என் மலர்
நீங்கள் தேடியது "Cats"
- செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
சென்னையில் நாய்க்கடி சம்பவங்களைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கும், விலங்குகளுக்கும் உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்திடும் வகையில் அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சையினையும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் வழங்குதல் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து கண்காணித்தல் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதள சேவையினை மேயர் ஆர்.பிரியா அக்.3-ந்தேதி தொடங்கி வைத்தார்.
செல்லப் பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50 உரிமக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெறலாம்.
செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (www.chennaicorporation.gov.in-ல் Pet Animal Licence) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்தது.
செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிட்புல், ராட்வீலர் இன நாய்களுக்கு புதிதாக உரிமம் வழங்குவதை நிறுத்தவும், ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் செல்லப்பிராணியை வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயம். இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மேற்கண்ட 2 நாய்களின் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. உரிமம் இல்லாமல் பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்ததையடுத்து அதன் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் தங்களது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று வருகின்றனர்.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உரிமம் பெற பதிவு செய்துள்ளனர். இதில், 57 ஆயிரம் பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- இந்தப் பூனைக்குட்டிகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சத்திற்கும் மேலாகும்.
- மணமகளின் மாமியார்களும் ரூ.6.5 லட்சம் ரொக்கம், பத்து தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை அளித்துள்ளனர்.
திருமணத்தின் போது பணம், தங்கம், நிலம் என வரதட்சணை வழங்குவது வழக்கம். ஆனால், வியட்நாமைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் இவற்றோடு சேர்த்து 100 அரிய வகை சிவேட் பூனைக்குட்டிகளையும் வரதட்சணையாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பூனைக்குட்டிகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சத்திற்கும் மேல் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பூனைக்குட்டிகள், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோபி லுவாக் காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
ஆசிய பனை பூனைகளுக்கு காபி விதைகள் உணவாக அளிக்கப்பட்டு, அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் கழிவு வழியாக வெளியேற்றப்படும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

இந்த காபி கொட்டை தொழிலை தங்கள் மகள் தொடங்க உதவுவதற்காகவே இந்தப் பூனைகளை வரதட்சணையாக அளித்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பூனைக்குட்டிகளுடன், மணமகளுக்கு 25 தங்கக் கட்டிகள், ரூ.17 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், ஏழு நிலங்கள் மற்றும் பிற விலையுயர்ந்த சொத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன.
மணமகளின் மாமியார்களும் ரூ.6.5 லட்சம் ரொக்கம், பத்து தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை அளித்துள்ளனர்.
- வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் கொண்ட பூனைக்குட்டிகளுடன் கால்நடை மருத்துவமனைகளுக்கு அதிகமான பொதுமக்கள் வருகிறார்கள்.
- வைரஸ் தாக்கும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
சென்னையில் பூனையை தாக்கும் புதிய வைரஸ் நோய் பரவி வருகிறது. பெலைன் பார்வோ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் பூனைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. சென்னையில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பூனைகள் அதிகரித்து வருகின்றன.
சிறிய பூனைகள் மட்டுமின்றி அனைத்து வயது கொண்ட பூனைகளும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த வைரஸ் தாக்கிய பூனைகளுக்கு காய்ச்சல், ஆழ்ந்த மனச்சோர்வு மற்றும் பசியின்மை ஆகிய அறிகுறிகள் ஏற்படுகிறது. பல பூனைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சில பூனைகளுக்கு ரத்தக்கசிவுடன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:-
பூனைகளை தாக்கும் பெலைன் பான்லூகோபீனியா அல்லது பெலைன் பார்வோ வைரஸ், தொற்றக்கூடிய வைரஸ் நோயாகும். இது பூனைகளை, குறிப்பாக பூனைக்குட்டிகளை பாதிக்கிறது. இந்த வைரஸ் தொற்று சென்னையில் அதிகரித்து வருகிறது. வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் கொண்ட பூனைக்குட்டிகளுடன் கால்நடை மருத்துவமனைகளுக்கு அதிகமான பொதுமக்கள் வருகிறார்கள்.
இந்த வைரஸ் தாக்கும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும் சிகிச்சை அளித்தாலும் 60 சதவீத பூனைகள் மட்டுமே சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைக்கின்றன. தடுப்பூசி போட்டால் தான் பூனைக்குட்டிகளை காப்பாற்ற முடியும்.
இந்த வைரஸ் எப்போதும் இருக்கும். ஆனால் குளிர்காலம் மற்றும் பருவமழைக்கு முன்பும், பின்பும் அதிகமாக பரவும். கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நோய்த்தொற்று விகிதம் குறைவாக உள்ளது. அதிக அளவில் பூனைகள் இனப்பெருக்கம் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி போடாதது ஆகியவையே இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.
இந்த வைரஸ் பாதிப்பால் ஒவ்வொரு கால்நடை கிளீனிக்குகளுக்கும் தினமும் 5 முதல் 6 பூனைகள் கொண்டு வரப்படுகின்றன.
பூனைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றால் உயிர் பிழைக்கும் விகிதம் அதிகமாக இருக்கும். தாமதமாக கொண்டு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த வைரஸ் பாதிப்பு 3 முதல் 5 மாதம் வயது கொண்ட பூனைகளில் அதிகம் காணப்படுகிறது. இது தொற்றுநோயாக இருப்பதால், ஆரோக்கியமான பூனைகளை, வைரஸ் தாக்கிய பூனைகளிடம் இருந்து தனியாக வைக்க வேண்டும். இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்காது.
பி.சி.ஆர். ஸ்னாப் பரிசோதனை மூலம் ஒன்றிரண்டு நிமிடங்களில் இந்த நோய்த்தொற்றை உறுதிப்படுத்த முடியும். அதைத்தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.
காய்ச்சல் இருக்கும் பூனைக்குட்டிகளுக்கு பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கக்கூடாது. பூனைகள் பாராசிட்டமால் மாத்திரையில் உள்ள நச்சுத்தன்மைக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்த நச்சுகள் அவற்றின் கல்லீரல் மற்றும் ரத்த அணுக்களை கடுமையாக சேதப்படுத்தி, ஆக்சிஜன் சுழற்சியை நிறுத்துகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் போலீசாருக்கு புகார் வந்தது.
- பெண் தனது வீட்டில் 300 பூனைகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புனே:
புனே மாவட்டம், கடப்சரில் 'மார்வெல் பவுண்டி' என்ற வீட்டுவசதி சங்க குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் ஏராளமான பூனைகளை வளர்த்து வருவதாகவும், இதனால் அங்கு சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் போலீசாருக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட கால்நடை அதிகாரி தலைமையிலான குழுவினர், போலீசாருடன் இணைந்து அந்த குடியிருப்பில் சோதனை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட பெண் தனது வீட்டில் 300 பூனைகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குடியிருப்பில் கடுமையான துர்நாற்றம் வீசியது.
இதனையடுத்து அந்தப்பூனைகளை பொருத்தமான வேறு இடத்துக்கு மாற்றுமாறு அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கடப்சர் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






