என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் கடும் அவதி
- வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.
- சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் உள்ள நாச்சிகுளம் நகரின் முக்கிய பகுதியாகும்.
இங்குள்ள தெருக்களில் சமீப காலாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
இது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அதிகாலை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்பவர்கள், கடைக்கு செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது.
அதேபோல், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.
இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






