search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajnath Singh"

    • சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
    • தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதா தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது.

    தொகுதி உடன்பாடு ஏற்படும் முன்னதாகவே சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ளது.

    இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகளின் கருத்துக்களை ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

    டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அந்த மாநில தலைவர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.

    ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே 1999-ம் ஆண்டு இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி தொகுதியில் பா. ஜனதா வேட்பாளராக மாநில செயலாளர் முனி சுப்பிரமணியம் அல்லது கர்நாடக மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ரத்தன பிரபாவின் மகள் நிகாரிகா ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • ராகுல் காந்தியின் நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
    • உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 இடங்களை அகிலேஷ் யாதவ் ஒதுக்கியுள்ளார்.

    லக்னோ:

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தக் கூட்டணி தாக்குப் பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரசுக்கு அகிலேஷ் யாதவ் ஒதுக்கியுள்ளார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல் காந்தி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் கூட்டணி முறியும். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு தொண்டர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைகிறது என தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த உத்தராயணி கவுதிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் ஒரு மாநிலம் முதலிடம் பெறப்போகிறது என்றால் அது உத்தரகாண்டாக தான் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து ஒப்புதல் அளித்தார்.

    கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருந்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் நடக்கவில்லை என்றார்.

    உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு மாநிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் உறவுகள் வலுபெற்று வருகிறது என்றார்.

    • மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
    • லண்டனில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

    லண்டன்:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 8-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

    இந்தப் பயணத்தின்போது இங்கிலாந்து ராணுவ மந்திரி கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூனுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்.

    கடந்த 22 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இங்கிலாந்து சென்றடைந்தார்.
    • கடந்த 22 ஆண்டில் எந்த பாதுகாப்பு மந்திரியும் இங்கிலாந்து சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    லண்டன்:

    இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று இங்கிலாந்து சென்றடைந்தார். லண்டன் விமான நிலையம் வந்த ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இங்கிலாந்தில் அந்நாட்டு பாதுகாப்புச் செயலருடன் விரிவான சந்திப்பு நடத்துகிறார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவர், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 22 ஆண்டில் எந்த இந்திய பாதுகாப்பு அமைச்சரும் இங்கிலாந்துக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை இங்கிலாந்துக்கு பயணம் செய்ய உள்ளார்.
    • கடந்த 22 ஆண்டில் எந்த பாதுகாப்பு மந்திரியும் இங்கிலாந்து சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நாளை முதல் இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். அந்நாட்டு பாதுகாப்புச் செயலருடன் விரிவான சந்திப்பு நடத்துகிறார்.

    லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவர், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    காலிஸ்தானுக்கு ஆதரவான வன்முறைகள் உள்ளிட்ட தீர்க்கப்படாத சில சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 22 ஆண்டில் எந்த இந்திய பாதுகாப்பு அமைச்சரும் இங்கிலாந்துக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிச்சாங் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார்.
    • மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பறந்தபடி அவர் ஆய்வு செய்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார். மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல் மந்திரி முக ஸ்டாலின் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:

    நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். தொடர்ந்து முதலமைச்சரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.

    தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதியளிக்கிறேன்.

    தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு இரண்டாம் தவணையாக ரூ.450 கோடியை வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

    நகர்ப்புற வெள்ளப் பிரச்சினையை சென்னை சமீப வருடங்களில் அடிக்கடி சந்தித்து வருவதால், நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.510 கோடி நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என தெரிவித்தார்.

    • பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.
    • வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது போல மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

    இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்னைக்கு இன்று வந்தார்.

    இதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். பிற்பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

    அங்கு அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அதன்பிறகு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ளப்பாதிப்பு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். பின்னர் ஐ.என்.எஸ். அடையாறில் ராஜ்நாத் சிங்கின் ஹெலிகாப்டர் இறங்கியதும் அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு, மிச்சாங் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி மற்றும் புகைப்படங்கள் காண்பிக்கப்படுகிறது.

    பின்னர் தலைமைச் செயலகத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புறப்படுகிறார். 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து அவர் 2.40 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.

    • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையக படுத்துதல் கவுன்சில் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
    • உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    புதுடெல்லி:

    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தில் பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    இந்நிலையில் விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான 3 மெகா பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையக படுத்துதல் கவுன்சில் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் விமானம் தாங்கி போர் கப்பல், 97 தேஜஸ் ரக விமானங்கள் வாங்குவது மற்றும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்களுக்கு பூர்வாங்க ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தபடுவதற்கு சில ஆண்டுகள் ஆகும். எனினும் ராணுவத்தை வலுப்படுத்த இந்த திட்டங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு இந்திய விமான படைக்கு 83 தேஜஸ் எம்.கே.1 ஏ. ஜெட் விமானங்கள் வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்திருந்தது.

    இந்நிலையில் தற்போது 97 தேஜஸ் மார்க் 1 ஏ போர் விமானங்கள் சுமார் ரூ.55 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய விமானப்படை வாங்கும் உள்நாட்டிலயே உருவாக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயரும்.

    இதேபோல 3-வது விமானம் தாங்கி கப்பல் மற்றும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் ஆகிய திட்டங்களும் பாதுகாப்பு துறையில் முக்கிய திட்டங்களாக கருதப்படுகிறது.

    • இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
    • இதில் பங்கேற்க அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று டெல்லி வந்தடைந்தார்.

    புதுடெல்லி:

    இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்

    இதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று மாலை டெல்லி வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சென்று அவரை வரவேற்றார்.

    • வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தினார்.
    • வரும் தேர்தலில் எதிர்கட்சியான "இந்தியா" கூட்டணி முன்வைக்கும் சவால் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

    2024ம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தனது பாராளுமன்றத் தொகுதியான லக்னோவுக்கு ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக வந்தார்.

    வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு இங்கு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தினார்.

    பின்னர், வரும் தேர்தலில் எதிர்கட்சியான "இந்தியா" கூட்டணி முன்வைக்கும் சவால் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    2024 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அவர் மீண்டும் வருவார் என்பதை நான் மட்டுமல்ல, பல அரசியல் பார்வையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    மகரிஷி வால்மீகியின் ராமர் ஒரு அரசர் மட்டுமல்ல, ஒரு லோக் நாயகர்... யுக் புருஷ் மற்றும் ஒரு அவதாரம் என்பதை முழு உலகமும் அறிந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

    எல்லா பாரதவாசிகளும், உலகின் எந்தப் பகுதியிலும் இருக்கட்டும், ராமாயணத்தில் மகரிஷி வால்மீகியால் செதுக்கப்பட்டதைப் போல ராமரை மரியதா புருஷோத்தராகப் பார்க்கவும்.

    மேலும், வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ், அங்கு ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது
    • குடும்ப ஊழல் மாநிலம் தாண்டி டெல்லி வரை பரவியிருக்கிறது

    இந்தியாவின் தெலுங்கானா மாநில 119 சட்டசபை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 30 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    தற்போது தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி புதியதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும் தற்போதைய பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

    இரு கட்சியின் முக்கிய தலைவர்களும் இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானாவின் கரிம் நகர் மாவட்டத்தில் உள்ள ஹுசுராபாத் (Huzurabad) பகுதியில் தெலுங்கானா பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 10 வருடங்களில் தெலுங்கானாவின் வளர்ச்சி ஒரு குடும்பத்திற்கான வளர்ச்சியாக மாறி விட்டது. எங்கும் கே.சி.ஆர். குடும்பத்தின் ஆதிக்கம் தெரிகிறது. தெலுங்கானாவில் மக்களாட்சி நடைபெறவில்லை; தனியார் குடும்ப நிறுவனத்தின் ஆட்சிதான் நடக்கிறது. கே.சி.ஆர். ஆட்சியை நடத்தத்தான் அவருக்கு மக்கள் வாக்களித்தனர்; அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி நடத்த அல்ல. நான் அவர் குடும்ப உறுப்பினர் எவர் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மக்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. ஊழலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கே.சி.ஆர். குடும்ப ஊழல் ஹைதராபாத்துடன் மட்டுமே நிற்காமல் டெல்லி வரை பரவியிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×