search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு
    X

    மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு

    • மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
    • அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்று அம்மன்-சுந்த ரேஸ்வரருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை வருகிற 18-ந் தேதி மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலுக்குள் தரிசனத்திற்காக அனுமதிக் கப்படுவார்கள்.

    இதேபோல் இம்மை யிலும் நன்மை தருவார் கோவில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்பு டையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், பேச்சியம்மன் படித்துறை, காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேஸ்வரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈஸ்வரர் கோவில், உள்பட பல சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    Next Story
    ×