search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajnath Singh"

    • ராஜ்நாத் சிங்குக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது.
    • ராஜ்நாத் சிங் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை ஊடகப்பிரிவு பொறுப்பாளர் டாக்டர் ரிமா டாடா கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு (வயது 73) நேற்று அதிகாலையில் கடுமையான முதுகு வலி ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அவர் டாக்டர் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை ஊடகப்பிரிவு பொறுப்பாளர் டாக்டர் ரிமா டாடா கூறியுள்ளார்.

    ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை.
    • உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில்,

    "ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், ராணுவத்தில் உயிரிழந்த அக்னிவீரர் அஜய் குமார் குடும்பத்திற்கு மத்திய அரசு தற்போது வரை எந்தவொரு இழப்பீடும் வழங்கவில்லை. தனியார் வங்கியில் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணமும் ராணுவ குரூப் இன்சூரன்ஸ் நிதியில் இருந்து ரூ.48 லட்சமும் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது.

    அஜய்குமாரின் சம்பள பாக்கியை இன்னமும் ஏன் அவரது வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை என கேள்வியெழுப்பிய அவர், இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீட்டிற்கும் இன்சூரன்ஸ் பணத்திற்கும் வேறுபாடு உள்ளது. உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.

    நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் குடும்பத்தை நாம் மதிக்க வேண்டும். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது. இது ஒரு தேசிய பிரச்சனை இதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.

    நம் நாட்டில் ராணுவ வீரர் அக்னிவீரர் இருவரும் உயிர் தியாகம் செய்கிறார்கள். ஆனால் ராணுவ வீரருக்கு தியாகி பட்டம் கிடைக்கிறது. அக்னீவீரருக்கு தியாகி பட்டம் கிடைப்பதில்லை. ஒருவருக்கு பென்ஷன் கிடைக்கிறது. இன்னொருவருக்கு கிடைப்பதில்லை. நாட்டிற்காக யார் தியாகம் செய்தாலும் அவரை நாம் மதிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய அஜய்குமாரின் தந்தை, மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ், கேன்டீன் கார்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பிரதமர் மோடியின் தலைமையில் மேக் இன் இந்தியா திட்டம் ஆண்டுக்கு ஆண்டு புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.
    • 2023-24ல் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2023-24 ஆம் ஆண்டில் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பில் நாடு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் மேக் இன் இந்தியா திட்டம் புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.

    உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை வளர்ப்பதற்கு உகந்த ஆட்சியை உருவாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

    பிரதமர் மோடியின் தலைமையில் மேக் இன் இந்தியா திட்டம் ஆண்டுக்கு ஆண்டு புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.

    2023-24ல் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உற்பத்தியின் மதிப்பு 2023-24-ல் ரூ.1,26,887 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் உற்பத்தி மதிப்பை விட 16.8 சதவீதம் அதிகமாகும்.

    பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறை உட்பட இந்திய தொழில்துறைக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


    • ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
    • பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

    "ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.

    ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில் பேசியுள்ள அஜய் சிங்கின் தந்தை, "அக்னிவீரர் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ராணுவத்தில் வழக்கமான முறையில் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. நள்ளிரவு முதலே வெற்றிக் கொண்டாட்டங்கள் கலை கட்டிவரும் நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய அணி வீரர்களுக்கு மோடி வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், 'ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பாக இந்த பிரமாண்ட வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த நாள் உங்களில் அபாரமான ஆட்டத்தால் 1.40 கோடி இந்தியர்களை பெருமைப்பட வைத்துளீர்கள். உலகக்கோப்பையை வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்திய கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மக்களின் மனதையும் நீங்கள் வென்றுளீர்கள். இந்த சிறப்பான தருணம் என்றும் நினைவுகூறப்டும். இது சாதாரணமான விஷயம் அல்ல. ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறியுளீர்கள். எனது சார்பாக உங்களுக்கு அளப்பரிய வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை இந்திய வீரர்களுக்கு தொலைபேசியிலும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மோடி.

    இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்துச் செய்தியில், 'டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான சூழல்களில் தளராத மன உறுதியுடன் ஆட்டம் முழுதும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இது ஒரு சிறந்த வெற்றி' என்று தெரிவித்துள்ளார்.

    எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில், 'இந்திய அணி தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. சூர்யா, என்ன ஒரு அருமையான கேட்ச், ரோகித், இது உங்கள் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி, ராகுல், இனி உங்களின் வழிகாட்டுதலை இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்யும், மென் இன் ப்ளூ [இந்திய வீரர்கள்] நீங்கள் நாட்டை பெருமையடைய செய்துள்ளீர்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடருடன் டி20 யில் ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கும் நீங்கள் வாழ்த்து தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்த்து செய்தியில், 'இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள், குறிப்பாக விராட் கோலி, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங் தனித்துவமாக விளையாடினார்கள். ஒவ்வொரு இந்தியனும் இந்த வெற்றியை நினைத்து பெருமைப் படுகின்றனர். உங்களின் சாதனைகள் என்றென்றும் கொண்டாடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்து செய்தியில், 'இந்தியாவுக்கு ஒரு சிறப்பான தருணம் இது, தொடர் முழுவதும் அணி வீரர்கள் குழுவாக தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தேசம் உங்களின் இந்த வரலாற்று வெற்றியால் பூரிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்து செய்தியில், 'இந்த வெற்றி வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். மொத்த நாடும் இந்த வெற்றியால் உச்சத்துக்கு சென்றுள்ளது. அணி வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ , தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

    • பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்று ‘ஹாட்ரிக்’ சாதனை.
    • மூத்தவர்கள் மந்திரிகளாகி இருப்பதால் தேசிய தலைவர் பதவி யாருக்கு?

    புதுடெல்லி:

    நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

    பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்று 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார். அவரோடு 71 மந்திரிகளும் பதவியேற்று உள்ளனர்.

    பதவியேற்ற மந்திரிகளில் பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் இடம் பெற்று உள்ளனர். ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மட்டுமல்லாது கட்சியின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவும் மந்திரியாகி உள்ளார். அது மட்டுமல்ல, கட்சியின் அடுத்த தலைமை முகமாக பார்க்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பூபேந்திர யாதவ், சி.ஆர்.பாட்டீல் ஆகிய முன்னணி தலைவர்களும் மந்திரிகளாகி விட்டனர்.

    பா,ஜனதாவைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்கிற சூத்திரமே பொதுவாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் ஜே.பி.நட்டாவிடம் இருந்து கட்சியின் தேசிய தலைவர் பதவி மாற்றப்படும் என தெரிகிறது. ஏற்கனவே அவரது தலைவர் பதவிக்காலம் முடிவடைந்துதான் இருந்தது. தேர்தலுக்காக நீட்டித்துக் கொடுத்திருந்தனர்.

    இதனால் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டியது அவசியமாகி இருக்கிறது. புதிதாக யாரை நியமிப்பார்கள்? என கேள்வி எழுந்திருக்கிறது. இருக்கிற மூத்தவர்கள் அனைவரும் மந்திரிகளாகி இருப்பதால் தேசிய தலைவர் பதவி யாருக்கு போகும்? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போதுள்ள நிலையில் முக்கியமான சிலரை கட்சியின் டெல்லி வட்டாரங்கள் குறிப்பிட்டன. அதில் சுனில் பன்சால், வினோத் தாவ்டே, அனுராக்சிங் தாக்குர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

     சுனில் பன்சால்

    சுனில் பன்சால் கட்சியின் வேகமான செயல்வீரராக பார்க்கப்படுகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவருக்கு 54 வயது ஆகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த இவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பொதுச்செயலாளர் ஆக்கியதுடன் மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும் ஆக்கினர். இவருக்கு தலைவர் பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.


    வினோத் தாவ்டே

    இவருக்கு ஈடாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டேயும் பார்க்கப்படுகிறார். வினோத் தாவ்டே மராட்டியத்தைச் சேர்ந்தவர். 60 வயது ஆகிறது.

    பொதுத்தேர்தல்களில் மக்களை கவரும் யுக்திகளை அமைப்பதில் வல்லவர் என கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் இறுதியில் மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. மராட்டியத்தை பா.ஜனதா தீவிரமாக பார்ப்பதால் இவருக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    அனுராக்சிங் தாக்குர்

    இதற்கு அடுத்தபடியாக அனுராக்சிங் தாக்குர் பேசப்படுகிறார். இமாசலபிரதேச முன்னாள் முதல்-மந்திரியின் மகனான இவர் அங்குள்ள ஹமிர்புர் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று எம்.பி. ஆனவர். ஏற்கனவே மத்திய மந்திரி ஆனவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.

    இமாசலபிரதேசத்தைச் சேர்ந்த ஜே.பி.நட்டாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளதால் இவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.


    ஓம் பிர்லா

    தலைவர் போட்டியில் இருக்கும் மற்றொருவர் ஓம் பிர்லா. 17-வது மக்களவையை நடத்திய சபாநாயகர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மந்திரிசபையில் பொறுப்பேற்கவில்லை. எனவே தேசிய தலைவராக வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த 4 பேரில் யாராவது ஒருவருக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தாலும், பா.ஜனதாவைப் பொறுத்தவரை யாருமே யூகிக்காத ஒருவரை பிரகடனப்படுத்தி ஆச்சரியப்பட வைப்பதையும் ஒரு பாணியாக வைத்துள்ளது என்பதையும் மறக்க வேண்டாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
    • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியும் என்டிஏ கூட்டணியின் பாஜக கட்சியும் ஒன்றை ஒன்று கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் வாக்கு ஜிகாத்தில் ஈடுபடுகிறது என்று பாஜக குற்றம்சாட்டிவரும் நிலையல்ல பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் பேசுகையில், 1976 ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் மாற்றம் செய்யப்பட்டது. அதை இந்திரா காந்திதான் செய்தார்.

     

    ஆனால் இப்போது தேவையில்லாமல், பாஜக அரசியலமைப்பை மாற்றும் என்று இதை தேர்தல் பிரச்சனையாக்க காங்கிரஸ் முயல்கிறது என்று கூறினார். முன்னதாக கடந்த 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் 'சோசியலிச' 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு 'தேசத்தின் ஒற்றுமை' என்ற வாக்கியம், 'தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பாஜக ஒழிந்துவிடும் என்ற காங்கிரஸின் விமர்சனம் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், இட ஒதுக்கீட்டை ஏன் ஒழிக்கப்போகிறோம்? ஓபிசி,எஸ்.சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு தேவை, ஆனால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று தெரிவித்தார். 

    • சமாஜ்வாடி, காங்கிரஸ், பிஎஸ்பி மக்களை ஏமாற்றியுள்ளது.
    • 10 ஆண்டுளுக்குப் பிறகு மக்கள் சமாஜ்வாடி கட்சியை மறந்துவிடுவார்கள்.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியும், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

    மோடிக்கு 400-க்கும் அதிகமான இடங்களை வழங்கி, மீண்டும் மத்தியில் ஆட்சியை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள் அவர்கள் மனதில் உருவாக்கிவிட்டனர். உத்தர பிரதேசத்தில் நாங்கள் 80 இடங்களிலும் வெற்றி பெறுவோம். இது என்னுடைய நம்பிக்கை.

    சமாஜ்வாடி, காங்கிரஸ், பிஎஸ்பி மக்களை ஏமாற்றியுள்ளது. அவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. மக்கள் தற்போது சமாஜ்வாடி கட்சியை சமாப்த் (samapt- முடிந்தது) கட்சி (முடிந்து போன கட்சி) என சொல்கிறா்ரகள். 10 ஆண்டுளுக்குப் பிறகு மக்கள் சமாஜ்வாடி கட்சியை மறந்துவிடுவார்கள்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது.
    • அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 6 மணி முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா் - ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா 1 தொகுதி இதில் அடக்கம். அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சுனில் செட்டி, பார்ஹான் அக்தர், பரேஷ் ராவல், தர்மேந்திரா நடிகை ஜான்வி கபூர், ஹேம மாலினி உள்ளிட்டோர் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

    மேலும் மும்பை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக காலம் காணும்மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் களம் காணும் ஸ்மிரிதி இரானி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி ஆகியோர் அவரவர் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர். 

    • 5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளன.

    5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய வி.ஜ.பி. வேட்பாளர்களும் அடங்குவர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் 5-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

    மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், ஸ்மிரிதி இரானி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோரும் முக்கியமானவர்கள்.

    ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.

    உத்தர பிரதேசத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதியை சேர்ந்த ரவிதாஸ் மெஹ்ரோத்ரா போட்டியிடுகிறார்.

    பிஹாரின் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஷிவ் சந்திர ராம் களத்தில் உள்ளார். பிஹாரின் சரன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா களமிறங்கி உள்ளார்.

    நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் உள்ள 174 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 13-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    வாட்டர் கூலர்கள், மின்விசிறிகள், கூடாரங்கள் போன்றவற்றை பொருத்தி வாக்காளர்களை கடும் வெப்பம் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட வக்குச்சாவடிகளில் 60 ஆயிரத்துக்கும் க்கும் மேற்பட்ட மத்தியப் படை வீரர்களையும், 30 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இதை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலும் நடைபெறுகின்றன. 7 கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    • இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.
    • பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2027-ம் ஆண்டுக்குள் உலக அளவில் இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். அண்டை நாட்டை பற்றி ஒரு போதும் சாதகமாக பேசாத பாகிஸ்தான் தற்போது இந்தியா சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாக அந்நாட்டின் தலைவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

    உலக அளவில் இந்தியா குறித்த கருத்து மாறி விட்டதாகவும், அனைத்து நாடுகளின் தலைவர்களும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் கூறி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது மட்டுமல்ல. 2029-ம் ஆண்டிலும் நரேந்திர மோடியே பிரதமராக இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக தெரிவித்தார்.
    • இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளங்கள் முதலில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் மதத்தின் பேரில் அரசியல் செய்வதாக எதிர்கட்சிகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், கௌதம புத்த நகர் தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் ஷர்மாவுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் நேற்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது, பொது மக்களிடையே பேசிய அவர் மதத்தின் பேரில் அரசியல் செய்வது, சமூகத்தை பிளவுப்படுத்த நினைப்பது போன்ற செயல்களில் பிரதமர் மோடி ஈடுபட்டதே இல்லை என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "சகோதர சகோதரிகளே பிரதமரை எனக்கு இப்போது தான் தெரியும் என்றே இல்லை. நீண்ட காலம் அவருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை. நமது பிரதமர் சமூகத்தை பிளவுபடுத்த ஒருபோதும் நினைத்ததே இல்லை," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இன்றும் அவர் மீது எனக்கு மதிப்பு உள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2006 டிசம்பர் 9 ஆம் தேதி பேசிய டாக்டர் மன்மோகன் சிங், யாருக்கேனும் நாட்டின் சொத்துக்கள் மீது உரிமை இருப்பின், அது நிச்சயம் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்காகவே இருக்க வேண்டும் குறிப்பாக இதை கூறும் போது சிறுபான்மை சமூகமாக அவர் முஸ்லீம்களையே குறிப்பிட்டார்."

    "நாட்டின் வளங்கள் மற்றும் சொத்துக்கள் மீது அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று அவர் தெரிவித்தார், நாங்கள் அப்படி கூறவே இல்லை. இப்போது பிரதமர் இதை சொன்னதும், அதனை சர்ச்சையாக்க முயற்சிக்கின்றனர்," என்று தெரிவித்தார். 

    ×