என் மலர்

    நீங்கள் தேடியது "Tiruvannamalai"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது காட்சி அளிக்கும். இந்த நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலையில் மிதமான சாரல் மழை பெய்தது. அந்த சமயத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. இந்த காற்றிலும் 2,668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.
    • 21 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில்,பங்கேற்கசெல்லும் பக்தர்களுக்குபல்வேறு அமைப்புகள்,தொண்டு நிறுவனங்கள் சார்பில்அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த சேவையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்து வருகிறது.அவ்வகையில், திருப்பூர் பத்மாவதிபுரத்தில் இயங்கி வரும் திருவண்ணாமலை டிரஸ்ட் மூலம்இரு மண்டபங்களில் 21 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, 40வது ஆண்டாக, இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டுஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இதற்காக திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் ஏற்பாட்டில், வசூலிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாயை,டிரஸ்ட் செயலாளர் சண்முகசுந்தரத்திடம், எம்.எல்.ஏ., வழங்கினார். டிரஸ்ட் நிர்வாகிகள்விவேகானந்தம், மோகனசுந்தரம், முருகேசன்,சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவண்ணாமலையில் குடிநீர்கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகரில் 1 முதல் 7 தெருக்களில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் வேலூர் ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகம் அருகே சாலை மறியல் செய்தனர்.

    சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவலறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், ஊராட்சி செயலாளர் உமாபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலங்கையில் கடந்த 21-ந் தேதி தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். #SrilankanBlasts

    வேலூர்:

    தமிழகத்திலும் இத்தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து தமிழகத்தில் தேவாலயங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கந்தர்ப்பதாஸ் என்ற பயங்கரவாதியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டம் வேலூர் மாவட்டம். இங்கும் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வருகின்றனர்.

    வேலூரில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். நோயாளிகள் போர்வையில் நாசவேலையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் சோதனை செய்ய காவல்துறை சார்பில் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 30 குழுக்களை சேர்ந்த போலீசார் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

    5 குழுவினர் வேலூர் மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதி போலீசாரும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    முக்கிய சுற்றுலா தலமான ஏலகிரிமலையில் உள்ள தங்கும் விடுதிகளை ஒரு குழுவினரும், ஆம்பூர், காட்பாடி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தலா ஒரு குழுவினரும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் மற்றும் ஆந்திர எல்லை பகுதியிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ் நிலையம், தேவாலயங்கள் மற்றும் முக்கிய இடங்களை கண்காணித்து வருகின்றனர்.

    சந்தேகப்படும் படியாக யாராவது நடமாடினால் அது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.  #SrilankanBlasts

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்திய வழக்கில், கோர்ட்டில் ஆஜராகும்படி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 498 பேருக்கு ஆந்திர போலீசார் சம்மன் வழங்கினர். #Redsandalwood
    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சில ஏஜெண்டுகள் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூலித்தொழிலாளர்களை அழைத்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் செம்மரங்களை வெட்டும்போது, ஆந்திர மாநில வனத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட போளூர், ஜமுனமரத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் 498 பேர் மீது வழக்கு உள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடையவர்களை ஆந்திர கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ஆந்திர மாநில செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ், திருவண்ணாமலை எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியிடம் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து எஸ்.பி. உத்தரவுப்படி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த போலீசார் 10 குழுக்களாக சென்று வருகிற 30-ந் தேதி ஆந்திர மாநில கோர்ட்டில் ஆஜராகும்படி 498 பேருக்கு கோர்ட்டு உத்தரவு நகலை வழங்கினர்.

    இதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருடன் ஆந்திர வனத்துறை மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். #Redsandalwood
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சித்தர்கள் உடலை அடக்கம் செய்வது போல் சிறுவன் உடலையும் உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் ஆசிரியர்.

    இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தனநாராயணன் (16). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வலிப்பு நோய்க்காக யோகாசன பயிற்சி பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென தனநாராயணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் அருகில் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் தனநாராயணன் தவறி விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் தீயணைப்பு நிலையத்திற்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தனநாராயணனை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனநாராயணனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் விட்டுவிட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த சாமியார் ஒருவர் கூட்டமாக பொதுமக்கள் திரண்டு நிற்பதை பார்த்து அங்கு வந்தார். அவர் தனநாராயணின் கையை பிடித்து பார்த்துவிட்டு அவர் இறக்கவில்லை அவருக்கு உயிர் நாடி உள்ளது. அவர் ஜலசமாதி அடைந்து விட்டார் என கூறினார்.

    இதையடுத்து தனநாராயணனை ஜீவ சமாதி செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி உறைகள் வைத்து பள்ளம் தோண்டி அதில் தனநாராயணனின் கை, கால்களை கட்டி உடலை தியான நிலையில் உட்கார்ந்தபடி வைத்து பூஜை செய்து அடக்கம் செய்தனர்.

    சாமியார்கள், சித்தர்கள் உடலை அடக்கம் செய்வது போல் சிறுவன் உடலையும் உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. அதையொட்டி கிரிவலம் நேற்று மாலை 7.05 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.35 மணிக்கு முடிகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால், பகலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. எனினும், நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டன.

    கிரிவலப்பாதையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள், பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கூட்ட நெரிசலை தவிர்க்க 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தன. பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    2 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவண்ணாமலை மற்றும் பள்ளிகொண்டாவில் வருமான வரியினர் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #ITRaid

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன். திருவண்ணாமலை டவுன் அணைகட்டி தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் கணக்கில் வராத பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரிதுறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நாகப்பன் வீடு, அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத ரூ.59 லட்சத்தை கட்டுகட்டாக பறிமுதல் செய்தனர். பணத்தை கைபற்றி நாகப்பனிடம் விசாரணை நடத்தினர். இரவு 10 மணிக்கு சோதனை நிறைவடைந்தது.


    ரூ.59 லட்சம் எப்படி வந்தது. தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் குடியாத்தம் ரோட்டில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது.

    இங்கு நேற்று மாலை 11 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 4 பேர் வந்தனர். வணிக வளாகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவு 1.30 மணிக்கு சோதனை முடிந்தது.

    இதில் கணக்கில் வராத ரூ.44 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

    வணிக வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் யாருடையது, எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாராவது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். #ITRaid

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடக்கிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் தீபத் திருவிழா, மகா சிவராத்திரி விழா போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சித்திரை மாதத்தில் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறும். இந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து 10-ந் தேதி இரவு உச்சக்கால அபிஷேகம் மற்றும் இரவில் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை இரவில் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர் அன்று இரவு 10 மணி அளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ர.ஞானசேகர், கோவில் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவண்ணாமலை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்டறிய பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை அருகில் உள்ள ஏந்தல் கூட்ரோடு அருகில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலை 10.30 மணியளவில் அந்த வழியாக வந்த லாரியை நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரிகள் மடக்கி சோதனை நடத்தினர். அந்த லாரியில் புதுச்சேரியில் இருந்து சூளகிரிக்கு கொத்தமல்லி ஏற்றி சென்றது தெரியவந்தது.

    மேலும் லாரியில் இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குப்பம் கிராமத்தை சேர்ந்த கொத்தமல்லி வியாபாரி முருகன் (வயது 37) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து நிலை கண்காணிப்பு குழுவினர் முருகனிடம் இருந்து அந்த பணத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காண்பித்த பின்னர் பணம் விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆரணி பாராளுமன்ற தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் சுரேஷ் தலைமையில் களம்பூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மினி லாரியில் வந்த கீழ்பென்னாத்தூரை சேர்ந்த பழனியிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.62 ஆயிரத்து 170 இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது, களம்பூரில் மண்ணு கவுண்டரிடம் காலி பாட்டில்கள் வாங்கிக்கொண்டு கீழ்பென்னாத்தூர் செல்ல இருந்தேன். மண்ணு கவுண்டர் ஊரில் இல்லாததால் திரும்பி செல்கிறேன் என்று கூறினார்.

    அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    அந்த பணத்தை போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் வழங்கி சார் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. #LokSabhaElections2019

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo