என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வரதட்சணை கொடுமை: திருவண்ணாமலையில் தலைமைக் காவலரின் மகள் தற்கொலை
    X

    வரதட்சணை கொடுமை: திருவண்ணாமலையில் தலைமைக் காவலரின் மகள் தற்கொலை

    • அருண் என்பவருக்கும் மகா லெட்சுமி என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது.
    • அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார்.

    திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் மகா லட்சுமி (25) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கணவர் அருண் ஜெர்மனியில் வேலை செய்து வரும் நிலையில், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மகா லட்சுமி உயிரை மாய்த்துக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மகா லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த மகா லட்சுமியின் தந்தை மதுரையில் தலைமைக் காவலராக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×