search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dowry"

    • கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம்
    • விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர்

    உத்தரபிரதேசத்தில் 2022 டிசம்பரில் கரிஷ்மா என்ற பெண் விகாஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இந்த ஜோடி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விகாஸ் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் கரிஷ்மா அவரது கணவர் மற்றும் கணவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இது தொடர்பாக கரிஷ்மாவின் சகோதரர் தீபக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால், விகாசின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கரிஷ்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், கரிஷ்மாவிற்கு ஒரு பெண் குழந்தையைப் பிறந்துள்ளது. அதன்பிறகும் விகாஸ் குடும்பத்தினரின் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதனால் கரிஷிமாவின் குடும்பத்தினர் விகாஸ் குடும்பத்திற்கு கூடுதலாக ₹10 லட்சம் கொடுத்தனர். அதன்பின்பும் இந்த கொடுமை முடிவுக்கு வரவில்லை.

    அண்மையில், விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதனை கரிஷ்மா குடும்பத்தினரால் கொடுக்கமுடியவில்லை.

    இந்நிலையில், மார்ச் 29 அன்று கரிஷ்மா எங்களை தொடர்பு கொண்டு விகாஸ் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். உடனே நாங்கள் விகாஸ் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கரிஷ்மா இறந்து கிடந்தார். கரிஷ்மாவை அவரது கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரில், விகாஸ், அவரது தந்தை சோம்பல் பதி, அவரது தாய் ராகேஷ், சகோதரி ரிங்கி மற்றும் சகோதரர்கள் சுனில் மற்றும் அனில் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் விகாஸ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • 1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார்.
    • எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி நேற்று கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சனை புகார் அளித்திருந்த நிலையில், இன்று கணவர் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் ஸ்ருதிக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

    1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார் அளித்திருந்த நிலையில் சதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். 

    அந்த புகாரில், "எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் பணத்தை பறிப்பதற்காகவே இதுபோன்ற பொய்யான புகாரை தனது மனைவி கொடுத்துள்ளார் என சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், "கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு தாங்கள் பிரிந்த நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தன் மீது பொய்யான புகார் தெரிவித்து வரும் ஸ்ருதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் சதீஷ் குமார் கூறியுள்ளார்.

    • திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது.
    • மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    சென்னை:

    சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில்,

    திருமணத்தின்போது 1000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது. மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை கூறுகையில்,

    வரதட்சணை கேட்டு, தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர்.

    பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

    மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    மகள் மருத்துவம் படித்தபோது, சக மருத்துவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள்.

    கே.பி.கந்தன், அவரது மனைவி, மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23).. இவருக்கும் கீழ்மொணவுரை சேர்ந்த அருண்குமார் (33) என்றவர்க்கும் திருமணம் நடந்தது திருமணத்தின்போது 12 சவரன் நகையை ஐஸ்வர்யாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர்.

    இந்த நிலையில் அருண்குமார் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஐஸ்வர்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அருண்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதை ஐஸ்வர்யா தட்டி கேட்டுள்ளார். அப்போழ அருண்குமார் மற்றும் அவரது தந்தை அசோகன் (60), தாய் வசந்தா (50), அகிலா (32), ஆஷா (22) ஆகியோர் ஐஸ்வர்யாவை ஆபாசமாக திட்டி உள்ளனர்.

    இது குறித்து ஐஸ்வர்யா வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துெ கொண்டார்.
    • அஜித்குமார் பால் ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்கிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ராஜ பாண்டலம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 21) என்பவருக்கும், மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுபலட்சுமி (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு துரைமுருகன் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. அஜித்குமார் பால் ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுபலட்சுமி திடீரென தூக்க போட்டுக் கொண்டார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுபலட்சுமி இறந்தார்.

    இது குறித்து சுபலட்சுமி தாய் சித்ரா, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சித்ராவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா என கள்ளக் குறிச்சி கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

    • சவுந்தர்யா சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்

    கடலூர்:

    பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 26 ) சிவில் என்ஜியர் இவரது மனைவி சவுந்தர்யா (24). இவர் சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிறது. திருமணமான ஒரு சில நாட்களிலிருந்து கணவர் சூர்யா மற்றும் சூர்யாவின் தந்தை ஏழுமலை தாய் கலைமணி, சகோதரர்கள் லோகேஷ் ,சர்வேஷ் ஆகியோர்கள் வரதட்சணையாக ரூ.10 லட்சம் பணம் கேட்டு சவுந்தர்யாவை ஆபாசமாக திட்டி காரை ஏற்றிக் கொன்று விடுவதாக மிரட்டி வாழவிடாமல் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி செய்து சவுந்தர்யாவின் கணவர், மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஜெபராணியின் பெற்றோர், திருமணத்திற்காக 43 பவுன் தங்க நகைகளும், ரூ.3 லட்சமும் ரொக்கமாக கொடுத்தனர்.
    • ஜெடியாவிற்கு, மனைவி ஜெபராணி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மருதகுளத்தை சேர்ந்த கோவில்ராஜ் மகன் ஜெடியா (வயது 28). இவரது மனைவி ரீட்டா ஜெபராணி (24). இவர்களுக்கு கடந்த மே 5-ந்தேதி திருமணம் நடந்தது.

    அப்போது ஜெபராணி யின் பெற்றோர் 43 பவுன் தங்க நகைகளும், ரூ.3 லட்சமும் ரொக்கமாக கொடுத்தனர். திருமணத்திற்கு பின் இருவரும் மருத குளத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் ஜெடியாவிற்கு, மனைவி ஜெபராணி மீது சந்தேகம் ஏற்பட்டதா கவும், அதனால் அவர் ஜெபராணியை கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதுபோல ஜெடியாவின் தாயார் இந்திராணி, சகோதரி சிபியா ஆகியோரும் உனது அப்பாவிடம் சென்று பணம் வாங்கி வா என்று கொடுமைப்படுத்திய தாகவும் கூறப்படுகிறது.

    அதனைதொடர்ந்து வீட்டை விட்டு சென்று விடு இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

    இதுபற்றி ஜெபராணி நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா இதுதொடர்பாக ஜெப ராணியின் கணவர் ஜெடியா, மாமியார் இந்திராணி, சிபியா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தொழிலாளி மீது அவரது மனைவி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயராஜ் (வயது 31). இவருக்கும் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்த சுகன்யா தேவி (வயது 28) என்பவருக்கும் கடந்த 17.05.2021 ஆம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின் போது நகை மற்றும் சீர் வரிசை கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மேலும் 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டதாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா விசாரணை செய்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய ஜெயராஜ் மற்றும் தாயார் ஜெயலட்சுமி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தார்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு அரசு பெண் ஊழியர் துன்புறுத்தினர்.
    • சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மார்டன் தெருவை சேர்ந்தவர் விக்டோரியா, அரசு பள்ளி ஊழியர். இவருக்கும், கல்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஜான்பிரிட்டோ விருதுநகர் மாஜிதிரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் எனது கணவர் தொழில் செய்வதற்காக என்னிடம் பண உதவி கேட்டார். இதற்காக 3 தவணைகளில் வங்கியில் ரூ.23 லட்சம் வரை கடன் பெற்று கொடுத்தேன். ஆனால் அதனை செலவு செய்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்தது. இதுகுறித்து கேட்டால் பணம் கொடுத்தால் என்னுடன் சேர்ந்து வாழ்வேன் என மிரட்டினார். இதற்கு அவரது பெற்றோர் கென்னடி-ஆகத்தம்மாள் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    தற்போது கூடுதலாக 9 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது பெற்றோர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராணுவ வீரர்

    சாத்தூர் படந்தாலை சேர்ந்தவர் விமலாதேவி(27). இவருக்கும், வெம்பக் கோட்டை சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் கண்ணன் என்பவருக்கும் 2022-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் விமலாதேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் மீது சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • விக்னேஷ், அபிநயா (21) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
    • விக்னேஷ் அடிக்கடி மனைவி அபிநயாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த நாச்சிக்குளம் தச்சர் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது24).

    இவரும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஈச்சங்குடி கிராமத்தை சேர்ந்த அபிநயா (21) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஆண் குழந்ைத உள்ளது.

    இந்தநிலையில் கணவர் விக்னேஷ் அடிக்கடி மனைவி அபிநயாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததுடன் தனது வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கூறி தாக்கி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அபிநயா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் உள்பட 2 பேர் கைது இந்த நிலையில் அபிநயா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தொடர்ந்து வரதட்சணை கேட்ட தொந்தரவு செய்து வருவதாக புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் மற்றும் அவரது உறவினர் சிவகங்கையை சேர்ந்த சேகர் (39) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேசின் தந்தை கணேசன், தாயார் கமலா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 20 பவுன் மற்றும் சீர்வரிசைகள் கார் வாங்குவதற்கு இரண்டரை லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி பெரிய கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தயாநிதி மகள் நித்யா ( 25 )என்பவருக்கு விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தராமமூர்த்திமகன் ராமச்சந்திரனுக்கும் ஜனவரி மாதம் 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது. 20 பவுன் மற்றும் சீர்வரிசைகள் கார் வாங்குவதற்கு இரண்டரை லட்சம் பணம் கொடுத்தும் மேலும் 10 லட்சம் பணம் கேட்டு கணவன் ராமச்சந்திரன், மாமியார்சாந்தி, மாமனார் ராமமூர்த்தி , நாத்தனார்ரம்யாஆகியோர்கள் அடித்து மிரட்டி கொடுமைப்படுத்துவதாக நித்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
    • அருப்புக்கோட்டை அனை த்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 32). இவருக்கும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 15 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சரவணன், மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து பாலசரஸ்வதி தனது தாய்வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் சரவணன் சமரசம் பேசி மனைவியை அழைத்து சென்றார். இதற்கிடையில் மீண்டும், சரவணன் மனைவி யிடம் கூடுதலாக வரதட்சணை கேட்க பாலசரஸ்வதி தனது பெற்றோர் வீட்டில் இருந்து 14 பவுன் நகையை வாங்கி கொடுத்துள்ளார்.

    ஆனால் சரவணன் மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு, மாமனார் குமார் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் பாலசரஸ்வதிக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

    இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விருதுநகர் மாவட்ட கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அருப்புக்கோட்டை அனை த்து மகளிர் போலீசார் சரவணன், அவரது பெற்றோர் குமார்- ராேஜஸ்வரி, உறவினர் பொன்மாரி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    ×