என் மலர்
நீங்கள் தேடியது "chidambaram nataraja Temple"
- பொது தீட்சிதர்கள் செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.
- கோவில் தீட்சிதர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை செய்வதற்காக குழந்தைகளுக்கு தீட்சிதர்கள் திருமணம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை திருமணம் செய்த தாய், தந்தை என பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதை கண்டித்து நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஹேம சபேசனை விடுதலை செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏ டி எஸ் பி அசோகன் மற்றும் போலீசார், சாலை மறியல் ஈடுபட்ட தீட்சிதர்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பலமுறை வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் தொடர்ந்ததால், தீட்சிதர்களை குண்டு கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, தீட்சிதர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.
- ஆய்வு என்ற பெயரில் அறநிலையத்துறையினர் பிடிவாதம் பிடிப்பது கண்டனத்துக்குரியது
- கோவில்களை நிர்வகிக்க மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளனர்.
திருப்பூர்,
இந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு என்ற பெயரில் அறநிலையத்துறையினர் பிடிவாதம் பிடிப்பது கண்டனத்துக்குரியது.நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்றும், அதன்நிர்வாகம் மற்றும் வரவு-செலவு கணக்குகளை அவர்களேபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசும், அறநிலையத்துறையும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறது. இதனைஇந்து முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாகஅனைத்து கோவில்களையும் விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். எங்கள் கோவில்களை நிர்வகிக்க மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளனர். இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது.
பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். மறுநாள் ஆயிரங்கால் மண்டபம் என்னும் ராஜசபையில் மூலவர் ஆனந்த நடராஜர், அம்பாளுடன் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி, இந்தாண்டுக்கான ஆனிதிருமஞ்சன விழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 25-ந்தேதி இரவு தெருவடைச்சான் உற்சவமும், நேற்று முன்தினம் ஆனி திருமஞ்சன தேரோட்டமும் நடைபெற்றது. இதில் மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
ஆனி திருமஞ்சன விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தரிசன விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங் கால் முகப்பு மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சாமிக்கு திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடந்தது. பின்னர், பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. நான்கு வீதிகளின் வழியாக சென்ற பஞ்சமூர்த்திகள் கோவில் உள்ளே மதியம் 2.10 மணிக்கு வந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள நடனப்பந்தல் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து, சித்சபையில் உற்சவ ஆச்சாரியார் தலைமையில் மண்டகப்படி பிரசாத படையல் மற்றும் தீபாராதனை நடந்தது.
பின்னர், மதியம் 2.50 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மூலவர் சன்னதிக்கு செல்லும் மகா தரிசன நிகழ்வு நடந்தது. அப்போது, நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் மூன்று முறை ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். இந்த கண்கொள்ளா காட்சியை கண்ட அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை விண் அதிர எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
மேலும், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தரிசன விழாவையொட்டி அய்யப்ப சேவா சங்கம், விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்,மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பில் தேரோடும் வீதிகளில் குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று ஆனிதிருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத ஆனந்தநடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சித்சபையில் இருந்து கனக சபைக்கு எழுந்தருளினர்.
இதையடுத்து சுவாமி புறப்பாடாகி, கோவில் உட்பிரகார வலம் வந்து, தட்சணாமூர்த்தி சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் முன்னும், பின்னுமாக நடனமாடியவாறு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதனை தொடர்ந்து, 21 படிகள் வழியாக கீழவீதி தேர் மண்டபத்துக்கு சுவாமி வந்தடைந்தது. தேர் மண்டபத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் கோவில் பொது தீட்சிதர்கள் முன்னிலையில் மண்டகபடி பூஜை நடைபெற்றது. பின்னர், காலை 7.10 மணியளவில் ஆனந்தநடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். காலை 8.10 மணியளவில் விநாயகர் தேரை பக்தர்கள் முதலில் வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது.
பின்னர் காலை 8.30 மணிக்கு மூலவர் நடராஜர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதியில் 5 தேர்களும் வலம் வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது. தேர் மேலவீதி கஞ்சித்தொட்டிமுனை சந்திப்பில் நிறுத்தப்பட்டபோது, பருவதராஜகுல சமுதாயம் சார்பில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரருக்கு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் தேர்கள் அனைத்தும் நிலையை வந்தடைந்தது.
தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். பின்னர், அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
ஆனி திருமஞ்சன மகா தரிசன நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணி முதல் 6 மணி வரை மூலவர் ஆனந்தநடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு ரகசிய பூஜை நடக்கிறது. இதையடுத்து, திருஆபரண அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு மேல் மகா தரிசன நிகழ்வு நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை ஆனித்திருமஞ்சன திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் தேரோட்டத்தை தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றார். இதைபார்த்த தீட்சிதர், செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என கூறினார். திடீரென அவர் அந்த போலீஸ்காரரிடமிருந்து செல்போனை பறித்ததாக தெரிகிறது.
இதனால் அவர்களுக் கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பறிக்கப்பட்ட செல்போன் போலீஸ்காரரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரம்மா செய்த யாகம் :
ஒருமுறை பிரம்மா தேவலோகத்தில் யாகம் ஒன்றை நடத்தினார். அதற்காக, தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விடவும் அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது என அவர்கள் கூறினார்கள். அப்போது, ஒலித்த நடராஜரின் அசரீரியானது யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கே தோன்றுவதாகவும் கூறியது. அவ்வாறு தோன்றிய கோலம் ‘ரத்னசபாபதி’ என்று சொல்லப்படுகிறது. அந்த சிலை நடராஜர் சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது. தினமும், காலையில் 10-11 மணிக்குள் அந்த சிலைக்கு பூஜைகள் செய்யப்படும். குறிப்பாக, சிலைக்கு முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.
ஆலயமும்.. உடலமைப்பும்...
உடலில் உள்ள இதயம் இடப்பக்கமாக இருப்பதால் பொன்னம் பலம் சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள கனகசபைக்கு வழி, பிற கோவில்களில் இருப்பது போல நேராக இல்லாமல் பக்கவாட்டில் வருகிறது. இதன் நான்கு தூண்கள் நான்கு வேதங்களையும். பொன்னம்பலத்தில் உள்ள 28 தூண்கள் 28 ஆகமங்களையும் குறிக்கிறது. இங்கு அமைக்கப் பட்டுள்ள 64 மேற்பலகைகள் 64 கலைகளை குறிக்கிறது. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள் ஆறு சாஸ்திர அங்கங் களையும், அதன் அருகில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிப்பதாகவும் தத்துவ விளக்கங்கள் உண்டு.
நடராஜ தாண்டவம் :
நடராஜரின் தாண்டவம் ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று வெளிநாட்டு அறிஞர்களால் ஒப்புமைப்படுத்தப்படுகிறது. பூமிப்பந்தின் மையப்புள்ளி அமைந்துள்ள இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் இருப்பதோடு, காந்த சக்தியின் மையப்புள்ளியானது நடராஜரின் கால் பெருவிரலில் இருப்பதாகவும் சர்வதேச ஆன்மிக ஆராய்ச்சியாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நடராஜரின் பஞ்ச சபைகளில் சிற்றம்பலமாக உள்ள இந்த தலத்தில், நடராஜர் சன்னிதி எதிரில் உள்ள மண்டபத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் ஒரு சேர தரிசிக்கலாம். நடராஜர் சன்னிதி அருகில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் அமைந்திருப்பதை பலரும் அதிசயமும், ஆச்சரியமும் கலந்த பக்தியோடு தரிசித்து மகிழ்கின்றனர். சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில் ஆடிய தில்லை காளியின் கோவில், நடராஜர் கோவில் அருகில் உள்ளது. கிட்டத்தட்ட 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவத்தலம் இதுவாகும். சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலமாகவும் உலகப்புகழ் பெற்றது.

கலைகளில் தேர்ச்சி :
இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால், நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி ஆவார். இங்குள்ள ஈசனை வழிபடுவோருக்கு மனநிம்மதி கிடைப்பதோடு, உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதாகவும் ஐதீகம். குறிப்பாக, கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தல நடராஜரை பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் அவரவர்கள் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும், குழந்தை பாக்கியம் மற்றும் குடும்ப வளம் ஆகிய காரணங்களை முன்னிட்டும் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாகும்.
நேர்த்திக்கடன்கள் :
பால், பழம் ஆகியவற்றை நைவேத்தியமாக அளித்து, தீபாராதனை செய்து சுவாமியின் பாதுகையை வெள்ளி, தங்கப்பல்லக்கில் எழுந்தருள செய்து, நடராஜர் அருகில் வைத்து அவருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் பால், பழம் நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வது ‘திருவனந்தல்’ என்றும் ‘பால் நைவேத்தியம்’ என்றும் அழைக்கப்படும். பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று அதை செய்வது வழக்கம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றாலும் அபிஷேகம் செய்து, தூய வஸ்திரம் சாத்தலாம். தவிர சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவையும் செய்யலாம். அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றுடன் உண்டியல் காணிக்கையும் செலுத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பதும் புண்ணியமே.
சிதம்பர ரகசியம் :
இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயில் திரை அகற்றுப்பெற்று, ஆரத்தியும் காட்டப்படும். அதற்குள் உருவம் ஏதும் இருக்காது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். அதாவது, உருவம் ஏதும் இல்லாமல் வில்வதளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார் என்பதாகும். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. அவனை உணர மட்டுமே முடியும் என்பதே அதன் அர்த்தம். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருப்பதாகவும் ஐதீகம்.