என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94516"

    காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாகிறது. வாரத்தில் 7 நாட்களிலும் ராகு காலத்தில் பைரவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப்பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

    காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, இனிப்பு பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களை சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.

    * திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும். வழக்கில் வெற்றி கிட்டும்.

    * திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.

    * செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.

    * புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.

    * தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயாசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    * வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.

    * சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயாசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
    பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் `நாக சதுர்த்தி’. சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.

    கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.

    பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது.

    ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

    நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
    ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.
    திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்த திதியை புண்ணியகாலம் என்பர்.

    இதில், மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.

    விரதங்களின் சிறப்பு :

    ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக்கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள்.

    ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது.

    இதனால், மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது, உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன், ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    உபவாசத்தின்போது, சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

    25 ஏகாதசிகள் :

    1. சித்திரை வளர்பிறை ஏகாதசி, காமதா ஏகாதசி.

    2. சித்திரை தேய்பிறை ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி.

    3. வைகாசி வளர்பிறை ஏகாதசி,  மோகினி ஏகாதசி.

    4. வைகாசி தேய்பிறை ஏகாதசி,  வருதினி ஏகாதசி.

    5. ஆனி வளர்பிறை ஏகாதசி, நிர்ஜல ஏகாதசி.

    6. ஆனி தேய்பிறை ஏகாதசி, அபரா ஏகாதசி.

    7. ஆடி வளர்பிறை ஏகாதசி, விஷ்ணு சயன ஏகாதசி.

    8. ஆடி தேய்பிறை ஏகாதசி, யோகினி ஏகாதசி.

    9. ஆவணி வளர்பிறை ஏகாதசி, புத்திரத ஏகாதசி.

    10. ஆவணி தேய்பிறை ஏகாதசி, காமிகா ஏகாதசி.

    11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி, பரிவர்த்தன ஏகாதசி.

    12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி, அஜ ஏகாதசி.

    13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி.

    14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி, இந்திரா ஏகாதசி.

    15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி, பிரபோதின ஏகாதசி.

    16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி, ரமா ஏகாதசி.

    17. மார்கழி வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி.

    18. மார்கழி தேய்பிறை ஏகாதசி, உற்பத்தி ஏகாதசி.

    19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி

    20. தை தேய்பிறை ஏகாதசி, சபலா ஏகாதசி.

    21. மாசி வளர்பிறை ஏகாதசி, ஜெய ஏகாதசி.

    22. மாசி தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி.

    23. பங்குனி வளர்பிறை ஏகாதசி, ஆமலகி ஏகாதசி.

    24. பங்குனி தேய்பிறை ஏகாதசி, விஜயா ஏகாதசி.

    25.   அதிக ஏகாதசி, கமலா ஏகாதசி.
    வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    வாழ்வில் ஏற்படும் துயரங்கள் தீர சிவபெருமானை பிரதோஷ காலங்களில் வழிபடுவது சிறந்தது. அந்த வகையில் வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினமான இன்று சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

    பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதம் என்பதால் முருகர் சந்நிதியிலும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் நவகிரக சந்நிதியில் சுக்கிர பகவானுக்கும் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

    கோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களை வழங்குவது சிறப்பானதாகும். இந்த முறையில் வைகாசி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவபவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள் தீரும். மரண பயம் நீங்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பொருள் வரவு ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.
    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.
    மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.

    விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது.
    2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது.
    3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.
    4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
    5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
    6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.
    7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
    8. கார்த்திகை மாதம் :- இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
    9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
    10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
    11. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.
    12. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.
    வைகாசி அமாவாசை தினமான இன்று விரதம் இருந்து நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் என்ன என்பதை குறித்து விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
    வைகாசி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் வைகாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.

    வைகாசி மாதம் இறை வழிபாடு, விரதங்கள் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிம்மதியற்ற நிலை நீங்கும்.

    சுபிட்சங்கள் பெருகும். திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை உண்டாகும். கடன், வறுமை நிலை போன்றவை ஏற்படாமல் காக்கும்.
    இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் 9 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் தொடர்ந்து செய்ய வரவேண்டும்.
    இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் 9 வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் ராகு காலத்தில் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    வெள்ளிக்கிழமை ஆரம்பித்தால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் ராகு காலத்தில் செய்ய வேண்டும்.

    முதல்வாரம் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி இரண்டு பாகங்களாக்கி சாறை வெளியேற்றி இரண்டு மூடியிலும் எண்ணெய் ஊற்றி துர்க்கை அம்மன் சந்நிதியில் விளக்கேற்ற வேண்டும். இரண்டாவது வாரம் இரண்டு எலுமிச்சை பழத்தை நறுக்கி நான்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

    மூன்றாவது வாரம் ஆறு என்று ஒவ்வொரு வாரமும் கூட்டிக் கொண்டே 9-வது வாரம் 18 விளக்குகள் ஏற்றி பூஜையை முடிக்க வேண்டும். கடைசி வாரம் பூஜை செய்யும் நாளில் எலுமிச்சை மாலை துர்க்கை அம்மனுக்கு சூட்டி, எலுமிச்சை சாதம், சுண்டல், உளுந்த வடை, தேன், பானகரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம் படைத்து அர்ச்சனை செய்து நீல வண்ண மலர்களால் பூஜிக்க வேண்டும்.

    1. தேங்காயை துருவி அதனுடன் நாட்டுச் சர்க்கரை, காய்ந்த திராட்சை, முந்திரி, பேரிச்சம் பழம், பாதாம் பருப்பு, விஸ்தாப்பருப்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவற்றை கலந்து தேனை அதன்மீது ஊற்றி நிவேத்யத்திற்கு இதை வைக்க வேண்டும். ராகுதோஷ பரிகாரத்திற்கு இது மிகச் சிறந்ததாகும்.

    2. உளுந்தவடை, தயிர்சாதம், புளியோதரை, உளுத் தம்பருப்பு சாதம் இவற்றை ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்கலாம்.

    3. பாம்பு புற்றிற்கு பால் ஊற்றி ராகு காலத்தில் பூஜை செய்து வரலாம்.

    4. கருமாரி அம்மனை வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.

    5. சிவன் கோவிலுக்குச் சென்று சிவன், பார்வதியை வழிபட்டு அங்குள்ள நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு கருப்பு வண்ணம் கலந்த பட்டாடை சாத்தி மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்து உளுந்து தானம் செய்து வரவும். நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.

    6. நாகதோஷம் உள்ளவர்கள் புதியதாக நாகர் செய்து சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்யலாம்.

    7. ராகு ஜாதகத்தில் எந்த கிரகத்தினுடைய வீட்டில் உள் ளதோ அந்த கிரகத்திற்குரிய கிழமையை பார்த்து அந்த நாளில் இரவில் படுத்து உறங்கும்போது தலையணைக்கடியில் கருப்பு பேப்பரில் சிறிதளவு உளுந்து மடித்து வைத்து வரவும். காலையில் அதை எடுத்து சாமிபடம் முன் வைத்து விடவும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரவேண்டும்.

    பத்தாவது வாரம் அதைப் பிரித்து புதிய கருப்பு துணியில் கட்டி கிழக்கு முகமாக அமர்ந்து தலையை மூன்று முறைச் சுற்றி கடலிலோ ஆற்றிலோ எறிந்து விட வேண்டும். கிணற்றில் போடக்கூடாது. அதன்பிறகு சிவன் கோவில் அல்லது நாகத்தை தலைகவசமாக அணிந்த அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும்.

    8. திருநாகேஸ்வரம் சென்று ராகுபகவானுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.

    9. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜருக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

    10. சரபேஸ்வரரை ராகு காலத்தில் விரத வழிபட்டு அர்ச்சனை செய்து வரலாம்.

    11. கோமேதகத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம். ஜோதிடரின் ஆலோசனைப்படி ஜாதகத்தை காண்பித்து அணியலாமா? என்று கேட்டு எப்போது, எப்படி, எந்த நாளில் அணியலாம் என்று கேட்டு அணியவும்.
    சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வரப் ரீதியாக அமைகிறது.
    சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான். எளிய முறையில் பலன் தரும் கணபதிபோல அவர் தகப்பனாரும் அப்படியே தருவார். ஒரு சமயம் பிரயைம் முடிந்து சிருஷ்டி தொடங்கும் காலத்தில் தேவர்கள் கயிலையை அடைந்து தாங்கள் எப்போதும் சக்தியோடு விளங்கும் இடத்தைத் தெரிவிக்கும்படி வேண்டினர் அதற்கு ஈசன்.

    தேவர் பெருமக்களே! நான் எப்போதும் உங்களுக்காக லிங்க வடிவில் இருக்கிறேன். அதில் பிரதிஷ்டை, மந்திர உருவேற்றம் பூஜைகள் எதுவும் இல்லாமல் இருப்பினும் பக்தர்களைக் காப்பேன் என்று பதில் அளித்தார்.

    சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வரப் ரீதியாக அமைகிறது.

    லிங்க மூர்த்தென சதாகாலம் விநாமந்த்ராதி சத்க்ரியாம் ப்ரஸன்னோ நிவசாம் ஏவ பக்தி பாஜாம் விமுக்தயே, என்று விவரிக்கிறது.

    வராக புராணம், பதுமராஜம், வைரம், மரகதம் முதலிய ரத்தினங்களான லிங்க பூஜை நல்ல பலனைத் தரும் என்றும், பவிஷ்ய புராணம், மணி, விபூதி, பசுஞ்சாணம், மாவு, தாமிரம், வெண்கலம் இவற்றில் செய்த லிங்க ஆராதனை சிறந்தது என்றும், ஸ்படிக லிங்கம், செல்வம் கெடுத்து விருப்பங்களை அருளும் என்றும் பவிஷ்ய புராணம் கூறுவதை அறிதல் வேண்டும். எப்பொருளில் லிங்கம் செய்தாலும் புகஜக்கு உகந்ததாகும் என விஷ்ணு தர்மோத்தரம் சொல்கிறது.

    பிருத்வி எனப்படும் மண்ணால் செய்த சிவலிங்கம் செய்து ஓராண்டு காலம் சிவமூலத்தால் வில்வம் கொண்டு வந்து வழிபடுபவன், நீண்ட ஆயுள், பலம், செல்வம், செல்வாக்கு பெறுவான், நன் மக்கட் பேறுடன் சுகமாக வாழ்வான், கோருகின்ற வரங்களும் பெறுவான் என்கிறது தைத்தரிய கோசம் என்ற நூல்.
    சின்ன பூஜையால் மன திருப்பதி அடைந்து பேரருள் தருபவர் ஈசன் என்பதால் வேதநூல்கள் இவரை ஆகதோஷி என்று போற்றுகின்றன.

    சிவராத்திரி பூஜை விதி... மகா சிவராத்திரி நாளில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பகலில் கனி, கிழங்கு, பால் உண்டு இரவில் கண் விழித்து சுத்த உபவாசம் கடைப்பிடித்து நான்கு காலம் சிவாலய தரிசனம் செய்து சிவபுராணம், பஞ்சபுராணம் படித்து சிவதாம் ஜெபம் செய்து, சிவலிங்க திருமேனியை வில்வதளங்களால் அர்ச்சனை செய்து முறையாக பக்தியுடன் வழிபடல் வேண்டும்.

    சிவபெருமானை பூஜையால் தான் மகிழச் செய்ய முடியும். பெருமானை விரதம் செய்து தான் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று பல தீபிகா நூல் உரைத்துள்ளது.
    பூஜைம் சம்போ- ஸ்ரீபதே சக்விரதானிச என்பது வாக்கு.

    பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று. ஆதிசங்கர பகவத் பாதர், சுத்தநீர் அபிஷேகம்-பத்து வகை பாவங்களையும், பால் அபிஷேகம்-நூறு பாவங்களையும், தயிர்-ஆயிரம் பாவங்களையும், நெல்-பத்தாயிரம் பாவங்களையும், இளநீர்-ஒரு லட்சம் கோடி பாவங்களையும், சந்தனம்-சகல பாவங்களையும் அகற்றும் என்றார்.

    தைலம்-பக்தியையும், பழங்கள்-மக்கள் வசீகரத்தையும், பஞ்சாமிர்தம்-ஆயுளையும், பால்-நல்ல குணத்தையும், தயிர்-உடல் நலத்தையும், தேன்-இசைத் திறனையும், இளநீர்-குழந்தைப் பேறையும், விபூதி-நல்லறிவையும், சந்தனம்-சுகவாழ்வையும், பஞ்சகவ்யம்-கல்வித் திறனையும், பன்னீர்-புகழையும் தரும் என தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன.

    இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம், மலர், வில்வமாலை, சந்தனம் சாற்றி சிவார்ச்சனை செய்யும் போது ருத்ராட்சம் அணிந்து விபூதி தரித்து ஓம் நமச்சிவாய மந்திரத்துடன் சிவ பதிகங்களை ஓதி நலன்களை பல பெற வேண்டும்.

    மகா சிவராத்திரி அன்று இரவு கண் விழிப்பதாகக் கூறியபடி இளைய தலைமுறையினர் திரைப்படங்களைக் காணச் செல்கின்றனர். அந்த நாளில் முடிந்த அளவு தவிர்த்து மறுதினம் செல்லலாமே! சிவராத்திரி விரத நாளில் ஐம்புலன்களையும் அடக்கிச் சிவ சிந்தனையில் ஈடுபட்டால் உங்கள் ஆயுளும், ஆரோக்கியமும் கூடும். வாழ்நாள் இனிதாகும். ஓம் நமசிவாய.
    இசையும் பொருளுமாய் விளங்கிடும் தெய்வம்
    கண்ணின் மணியாய்க் காத்திடும் தெய்வம்
    கயிலை என்னும் மலையில் வாழும் தெய்வம்
    உரைகள் கடந்த உயர்ந்திடும் தெய்வம்
    அதுநான் லிங்கத்துள் உரையும் நமசிவாயம்.
    சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக, எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விரதத்தை அனுசரித்து கொண்டு வருகின்றனர்.
    ஏதாவது ஒரு தமிழ் மாசத்திலே வர்ற மூணாவது அல்லது நாலாவது வெள்ளிக்கிழமையிலே விரதத்தை தொடங்க வேண்டும். அன்னிக்கு விடியற்காலையிலே எழுந்திருச்சு மஞ்சள் பூசி குளிச்சுட்டு நெற்றியிலே குங்குமம் வெச்சுக்கணும். பசுஞ்சாணம் கரைச்ச தண்ணியால வாசல் தெளிக்கணும். ஃப்ளாட்டிலே இருக்கறவங்க பாவனையா அந்தத் தண்ணியைத் தெளிச்சுக்கலாம். அழகா ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

    வீடு முழுசும் சுத்தமாகப் பெருக்கித் துடைச்சு சுத்தப்படுத்திக்கணும். பூஜையறையையும் துடைச்சு தூய்மைப்படுத்திக்கோங்க. அங்கே சாம்பிராணி புகை போடலாம். வாசல்ல மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம். ஒட்டு மொத்தமா வீடு பூராவும் அன்னிக்கு பளிச்னு இருக்கணும். அன்னிக்குப் பூராவும் லக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கிட்டே இருக்கலாம்.

    அல்லது சி.டியோ, ஆடியோ கேசட்டோ போட்டுக் கேட்கலாம். லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாம தெரிந்த அம்பாள் பாடல்களையும் பாடலாம். அன்னிக்குப் பூரா சிம்பிளா பால், பழம்னு மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவங்க அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகல்ல ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக்கலாம்..

    இந்த விரதத்தை ஆரம்பிச்ச பிறகு அடுத்து வர்ற பதினோரு வெள்ளிக்கிழமைகள்ல இதைத் தொடர வேண்டும். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக் கிழமை முடியாமப் போனா, அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சாயங்காலம் பக்கத்தில் இருக்கற அம்பாள் அல்லது பெருமாள் கோயில்ல இருக்கற தாயார் சந்நதிக்குப் போய் வரணும்.

    இதைக் கட்டாயமாக முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்னைக்காவது செய்யணும். கோயிலுக்குப் போய் வந்தபிறகு, வீட்ல பூஜையறையிலே முடிந்த பிரசாதங்களைச் செய்து (சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி மாதிரி ஏதாவது) நைவேத்யம் செய்துக்கணும். அவங்கவங்க வசதிக்கேத்தா மாதிரி சுமங்கலிகளை அழைச்சு, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணின்னு கொடுக்க வேண்டும்.

    இதே மாதிரி 12 வெள்ளிக்கிழமைகளும் செய்ய வேண்டும். 12-வது வெள்ளிக்கிழமையான்னு ரொம்பவும் டென்ஷனாயிடாதீங்க. எத்தனை வெள்ளிக்கிழமை விரதம் இருந்தாலும் அந்த ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முழுமனதுடன் செய்ய வேண்டும். சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக, எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விரதத்தை அனுசரித்து கொண்டு வருகின்றனர்.

    இப்படி விரதம் கடைப்பிடிச்சா சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் அடையலாம்.
    நாளை வைகாசி மாத சஷ்டி நாளாகும். எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    நாளை வைகாசி மாத சஷ்டி நாளாகும். எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து தரிசியுங்கள். நம் கஷ்டங்களையும் வாழ்வில் ஏற்பட்ட நஷ்டங்களையும் தீர்த்தருள்வான் கந்தகுமாரன்.

    மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகனைத் தரிசித்து, வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்தநாள் முழுவதும் சிவமைந்தனை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்வார்கள். சஷ்டி கவசம் படிப்பார்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.

    சஷ்டி திதியில் கந்தனை விரதம் இருந்து வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!

    சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.

    வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

    நாளை முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை விரதம் இருந்து வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!
    விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.
    1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணி பவர்கள் கார்த்திகை 19 தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.

    2. துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.

    3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்திலிருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

    4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.

    5. மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழுப் பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

    7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனை களில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.

    8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

    9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    10. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.

    11. மற்றவர்களிடம் பேசும் பொழுது, சாமி சரணம் எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் சாமிசரணம் எனச் சொல்ல வேண்டும்.

    12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.

    13. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.

    14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம் என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது போய் வருகிறேன் என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பத்தியுணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.

    15. மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.

    16. மாலையணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.

    17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக் காவது அன்னமிடுதல் மிக்க அருள்பாலிக்கும்.

    18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.

    19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும். எனவே எந்தப்பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.

    20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.

    22. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்திலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

    23. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

    24. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

    25. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.

    26. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    27. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

    28. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

    29. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களிலெல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.

    30. ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன் மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செய்கிறார்கள். என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டு களிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.

    31. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.

    32. யாத்திரை இனிதே நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
    அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.
    மனிதருக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான உணர்வுகளில் பசி மிகவும் பலம் வாய்ந்ததாகும். அதிலும் இந்தப் பசி என்கிற உணர்வு அதீத அளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய தீய செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள்.

    எனவே தான் ஞானிகள் பசியை ஒரு நோயாக கருதி பசிப்பிணி என்கின்றனர். உலகத்திற்கே படியளக்கும் தெய்வமாக இருப்பவர் தான் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியை நித்தம் வழிபடுபவர்களுக்கு வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படும் நிலை எப்போதும் ஏற்படாது.

    அன்னபூரணி தேவி வழிபாட்டிற்குரிய தினங்கள்

    மக்களின் உணவு பஞ்சத்தை போக்குவதோடு வாழ்வில் சகல விதமான நற்பலன்களை ஏற்படுத்தி தரவல்ல அன்னபூரணி தேவியை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற புசெவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

    மேலும் நவராத்திரி காலத்திலும் அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.
    ×