

    கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது. இதனால் குப்பை கிடங்கை சுற்றி உள்ள இடங்களில் நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளன. கொடுங்கையூர், எழில் நகர், ஆர்.ஆர் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், புளியந்தோப்பு, பெரம்பூர், ஜமாலியா நகர், ஹைதர்கார்டன், எஸ்.பி.ஐ. ஆபிசர் காலனி மற்றும் பட்டாளம் பகுதிகளில் நாய்கள் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு காணப்படுகிறது. இரவு நேரத்தில் செல்பவர்களை குறைந்தது 6 நாய்களுக்கு மேல் கூட்டமாக துரத்துகின்றன. இதனால் இரவு நேரத்தில் வெளியே செல்லவும், பணிமுடிந்து வீட்டிற்கு வரவும் பொது மக்கள் அச்சம் அடையும் நிலை உள்ளது.

    இதேபோல் சூளை, டி.கே.முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை 10 முதல் 20 நாய்கள் வரை படையெடுத்து வந்து மிரட்டுகின்றன.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ராயபுரம் மண்டலத்தில் 90 சதவீதம் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிந்தது. வழக்கமாக 4 ஆண்டுக்கு ஒரு முறை தெருநாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த கணக்கெடுப்பு கடந்த 2022-ம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்படவில்லை. ஆனால் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு 2100-ஆக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை 2023-ம் அண்டு 3900 ஆக உயர்ந்து உள்ளது.


    இதைத்தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் உள்ள தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜ் கூறும்போது, மாநகராட்சியில் தற்போது 80 நாய் பிடிப்பவர்களும், 15 கால்நடை டாக்டர்களும் உள்ளனர். மண்டலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்து உறுதியான தெருநாய்களின் எண்ணிக்கை பற்றி தெரியாமல் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.

    எனவே தெருநாய்கள் பற்றி விரைவில கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ராயபுரத்தில் மட்டும் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடந்து உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த கணக்கெடுப்பு மற்ற மண்டலங்களில் நடைபெறவில்லை. கொடுங்கையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அங்குள்ள குப்பைக் கிடங்கு தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் இடமாக மாறி உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாடவே அச்சமாக உள்ளது. பெரும்பாலான நாய்கள் தெரு ஓரங்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளில் உணவு தேடுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார்.

    இது தொடர்பாக மாநகராட்சி வடக்கு மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை தெருநாய்கள் தொடர்பாக 5 மண்டலங்களில் மொத்தம் 784 புகார்கள் வந்துள்ளன. 924 நாய்கள் பிடிக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்பட்டு உள்ளன. புயல் மற்றும் அதைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் காரணமாக தெரு நாய்கள் பற்றிய கணக்கெடுப்பு தாமதமானது. விரைவில் தெருநாய்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறும். பொதுமக்கள் தங்கள் புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். புகார்கள் மீது இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

    • வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை நடுத்தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சாலியர் தெருவிற்கு செல்லும் குறுக்கு சந்து பகுதியில் வெறி நாய் ஒன்று திரிகிறது.

    இப்பகுதியில் தனியார் பட்டு ஜவுளியகம் உள்ளதால் பட்டு சேலை எடுக்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை, வெறி நாய் கடித்து வருகிறது.

    இதுவரை உள்ளூர் மற்றும வெளியூர்வாசிகள் என மொத்தம் 15 பேரை, இந்த வெறி நாய் கடித்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். எனவே அச்சுறுத்தும் வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வெறி நாய் ஒன்று சுற்றி வருகிறது. அதே கிராமத்தை சேர்ந்த பிரபாவதி (வயது 67) என்பவரை கடித்து உள்ளது. அதே நாளில் அடுத்தடுத்து தட்சணாமூர்த்தி, கவிதா, கோமளா உள்ளிட்ட ஏழு பேரை வெறி நாய் கடித்துள்ளது. தொடர்ந்து அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    • கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டு களில் சமீப காலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி செல்வதும், குரைப்பதும் என அச்சுறுத்தி வருகிறது. சில நேரங்களில் திடீரென்று தெருக்களில் செல்லுகின்ற வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துகளும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் தெருநாய்கள் கடித்து பலர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்ப டுத்த வேண்டும் என்று திருவள்ளூர் நகர மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்தரவின் பேரில் திருவள்ளூர் சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    முதல் கட்டமாக நகராட்சி பகுதியில் உள்ள 11-வது வார்டில் இன்று காலை சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி திருவள்ளூர் நகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களை பிடித்து நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவர்களை கண்டதும் தப்பி ஓட முயன்ற நாய்களை விரட்டி சென்று வலை கூண்டை வீசி பிடித்து வாகனத்தில் கொண்டு சென்றனர். தெருக்களில் சுற்றும் நாய்களை பிடிக்கும் பணி இன்னும் வரும் நாட்களிலும் தொடர்நது நடைபெறும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்து உள்ளார்.

    • நல்மேய்ப்பர் நகர் தெருக்களில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
    • சமீபத்தில் டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களை நாய்கள் கடித்து குதறியது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகர் 11, 12, 13 மற்றும் 14-வது தெருக்களில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. அங்கு 15-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பாகவும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறுவர்-சிறுமிகள் தெருக்களில் சென்று விளையாட அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சமீபத்தில் டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களை நாய்கள் கடித்து குதறியது. ஆபத்தான நிலையில் அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் நல்மேய்ப்பர் நகரில் நடப்பதற்கு முன்பாக மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்து நாய்களை பிடிக்க வேண்டும் என்றனர். 

    • நகரின் முக்கிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

    அதிராம்பட்டினம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிராம்பட்டினம் நகர செயலாளர் பன்னீர் செல்வம் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    அதிராம்பட்டினம் நகரின் முக்கிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் சாலையில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

    மேலும், இருசக்கர வாகனங்களில் செ ல்வோரை பின் தொடர்ந்து சென்று துரத்துகிறது.

    இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நடந்து செல்பவர்களை சில நாய்கள் கடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    எனவே, நகராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • திருவிழா நடைபெற இருப்பதால் கழிவுநீரை அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    • திங்கட்கிழமைக்கு மேல் ஒவ்வொரு வார்டுக்கும் 5 விளக்குகள் வழங்கப்படும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் சண்முகப்பிரியா தலைமை யில், ஆணையர் குமரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-

    நாடிமுத்து: எனது பட்டா மாறுதல் தொடர்பான கோரிக்கைகளை ஏற்று பட்டா மாறுதல் 150 நபருக்கு மேல் ஒரே நாளில் ஆன்லைனில் ஏற்றப்பட்டு ள்ளதற்கு நன்றி.

    ராயல்குமார் : நீண்ட கோரிக்கைக்கு பிறகு எனது வார்டில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கபட்டுள்ளது.

    ஆனால் அதற்கு ஆட்களை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவா தியேட்டர் சிமெண்ட் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும்.

    ரவிக்குமார் : பெருமாள் கோவில்குளம் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு தேங்கிய கழிவுநிறையால் சாக்கடை யாகி துர்நாற்றம் வீசுகிறது. திருவிழா நடைபெற இருப்பதால் அதனை அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்பி பராமரிக்க வேண்டும்.

    மகாலட்சுமி : எனது வார்டில் நகராட்சி வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. துப்புரவு பணி மிக மோசம்.

    ஆணையர் : பட்டுக்கோட்டை நகராட்சிக்கு கழிவுநீர் எடுப்பதற்கு இரண்டு வாகனம் ஒப்புதல் அளிக்கப்ப ட்டுள்ளது. விரைவில் அதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

    சரவணன் : எனது வார்டில் உள்ள நகராட்சிக்கு பள்ளிக்கு எதிரே உள்ள ஆற்றங்கரையில் சிறிய வகை பாலம் அமைக்க வேண்டும். குடிநீர் இணைப்பு அனுமதி பெறாமல் வைத்துள்ள வர்களின் இணைப்புகள் துண்டிக்க ப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நலத்திட்ட பணியாளர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர் என்ற வெள்ளை அறிக்கை வேண்டும்.

    சுரேஷ் : எனது வார்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சாலை வேறு பகுதியில் போடப்பட்டது ஏன்?

    பொறியாளர் நகராட்சி தீர்மானத்தில் அறிவிக்க ப்பட்டுள்ள பகுதியில் தான் சாலை போடப்பட்டுள்ளது. உங்களின் கோரிக்கை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும்.

    ராமலிங்கம் : மழைக்காலத்திற்கு முன்னதாக எனது வார்டில் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும்.

    கலையரசி : நாடிஅம்மன் கோவில் சாலையில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிக அளவில் இருக்கிறது. நாடியம்மன் கோவில் குளத்தினில் குடியிருப்பு வாசிகள் கழிவுநீர் பைப்பு இணைத்துள்ளார்கள். அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

    சதாசிவகுமார் : ஏழை எளிய மாணவ -மாணவிகள் போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் எனது வார்டில் ஒரு பயிற்சி மையத்தை நகராட்சி சார்பில் ஏற்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் இன்னும் சாலை வசதி இல்லா மலும், தெருவிளக்குகள் இல்லாமலும் உள்ளதை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

    ஆணையர் : ஒரு கோடியே 16 லட்சம் செலவில் ஆர்.வி நகர் பகுதியில் அறிவுசார் நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளது. போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் இளைஞர்களுக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணி முடிந்து திறப்பு விழா காணப்படும்.

    பிரபாகணி : எனது வார்டில் சாலை அமைத்ததற்கு நன்றி. கழிவுநீர் வாய்க்கால் என்னவாயிற்று. தெரு விளக்கு பராமரிப்பு மிக மோசம்.

    பொறியாளர் : பழைய ஒப்பந்ததாரர் நீக்கப்பட்டு ஐந்து உள்ளூர் நபர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு ள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு பகுதியின் அடிப்படையும் புரியவில்லை. விரைவில் அதுவும் சரி செய்யப்படும்.

    புதிதாக தெரு விளக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர். எனது வார்டுக்கு எப்பொழுது எவ்வளவு விளக்கு ஒதுக்குவீர்கள்.

    பொறியாளர் : கட்டாயம் திங்கட்கிழமைக்கு மேல் ஒவ்வொரு வார்டுக்கும் 5 விளக்குகள் வழங்கப்படும்.

    நளினி : எனது வார்டில் உள்ள ரேஷன் கடைக்கு இடையூறாக வைக்கப்ப ட்டுள்ள மின்கம்பத்தை நீக்க வேண்டும்.

    முடிவில் நகரமன்ற கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒற்றை கோரிக்கையாக தங்கள் வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முன்வைத்து பேசி கோரிக்கை மனுவினை வழங்கினர் .

    குறிப்பாக பட்டுக்கோட்டை 19-வது வார்டு, அ.தி.மு.க கூட்டணி கட்சியில் உள்ள த.மா.கா கட்சியின் நகரமன்ற உறுப்பினர் நாடிமுத்து நாய் முகமூடி அணிந்தும், நாய் படங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் மாட்டிய படியும் நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பரபரப்பினை ஏற்படுத்தி னார்.

    நாடிமுத்து நகர்மன்ற கூட்டத்தில் பேசும் பொழுது , பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் குவியும் பொதுமக்கள், நாயால் கடிக்கப்பட்டு, நாயின் மீது மோதி விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.

    பட்டுக்கோட்டையில் எந்த ஒரு பகுதிக்கும் பொதுமக்கள் இயல்பாக சென்று வர முடியாத அளவிற்கு கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் திரிவதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாக கூறினார்.

    தான் நகர்மன்ற உறுப்பி னராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை கோரிக்கை வைம் இந்த நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஒருவேளை நாயை பிடிப்பதற்கு யாரேனும் தடை விதித்தால் அவர்களிடம் அனுமதி வாங்கி தெருநாய்களை பிடித்துக் கொண்டு அவர்கள் இல்லத்தில் விட்டு பராமரிக்க சொல்வதற்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்று கொள்வதாகவும் கூறினார் .

    • பஸ்நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார்.
    • நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் சோனை. இவருக்கு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பஸ் நிலையத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பாகங்களை தெருநாய்கள் கடித்து குதறி இருந்தது தெரிய வந்தது.

    நோய்வாய் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தவர் மயங்கி விழுந்த நிலையில் தெருநாய்கள் கடித்திருக்க லாம் என்றும், பஸ்க்காக காத்திருந்தபோது தெரு நாய்கள் கடித்திரு க்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.நகரில் தெரு நாய்கள் தொல்லையால் பொது மக்கள் பாதிக்க ப்பட்டு வரும் நிலையில் நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திரு ப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து ள்ளது.

    இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிந்தது.
    • கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, விலங்குகள் நல தொண்டு நிறுவன செயலாளர் அன்பழகன், பாபநாசம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பணியாளர்கள் உதவியுடன் தெருக்களில் சுற்றித்திரிந்த 37 நாய்கள் பிடிக்கப்பட்டது. பின், அவற்றை கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் செய்திருந்தார்.

    • அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    சேலம்:

    அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இந்த கண்காட்சியில் பூனா, கோலாப்பூர், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், போபால், கொல்கத்தா, மற்றும் பல மாநிலங்களில் இருந்து பொமோரியன், டேஸ் ஹவுண்ட், பீகிள், ராடுவில்லர், டால்மேசன், கேன் கார்சோ, செயின்ட், கிரேடன், ராஜபாளையம், புல்டாக், சலூகி, பூடுல், ஐரிஸ்டிடம் உள்பட 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    வெற்றி பெற்ற நாய்களுக்கு பழக்கம் வழங்கப்பட்டது. நடுவர்களாக டாசன், ஆண்டோனியா, ரஞ்சித், முன்ஜால் செயல்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் விசு காளியப்பன் செயலாளர் சாந்தமூர்த்தி பொருளாளர் சீனிவாசன் துணைத் தலைவர்கள் நடராஜ், பிரகாஷ், இணைச் செயலாளர் மோகன்ராஜ், அண்ணாதுரை மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • உழவர்கரை நகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உத்தரவிட்டிருந்தது.
    • பெரியக்கடை போலீசார் விலங்குகள் நல ஆர்வலர்களை அழைத்து பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாய்கள் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் அச்சமடையும் பொதுமக்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என நகராட்சியிடமும், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம் புகார் அளித்திருந்தனர்.

    தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில் உழவர்கரை நகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி நகராட்சி ஊழியர்கள் நேற்று முதல் வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து சென்று வருகின்றனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நகராட்சி ஊழியர்கள் தங்களது வாகனங்களில் புதுவை கடற்கரைசாலையில் சுற்றி திரிந்த நாய்களை பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் நாய்களை பிடிக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் நாய்பிடிக்கும் வாகனத்தின் சாவியை அவர்கள் வாகனத்தில் இருந்து எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் உடனே பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியக்கடை போலீசார் விலங்குகள் நல ஆர்வலர்களை அழைத்து பேசினர். அப்போது போலீசாரிடமும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பணி செய்வதை தடுக்க கூடாது என்றும், வாகனத்தின் சாவியை எடுப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று கூறி விலங்குகள் நல ஆர்வலர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    • தெருநாய்களை ஊராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர்.
    • இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவ தாகவும், சிலரை நாய்கள் கடித்ததாகவும் ஊராட்சி நிர்வாகித்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து வெறிநாய்களை கட்டுப்படுத்துவதற்கான மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட லெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை நரிக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட னர். 45-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடித்து செல்லப்பட்டதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    ×