என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dogs"

    • ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதேபோல், மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தெருநாய் பிரச்சனை அதிகரித்து வருவதை தடுக்க கோரிய வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிக்கமகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும் என்றார் போஜே கவுடா.

    பெங்களூரு:

    கர்நாடக மேல்சபையில் நேற்று சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போஜே கவுடா பேசியதாவது:

    சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும்.

    தடுப்பூசியால் ரேபிஸ் மட்டுமே தடுக்க முடியும். கடிப்பதை தடுக்க முடியாது. நான் கடிக்கும் நாய்கள் பற்றி பேசுகிறேன்.

    நாய்களின் நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. முந்தைய உத்தரவை மாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுங்கள்.

    பள்ளிக் குழந்தைகள், சாதாரண மக்களை நாய்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    நான் நகராட்சி தலைவராக இருந்தபோது, 2,800 நாய்களுக்கு, இறைச்சியில் மருந்து தெளித்து கொன்றோம். பின், அவை ஒரு தென்னை மரத்தின் கீழ் புதைக்கப்பட்டன.

    விலங்குகள் மீது நமக்கும் அக்கறை உண்டு, ஆனால் விலங்கு பிரியர்கள் மற்றொரு அச்சுறுத்தல்.

    நீங்கள் சிறு குழந்தைகளின் துன்பங்களைப் பார்க்கிறீர்கள். இதைப் பற்றி நீங்கள் தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் படிக்கிறீர்கள். இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது. நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தேவைப்பட்டால் சிறைக்கும் செல்வோம் என தெரிவித்தார்.

    • தெருநாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.
    • கருணை கொலை செய்யப்படும் தெருநாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும்.

    மோசமான காயமடைந்து, நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

    தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.

    பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்ய வேண்டும். கருணைக்கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது குறித்த கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரு மாநகர் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மறுபுறம் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
    • நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்கள் வீதம் இந்த அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் இன்று உலக அளவில் பெங்களூரு பிரபலமாக உள்ளது. 1½ கோடி பேர் வசிக்கும் பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. ஒரு காலத்தில் பூங்கா நகரம் என அழைக்கப்பட்ட பெங்களூரு, தற்போது கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன.

    பெங்களூரு மாநகர் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மறுபுறம் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் சிறுவர், சிறுமிகள், முதியவர்களை தாக்கி வருகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்பு 70 வயது மூதாட்டி தெருநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தார். பெங்களூருவில் மட்டும் கடந்த 6 மாதத்தில் மட்டும் 7 ஆயிரம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளன.

    கடந்த 2023-ம் ஆண்டு மாநகராட்சி கணக்கெடுப்பின்படி, பெங்களூரு மாநகரில் 2 லட்சத்து 79 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    வெளி மாநிலத்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் அதிக அளவில் வந்து செல்லும் பெங்களூரு மாநகரில் தெருநாய் தொல்லை தீரா தலைவலியாக மாறியுள்ளது.

    தெருநாய் தொல்லைக்கு முக்கிய காரணம் அவற்றுக்கு போதிய அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது தெருநாய்களுக்கு 'சிக்கன் ரைஸ்', 'எக் ரைஸ்' என விதம் விதமான அசைவ உணவு வழங்குவதுதான் அந்த புதிய யோசனை.

    இதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடியே 88 லட்சத்தை செலவிடவும் மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி சிறப்பு கமிஷனர் சுரல்கர் விகாஸ் கூறுகையில், தெருநாய்கள் மனிதர்களை கடிக்காமல் இருப்பதற்காக கடந்த ஆண்டு பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சைவ உணவளிக்கும் திட்டத்தை தொடங்கியது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உதவிக்கரம் நீட்டினர்.

    இருப்பினும் இந்த திட்டம் போதிய பலனளிக்கவில்லை. எனவே தற்போது பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ் பாக்யா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2.79 லட்சம் நாய்களுக்கு சத்தான உணவு வழங்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்கள் வீதம் இந்த அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.

    இதையெல்லாம் பார்க்கும்போது என்னமா யோசிக்கிறாங்கப்பா என்று நினைக்க தோன்றுகிறது.

    இந்த திட்டத்திற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம் மனிதர்களுக்கே ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத நிலையில், தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ், எக்ரைஸ் கொடுப்பதா என பொதுமக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு ருசியான உணவு கொடுத்தால் தெருநாய்களின் அட்டகாசம் மேலும் அதிகரிக்கும் என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு ஆகும்.

    • படுகாயம் அடைந்தவர்கள் செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் கொல்லிமலை அரியூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாட்டுபட்டி, நம் அருவி, சோளக்காடு, டெம்பிள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் நம் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை திடீரென தெரு நாய்கள் துரத்தி, துரத்தி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊராட்சி துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று 13 வெறிநாய்களை பிடித்து ஒரு அரங்கத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களை கடித்து குதறிய தெருநாய்கள் பிடிக்கப்பட்டு ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்கள் மூலம் அவைகளுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படும் என்றனர்.

    • சிறுமி உள்ளிட்ட 6 பேரை கடித்த தெருநாய் அன்றைய தினம் இறந்துவிட்டது.
    • நாய் கடித்த சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. அங்கு தெருநாய்களின் தாக்குதலுக்கு அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் தெருநாய் கடித்ததில் காயமடைந்த 6 வயது சிறுமி ரேபிஸ் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தேஞ்சிப் பாலம் பெருவள்ளூர் காக்கத்தடம் பகுதியை சேர்ந்தவர் சல்மானுல் பாரிஸ். இவரது மகள் சியா பாரிஸ். 6 வயது சிறுமியான சியா, கடந்தமாதம்(மார்ச்) 29-ந்தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு தெரு நாய், சிறுமியை துரத்தி கடித்தது. சிறுமியின் தலை, கால் உள்ளிட்ட இடங்களில் தெருநாய் கடித்து குதறியது. சிறுமி மட்டுமின்றி அவரை காப்பாற்ற முயன்ற பெண் உள்பட 5 பேரையும் அந்த நாய் கடித்தது.

    தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி, சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குள் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெறி நாய் கடிக்கான தடுப்பூசி போடப் பட்டது.

    இந்தநிலையில் சிறுமி உள்ளிட்ட 6 பேரை கடித்த தெருநாய் அன்றைய தினம் மாலையில் இறந்துவிட்டது. இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வெறிநாய் கடிக்கு போடப்பட வேண்டிய அனைத்து டோஸ் மருந்துகளும் சிறுமிக்கு போடப்பட்டுள்ளது.

    2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிறுமி சியா வீட்டுக்கு திரும்பினாள். டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வந்தாள். நாய் கடித்ததால் சிறுமிக்கு ஏற்பட்டிருந்த காயங்களும் குணமாகிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் வந்தது.

    இதனால் சிறுமி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமிக்கு ரேபிஸ் பாதித்திருந்தது தெரிய வந்தது. இதனால் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் சிறுமி சியா இன்று காலை பரிதாபமாக இறந்தாள். வெறிநாய் கடிக்கான அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்ட நிலையில் சிறுமி இறந்து விட்டது அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. வெறிநாய் கடித்த சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி பலியான சம்பவம் மலப்புரத்தில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
    • நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் மீனா (55), இவர் 15-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்றிரவு அதில் ஒரு பசு மாட்டை நாய்கள் கடித்து குதறிய நிலையில் அதில் ஒரு பசு மாடு கழுத்து மற்றும் பின் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டருகே இன்று காலை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதனர்.

    தொடர்ந்து கால் நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பசு மாடு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் மீனா கூறுகையில், மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான மாடுகளை ஏற்கனவே நாய்கள் கடித்த நிலையில் அதனை விரட்டி விட்டுள்ளேன். நேற்றிரவு நாய்கள் கடித்தது எனக்கு தெரியாமல் போய் விட்டது. மாடு இறந்ததை இன்று காலையில் தான் பார்த்தேன் . இதனால் பரிதவித்து வருகிறேன்.

    இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை மாநக ராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.
    • சந்திப்பு பஸ்நிலைய பகுதி மற்றும் ரெயில் நிலையத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பயணி கள் அச்சத்துடன் செல்வதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

    நாய்கள் தொல்லை

    அதன்பேரில் மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சந்திப்பு பஸ்நிலைய பகுதி மற்றும் ரெயில் நிலையத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பயணி கள் அச்சத்துடன் செல்வதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்னர்.

    மாநகராட்சி நடவடிக்கை

    அதைேயற்று மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர வின் பேரில், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் சந்திப்பு பஸ் நிலையம் பகுதிகள், ெரயில் நிலைய போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 23 நாய்களை வலை விரித்து பிடித்தனர்.

    இந்த பணியானது மாநகரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம்.
    • கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, அவரிக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி முகாமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரேணுகா நேதாஜி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், கால்நடை மருத்துவர் முருகேசன், சண்முகநாதன், பாலசுந்தரம், செந்தில் உள்ளிட்ட கால்நடை துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பின்பு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கால்நடை மருத்துவர் முருகேசன் வெறிநாய் கடி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

    இதில் ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    • 13 -வது வாா்டுக்குட்பட்ட டிடிபி., மில் பகுதியில் கடந்த 10 நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன.
    • நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுச் செல்வதால் நாய்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ரங்கராஜ் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்குட்பட்ட வாா்டு எண் 11, 13, 14 ஆகிய வாா்டுகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 13 -வது வாா்டுக்குட்பட்ட டிடிபி., மில் பகுதியில் கடந்த 10 நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியவா்கள் என பலரையும் தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன.

    தெருநாய்கள் தொல்லை தொடா்பாக புகாா் அளிக்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுச் செல்வதால் நாய்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது. ஆகவே தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நாய்க்கடியில் இருந்து மக்களை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.
    • சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் உள்ள நாச்சிகுளம் நகரின் முக்கிய பகுதியாகும்.

    இங்குள்ள தெருக்களில் சமீப காலாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    இது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அதிகாலை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்பவர்கள், கடைக்கு செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது.

    அதேபோல், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதுமட்டுமின்றி, சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.

    இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாய்கள் பராமரிக்கப்படும் விதம், உணவு முறைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டு அறிந்தார்.
    • இதில் நாய்களின் அணிவகுப்பு, நடை உள்ளிட்ட பலவற்றை நாய்கள் நிகழ்த்தி காட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டையில் உள்ள மிருகவதை தடுப்பு சங்க அலுவலக வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மாவட்டத்திலேயே முதன் முறையாக நடந்த நாய்கள் கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இதில் தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அமைப்பில் நாய்களை நிறுத்தி வைத்திருந்தனர். அருகிலே அதற்கு தேவையான தண்ணீர், உணவு பொருட்களும் இருந்தது.

    கண்காட்சியில் இடம்–பெற்று இருந்த ஒவ்வொரு நாய்களையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். நாய்கள் பராமரிக்கப்படும் விதம், உணவு முறைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டு அறிந்தார்.

    மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான அரிய உயிரினங்கள், நாய்கள் உண்ணும் உணவுப்–பொருட்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    தொடர்ந்து போலீசாரின் நாய்கள் அணிவகுப்பு கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியது. தொடர்ந்து கண்காட்சி நடந்து வருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

    தொடர்ந்து இன்று மாலை நாய்கள் கண்காட்சி நடைபெறும். இதில் நாய்களின் அணிவகுப்பு, நடை உள்ளிட்ட பலவற்றை நாய்கள் நிகழ்த்தி காட்டும். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டும். சிறந்த நாய் வகைகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். மேலும் ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.

    ×