என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆருத்ரா தரிசனம்"

    • நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது.

    ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு அண்ணாமலை உச்சியில் 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை சாத்தப்பட்டது.

    பின்னர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வந்த நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    ஆங்கில புத்தாண்டின் முதல் பவுர்ணமி என்பதால், ஆருத்ரா தரிசனம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு நெய் காணிக்கை கொடுத்த பக்தர்களுக்கு 2 ஆயிரத்து 668 உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மகா தீப மை விநியோகம் தொடங்கியது. சில தினங்களில் மகா தீப மை முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    • சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெற்றது.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா நேற்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.

    நாளை (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், நாளைமறுநாள் (5-ந் தேதி) ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    • இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர்.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேரானது கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் இன்று மாலை 6 மணி அளவில் தேர் நிலையான கீழ ரத வீதியை வந்தடையும். தேர் திருவிழாவை முன்னிட்டு தில்லை திருமுறை கழகம் சார்பில் ஏராளமான பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி தேர் முன் சென்றனர். பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர். தேர் நிலையில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை (3-ந் தேதி) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், மதியம் பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.

    நாளைமறுநாள் (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    • அக்னி வடிவமான சிவபெருமானை குளிர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆறு விதமான அபிஷேகம் செய்து குளிர்விக்கிறார்கள்.
    • சிவன் கோவில்களுக்கு சென்று, அங்குள்ள நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசிக்க வேண்டும்.

    பல சிறப்புகளை உடைய மார்கழி, இறை வழிபாட்டுக்கு மிகவும் உதந்த மாதமாகும். பொதுவாக, மார்கழி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்குரிய மாதமாக கருதுவார்கள். ஆனால் பெருமாளுக்கு மட்டுமின்றி சிவபெருமானுக்கும் உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதை போல, சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது.

    27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டும்தான் 'திரு' என்ற சிறப்பு அடைமொழி வழங்கப்பட்டுள்ளன. ஒன்று திருமாலுக்கு உகந்த 'திருவோணம்' நட்சத்திரம். மற்றொன்று சிவபெருமானுக்கு உகந்த 'திருவாதிரை' நட்சத்திரம். இந்த சிறப்புமிக்க திருவாதிரை நாளில் தான் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

    அக்னி வடிவமான சிவபெருமானை குளிர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆறு விதமான அபிஷேகம் செய்து குளிர்விக்கிறார்கள். இந்த அபிஷேகத்தை கண் குளிர காண்பதே 'ஆருத்ரா தரிசனம்' ஆகும். இதனை 'மார்கழி திருவாதிரை' என்றும் சொல்வார்கள்.

    ஒரு சமயம் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ''ஆஹா! அற்புதமான காட்சி'' என்று மனமுருகி சத்தம் போட்டார். இதைக் கேட்ட ஆதிசேஷனும், மகாலட்சுமி தாயாரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கண் விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், ''தங்களின் பரவச நிலைக்கு காரணம் என்ன'' என்று ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர்.

    அதற்கு, சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன் என்றார் மகாவிஷ்ணு. மேலும், அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்ல, ஆதிசேஷனுக்கும் சிவனின் ஆனந்தத் தாண்டவத்தை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆதிசேஷனின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட மகாவிஷ்ணு, ''ஆதிசேஷா! உன் மனம் நினைப்பதை நான் அறிவேன். நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூலோகத்தில் பிறந்து தவம் இயற்ற வேண்டும். அப்போது உனக்கும் அந்த அற்புத ஆனந்தத் தாண்டவ தரிசனம் கிடைக்கும்'' என்றார்.

    அதன்படி ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவரது உடல் இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பல காலம் பூமியில் தவம் இருந்தார். அதன் பயனாக, ஒருநாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் சிவபெருமான் தன்னுடைய ஆனந்தத் தாண்டவ திருக்காட்சியை பதஞ்சலி முனிவருக்குக் காட்டி அருளினார். அந்த தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும். சிவபெருமானின் அற்புத நடன காட்சியை கண்ட பதஞ்சலி முனிவர், ''இறைவா, இந்த திருக்காட்சியை பூலோக மக்களுக்கும் காட்டி அருள வேண்டும்'' என வேண்டினார். அதன்படியே மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது.

    திருவாதிரை நோன்பு

    தேவர்களின் அதிகாலைப் பொழுதாக கருதப்படும் மார்கழி மாதத்தை 'பிரம்ம முகூர்த்த நேரம்' என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில்தான் 'திருவாதிரை நோன்பு' கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, சிவ நாமத்தை உச்சரித்து உடலில் திருநீறு பூச வேண்டும். காலையில் உணவு அருந்துவதை தவிர்க்கவும்.

    அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று, அங்குள்ள நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசிக்க வேண்டும். ஆலயத்தில் நடைபெறும் தாண்டவ தீபாராதனையை கண்டு வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் சிவபெருமானுக்குரிய பாடல்கள், சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்கள் போன்றவற்றை பாராயணம் செய்து வேண்டி கொள்ளுங்கள். பின்பு இரவில் எளிமையான உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த திருவாதிரை நோன்பை, மாதந்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திர நாளிலும் மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு வருடம் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு இனிமையான வாழ்க்கை அமையும், கயிலாயத்தில் வாழும் பேறும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் நல்ல கணவன் அமைவர், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், பாவங்கள் நீங்கும், அறிவு, ஆற்றல் பெருகும். மேலும் எண்ணற்ற பலன்களை பெறலாம்.

    • ஜனவரி மாதம் 1-ந்தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.
    • 2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு இன்று காலை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து நாளை சந்திர பிரபை வாகன வீதி உலா, நாளைமறுநாள் தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 28-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 29-ந் தேதி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 30-ந் தேதி யானை வாகன வீதி உலாவும், 31-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.

    அதனைத்தொடர்ந்து ஜனவரி மாதம் 1-ந்தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 3-ந்தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. 

    • வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • ஆண்டு முழுவதும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

    ராமநாதபுரம் 

    ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். பூலோகத்தில் தோன்றிய முதல் கோவிலான இங்கு மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி, மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் மரகத சிலை அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

    வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி காலை மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பால், பன்னீர், திரவியம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் வைக்கப்பட்டிருக்கும்.

    பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்குமேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • மரகத நடராஜரின் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 5-ந்தேதி நடக்கிறது.
    • ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். இங்கு சிவபெருமான் மங்கள நாதராகவும், உமையம்மை மங்கள நாயகியாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி, மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் மரகத சிலை அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

    வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி காலை மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பால், பன்னீர், திரவியம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் வைக்கப்பட்டிருக்கும்.

    பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்குமேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • ஜனவரி 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.பின்னர் 29-ந் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    தொடர்ந்து அடுத்த மாதம்(ஜனவரி) 1-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4-ந் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 5-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது. முன்னதாக அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

    தொடர்ந்து 7-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 8-ந் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும். மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
    • நடராஜ பெருமானுக்கு பல்வேறு திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

    கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக்கூடியதுமான சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 5-ந் தேதி மாலை 6 மணிக்கு சேவூர் அங்காளம்மன் கோவிலில் திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. திருவாதிரை நாச்சியார் சிறப்பு அலங்காரத்துடன், முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெறவுள்ளது. இரவு 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6-ந் தேதி காலை 9 மணிக்கு நடராஜ பெருமான் உடனமர் சிவகாமியம்பாளுக்கு பல்வேறு திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து காலை 11 மணிக்கு சிவபெருமானுக்கு ராக தாளங்கள் வாசிக்கப்பட்டு மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மதியம் 2 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் கோவில் வெளிபுற வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகரை மூன்று முறை சுற்றும் "பட்டி சுற்றுதல் "நிகழ்ச்சி நடைபெற்று, திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கையால வாத்திய இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக சாமி திருவீதி உலா மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு 6-ந் தேதி காலை 9 மணி முதல் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • உத்திரகோசமங்கையில் காப்புக்கட்டுதலுடன் ஆருத்ரா தரிசனம் விழா தொடங்கியது.
    • வருகிற 5-ந் தேதி கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படியை களையும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக விளங்குகிறது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.

    மரகத நடராஜரின் மீது ஒளி, ஒலியால் ஏற்படும் அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், வருடம் முழுவதும் பாதுகாக்கும் பொருட்டும் சந்தனம் பூசுவது வழக்கம். வருட த்திற்கு ஒருமுறை மட்டுமே நடராஜர் சிலையில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டு பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் உத்திர கோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு இரவு 7 மணியளவில் கோவில் முன்புறமுள்ள நர்த்தன விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.தினமும் காலை 10 மணிக்கு மாணிக்கவாசகரின் உட்பிரகார வீதி உலாவும், திருவெம்பாவை பாடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 8 மணிக்கு மேல் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படியை களையும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    அன்று காலை 11 மணியளவில் மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக, ஆராதனை நிறை வேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். பின்னர் இரவு 10.30 மணிய ளவில் ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மறுநாள் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமையன்று) அதிகாலை 5.30 மணியளவில் அருணோதய நேரத்தில் நடராஜர் சிலைக்கு மீண்டும் சந்தனக் காப்பிடுதலும் நடக்கும்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • 6-ந்தேதி நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது.
    • நடராஜருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா திருவிழா கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டின் திருவாதிரை ஆருத்ரா திருவிழா நேற்று முன்தினம் இரவு நடராஜருக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    ஆருத்ரா திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று ருத்ராட்ச மண்டபத்தில் வீற்றிருந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. அதுபோல் மாணிக்கவாசகர் தங்க கேடயத்தில் வைத்து மூன்றாம் பிரகாரத்தை சுற்றி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஆருத்ரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 6-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், திரவியம், மஞ்சப்பொடி, இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நடராஜருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை பூஜைகள் நடைபெற்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

    • குகநாதீஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்து உள்ளது.
    • பக்தர்களுக்கு “களி” பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநா தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஆகும்.

    இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே கட்டிஉள்ளார் என்று வரலாற்றுச் சான்று கள் கூறுகின்றன. இங்கு குகன் என்ற முருகக்கடவுள் ஈஸ்வரன் என்றசிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று. இந்த கோவில் மூலஸ் தானத்தில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்து உள்ளது. அப்படிப் பட்ட புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனம்நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினமான வருகிற 6-ந்தேதி காலை இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு மிருத்ஞ்சய ஹோமமும் 4 மணிக்கு சிவபெருமானுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், களபம், மஞ்சள்பொடி, மாபொடி, விபூதி, தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பின்னர் 5 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கி றது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட தட்டு வாகனத்தில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு "களி" பிரசாதமாக வழங்கப் படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வ ரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வரு கின்றனர்.

    ×