என் மலர்
நீங்கள் தேடியது "Dowry"
- சஞ்சு பிஷ்னோயிடம் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் சஞ்சு பிஷ்னோய். இவருக்கு திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி (வயது3) என்ற குழந்தை இருந்தது. சஞ்சு பிஷ்னோய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் திலீப், மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
சம்பவத்தன்று காலை அவரது கணவர் சஞ்சுவை பைக்கில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் டைனிங் டேபிளில் இருந்த பெட்ரோலை தனது குழந்தை மீது ஊற்றி தீவைத்தார். மேலும் தன் மீதும் தீவைத்துக் கொண்டார். 2 பேரின் அலறல் சத்தத்தை கேட்டு கணவர், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
குழந்தை யஷஸ்வி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சஞ்சுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சஞ்சுவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கணவர் திலீப், மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருண் என்பவருக்கும் மகா லெட்சுமி என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது.
- அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார்.
திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் மகா லட்சுமி (25) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் அருண் ஜெர்மனியில் வேலை செய்து வரும் நிலையில், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மகா லட்சுமி உயிரை மாய்த்துக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மகா லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மகா லட்சுமியின் தந்தை மதுரையில் தலைமைக் காவலராக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கூடுதல் வரதட்சனை கேட்டு உணவு அளிக்காமல் வீட்டில் சிறை வைத்து உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை செய்தனர்.
- உடல் முழுவதும் புதியதாக சூடு வைத்ததற்கான அடையாளங்களும் ஏற்கனவே சூடு வைத்து ஆறிப்போன அடையாளங்களும் இருந்தது.
ஆந்திரா மாநிலம் கம்பம் மாவட்டம் கல்லூர், முடிச்சாவரத்தை சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா (வயது33). இவரது கணவர் நரேஷ் பாபு.
இத்தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 2 ஏக்கர் மாந்தோப்பு, ஒரு ஏக்கர் விவசாய நிலம், ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்தனர்.
தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது . அப்போது நரேஷ் பாபு மனைவி மற்றும் குழந்தையுடன் 6 ஆண்டுகள் மாமியார் வீட்டில் வசித்தார்.
பின்னர் அஸ்வராபேட்டையில் உள்ள சகோதரி பூ லட்சுமி வீட்டிற்கு குடி பெயர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளாக லட்சுமி பிரசன்னாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு உணவு அளிக்காமல் வீட்டில் சிறை வைத்து உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை செய்தனர்.
இதனால் லட்சுமி பிரசன்னாவின் உடல் எலும்பு கூடாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமனாருக்கு போன் செய்த நரேஷ் பாபு உங்களது மகள் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததால் ராஜ மகேந்திரவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
இதனைக் கேட்டு பதறிப்போன லட்சுமி பிரசன்னாவின் பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் லட்சுமி பிரசன்னா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அடையாளம் காண முடியாத அளவு லட்சுமி பிரசன்னாவின் உடல் மெலிந்து எலும்பு கூடாக இருந்ததை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். அவரது உடல் முழுவதும் புதியதாக சூடு வைத்ததற்கான அடையாளங்களும் ஏற்கனவே சூடு வைத்து ஆறிப்போன அடையாளங்களும் இருந்தது.
இதுகுறித்து வெங்கடேஸ்வர ராவ் போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நரேஷ் பாபு, அவரது சகோதரி பூ லட்சுமி, தாய் விஜயலட்சுமி, மைத்துனர் சீனிவாச ராவ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது.
- நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கணவர் குடும்பத்தினர் கொளுத்தியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும் நிக்கி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதே குடும்பத்தில்தான் நிக்கியின் சகோதரியும் மருகளாக உள்ளார். விபினின் சசோதரனை அவர் திருமணம் செய்துள்ளார்.
நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தகராறு முற்றியுள்ளது. நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கும் போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல்கருகி நிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கி தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.
நிக்கியின் மகன் "எனது தாயார் மீது எதையோ ஊற்றினர். அதன்பின் கடுமையாக தாக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர்" என கண்ணீர் மல்க அந்த சிறுவன் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் கணவனை கைது செய்தனர். கணவரின் பெற்றோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வரதட்சணை கொடுமையால் தன்னுடைய மகள் உயிரிழந்தது குறித்து பேசிய நிக்கியின் தந்தை, "என் மகளை கொன்றவர்களை என்கவுண்டரில் சுட்டு கொல்ல வேண்டும். அவர்களுடைய வீடு இடிக்கப்பட வேண்டும். உத்தரபிரதேச போலீசார் பிக்பாக்கெட் திருடர்களின் காலில் சுடுவார்கள், இந்தக் கொலைகாரர்களை என்கவுண்டரில் கொல்ல மாட்டார்களா? இது பாஜக அரசு" என்று கோபத்துடன் தெரிவித்தார்.
- மனைவியின் கூந்தலை பிடித்து தரதரவென இழுத்து தாக்கிய வீடியோ வெளியானது.
- எரிந்த நிலையில் விக்கி படிக்கட்டில் இருந்து கீழே நொண்டி நொண்டி இறங்கும் காட்சியும் வெளியானது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும் நிக்கி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதே குடும்பத்தில்தான் நிக்கியின் சகோதரியும் மருகளாக உள்ளார். அவர் விபினின் சசோதரனை திருமணம் செய்துள்ளார்.
நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தகராறு முற்றியுள்ளது. நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல்கருகி ஆபத்தான நிலையில் நிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். நிக்கி தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் கணவனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக விபின் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என்ன நடந்தது என்று என்னிடம் ஏன் சொல்லவில்லை?. என்னை விட்டுவிட்டு ஏன் சென்றாய்? ஏன் இப்படி செய்தார். இந்த உலகம் என்னை கொலைகாரன் என்று அழைக்கிறது, விக்கி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீ என்னை விட்டுச் சென்ற பிறகு (உயிரிழந்தபின்) நான் தவறாக நடத்தப்பட்டு வருகிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கொலை குறித்து, விக்கியின் சகோதரி மற்றும் விக்கியின் மகன் கூறியிருந்தது மனதை உலுக்கும் வகையில் இருந்தது.
விக்கியின் சகோதரி காஞ்சன் இதே வீட்டில் மருமகளாக உள்ளார். காஞ்சன் தனது சகோதரிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கூறுகையில் "மாமியார் குடும்பத்தினர் எனது சகோதரியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். எனது சகோதரியை வீட்டில் இருந்து துரத்திவிட்டு, விபினுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க விரும்பினர். சம்பவத்தன்று நான் தட்டிக்கெட்டபோது, என்னையும் கடுமையாக தாக்கினர். அன்றைய நாள் முழுவதும் நான் மயக்கமான நிலையிலேயே இருந்தேன். நான், நிக்கியின் மகன் ஆகியோர் அருகில் இருந்தபோதும் என்னுடைய சகோதரியை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என பரிதாபமாக கூறினார்.
நிக்கியின் மகன் "எனது தாயார் மீது எதையோ ஊற்றினர். அதன்பின் கடுமையாக தாக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர்" என கண்ணீர் மல்க அந்த சிறுவன் தெரிவித்தார்.
35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்காக தாய் உடன் சேர்ந்து மனைவியை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்கான தாய் உடன் சேர்ந்து மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்.
- மகன் கண்முன்னே மனைவியை தீ வைத்து கொளுத்திய கொடூரம்.
கிரேட்டர் நொய்டாவில் கட்டிய மனைவியை 36 லட்சம் ரூபாய் வரதட்சணைக்கான தாய் உடன் சேர்ந்து கொடூர கணவன், அடித்து உதைத்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும் நிக்கி என்பவருக்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதே குடும்பத்தில்தான் நிக்கியின் சகோதரியும் மருகளாக உள்ளார். விபினின் சசோதரனை திருமணம் செய்துள்ளார்.
நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தகராறு முற்றியுள்ளது. நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கும் போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல்கருகி ஆபத்தான நிலையில் நிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கி தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் கணவனை கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதேவீட்டில் மருமகளாக உள்ள நிக்கியின் சகோதரி, காஞ்சன் இது தொடர்பாக கூறுகையில் "மாமியார் குடும்பத்தினர் எனது சகோதரியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். எனது சகோதரியை வீட்டில் இருந்து துரத்திவிட்டு, விபினுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க விரும்பினர். சம்பவத்தன்று நான் தட்டிக்கெட்டபோது, என்னையும் கடுமையாக தாக்கினர். அன்றைய நாள் முழுவதும் நான் மயக்கமான நிலையிலேயே இருந்தேன். நான், நிக்கியின் மகன் ஆகியோர் அருகில் இருந்தபோதும் என்னுடைய சகோதரியை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என பரிதாபமாக கூறினார்.
நிக்கியின் மகன் "எனது தாயார் மீது எதையோ ஊற்றினர். அதன்பின் கடுமையாக தாக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர்" என கண்ணீர் மல்க அந்த சிறுவன் தெரிவித்தார்.
35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்காக தாய் உடன் சேர்ந்து மனைவியை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருமணமாகி 57 நாட்களே ஆன நிலையில், கணவரின் குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார்
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஐஸ்வர்யா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சித்திரவதைசெய்வதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருமணமாகி 57 நாட்களே ஆன நிலையில், கணவரின் குடும்பத்தினர் மீது காவல் நிலையம் மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா என்ற இளம்பெண். துணை ஆட்சியர் காரின் முன் படுத்து உரண்டு அவரும் அவர் குடும்பத்தினரும் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவருடன் சமூக நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.
- வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
- பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா (வயது 27) என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கணவர் குடும்பத்திற்கு 120 சவரன், 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பெண்ணின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் பிரீத்தியை கொடுமைப்படுத்தியதாகி கூறப்படுகிறது
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
- கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
- வரதட்சணையாக வழங்கப்பட்ட பணம், நகையை கொடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம்
தெலங்கானா மாநிலத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பணம், 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், லாவண்யா தனது தந்தையுடன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் கோபமடைந்த லாவண்யா உறவினர்கள் சுரேஷ் வீட்டின் முன்பு இருவரது உடல்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு இருதரப்பினருக்கும் இடையே
பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு கணவரது குடும்பம் ரூ.20 லட்சம் கொடுக்க முன்வந்ததை அடுத்து பெண்ணுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.
- கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தனர்.
2020 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வழங்கப்பட்டது. இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் விஸ்மயாவை மோசமாக துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தனர். இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, வரதட்சணைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து கிரண்குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், கிரண்குமாருக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவரது தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
- ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.
- ஒருத்தனுக்கு ஒருத்திதான்,மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என ரிதன்யா தெரிவித்திருந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது
இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை சாப்பிட்டு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.
அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, ஒருத்தனுக்கு ஒருத்தி தான் எனவே மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.
இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஊடகத்திற்கு பேட்டி அளித்த பெண்ணின் தந்தை, "சிலர் மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க, அமைக்கல என்பது அவரவர் விருப்பம். என் பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா. என் பொண்ணை இழந்தால்கூட எனக்கு அது பெருமையாகத்தான் இருக்கிறது.. இதே போல எல்லா பொண்ணுங்களும் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. தற்கொலை தீர்வாகாது. புகுந்த வீட்டில் பிரச்னை என்றால் அம்மா அப்பா கூடவே இருந்து விடுங்கள்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இணையத்தில் ரிதன்யா அப்பாவின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பிற்போக்குத்தனமான கருத்தால் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வது ஒரு அப்பாவிற்கு பெருமை கிடையாது என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று கணவன் என்ன கொடுமை செய்தாலும் அவனை விட்டு பிரியாமல் விவாகரத்து செய்யாமல் குறிப்பாக இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் வாழ வேண்டும் என்று கூறுவது பிற்போக்கு தனமான கருத்தாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அந்த உறவை முறித்துக்கொண்டு இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அனைத்து உரிமைகளும் உள்ளது என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- கணவருடன் மறுவீட்டிற்காக தாய் வீட்டிற்கு வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை
- கணவரின் குடும்பம் கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், கணவர் பன்னீர் (37), மாமியார் பூங்கோதை (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாமனார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






