என் மலர்
நீங்கள் தேடியது "Lakshmi"
- லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி மரம் உள்ளது.
- வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க, வெள்ளை நிற புறாக்களை வளர்க்கலாம்.
ராம நாமம் எங்கெல்லாம் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் அனுமன் வாசம் செய்வதாக புராணங்கள் சொல்கின்றன. அதே போல, ஸ்ரீமன் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணுவின் பெருமை பேசப்படும் இடங்களில் எல்லாம் திருமகளான லட்சுமி தேவி வசிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் எங்கெங்கெல்லாம் லட்சுமி வாசம் செய்வாள், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
* விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லிக்கனிக்கு 'ஹரி பழம்' என்ற பெயரும் உண்டு. லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி மரம் உள்ளது. ஒருவரது வீட்டில் நெல்லி மரம் இருந்தால் அந்த வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். அங்கு லட்சுமியும் வாசம் செய்வாள். தீய சக்திகள் அந்த வீட்டை அணுகாது.
* மங்கலப் பொருட்களாக கருதப்படும், மஞ்சள், குங்குமம், கோலம், சந்தனம், மாவிலைத் தோரணம், சுமங்கலி பெண்கள், பூரண கும்பம், திருமண், வாழை, வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் போன்றவற்றிலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
* வீட்டில் துளசி மாடம் வைத்திருப்பவர்கள், அதிகாலையில் நீராடிவிட்டு துளசி மாடம் முன்பாக தினமும் விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்து வணங்கினால் லட்சுமியின் அருளைப் பெறலாம்.
* வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க, வெள்ளை நிற புறாக்களை வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோமியம், தாமரைப் பூ, ஆடைகளை தூய்மையாக வைத்திருப்பதும் லட்சுமி கடாட்சத்தை பெற்றுத் தரும்.
* காலையில் கண்விழித்த எழுந்தவுடன் உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படத்தை பார்ப்பது, செல்வ வளம் சேர்க்கும். லட்சுமியின் அருளை வழங்கும்.
தியான சுலோகம்:-
சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
வராபய கராந் விதாம்
அப்ஜத்வய கராம்போஜாம்
அம்புஜாசநஸமஸ்த்திதாம்
ஸஸிவர்ண கடேபாப் யாம்
ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
சர்வாபரண சோபாட்யாம்
சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம்
சாமரக்ரஹ நாரீபி :
ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
ஆபாதலம்பி வசநாம்
கரண்ட மகுடாம் பஜே.
பலன்கள்:-
மேற்கண்ட சுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் ஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த அரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும் ( தனியார் நிறுவனத்திலும் கூட ) ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும், வாழ்வில் வளமும் தருவாள்.
* அடுத்தவர் பொருளாதாரத்தோடும், வருமானத்தோடும் நம் நிலையை ஒப்பிடக்கூடாது.
* நமக்கு வரும் வருமானத்திலோ, லாபத்திலோ குறைந்த அளவு, ஏழைகளுக்கோ,ஆன்மிக பணிகளுக்கோ செலவிட வேண்டும்.
* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கவேண்டும்.
* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது.
* தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு... அலுவலகம்...கல்லாப்பெட்டிஞ்பணப்பை... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
* வணிகத்தை... தொழிலை... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே மகாலட்சுமி வருவாள்.
* மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன்ஆகிவிடுவீர்கள்.
&ஜோதிடர் சுப்பிரமணியன்
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் அம்சலட்சுமியே போற்றி
ஓம் அருள்லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகமலட்சுமியே போற்றி
ஓம் அதிலட்சுமியே போற்றி
ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இதயலட்சுமியே போற்றி
ஓம் இன்பலட்சுமியே போற்றி
ஓம் ஈகைலட்சுமியே போற்றி
ஓம் உலகலட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளியலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளிலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கனலட்சுமியே போற்றி
ஓம் கிரகலட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் குடும்பலட்சுமியே போற்றி
ஓம் குலலட்சுமியே போற்றி
ஓம் கேசவலட்சுமியே போற்றி
ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சக்திலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீலலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சூரியலட்சுமியே போற்றி
ஓம் செல்வலட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் தங்கலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துர்காலட்சுமியே போற்றி
ஓம் தூயலட்சுமியே போற்றி
ஓம் தெய்வலட்சுமியே போற்றி
ஓம் தேவலட்சுமியே போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் பங்கயலட்சுமியே போற்றி
ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
ஓம் பொருள்லட்சுமியே போற்றி
ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாதவலட்சுமியே போற்றி
ஓம் மாதாலட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்திலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஒம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்குலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்காலட்சுமியே போற்றி
ஓம் ரங்கலட்சுமியே போற்றி
ஓம் ராமலட்சுமியே போற்றி
ஓம் ராஜலெட்சுமியே போற்றி
ஓம் ஜெயலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
தீபாவளிக்கு முன்னதாகவே வீட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசல் கதவுகளில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
பூஜையறையில் மாக்கோலமிட்டு ஒரு மனையில் மஞ்சள் அல்லது சிவப்புத்துணி போட்டு அதில் பிள்ளையார், மகாலட்சுமி படங்களை வைக்க வேண்டும். சிலை இருந்தால் சிலைகளை வைக்கலாம். பிள்ளையாரை மஞ்சளிலும் செய்து வைக்கலாம். இதில் குலதெய்வத்தையும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு படம் இருந்தால் அதை வைக்கலாம். இல்லை என்றால் ஒரு செம்பில் நீர் மலரிட்டு குலதெய்வமாக பாவித்து வைக்கலாம்.
பிள்ளையார், மகாலட்சுமி, குலதெய்வம் மூவருக்கும் நல்ல மணமுள்ள மலர்களை சூட்ட வேண்டும். தாமரை மலர் கிடைத்தால் மகாலட்சுமிக்கு சூட்டுவது நல்லது. பிள்ளையாருக்கு மஞ்சள் துண்டு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, வாழை உள்ளிட்ட பழங்கள் படைக்க வேண்டும்.
நெய்வேத்தியமாக வடமாநிலங்களில் நெய்யினால் பூரி சுட்டு, உருளைக்கிழங்கு, தக்காளி கூட்டு செய்து படைப்பார்கள். நெய்க்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு உண்டு. நெய்யில் நிவேதனம் செய்தால் அணுகிரகம் விரைவில் கிடைக்கும்.
பால் பாயாசம் சேமியா அல்லது அரிசி சேர்த்து செய்து வைக்கலாம். தமிழ்நாட்டில் அரிசி உணவுதான் பிரதானமாக இருப்பதால் அரிசி பாயாசமே செய்து கொள்ளலாம். வெங்காயம், பூண்டு சேர்க்காமல் அன்னம் செய்து படைக்கலாம். முக்கியமாக நெல் பொரி படைக்க வேண்டும். அதில் வெல்லம், பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு பெரிய அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். அதனை தொடர்ந்து 3 தினங்கள் எரியுமாறு பார்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. மகாலட்சுமி தாயாருக்கு கும்ப கலசம் வைக்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக வைக்கலாம்.
பின்னர் மகாலட்சுமியின் 108 போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும். அது தெரியவில்லை என்றால் மிக எளிமையாக ஓம் ஸ்ரீம் நமக என்று சொல்லி வழிபடலாம்.
வாய்ப்பு உள்ளவர்கள் 108 தாமரை மலர்களை போட்டு அர்ச்சனை செய்யலாம். இல்லை என்றால் குங்கும அர்ச்சனை செய்யலாம். அல்லது 108 வெள்ளி காசுகளை வைத்து அர்ச்சனை செய்யலாம். 108 புது ரூபாய் தாள்களை கொண்டு அர்ச்சிக்கலாம். அல்லது ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
மகாலட்சுமி தாயாருக்கு மணியடித்து ஆரத்தி காட்டும் போது ஒரு வெடியாவது வெடிக்க வேண்டும்.
நிவேதனம் செய்த பின்னர் பிரசாதத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும்.
பொதுவாக பூஜையில் வைத்த மலர் மாலை, கலசம் உள்ளிட்டவற்றை 3-வது நாள் எடுப்பது தான் நல்லது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எடுக்கக்கூடாது. இந்த முறை 3-வது நாளாக சனிக்கிழமை வருவதால் அன்று எடுக்கலாம்.
கலசத்தில் நீர் வைத்திருப்பதால் அதை வீடு முழுவதும் தெளிக்கலாம். அரிசி வைத்திருந்தால் அதனை சமைத்து சாப்பிட வேண்டும். அர்ச்சனை செய்த குங்குமத்தை பெண்கள் திலகமிட பயன்படுத்திக் கொள்ளலாம்.
மகாலட்சுமி பூஜை
திருமகளான லட்சுமிதேவி அவதரித்த நாளாக, தீபாவளி சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம், வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, அதனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து, தீப- தூபங்களால் ஆராதனை செய்து வழிபடுங்கள். இதனால் திருமணம் கைகூடும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் வந்துசேரும்.
குபேர பூஜை
செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி என்றாலும், அவற்றைப் பிரித்து வழங்கும் நிதிகள் அனைத்தும் குபேரனின் வசம் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த நிதிகளுக்கு அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற தினமாக தீபாவளி இருக்கிறது. எனவே அன்றைய தினம், குபேரன் படத்தை வீட்டில் வைத்து, அதன் இரண்டு பக்கமும் குத்துவிளக்கேற்றி வைத்து, குபேரனுக்கு இனிப்பு பலகாரங்களை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இதனால் செல்வ வளம் தேடிவரும்.
கேதார கவுரி விரதம்
சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி வழிபட்டு பலன் பெற்ற தினம், தீபாவளி. அந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்பார்கள். சிவ- பார்வதி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் தம்பதியருக்குள் ஒற்றுமை பலப்படும். இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். சிவ- பார்வதி படத்திற்கு பதிலாக, அர்த்தநாரீஸ்வரர் படத்தை வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பு சேர்க்கும்.
சத்யபாமா பூஜை
நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினம் தீபாவளி. நரகாசுரனின் தாய் பூமாதேவியாவார். நரகாசுரனுக்கு அவனது தாயால்தான் மரணம் என்பது வரமாக அளிக்கப்பட்டிருந்தது. எனவே பூமாதேவியின் அம்சமாக கிருஷ்ண அவதாரத்தின் போது தோன்றியவர், சத்யபாமா. அவர்தான் கிருஷ்ணருடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தார். எனவே தீபாவளி அன்று, சத்யபாமாவை வீர லட்சுமியாக பாவித்து பூஜித்து வணங்க வேண்டும்.
முன்னோர் வழிபாடு
துலா மாதமாக சொல்லப்படும் ஐப்பசி மாத அமாவாசை தினம், முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. அவரவர் இல்லத்தில் முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் செய்வதும் குடும்பத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.
குலதெய்வ பூஜை
இல்லத்தில் இந்த சொர்ணாபிஷேகம் செய்ய விரும்பவர்கள் தினந்தோறும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கின்ற சிறிய அளவிலான லட்சுமி தேவியின் விக்கிரகத்திற்கு, 11 காசுகள் அல்லது 108 காசுகளை கை நிறைய அள்ளி, மெதுவாக லட்சுமி தேவன் விக்கிரத்தின் மீது விட்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
அபிஷேகத்தை முடித்ததும் அந்த நாணயங்கள் அனைத்தையும் எடுத்து, ஒரு தூய்மையான பாத்திரத்தில் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி, அதில் போட்டு வைத்து மறுநாள் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கோவிலில் இந்த சொர்ணா அபிஷேகத்தை செய்ய விரும்புபவர்கள் கைநிறைய நாணயங்களை அர்ச்சகரிடம் கொடுத்து தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யலாம்.
அல்லது 11 காசுகள் மட்டும் எடுத்து, அவற்றை தெய்வ சிலையின் பாதத்தில் வைத்து பூஜித்து, மீண்டும் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு பூஜிக்கப்பட்ட நாணயங்களில் இருந்து தினமும் ஒரு நாணயத்தை எடுத்து, உங்கள் வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்களிடம் கொடுத்து அவர்களின் கைகளால் வாங்கிக் கொண்டு, அதை உங்கள் பணப் பையிலோ அல்லது தொழில், வியாபாரம் நடக்கின்ற இடத்தில் இருக்கும் பணப் பெட்டியில் போட்டு வைக்க வேண்டும்.
இவ்வாறு பூஜை செய்யப்பட்ட நாணயங்களை உங்கள் பணப்பையில் வைப்பதாலும், வியாபார தளங்களில் பயன்படுத்துவதாலும் உங்களுக்கு மிகுந்த செல்வச்செழிப்பு உண்டாகும். வீண் பொருள் விரயங்கள் ஏற்படுவதை தடுக்கும். தேவையற்ற கடன்கள் போன்றவை ஏற்படாது. வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வாழ்வில் வசதிகள் பெருகும்.

ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜபிப்பது மேலும் சிறப்பாகும். மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு வீட்டில் விளக்கேற்றி பிள்ளையாரையும் லட்சுமி தேவியையும் நன்கு வணங்கிவிட்டு ஜபிக்க வேண்டும்.

உத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,371 மீட்டர் உயரத்தில் இமயமலை உச்சியில் இந்த ஆலயம் இருக்கிறது. சக்தி பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னையர் களுக்கு ஈடாக இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஹரியாழி அன்னையும் போற்றப்படுகிறாள். இந்த தேவியை தரிசிப்பதன் மூலம் இவ்வுலகில் வாழும்போதே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தல வரலாறு :
மதுராவின் அரசனான கம்சனின் உயிருக்கு, அவனது தங்கை தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டது. இதனால் அச்சமடைந்த கம்சன், தேவகியையும் அவளது கணவன் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் இரக்கம் இன்றி வெட்டிக் கொலை செய்தான். தேவகிக்கு ஏழாவது பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த கம்சன், சிறைச் சாலைக்குச் சென்றான்.
அந்தக் குழந்தையைக் கொல்வதற்காக தரையில் தூக்கி வீசினான். தரையில் விழுந்த அந்தக் குழந்தையின் உடல் சிதறி விண்ணில் பறந்தது. உடலின் பல பாகங்களும், பல்வேறு இடங்களில் விழுந்தது. அதில் கை விழுந்த இடம் தான் ஜசோலி கிராமம் ஆகும். இந்த இடத்தில் பின்னர் கோவில் ஒன்று எழுப்பட்டது. இந்த கோவில் உயரமான மலையாலும், அடர்த்தியான காடுகளாலும் சூழப்பட்டது. இங்குள்ள அம்மன் மஞ்சள் நிற உடையை அணிந்து, ஒரு சிங்கத்தின் மேல் உட்கார்ந்து காட்சிக்கொடுக்கிறாள். இந்த கோவிலில் சத்ரபாலு மற்றும் ஹீத் தேவி ஆகியோரின் சிலைகளும் உள்ளன.

கோவில் அமைப்பு :
கோவில் செங்கல் மற்றும் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அழகான கட்டமைப்பு ஆகும். கோவிலின் அடிப்படை அலங்காரமானது, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த ஆலயம் புனித தலமாக கருதப்படுகிறது. 1371 மீட்டர் உயரத்தில் உள்ளதாலும், காலநிலைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாலும், ஆலயம் பல முறை புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. ஹரியாழி தேவி கோவில், கட்டிடக்கலையை விட ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.
கோவில் முன் இரண்டு சிங்கத்தின் சிலைகள் உள்ளன. கோவிலின் உள்ளே கண் கவரும் வண்ணம் அம்பாள் சிங்கத்தின் மேல் அமர்ந்து காட்சிக் கொடுக்கிறாள். கோவில் அர்ச்சகர் வருபவர்களுக்கு அர்ச்சனை செய்து பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார்.
ஜென்மாஷ்டமி, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் இந்த ஆலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த புனித நாட்களில், பக்தர்கள் ஹரியாழி சிலையை எடுத்துக்கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் ஹரியியாகி காந்தாவை அடைகின்றனர். இது மலையுச்சியில் இருக்கிறது. இங்கு சக்திவாய்ந்த காளி கோவில் உள்ளது. விரதமிருந்து இக்கோவிலுக்கு செல்கின்றனர்.
எப்படி செல்வது? :
விமானத்தில் டெஹ்ராடூன் சென்று அங்கு இருந்து காரிலும், ரெயில் மூலமும் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் செல்ல வேண்டும். அங்கிருந்து சாலை வழியாக ருத்ரபிரயாக் என்ற பகுதிக்குச் சென்று, அந்த இடத்தில் இருந்து ஹரியாழி தேவி கோவிலை அடையலாம்.