என் மலர்
நீங்கள் தேடியது "Shiva"
- சுருட்டப்பள்ளியில், சயன கோலத்தில் அருளும் சிவபெருமானை தரிசிக்க முடியும்.
- வித்தியாசமான அரிய வடிவங்களில் சிவபெருமான் அருள்புரிவதை பார்க்கலாம்.
பூலோகத்தில் படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆலயங்கள் மிகவும் குறைவு. காக்கும் கடவுளான மகாவிஷ்ணுக்கும், அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும் எண்ணற்ற ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மகாவிஷ்ணு, பெரும்பாலான ஆலயங்களில் உருவ தோற்றத்துடன்தான் காட்சி அளிப்பார்.
சிவபெருமானோ ஓரிரு ஆலயங்களைத் தவிர, பெரும்பாலான ஆலயங்களில் சிவலிங்கத் தோற்றத்தில்தான் அருள்பாலிப்பதைக் காண முடியும். அப்படி இருந்தாலும், அதிலும் எண்ணற்ற வித்தியாசமான அரிய வடிவங்களில் சிவபெருமான் அருள்புரிவதை நாம் பார்க்கலாம்.
அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது, திருநல்லூர் திருத்தலம். இங்கு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. பிருங்கி முனிவர், வண்டு வடிவம் எடுத்து சிவ பெருமானை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் மீது வண்டு துளைத்த அடையாளம் இருப்பதைக் காண முடியும்.
* மயிலாடுதுறையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நீடூர். இங்கு அருட்சோம நாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது.
* நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது, தலைச்சங்காடு என்ற ஊர். இங்கு சங்காரண்யேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மகாவிஷ்ணு, சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கை பெற்ற காரணத்தால், இங்கு மூலவரான ஈசன், சங்கு வடிவில் காட்சி தருகிறார்.
* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் நெய் மலை போல் காட்சியளிப்பதை தரிசிக்க கண்கள் கோடி வேண்டும்.
* பொதுவாகப் பெருமாள் கோவிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோவில்களில் மட்டும் சடாரி வைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வழக்கம் இருக்கிறது. அவை, காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில், காளஹஸ்தி சிவன் கோவில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோவில் ஆகியவை ஆகும்.
* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவம் என்றும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகிறது.
* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை, காசியில் உள்ள 'அனுமன் காட்' காமகோடீஸ்வரர் கோவிலில் காணலாம்.
* ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில், சயன கோலத்தில் அருளும் சிவபெருமானை தரிசிக்க முடியும்.
* பெங்களூரூவுக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில், சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெய்யாக மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில் ராஜகம்பீர மண்டபத்தில், மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.
- சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
- சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள்.
உயரமான மூலவர் விமானம்
* தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
* கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
* தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்
* திருபுவனம் கம்பேஸ்வரர் கோவில்
சிவன் விசேஷ தலங்கள்
* திருவேள்விக்குடி - கவுதுகாபந்தன ஷேத்ரம்
* திருமங்கலகுடி - பஞ்சமங்கள ஷேத்ரம்
* திருவையாறு - பஞ்ச நந்தி ஷேத்ரம்
* திருவிடைமருதூர் - பஞ்சலிங்க ஷேத்ரம்
* திருநீலக்குடி - பஞ்சவில்வாரண்ய ஷேத்ரம்
* திருவிற்கோலம் - நைமிசாரண்ய ஷேத்ரம்
* திருநெல்லிக்கா - பஞ்சாட்சரபுரம்
* காஞ்சி - சத்தியவிரத ஷேத்ரம்
* திருவல்லம் - வில்வாரண்யம்
* திருகண்டியூர் - ஆதிவில்வாரண்யம்
பன்னிரு ஜோதிர்லிங்க தலங்கள்
* கேதாரம் - கேதாரேஸ்வரர் (இமயம்)
* சோமநாதம் - சோமநாதேஸ்வரர் (குஜராத்)
* மகாகாளேசம் - மகா காளேஸ்வரர் (உஜ்ஜையினி)
* விஸ்வநாதம் - விஸ்வநாதேஸ்வரர் (காசி)
* வைத்தியநாதம் - வைத்தியனாதர் (மகாராஷ்டிரம்)
* பீமநாதம் - பீமநாதேஸ்வர் (மகாராஷ்டிரம்)
* நாகேஸ்வரம் - நாகேஸ்வர் (மகாராஷ்டிரம்)
* ஓங்காரேஸ்வரம் - ஓங்காரேஸ்வரர் (மத்தியப்பிரதேசம்)
* த்ரயம்பகம் - திரயம்பகேஸ்வரர் (மகாராஷ்டிரம்)
* குசுமேசம் - குஸ்ருணேஸ்வர் (மகாராஷ்டிரம்)
* மல்லிகார்ஜுனம் - மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம், ஆந்திரா)
* ராமநாதம் - ராமேஸ்வரம் (தமிழ்நாடு)
முக்தி தலங்கள்
* காசி
* காஞ்சி
* மதுராபுரி
* ஹரித்துவார்
* உஜ்ஜையினி
* அயோத்தி
* துவாரகை
பித்ரு கடன் தலங்கள்
* காசி
* கயா
* திருவெண்காடு
* பத்ரிநாத்
* திருக்கோகர்ணம்
* பவானி
* திலதர்ப்பணபுரி
* செதிலப்பதி,
* ராமேஸ்வரம்
* துவாரகாபுரி
* பூம்புகார்
* இடும்பாவனம்
* சங்குமுகேஸ்வரர்
காசிக்கு சமமான தலங்கள்
* திருவெண்காடு
* திருவையாறு
* மயிலாடுதறை
* திருவிடைமருதூர்
* திருச்சாய்காடு
* ஸ்ரீவாஞ்சியம்
* விருத்தாசலம்
* மதுரை
* திருப்புவனம்
சிவ பூஜையில் சிறந்த தலங்கள்
* திருக்குற்றாலம் - திருவனந்தல் பூஜை
* ராமேஸ்வரம் - காலை சந்தி பூஜை
* திருவானைக்கா - உச்சிகால பூஜை
* திருவாரூர் - சாயரட்சை பூஜை
* மதுரை - இராக்கால பூஜை
* சிதம்பரம் - அர்த்தஜாம பூஜை
- மனித உடலை இயக்கும் ஆதாரங்களாக, ஆறு சக்கரங்கள் சொல்லப்படுகின்றன.
- ஆறு ஆதாரங்களுக்கும் உரிய கோவில்களாக 6 சிவாலயங்கள் போற்றப்படுகின்றன.
மனித உடலை இயக்கும் ஆதாரங்களாக, ஆறு சக்கரங்கள் சொல்லப்படுகின்றன. அவை, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவையாகும். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் உரிய கோவில்களாக 6 சிவாலயங்கள் போற்றப்படுகின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.
மூலாதாரம்- முதுகெலும்பு முடியும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆதாரத்திற்கான தலமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் திகழ்கிறது.
சுவாதிஷ்டானம் - தொப்புளின் கீழே அமைந்திருக்கிறது. இந்த ஆதாரத்திற்கான ஆலயமாக, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் போற்றப்படுகிறது.
மணிப்பூரகம்- தொப்புளில் அமைந்துள்ளது. இந்த ஆதாரத்திற்கான கோவிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திகழ்கின்றது.
அநாகதம் - நெஞ்சுப்பகுதியில் அமைந்த சக்கரம் இது. இந்த ஆதாரத்திற்கான ஆலயமாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சொல்லப்படுகிறது.
விசுக்தி- தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சக்கரத்திற்கான ஆலயமாக திருக்காளத்தி காளத்தியப்பர் கோவில் உள்ளது.
ஆக்ஞை- புருவ மையத்தில் இருக்கிறது. இந்த ஆதாரத்திற்கான கோவிலாக சிதம்பரம் நடராஜர் கோவில் இருக்கிறது.
- மாலையில் 6 மணிக்கு பிறகு 8 மணிக்குள் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
- சிவராத்திரியான இன்று சிவனை நினைத்து மனதார உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.
சிவராத்திரியான இன்று சிவனை மனதார நினைத்து வழிபடும்போது அந்த ஈசனின் அருளைப் நம்மால் முழுமையாக பெற முடியும்.
விரத நாட்களில் என்ன வழிமுறைகளை நீங்கள் கடைபிடித்தீர்களா, அதேபோல் இந்த சிவராத்திரி அன்றும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்களால் என்ன நைவேத்தியம் செய்து, இறைவனுக்கு படைக்க முடியுமோ அதை படையல் இட்டு, பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
மாதம்தோறும் வரும் சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சிவராத்திரி அன்று சிவபெருமானை மனதார வழிபடும்போது நோய் நொடியற்ற வாழ்க்கையையும், சுபிட்சமான வாழ்க்கையையும் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். சிவராத்திரியான இன்று சிவனை நினைத்து மனதார உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.
'ஓம் சிவசிவ சங்கரா போற்றி!'
இந்த மந்திரத்தை உச்சரிப்பதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. காலையில் 108 முறை உச்சரிக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பிறகு 8 மணிக்குள் இந்த மந்திரத்தை மீண்டும் ஒரு முறை 108 முறை உச்சரித்து உங்களது சிவராத்திரி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள சுலபமான மந்திரம் இது. நம்பிக்கையோடு உச்சரித்துப் பாருங்கள். வளமான வாழ்க்கையை பெறுங்கள்.
- தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.
- சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.
சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது... சிவராத்திரி. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படும். மாதந்தோறும் சிவராத்திரி வரும். இந்த நாளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு. அதேபோல், விரதம் இருக்கிறார்களோ இல்லையோ... அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று தென்னாடுடைய சிவனை வழிபடுவார்கள் பக்தர்கள்.
மாத சிவராத்திரியில் விரதம் இருந்து சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபடுங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் சிவபெருமான்.
மாத சிவராத்திரி நாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.
சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். பிரதோஷமும் சிவனாருக்கு உகந்த நாள். சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக் கூடியது.
- சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
- சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் விடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
* திருவேள்விக்குடி - கவுதுகாபந்தன ஷேத்ரம்
* திருமங்கலகுடி - பஞ்சமங்கள ஷேத்ரம்
* திருவையாறு - பஞ்ச நந்தி ஷேத்ரம்
* திருவிடைமருதூர் - பஞ்சலிங்க ஷேத்ரம்
* திருநீலக்குடி - பஞ்சவில்வாரண்ய ஷேத்ரம்
* திருவிற்கோலம் - நைமிசாரண்ய ஷேத்ரம்
* திருநெல்லிக்கா - பஞ்சாட்சரபுரம்
* காஞ்சி - சத்தியவிரத ஷேத்ரம்
* திருவல்லம் - வில்வாரண்யம்
* திருகண்டியூர் - ஆதிவில்வாரண்யம்
- சிவன் ஆலயத்தில் பொதுவாக சில சன்னிதிகளோடு சேர்த்து மொத்தம் 25 பகுதிகள் இருக்க வேண்டும் என்பது விதி.
- அந்த 25 இடங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
1. இறைவன் வீற்றிருக்கும் கருவறை (மூலஸ்தானம்)
2. சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் இடம் (அர்த்த மண்டபம்)
3. பக்தர்கள் தரிசனத்திற்காக நிற்கும் இடம் (மகா மண்டபம்)
4. சண்டிகேஸ்வரர் சன்னிதி
5. அம்பாள் மூலஸ்தானம்
6. கலை நிகழ்ச்சி நடத்தும் இடம் (நிருத்த மண்டபம்)
7. பள்ளியறை
8. நடராஜர் சன்னிதி
9. கொடிமரம் இருக்கும் இடம் (துவஸதம்ப மண்டபம்)
10. இறைவனுக்கான நைவேத்தியம் தயாரிக்கும் இடம் (மடப்பள்ளி)
11. நால்வர் சன்னிதி (சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்)
12.பசு பராமரிக்கும் இடம் (கோசாலை)
13. அம்பாள் சன்னிதி
14. சந்தான குரவர் சன்னிதி
15. விழாக்கால சப்பரம் வைக்கும் இடம் (வாகன சாலை)
16. விநாயகர் சன்னிதி
17. முருகன் சன்னிதி
18. வசந்த மண்டபம்
19. பைரவர் சன்னிதி
20. சூரியன் சன்னிதி
21. சந்திரன் சன்னிதி
22. ராஜகோபுரம் அல்லது நுழைவு வாசல்
23. அபிஷேகத் தீர்த்தக் கிணறு அல்லது தெப்பக் குளம்
24. நைவேத்தியத்திற்காக நீர் எடுக்கும் இடம்
(மடப்பள்ளிக் கிணறு)
25. தட்சிணாமூர்த்தி சன்னிதி
இவைத் தவிர பெரிய ஆலயங்களில், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் சன்னிதி, யாக சாலை, ஆகம நூலகம் போன்றவையும் இடம்பெற்றிருக்கும்.
- 27 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது.
- 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம்.
மனித வாழ்வில் ராசிகளும், நட்சத்திரங்களும் பல மாறுதல்களையும், வளங்களையும், இன்ப- துன்பங்களையும் வழங்குவதாக, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த பூமியில் பிறந்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் ஒரு நட்சத்திரத்திலேயே பிறந்திருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் 27 நட்சத்திரக்காரர்களும், தங்களின் நட்சத்திரங்களுக்கான தெய்வங்களை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும்.
27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். அந்த வகையில் இங்கே 27 நட்சத்திரங்களுக்காக சிவ வடிவங்கள் தரப்பட்டுள்ளது. அவற்றைப் பார்க்கலாம்.
* அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்
* பரணி - சக்தியுடன் இருக்கும் சிவன்
* கார்த்திகை - சிவபெருமான்
* ரோகிணி - பிறை சூடிய பெருமான்
* மிருகசீரிஷம் - முருகனுடன் இருக்கும் சிவன்
* திருவாதிரை - நாகம் குடைபிடிக்கும் சிவன்
* புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
* பூசம் - நஞ்சுண்ணும் சிவன்
* ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்
* மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்
* பூரம் - அர்த்தநாரீஸ்வரர்
* உத்ரம் - நடராஜ பெருமான்
* ஹஸ்தம் - தியான கோல சிவன்
* சித்திரை - பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்
* சுவாதி - சகஸ்ரலிங்கம்
* விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்
* அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்
* கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்
* மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
* பூராடம் - சிவ-சக்தி-கணபதி
* உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன் இருக்கும் சிவன்
* திருவோணம் - விநாயகருடன், பிறைசூடிய சிவன்
* அவிட்டம் - மணக்கோலத்தில் உள்ள சிவன்
* சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன் வீற்றிருக்கும் சிவன்
* பூராட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும்,
சக்தியை அருகிலும் வைத்திருக்கும் சிவன்
* உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
* ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்
- சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் திருவண்ணாமலை புனிதமானதாக கருதப்படுகிறது.
- பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்புக்குரியது.
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலம் என்று போற்றப்படுவது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில். விஷ்ணுவும், பிரம்மாவும் 'யார் பெரியவர்?' என்று சர்ச்சையில் ஈடுபட்டபோது, அவர்கள் இருவரும் அடிமுடி காண முடியாதபடி ஜோதி வடிவாக உயர்ந்து நின்றார், சிவபெருமான். அந்த சிறப்புக்குரிய தலம் இது.
பஞ்சபூதத் தலங்களில் இது அக்னித் தலமாக விளங்குகிறது. அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை, அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
'அண்ணுதல்' என்பதற்கு 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணா' என்பது, 'நெருங்க முடியாத' என்ற பொருளைத் தரும். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலையாக நின்றதால், இத்தலம் 'அண்ணாமலை' என்று பெயர் பெற்றது.
இத்தல கிளி கோபுரத்தின் கீழ் இட பக்கம் ஒரு விநாயகர் சன்னிதி உள்ளது. இவருக்கு 'அல்லல் தீர்க்கும் விநாயகர்' என்று பெயர். முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் உள்ள ஆறு படைவீடுகளில், இது முதல் படைவீடாகும்.
கிரிவலப்பாதையின் எட்டு திசைகளுக்கும் எட்டு லிங்கங்கள் இருக்கின்றன. இதனை அஷ்டலிங்கங்கள் என்கிறோம். அவை, இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம் ஆகியவை ஆகும்.
இங்குள்ள இறைவன், 'அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்' என்றும், அம்பாள் 'உண்ணாமுலையம்மன், அபிதகுஜாம்பாள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது 'அருணை சக்தி பீட'மாக விளங்குகிறது.
25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரமாண்ட ஆலயம் இது. இதில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னிதிகள், 306 மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை அடங்கியிருக்கின்றன.
அண்ணாமலையார் ஆலயத்தின் தற்போதைய முழுமையான கட்டிட அமைப்புகள் அனைத்தும் கட்டி முடிக்க, சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பதாக கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
* கயிலாய மலையில் சிவபெருமான் வீற்றிருப்பதால் அது புனிதமானது. அதே போல் சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் திருவண்ணாமலையும் புனிதமானதாக கருதப்படுகிறது.
* இந்த மலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளதாக புராணம் சொல்கிறது.
* பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்புக்குரியது. கிரிவலம் வரும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பலன் கிடைப்பதாக ஐதீகம். சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்வதாக கருதப்படும் இங்கு, கிரிவலப் பாதையை சித்தர்களும் வலம் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
* கார்த்திகை தீபத் திருநாள் அன்று, 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், தீபம் ஏற்றப்படுகிறது. 7½ அடி உயரம் கொண்ட கொப்பரையில், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 3 ஆயிரம் கிலோ பசுநெய், 2 கிலோ கற்பூரம் சேர்த்து இந்த தீபம் ஏற்றப்படும். தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.
- சிவன் வழிபாட்டுக்கும் சோமவாரம் விரதம் இருப்பது மிக நல்லது.
- சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் ஏழு ஜென்ம பாவங்களும் தீரும்.
இந்துக்களின் கடவுள் வழிபாடு ஆன்மிகத்தை மட்டுமல்லாமல், அறிவியலையும் அடிப்படையாக கொண்டு வழிபாட்டு முறையைக் கொண்டது.
திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள். கூடவே திங்கட்கிழமையை சோமவாரம் என்கிறோம். சிவன் வழிபாட்டுக்கும் சோமவாரம் விரதம் இருப்பது மிக நல்லது.
சிவன் எப்படி சோமன் ஆனார் தெரியுமா? சோமன் என்று பெயர் சிவனுக்கு உரியது. சந்திரனை முடிசூடிக் கொண்டவர் சிவன். அப்படி சந்திரனை முடிசூடிக் கொண்ட சிவன், சேலத்தில் உள்ள ஶ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் இருக்கிறார். சர்வலோக நாயகி சமேத சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர். இந்த பெயர் உலகத்தில் எந்த சிவனுக்கும் கிடையாது. இந்த ஆசிரமத்தில் உள்ள சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர் பீடத்தில் 12 ராசிகளை அமைத்து அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இவர் எமதர்மரின் திசையான தெற்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார். இந்த சிவனை வழிபட்டால் எமபயம் நீங்கும். இதய சம்பந்தபட்ட நோய் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் விரைவில் குணமடைவார்கள். அதனால் அன்று சிவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வங்கள் கிடைக்கும் திருமணம் விரைவில் நடைபெறும். வழங்குகளில் வெற்றி, வியாபாரம் அபிவிருத்தி அடைவார்கள்.
சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் ஏழு ஜென்ம பாவங்களும் தீரும். 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும், 1000 பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். கோடி தானம் செய்த பலன் கிடைக்கும். காசியில் குடியேறி வாழ்ந்த பலன் கிடைக்கும். பாடசாலைகள் அமைத்த பலன் கிடைக்கும்.வேள்விகள் செய்த பலன் கிடைக்கும். ஸ்வர்ண (தங்கம்) தானம் செய்த பலன் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் கோடி புண்ணியம் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் சிவலோகத்தை அடையும்.
திங்களன்று ஆகாரம் ஏதுமின்றி உபவாசம் இருந்து சர்வ தோஷ நிவர்த்தீஷ்வரரை கிரிவலம் வந்தால் நீங்கள் மனதில் எண்ணிய காரியம் நிச்சயம் நிறைவேறும்.
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட்டார்க்கே.
விளக்கம்:-
சிவபெருமானின் திருவடியை இறுக்கமாக பிடித்திருக்கும், உண்மையான பக்தர்களின் உள்ளம் எதற்கும் அஞ்சுவது கிடையாது. எமதர்மன் கூட அவர்களை ஒன்றும் செய்ய மாட்டான். துன்பமும், இரவும், பகலும் சிவனருள் பெற்றவர்களுக்கு இல்லை. இனி அடைய வேண்டும் என்ற எந்த பயன்களும் அவர்களுக்கு இருக்காது. பற்றுவிட்ட ஞானிகள், அனைத்தையும் பெற்றவராக இருப்பர்.
பாடல்:-
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.
விளக்கம்:-
உலக வாழ்வில் தீய நெறிகளில் சென்று, அதனால் துன்பங்களைப் பெற்று அழுகின்றவர்களானாலும், தன் பண்புகளில் இருந்து நீங்கியவர்களானாலும், அவர்கள் அனைவரும் கடவுளை நினைத்து அருந்தவ நெறியில் ஈடுபடத் தொடங்கினால், இறைவனும் அவர்கள் வருந்தாத வண்ணம், அவர்களுடைய துன்பங்களை நீக்கி பாதுகாத்து, மீண்டும் பிறவி ஏற்படாதவாறு பெருந்தன்மையோடு அருள் செய்வான்.
பாடல்:-
கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல் சேரப்பெற்றேன் நெடுமால் அறியா
அழல் சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல் சேரும் இன்னுயிர்க் கூடும் குலைத்ததே.
விளக்கம்:-
இறைவனின் தாமரைத் திருவடி நிழலில் சேர்ந்தேன். அதன் காரணமாக, திருமாலால் அறிய முடியாதபடிக்கு நெருப்பு வடிவமாக உயர்ந்து நின்ற அந்தச் சிவபெருமான், தன்னுடைய உடலில் பாதியைக் கொண்டிருக்கும் அம்பாளோடு சேர்ந்து வந்து, எனக்கு அருள் செய்தான். எனவே இனி இந்த உடம்பு, பிறவி எடுக்கும் நிலையில் இருந்து நீங்கிவிட்டது.
பாடல்:-
அறிந்து உணர்ந்தேன் இவ்வகலிடம் முற்றும்
செறிந்து உணர்ந்து ஓதித் திருவருள் பெற்றேன்
மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இப்பிறவியை நானே.
விளக்கம்:-
இறைவனின் அருளால், இந்த உலகத்தின் உண்மை முழுவதும் அறிந்தேன். இறையருளோடு நன்றி உணர்ந்து, இறைவனின் திருப்பெயரை ஓதி, அவனது அன்புக்கு இலக்கானேன். இறையருளை நினைக்காத அறிவற்றவர்களின் வாழ்வை நான் மறந்தேன். அதனால் இந்தப் பிறவித் துயர் தொடராத வகையில் அந்தப் பிணைப்பில் இருந்து நீங்கப்பெற்றேன்.