search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெண்களின் திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்
    X

    பெண்களின் திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்

    திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
    பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம் தான். அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும். திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
    மாங்கல்ய பலம் அதிகரிக்கும்

    ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் பெண்கள் அதிக அளவில் ஆலயத்துக்கு வரும் நாட்களாகும். ஆடி செவ்வாய் தேடி குளி. அரைத்த மஞ்சளை பூசி குளி என்று சொல்வார்கள். ஆடி மாதத்து செவ்வாய்க்கிழமைக்கு அந்த அளவுக்கு மகத்துவம் இருக்கிறது.

    ஆடி செவ்வாய் தினத்தன்று பெண்கள் மா விளக்கு போடுவதும், திருவிளக்கு பூஜை செய்வதும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவதும், செவ்வரளி பூக்கள் வழிபாடு செய்வதும் அதிகமாக நடைபெறும். இதன் மூலம் பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
    Next Story
    ×