search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi masam"

    • ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.
    • ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    தமிழ் வருடங்கள் 60. தமிழ் மாதங்கள் 12. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பல மொழிகள் உள்ளன. ஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

    ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

    அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

    ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.

    ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

    அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.

    எல்லாம் நன்மைக்கே என்று தம்பதிகள் பெருமூச்சு விடுவதும் இந்த ஆடி மாதம்தான். 

    திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    ஆடி மாதம் நம் தமிழக கோவில்கள் திருவிழா போல் களை கட்டி இருக்கும் மாதம். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என்ற வரிசையில் ஆடி அமாவாசையை அடுத்து வரும் மிகப்பெரிய அம்மன் விழா ஆடிப்பூரம் ஆகும். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி மாதம் அன்றுபூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் அவதரித்த நாள். ஆண்டாள் ஜெயந்தி 27 நட்சத்திரங்களில் பூரம் ஒன்று. ஸ்ரீரங்கநாதரிடம் ஆண்டாள் கொண்ட பக்தியினை நாடே அறியும்.

    ஆண்டாள் அவதரித்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் யார் வயிற்றிலும் பிறக்கவில்லை. அங்கு பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்த பெரியாழ்வாருக்கு துளசி செடி அடியில் ஆண்டாள் சிசுவாய் கிடைத்தாள். பெரியாழ்வார் தன் குழந்தையாகவே ஆண்டாளை வளர்த்தாள். பெரியாழ்வார் மிக விடியற்காலையில் பூக்களைப் பறித்து அதனை தொடுத்து பெருமாளுக்கு அளித்து வந்தார்.

    ஆண்டாளோ அம்மாலைகளை தான் சூடி பிறகே பெருமாளுக்கு அளித்தார். இதனைக் கண்ட பெரியாழ்வார் பெண்ணை கடிந்து கொண்டார். இறைவனிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால் இறைவனோ பெரியாழ்வாரின் கனவில் வந்து ஆண்டாள் சூடிக் கொண்ட மாலையே தனக்கு வேண்டும் என்றார். பெரியாழ்வார் தான் வளர்க்கும் குழந்தை தெய்வக் குழந்தை என புரிந்து கொண்டார். மண வயதை நெருங்கியதும் ஆண்டாளை சீரும் சிறப்புமாய் பெருமாளின் கட்டளைப்படி ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல ஆண்டாள் ஒளியாய் தெய்வத்துடன் சேர்ந்தாள். மெய் சிலிர்க்க வைக்கும் இத்தகு ஆன்மீக நிகழ்வுகளுக்கு நம் நாடே அதிகம் சொந்தமானது. அந்த பூமியில் பிறந்த நாம் அந்த பாரம்பரியத்தில் வந்த நாம் இந்த அருமை பெருமைகளை போற்றி கொண்டாட வேண்டாமா!

    10-வது நாள் திருவிழாவாக ஆண்டாளின் திருக்கல்யாணமாக வைணவ கோவிலில் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாட்களும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இதேபோன்று ஸ்ரீரங்கத்திலும் நடைபெறும்.

    ஆடிப்பூரத்தன்று யோகிகளும் சித்தர்களும் தன் தவத்தினை தொடங்குகின்றனர் என புராணங்கள் கூறுகின்றன. கல்யாணமாகாத பெண்கள் அம்மனை வணங்குவது நல்ல கணவனை அருளும் என்பதும் கல்யாணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழும் ஆசீர்வாதத்தினை சக்தி அருளுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அநேக பெண்கள் ஏழை சுமங்கலி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பணம் வைத்துக் கொடுங்கள். பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வர்.

    ஆடிப்பூரம், 10-வது திருவிழா. ஆண்டாளின் திருக்கல்யாண நாள் அன்று பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்காரம் செய்வர். ஆண்டாளுக்கும் பிடித்த தாமரைப்பூ, சிகப்பு நிற ஆடை, கல்கண்டு சாதம் இவற்றினை அளிப்பார்கள்.


    கோவில்களில் ஆண்டாள் மணப்பெண்ணாக மிக அழகாக அலங்கரிப்பார்கள். பெருமாளுடன் ஆண்டாள் கல்யாணம் நிகழும். அன்று முழுவதும் வழிபாடும் ஆரத்தியும் நடைபெறும். முழு நாளும் வருவோருக்கு பிரசாதம் அளிக்கப்படும். அன்று திருப்பாவை படித்து வழிபாடு நடைபெறும். மாலை தான் சூடி பக்தியோடு இறைவனுக்கு அளித்ததால் சூடிக் கொடுத்த சுடர் கொடி என்ற பெயரும் ஆண்டாளுக்கு உண்டு. பக்தியால் இறைவனை அடையலாம் என்பதைக்காட்ட மகாலட்சுமியே நமக்குக்காட்டிய வழி இது.

    சைவ கோவில்களில் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு அநேகர் கண்ணாடி வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழாவாகக் கொண்டாடுவது காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒரு சமயம் பெரிய பாளையத்தில் கண்ணாடி வளையல் வியாபாரி ஒருவர் வேப்ப மரத்தடியில் வளையல் பெட்டியினை வைத்து விட்டு உறங்கினார். கனவில் அம்மன் தோன்றி தான் ரேணுகா தேவி என்றும் இந்த வேப்ப மரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளி இருப்பதாகவும் அவரது வளையல் பெட்டியில் உள்ள கண்ணாடி வளையல்களை தான் அணிந்துள்ளதாகவும் கூறினாள்.

    மிகவும் மகிழ்ந்த வியாபாரி அங்கே கோவில் எழுப்பினார். அங்கு வளையல் அணிவித்து வேண்டியவர்க்கு வேண்டிய நல்லவைகள், நியாயமானவைகள் நடந்தன. வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெற்றனர். கர்ப்பிணி ஆடிப் பூரத்தன்று வளையல் சாத்தி வழிபட்டால் பெண்களுக்கு நல்ல சுகப்பிரசவம் நடைபெறும் என்பது ஐதீகம். மேலும் அன்று சக்தி ஸ்தலங்களில் கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும் என்பர். பலர் அன்று கோவில்களில் ஆடிகூழ் ஊற்றுவர்.

    அன்று அம்மனுக்கு 5 வகை உணவு மற்றும் அப்பம், அதிரசம், இவற்றினை நைவேத்தியமாக அளிப்பர். அணிவிக்கப்படும் வளையல்களும், பிரசாதமும் அனைவருக்கும் வழங்கப்படும். அன்று அம்மனுக்கு மலர், பழம், காய்கனி, மஞ்சள், குங்குமம் இவற்றால் நடைபெறும் அர்ச்சனைகளும் அலங்காரங்களும் மிகச்சிறப்பாக இருக்கும்.

    மயிலாப்பூர் கற்பகாம்பாள், சிருங்கேரி சாரதா, காஞ்சி காமாட்சி அம்மன், கோல விழி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன் உள்பட சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சக்தி கோவில்களும் பிரம்மாண்ட கோலாகலத்துடன் ஆடிப்பூரம் அன்று விளங்கும். சக்தி கோவில்களில் ஆடிப்பூரம் அன்று லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது வழக்கம் எனப் பார்த்தோம்.

    வீடுகளிலும் அவ்வாறு செய்பவர்கள் உண்டு. லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகள் சிலவற்றினை இங்கு பார்ப்போமா! ஆதி பராசக்தியே லலிதாம்பிகையாக தோன்றினார். லலிதா சகஸ்ர நாமம் என்பது இந்துக்களின் புனித அம்பிகை வழிபாட்டு ஸ்லோகம். லலிதாம்பிகையினைப் போற்றும் ஆயிரம் நாமாக்களையே லலிதா சகஸ்ரநாமம் என்கிறோம். பிரம்மாண்ட புராணத்தில் பகவான் ஹயக்கிரீவரை அகத்திய மாமுனி கேட்டு கொண்டதன் பேரில் ஸ்ரீ ஹயக்கிரீவர் லலிதாம்பிகையின் பரம ரகசியமான 1000 நாமாக்களை கூறினார். ஸ்ரீ ஹயக் கிரீவர் விஷ்ணுவின் அம்சம். குதிரை முகம் கொண்டவர். மிகுந்த ஞானமும், அறிவும் படைத்தவர்.

    லலிதா சகஸ்ரநாமத்தின் சிறப்பு அம்சங்கள்:

    இதனை அன்றாடம் கூற

    * பரபரப்பு, மனச் சோர்வு நீங்கும். அம்பிகையின் நாமங்களை சொல்லும்போது அந்த ஒலி, மூச்சு, கானம் இவை கொடுக்கும் சக்தி உடலின் ரசாயன மாற்றங்களை ஆக்கப்பூர்வ மானதாக மாற்றுகின்றது என்பர்.
    * நரம்புகளை அமைதி படுத்துகின்றது.
    * இனிமையானது.
    * லலிதா சகஸ்ர நாமம் தொடர்ந்து படிப்பவர்கள் மனித சமுதாயத்திடம் கருணையோடு இருப்பர்.
    * மனம் உறுதிப்படுவதால் உடலும் நோய் எதிர்ப்பு சக்தி பெறுகின்றது.
    * உள்ளுணர்வு துல்லியமாகின்றது.
    * லலிதா சகஸ்ரநாமம் தொடர்ந்து படிப்பவர்கள் தேகசுகத்துடன் இருப்பர்.
    * எந்த தீமையினையும் வெல்லும் சக்தி பெறுவர்.

    மேற்கூறியவை ஆன்மீக உலகில் லலிதா சகஸ்ரநாமம் பற்றி கூறப்படும் கருத்துக்கள். நாமும் பலன் பெறுவோமே!
    திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
    பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம் தான். அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும். திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
    மாங்கல்ய பலம் அதிகரிக்கும்

    ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் பெண்கள் அதிக அளவில் ஆலயத்துக்கு வரும் நாட்களாகும். ஆடி செவ்வாய் தேடி குளி. அரைத்த மஞ்சளை பூசி குளி என்று சொல்வார்கள். ஆடி மாதத்து செவ்வாய்க்கிழமைக்கு அந்த அளவுக்கு மகத்துவம் இருக்கிறது.

    ஆடி செவ்வாய் தினத்தன்று பெண்கள் மா விளக்கு போடுவதும், திருவிளக்கு பூஜை செய்வதும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவதும், செவ்வரளி பூக்கள் வழிபாடு செய்வதும் அதிகமாக நடைபெறும். இதன் மூலம் பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
    வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.
    திங்கள் செவ்வாயினில் தெரிசித்த மாந்தர்க்குத் தீங்குகள் அகன்று ஓடும்!
    சேர்புதன் வியாழனில் திருக்கோலம் கண்டோர்க்குச் செல்வங்கள் வந்து கூடும்!
    மங்கல வெள்ளி சனி ஞாயிறில் உனைக்கண்டோர் மாபெரும் வெற்றிகாண்பர்!

    என்று அம்பிகை பாமாலை எடுத்துரைக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு. அந்த அடிப்படையில் எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கும் தை வெள்ளிக்கும் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அற்புதப் பலன் கள் கைமேல் கிடைக்கும். மாதங்களில் வித்தியாசமான மாதம் ஆடி மாதம்.

    பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும். ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் விலகும். எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் விளங்குகின்றது.

    அப்படிப்பட்ட அற்புதமான மாதத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் திருமகள் வழிபாட்டையும் ஆதிபராசக்தியையும் முறையாக வழிபட்டால் கும்பிட்டவுடன் குறைகள் தீரும்! நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும்!

    அம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான். அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.

    சக்தியை சாந்த வடிவத்தில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்திரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப்பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடையம்மன் என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.

    மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.

    கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடையாது. ஆடி மாதத்தில் தான் வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். காரணம் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கும் பொழுது ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும்.

    குறிப்பாக ஒரு மனிதனின் வாழக்கைக்குத் தேவை அருளா?, பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது தெய்வத்தின் அருளோடு வரும் பொருள்தான் என்று பதில் கிடைக்கும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் திருமகள் என்றும், லட்சுமி என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லட்சுமியின் அருள் இருந்தால் பண மழையில் நாம் நனையலாம்.

    ‘அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்

    உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ?

    இன்றோடு துயர்விலக இனிய தனலட்சுமியே!

    மன்றாடிக் கேட்கின்றோம் வருவாய் இதுசமயம்!’

    என்று தனலட்சுமியின் முன்னால் ஆடி வெள்ளிக்கிழமையன்று பாடினால், தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். பற்றாக்குறை அகன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். அங்ஙனம் வரம்கொடுக்கும் லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து விரதமிருந்து வழிபட ஏற்ற நாளும் ஆடி மாதம் தான்.

    வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் வீட்டை மெழுகிக் கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். வீட்டுவாசலில் லட்சுமிக்குரிய கோலங்களான தாமரைக் கோலம், இதயக்கமலம், ஐஸ்வர்யக் கோலம் போன்றவற்றை வரைந்து திருமகள் வருக! என்று கோலமாவினால் எழுதி வைக்கலாம். அஷ்டலட்சுமியும் இல்லத்தில் அடியெடுத்து வைக்க வேண்டுமானால் இல்லத் தூய்மை மிகவும் முக் கியமாகும்.

    அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமியை இல்லத்திலும் வழிபாடு செய்யலாம். ஆலயத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும். வசதி வாய்ப்புகளும் பெருகும். இமயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சமய மாலை பாடினால் சமயத்தில் வந்து நமக்கு கைகொடுத்து உதவுவாள்.

    “ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.
    ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டியிருக்கும். அதே ஆடி மாதம் பெருமாள் ஆலயங்களில் சூடித்தந்த சுடர்க்கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடைபெறுவதும் வழக்கம். மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே’ என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.

    விஷ்ணுவின் பாதம்பற்றி, அவர் புகழ்பாடிய அடியவர்கள் ‘ஆழ்வார்கள்’ என்று போற்றப்படுகின்றனர் அப்படிப்பட்ட பன்னிரண்டு ஆழ்வார்கள், தமிழ் மொழியில் இறைவனை போற்றிப் பாடிய பாடல்களே ‘நாலாயிரத் திவ்யபிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

    ஏழாம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில், செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட அற்புத தெய்வீக மங்கை அவர்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்கு பெருமாள் அடியவரான விஷ்ணு சித்தர் உருவாக்கிய நந்தவனத் தோட்டத்தில், மாசற்ற துளசிசெடியின் கீழ் அழகிய பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை, பின்னாளில் பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்ட விஷ்ணு சித்தர் எடுத்து, கோதை என்று பெயரிட்டு வளர்த்தார். சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது அதீத காதல் கொண்டு, எந்நேரமும் அவன் நினைவில் பாக்களைப் பாடியபடி வளர்ந்தாள், கோதை.

    பெரியாழ்வார் தான் வழிபடும் அரங்கனுக்கு சூட்ட, நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்களை பறித்து வந்து அதைத் தொடுத்து மாலையாக்கி வைப்பார். அதை அவர் அறியாமல் ‘தான் நேசிக்கும் கண்ணனுக்கு அம்மாலை பொருத்தமானதுதானா?’ என்று அறிய தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பாள் ஆண்டாள்.

    ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் மனம் வருந்தினார். ‘தன் பெண் சூடிய மாலையையா கண்ணன் அணிந்தான்?’ என்ற கவலையில் வாடினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன், ‘கோதை சூடிய மாலையே தனக்கு விருப்பமானது’ என்றார். அன்று முதல் ஆண்டாள் ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ ஆனாள்.

    ஆண்டாளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய, அவளோ ‘நான் கண்ணனையே மணப்பேன்’ என்று உறுதி கொண்டாள். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் நினைத்து பாவை நோன்பு ஏற்று விரதம் இருக்கத் தொடங்கினாள்.

    பெரியாழ்வார் என்ன செய்வதென்று அறியாமல், அரங்கனிடம் சென்று வேண்டினார். அரங்கனோ, ‘திருமணக்கோலத்தில் மகளுடன் திருவரங்கம் வந்து சேர்’ என்று அருளினார்.

    அதன்படி மேளதாளம் முழங்க மகளை திருவரங்கம் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த ஆண்டாளை, அரங்கநாதப் பெருமாள் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டதாக வரலாறு.

    ஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’.

    ஆண்டாள் என்றாலே, முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும், அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் தான் நம் நினைவிற்கு வரும். ஆண்டாள் கையில் உள்ள கிளி, மாதுளம்பூக்கள், மரவள்ளி இலைகள், நந்தியாவட்டை இலை, செவ்வரளி போன்றவைகளுடன் வாழை நார் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

    ஆண்டாளிடம் இருந்து ரங்கனுக்கு தூது போன வியாச மகரிஷியின் மகனான சுகப்பிரம்ம மகரிஷிதான் கிளி ரூபத்தில் ஆண்டாளின் கைகளில் தவழ்வதாக ஐதீகம். பக்தர்களின் வேண்டுதலை இந்த கிளியே, ஆண்டாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு அனுதினமும் சாற்றப்படும் கிளிகளை, முன்னதாகவே சொல்லிவைத்து பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். அப்படிப் பெற்ற கிளியை பூஜையறையில் வைத்து வணங்கி வந்தால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

    மனிதர்கள் தூய பக்தியுடன் செய்யும் எந்த ஒரு செயலும், இறைவனின் கவனத்திற்குச் செல்லும் என்பதற்கு ஆண்டாளே சிறந்த சாட்சி. கண்ணனுக்காக தயார் செய்யப்பட்ட மலர் மாலையை, தான் சூடி அழகு பார்த்த ஆண்டாளின் வழியைப் பற்றி, இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலைதான், பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி பெருமாளுக்கும், சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும் சாத்தப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பழங்காலமாக நடைபெற்று வரும் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா, இன்றும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராக ஆண்டாளையும், ரெங்கமன்னாரையும் சுமந்து வருவது சிறப்பானதாகும். ஆண்டாள் தோன்றிய செவ்வாய்க்கிழமையில் துளசியை பூஜித்து, விளக்கேற்றி வழிபட வாழ்வில் நல்ல துணை அமைவதுடன், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்து புன்னகை முகத்துடன் அருள் புரியும் ஆண்டாளை தரிசித்து வாருங்கள்.

    பொதுவாக ஆடி மாதத்தை ‘நிலையற்ற மாதம்’ என்பர். அட்சயத் திருதியை போலவே ஆடிப் பெருக்கும் நல்ல காரியங்கள் துவங்குவதற்கு உகந்த நாள்.
    அட்சயத் திருதியை போலவே ஆடிப் பெருக்கும் நல்ல காரியங்கள் துவங்குவதற்கு உகந்த நாள். பொதுவாக ஆடி மாதத்தை ‘நிலையற்ற மாதம்’ என்பர். அந்த மாதத்தில் எந்த ஒரு காரியம் செய்தாலும், அது ஆடிப் போய் விடும் என்று சொல்லப்படும். ஆனால், இந்த ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு தினம் விதிவிலக்கு.

    ஆடி 18-ஆம் தேதி அன்று எந்த நட்சத்திரம், திதி வந்தாலும் கவலை வேண்டாம். அன்றைய தினம் புதிய தொழில், புது முயற்சி, வியாபார முன்னேற்றம் போன்றவற்றை தாராளமாக மேற்கொள்ளலாம் என்கிறார்கள் அருளாளர்கள். இந்த தினத்தில் துவக்கப்படுகிற எந்த ஒரு நற்செயலும் பன்மடங்கு விருத்தி அடைந்து, கூடுதல் நன்மை அளிக்கும். இன்றைக்குத் துவங்குகிற வங்கிக்கணக்குகள், சேமிப்புகள் போன்றவை பன்மடங்கு பெருகும்.

    வீட்டுக்குத் தேவையான ஜவுளிகள், நகைகள், இதர பொருட்கள் வாங்க உகந்த தினம். என்றும் மங்களம் தரும் பொருட்கள் வாங்கலாம். உதாரணத்துக்கு மஞ்சள், குங்குமம், நாட்டுச் சர்க்கரை போன்றவை.

    வெண்மை நிறம் கொண்ட பொருட்களை வாங்கினால், வீட்டில் சுபிட்சம் வளரும். குறைந்த பட்சம் உப்பு, அரிசி. படிக்கின்ற குழந்தைகளுக்கு எழுது பொருட்கள், பாடம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கலாம்.

    எனவே, இன்றைய தினம் நதி தேவதைகளை - பெண் தெய்வங்களை வணங்கி நம் மனதில் இருக்கிற மாசுகள் அகல பிரார்த்தித்துக் கொள்வோம்.

    ஆடி 18-க்கு என்ன சிறப்பு?

    இந்து சமயம் தொடர்பான பண்டிகைகளும் பெருவிழாக்களும் பெரும்பாலும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகின்றன. ஆனால், பல லட்சக்கணக்கானோர் கொண்டாடும் இந்த ஆடிப்பெருக்கு மட்டும் ஆடி மாதத்தின் 18-ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு என்ன நட்சத்திரம், என்ன திதி - இப்படி எதுவும் பார்ப்பது கிடையாது.
    ஆடிப்பெருக்கை நீர்நிலைகளில் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயும் வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்வது என்று பார்க்கலாம்.
    நீராடி முடித்த பின் வீட்டை சுத்தமாக்குங்கள். பூஜையறையை நன்றாகத் துடைத்து, மாக்கோலம் போடுங்கள். ஒரு பித்தளைச் செம்பில் அரைத்த மஞ்சள் விழுதையோ, அல்லது மஞ்சள் பொடியையோ குறிப்பிட்ட அளவு போடவும். பிறகு, சுத்தமான நீரை செம்பில் விடவும். விரலால் கலக்கவும். இப்போது நீரானது மஞ்சள் நிறத்துக்கு மாறி இருக்கும். கொஞ்சம் உதிரிப்பூக்களையும் இந்த செம்பில் போட்டு விட்டு, பூஜையறையில் வைக்கவும்.

    ஒரு பித்தளைத் தட்டில் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், உடைத்த தேங்காய், பழங்கள் போன்றவற்றை வைக்கவும். என்னென்ன ஸ்லோகங்கள் சொல்லி கடவுளை வழிபடுவீர்களோ, அதுபோல் வணங்கவும். பிறகு, காவிரி உட்பட அனைத்து நதி தேவதைகளையும் மனதாரப் பிரார்த்திக்கவும்.

    சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து அதை நிவேதனம் செய்யவும். பிறகு, ஆரத்தி காண்பிக்கவும். பூஜையறையில் இருக்கிற அம்மன் படங்களுக்கு பூக்களைத் தூவி வணங்கவும். அருகில் இருக்கின்ற சுமங்கலிகளை வீட்டுக்கு அழைத்தோ, அல்லது நீங்கள் அவர்களது வீட்டுக்குச் சென்றோ, தாம்பூலமும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமும் தரவும்.

    மஞ்சள் கரைக்கப்பட்ட நீரை அனைவரும் வணங்கி விட்டு, வீட்டில் இருக்கிற துளசிச் செடிகளுக்கு விடவும். மரம், செடிகளுக்கும் விடலாம். கிணற்றிலும் சேர்க்கலாம். 
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்கு 'களை' கட்டியது. #aadi18, #aadiperukku
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

    ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்குகளை கட்டியது.
    திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப்பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக் கொருவர் கழுத்தில் அணிவித்தனர். புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர்.

    காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன.

    கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, திருக்காட்டுப் பள்ளியிலும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை, துலா கட்டம், சீர்காழி, திருவாரூரில் ஆடிப்பெருக்கு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர்.

    புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்தும் விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொரு வர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

    அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டிகையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். இதேபோல் திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, திருவளர்ச் சோலை, கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்தி ரம், முசிறி, முக்கொம்பு காவிரி ஆற்றிலும் ஆடிப்பெ ருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


    பவானி கூடுதுறையில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். 3 நதிகள் (காவிரி, பவானி, அமுதநதி) சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கூடுதுறைக்கு இன்று புதுமணத் தம்பதிகள் ஜோடி ஜோடியாக வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி மணமாலையை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
    தங்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டி வழிபட்டனர்.



    பல பெண்கள் ஆற்றில் முளைப்பாரியை விட்டு வழிபட்டனர். இதேபோல விவசாயிகள் பலரும் தங்களது குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி படித்துறையில் தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கட்டும் என வேண்டி வழிபட்டனர்.

    இப்படி பலதரப்பட்ட பக்தர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து இருந்ததால் பவானி நகர், மக்கள் வெள்ளத்தால் குலுங்கியது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடங்கி காவிரி கரை நெடுக புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.

    புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது திருமண மாலைகளை வாழை இலைகளில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். புதுமண தம்பதிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பழைய மஞ்சள் கயிறுகளை மாற்றி புதிய மஞ்சள் கயிறுகளையும் அணிந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆற்றில் காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. #aadi18, #aadiperukku
    ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.
    பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் இல்லாமல் தர வேண்டும் என இயற்கையை வழிபடுவதே ஆடிப்பண்டிகையின் நோக்கம். குறிப்பாக காவிரி கரையில் வசிக்கும் மக்கள் இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

    அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடங்கி காவிரி கரை நெடுக புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    சேலம், நாமக்கல், ஈரோடு தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மேட்டூர் அணை முனியப்பன் கோவிலுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்கு வைத்து உணவு சமைத்து அதனை அருகில் உள்ள அணை பூங்காவுக்கு எடுத்து சென்று உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர்.

    மேட்டூரை சுற்றியுள்ள கோவில்களில் உள்ள சாமி சிலைகள், ஈட்டிகள், அரிவாள்களை மேள தாளம் முழங்க எடுத்து வந்த பக்தர்கள் காவிரியில் சுத்தப்படுத்தி மீண்டும் அதனை கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 18 ஆயிரத்து 267 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மேட்டூர் அணை காவிரி பாலம் படித்துறை, மட்டம், பாம்பு புற்று படித்துறை, மேற்கு கால்வாய் ஆகிய 4 இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், கரையில் நின்று போட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது திருமண மாலைகளை வாழை இலைகளில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். புதுமண தம்பதிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பழைய மஞ்சள் கயிறுகளை மாற்றி புதிய மஞ்சள் கயிறுகளையும் அணிந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆற்றில் காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அந்த பகுதிகளில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    மேட்டூர் அரசு பள்ளி வளாகம், பொன்நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேட்டூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஈரோடு மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் மாதையன் குட்டையில் இருந்து மேற்கு மெயின் ரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு வந்து சென்றன.

    சேலம் மார்க்கமாக வரும் பஸ்கள் துணை கலெக்டர் இல்ல சாலை வழியாக மாதா கோவில் அருகே மேற்கு பிரதான சாலை வழியாக பஸ் நிலையம் வந்து சென்றன. இதே போல மேலும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது.

    எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்கள் இன்று காலை முதலே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குவிந்தனர். காவிரியில் புனித நீராடிய சுமங்கலி பெண்கள் பழைய தாலி கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறை அணிந்து கொண்டனர். இதனால் கணவருக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

    புதுமண தம்பதிகள் காவிரி கரையில் சிறப்பு பூஜை செய்து தங்களின் திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். அந்த பகுதியில் உள்ள உற்சவ மூர்த்தி சிலை மற்றும் கோவிலில் உள்ள பூஜை பொருட்களை மேள தாளங்கள் முழங்க எடுத்து வந்து காவிரி ஆற்றில் சுத்தப்படுத்தி மீண்டும் கோவில்களுக்கு எடுத்து சென்றனர்.

    சேலத்தில் இருந்து பூலாம்பட்டிக்கு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது.
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

    காவிரி கரையோரங்களில் ஆடி-18 விழா ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உற்சாகப்படும்.

    தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

    தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு களை இழந்து காணப்பட்டது. இந்தாண்டில் மேட்டூரில் இருந்து கடந்த மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் 22-ந் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை பகுதி வரை சென்றுள்ளதால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது.

    திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப் பெண்கள், அங்குள்ள விநாயகருக்கு முன்பு தழை வாழையிட்டு அதில் எள், வெல்லம் கலந்த பச்சரிசி வாழைப் பழம், பேரிக்காய், விளாம்பழம் கொய்யாப் பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவை படையலிட்டு வழிபட்டனர்.

    மேலும் செந்நிறப் பனை ஓலையுடன் கருக மணி வளையல் சுற்றிய காதோலைக் கருகமணியுடன் மஞ்சள், குங்குமம், மஞ்சள் இழைக்கயிறுகள் ஆகியவற்றையும் வைத்து தீப, தூபங்கள் காட்டி வழிபாடு செய்தனர். பின்னர் வெல்லங் கலந்த பச்சரிசி மற்றும் பேரிக்காய் முதலிய பழ வகைகளை அனைவருக்கும் வழங்கினர்.

    பெண்களுக்கு மஞ்சள் கயிறு அணிவித்த காட்சி.

    கன்னிப்பெண்கள், திருமணமான பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிவித்தனர்.

    மேலும் புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர். மேலும் திருமணமாத கன்னிபெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டியும், தங்களது வாழ்வில் மகிழ்ச் சியும், வளமும் நிலைத் திருக்க வேண்டும் என்றும் வேண்டினர்.

    இன்று அதிகாலை முதலே புஷ்ய படித்துறையில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போலீசார் பெண்கள் மற்றும் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க கோரி ‘மைக்’கில் எச்சரிக்கை செய்த வண்ணம் செய்தனர்.

    காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, மற்றும் காவிரி கரையோரங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கரைகளில் பழங்கள், மலர்களை வைத்து பூஜை செய்து காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதில் திருமணமாகாத கன்னிபெண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா ‘களை’ கட்டியது. காவிரி கரையில் பூஜை செய்து விநாயகரை பெண்கள் வழிபட்டனர். காவிரியின் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலா கட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி துலா கட்டத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். பின்னர் படித்துறையில் படையிலிட்டு, ‘‘ பொங்கி வரும் காவிரியே... எங்களது வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பொங்க செய்வாயாக’’ என்று ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    துலா கட்டத்தில் போலீசாரும், மற்றும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விடாதவாறு பைபர் படகுகளில் சென்று தீயணைப்பு துறையினர் கண்காணித்தனர்.

    சீர்காழி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திருவாரூர் முள்ளியாறு, ஒடம்போக்கி, கோரையாறு, பாண்டவையாறு, பாமினி ஆற்றின் கரைகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.
    காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
    காவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும்... தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள்.

    திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர்.

    ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தலைமையில் இவை அனைத்தும் காவிரிக் கரையில் நடைபெறும். சிறுவர்கள் ‘சப்பரத் தட்டி’ எனப்படும் சிறு மரத் தேர்களை உருட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் விளையாடுவர்.

    விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற காவிரிக்கு மங்களப் பொருட்களை அர்ப்பணித்து, பெண்கள் தங்கள் கழுத்திலும், உடன் வந்திருக்கிற ஆண்கள் தங்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வார்கள்.

    அன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு.

    சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள்.

    அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர்.

    காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

    காவிரியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிற வேளையில் - ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ‘ஆடிப்பெருக்கு’ விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
    காவிரியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிற வேளையில் - ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ‘ஆடிப்பெருக்கு’ விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

    குடகு மலையில் உற்பத்தி ஆகிற காவிரி தமிழகத்தில் ஒகேனக்கல் துவங்கி பூம்புகார் வரை பாய்கிறது. மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, குளித்தலை, முக்கொம்பு, திருச்சி, கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை என்று காவிரி கடலில் கலக்கிற பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு களை கட்டும்.

    நமது கலாசாரத்தில் நதிகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நதிக்கரைகளில் தான் நாகரிகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் காவிரி வளம் பெருக்கும் பகுதிகளில் சோழ தேசத்துக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

    கரிகாற்சோழ மன்னன் காலத்தில் இந்த ‘ஆடிப்பெருக்கு’ கொண்டாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்கள் காலத்தில் காவிரியின் இரு கரைகளையும் தொட்டு நீரானது வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருக்கும்.

    காவிரிக்கு ‘தட்சிண கங்கை’ என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி. இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. ‘காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும்’ என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினான் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன.
    ×