என் மலர்
நீங்கள் தேடியது "Maha Shivratri"
- சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.
- சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு.
சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.
1. நித்திய சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.
2. பட்ச சிவராத்திரி:
தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.
3. மாத சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.
4. யோக சிவராத்திரி:
சோமவார நாளன்று (திங்கட்கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.
5. மகா சிவராத்திரி:
பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.
எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.
5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும்.
மகா சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், கந்தபுராணம், பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன. சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
- திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர்.
- அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கேடிக வாகனங்களில் திரிசூலத்துடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆதி தம்பதியர்களுக்கு நடந்த சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து ஜல விநாயகர் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் பிரதான அர்ச்சகர்கள் தலைமையில் வேத பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர். அப்போது உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வசந்த உற்சவத்தை நடத்தினர்.
மேலும் கோவில் வளாகத்தில் உள்ள திருமஞ்சன கோபுரம் அருகில் சூரிய புஷ்கரணியில் இருந்து புனித நீரை எடுத்து திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர். அப்போது கோவிலின் பிரதான அர்ச்சகர் தலைமையில் அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. இரவு சிம்மாசனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அர்ச்சகரிடம் பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
- இன்று சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறங்காவலர் குழு தலைவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்த அவர்களை, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு ஆகியோர் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
ஊர்வலம் தொடங்கும் முன் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள தேவாங்குல மண்டபத்தில் அர்ச்சகர்கள் ஏ.வி.தர்மாரெட்டிக்கு தலைப்பாகை கட்டி, தலையில் ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரங்களை வைத்தனர். ஊர்வலமாக சென்ற அவர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அர்ச்சகரிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர். அவர்களுக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
- சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர்.
- நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேேராட்டம் நடந்தது.
இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சிவன்-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க பெரிய தேரில் கங்காபவானி சமேத சோமசுந்தரமூர்த்தியும் சிறிய தேரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளினர்.
தேரோட்டத்தை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன்ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவிலின் நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில்காலை 11.30 மணியில் இருந்து மாலை 3.30 மணிவரை தேர்கள் பவனி வந்தன. தேரோட்டத்தின்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா, ஜெய் ஜெய் காளி ஜெய் பத்ர காளி எனப் பக்தி கோஷம் எழுப்பினர்.
தேர்களுக்கு முன்னால் கேரள செண்டைமேளம், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர். பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டமும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
தேரோட்டத்தின்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் உப்பு, மிளகினை தேர்கள் மீது வீசி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நிறைவாக இரவு நிகழ்ச்சியாக 8 மணியளவில் நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது. தெப்பத்தேரில் எழுந்தருளிய உற்சவர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்பு நடந்தது
- மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடு
திருவண்ணாமலை:
மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ் வரம், தவில் இசை சங்கம் சார்பில் 41-ம் ஆண்டு இசை விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நேற்று நடைபெற்றது.
சங்கத்தின் தலைவரான நாதஸ் வர கலைமாமணி பிச்சாண்டி தலை மையில் 108 நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்களின் இசை விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இசை விழா, 24 மணி நேரம் நடைபெற்று இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
கவுரவத் தலைவர் பூபாலன், செயலாளர் ஏழுமலை, துணை கவுரவத் தலைவர் முருகேசன், துணை செயலாளர் கார்த்திகேயன், இணை தலைவர் பாலகணேசன் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று, மங்கல இசை மற்றும் பல்வேறு ராகங்களில் வாசித்தனர். மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இசை விழாவை, அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- விடிய விடிய ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீபராதனை நடந்தது
திருவண்ணாமலை:
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருமால் மற்றும் பிரம்மன் ஆகிய இருவரில் யார் பெரியவர் என போட்டி வந்த போது, நான் என்ற அகந்தை அடங்கினாலன்றி சிவ பரம்பொருளை காண முடியாது என்ற உண்மையை உலகிற்கும், திருமால் மற்றும் பிரம்மனுக்கு உணர்த்தும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவபொருமான் கூறினார்.
திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியை குடைந்து சென்றும், பிரம்மன் அன்னபட்சியாக உருவெடுத்து முடியைக்காணவும் உயரப்பறந்து சென்றார்.
இருவரும் பல யூகங்களாக தேடியும் அடியையும், முடியையும் காண முடியாமல் தோல்வி அடைந்ததுடன் திருமால் தனது தவறை உணர்ந்து சிவனிடம் சென்று வழிபட்டார்.
பிரம்மன் மேலும் பல யுகங்களாக சென்று முடியை காண முடியாத சூழலில் மேலிருந்து கீழே வந்த தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்தார்.
இதனையறிந்த சிவபெருமான் நெருப்பு பிழம்பாக லிங்க வடிவாய் வெளியே வந்து அனைத்து தேவர்களுக்கும் நல்லாசி வழங்கியதுடன் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லை என்றும், பொய்சாட்சி கூறிய தாழம்பூ பூஜைக்குப் பயன்படாது என்று சாபம் அளித்து லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சியளித்தார். இந்த மகா சிவராத்திரி உருவான இடம் திருவண்ணாமலையாகும்.
மகா சிவராத்தியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதி பின்புறம் மேற்குத் திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு நள்ளிரவில் 12 மணிக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லிங்கோத்பவரை தரிசனம் செய்து வழிபட்டனர்.
அதிகாலை வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- மகா சிவராத்திரியை முன்னிட்டு நீலகண்ட ஈஸ்வரன் அவதாரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார்.
- மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-மதுரை ரோட்டில் வரலாற்று சிறப்பு மிக்க பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி ஆலய வளாகத்தில் ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு மகாசிவராத்திரியையொட்டி அஷ்ட வரத ஆஞ்சநேயரின் விருப்பத்திற்கு இணங்க அவருடைய தோற்றத்தை சிவபெ ருமானுக்கே அர்ப்பணித்துக் கொண்டு சிவனாகவே காட்சியளித்த நீலகண்ட ஈஸ்வரனின் அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு முழுவதும் சிவலாயங்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு சிவன் அவதாரத்தில் சிவராத்திரி பூஜைகள் விடியவிடிய நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சோழவந்தான் பகுதியில் மகா சிவராத்திரி விழா வழிபாடு நடந்தது.
- இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் சப்பாணி கோவில் தெருவில் உள்ள சப்பாணி கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா சிவராத்திரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் முதல் வாரம் காப்பு கட்டி, விரதம் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் மகாசிவ ராத்திரி அன்று வைகை ஆற்றுக்கு சென்று சாமி பெட்டியுடன் கரகம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. வைத்தியநாதபுரம் அம்மன் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் வயல்காட்டுக்கு சென்று சாமி பெட்டி எடுத்து கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர்.
புட்டு விநாயகர் கோவிலில் 4 கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. திரவுபதி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடைபெற்றது. இங்குள்ள கருப்பசாமிக்கு 12 வாசனை பொருட்களை கொண்டு அபிஷே கம், சிறப்பு பூஜை கள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரளய நாத சுவாமி கோவிலிலும் 4 கால பூஜை நடைபெற்றது. இதில் எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளியம்மாள், தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு பிரசாதப்பை வழங்கினர்.
மேலரதவீதி அங்காள பரமேஸ்வரி சமேத வாலகுரு நாதன் கோவில், வைகை ஆற்றங்கரையில் உள்ள சாலை கருப்பண்ணசாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் திருவேடகம் ஏடகநாதர் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், முதலைக் குளம் கம்ப காமாட்சி அம்மன் கருப்புசாமி கோவில், விக்கிரமங்கலம் கருப்பு கோவில், காடுபட்டி கோவில் வயக்காட்டு கருப்புசாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
- இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ள்பட பல்வேறு துறை பிரபாங்கள் பங்கேற்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஈஷா மையத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முன்னதாக ஈஷாவுக்கு வந்தவுடன் தீர்த்த குளத்தை பார்வையிட்ட திரவுபதி முர்மு, அங்கு கால் நனைத்து, தியான பீடத்தில் வழிபட்டார். ஆதியோகி சிலை முன்பு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மகா சிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் சிவன் கோவில்களில் நடை திறந்திருந்தது. இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்ததால் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சிவராத்திரியையொட்டி நாள் முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டனர்.
- மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- சிவன் கோவிலில் விடிய விடிய கண்விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்களிலும் நடைபெறும்.
சேலம்:
மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிகாலை குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். சிவன் கோவிலில் விடிய விடிய கண் விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்க ளிலும் நடைபெறும்.
மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த 3 ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும்.
மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்தி ருக்கும். வழக்கமாக அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடிய விடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.
முதல் காலத்தில் பிரம்மன் சிவனை பூஜிப்ப தாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும். கடன் தொல்லை நீங்கும்.
2-ம் காலத்தில் பெருமாள் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். அப்போது சிவனை வழிபட வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, 2-ம் கால பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. சகல பாவங்களும் நீங்கும்.
3-ம் காலத்தில் பூஜையை அம்பிகையே செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை 'லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இந்த காலத்தில் வழிபாடு செய்தால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது. சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.
4-ம் காலத்தில் தேவர்க ளும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்க ளும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்ப தாக ஐதீகம். இவனால் இறைவன் சங்கடங்கள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை மகா பிரதோஷ நாளில் வருவது இன்னும் சிறப்பு. வழக்கமாகவே மகா சிவ
ராத்திரியின்போது சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று சனி பிரதோஷமும் சேர்ந்து வருவதால் சிவாலயங்கள் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம், நாமக்கல் மாவட்ட சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை சிவ வழிபாடு நடக்கிறது. இதையொட்டி பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவுகளும் பக்தி இசையும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சுகவனே சுவரர் கோவிலில் நடை பெறும் பூஜை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் யு-டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாரமங்கலம் கைலாச நாதர், நங்கவள்ளி சோமேஸ்வரர், உத்தமசோழ புரம், கரபுரநாதர் கோவிலில் இன்று (சனிக்கி ழமை) பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலை 5 மணிக்கு மேல் பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால், தேன், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து மகா சிவராத்திரி விழா தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர். அம்மாப்பேட்டை மாதேஸ்வ ரர் கோயில், அமரகுந்தி சொக்கநாதர் கோயில், அரசிராமணி சோளீஸ்வரர் கோயில், ஆத்தூர் காய நிர்மலேசுவரர் கோயில், பேரூர் பசுபதீசுவரர் கோயில், ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்திஸ்வரர் கோயில், கருப்பூர் கைலசநாதர் கோயில், கொங்கணாபுரம் உலகேஸ்வர சுவாமி கோயில், சுக்கம்பட்டி உதய தேவரீஸ்வரர் கோவில்,
கோனேரிப்பட்டி அனந்தஈஸ்வரர் கோயில், பாலமலை சித்தேஸ்வரர் கோயில், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயில், பெரிய சோரகை பரமேஸ்வரன்சுவாமி கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், மேட்டூர் அணை மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்கள், நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டாபுரம் காசிவிஸ்வநாதர் கோயில், ஆனங்கூர் சக்தீஸ்வரர் கோயில், கூடச்சேரி சோழீஸ்வ
ரர் சுவாமி கோயில், கொல்லி மலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொளங்கொண்டை சீர்காழிநாதர் கோயில், திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு கைலாசநா தர் கோயில், பரமத்தி வேலூர் பீமேஸ்வரர் கோயில் பள்ளிபாளையம் அக்ரஹரம் விஸ்வேஸ்வ ரர்சுவாமி கோயில், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வ நாதர் கோயில், ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், பில்லூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வெண்ணந்தூர் தீர்த்த கீரீஸ்வரர் கோயில், வையப்பமலை இடும்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களி லும் இன்று சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது.