search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi pournami"

    • ஆடி மாதம் பௌர்ணமி அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.
    • ஹயக்ரீவரை வழிபட்டால், பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

    ஆடி அமாவாசை

    தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசையாகும்.

    எனவே இந்த அமாவாசை மிக முக்கியம்.

    சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் பெண்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.

    பெண்கள் அன்று கடலில் புனித நீராடி பித்ரு வழிபாடுகள் செய்தால் அதிக பலன்களைப் பெற முடியும்.

    ஆடி அமாவாசை தர்ப்பணத்தை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லை.

    பெண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

    கல்வியில் ஜொலிப்பார்கள்

    ஆடி பவுர்ணமி

    ஆடி மாதம் பௌர்ணமி தினமும் விசேஷமானதுதான்.

    அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

    ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பவுர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்

    பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த பவுர்ணமி நாளில் தான் வருகின்றன.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த நாளில் தான் வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா மிகவும் சிறப்பாக பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பதினோராவது நாள் ஆடித்தபசு. ஆடித்தபசுக் காட்சியை கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து மனது லேசாகும் என்பது நம்பிக்கை.

    திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர், ஆடிப் பவுர்ணமி நாள் ஒன்றில் தான் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சி அளித்தாராம்.

    வேதங்களை கடத்திப்போய், பிரம்மனின் படைப்பு தொழிலை ஸ்தம்பிக்கச் செய்தனர், மது, கைடபர் என்ற இரு அசுரர்கள். அதனால் பாதிக்கப்பட்ட பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். திருமால், குதிரை முகத்துடன் ஹயக்ரீ வராக தோன்றி கடலின் அடியிலிருந்த அசுரர்களோடு போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் ஆடிப் பவுர்ணமி. 
    ×