என் மலர்
நீங்கள் தேடியது "துர்கா பூஜை"
- ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
- கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஆங்காங்கே ஏற்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி பரவிய வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையையொட்டி பூஜை பந்தல் அமைப்பது வாடிக்கை. அவ்வாறு கொல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்ட பூஜை பந்தல் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட ஏர் இந்திய விமான விபத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
260 பேரின் உயிர்களை காவு வாங்கிய அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தை மோதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவரும் மறக்க வேண்டிய இந்த கொடூர நிகழ்வை நினைவுப்படுத்தியது ஏன்? என்ற பதிவுகளுடன் இது தொடா்பான வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
- வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது.
- மழைக்காலங்களில் மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
துர்கா பூஜையை ஒட்டி, நட்புறவின் அடையாளமாக இந்தியாவுக்கு 1200 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்ய உள்ளது
வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது. மழைக்காலங்களில் இனப்பெருக்க காலத்தில், முட்டையிடுவதற்கு வசதியாக, மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
குறிப்பாக அந்நாட்டின் பத்மா ஆற்றில் பிடிபடும் இவ்வகை மீன்கள், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படும்.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கம் கடந்த ஆண்டு ஹில்சா மீன்கள் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் துர்கா பூஜைக்கு சற்று முன்னதாக மீன்களுக்கான தேவை அதிகமாக இருந்தபோது தடையை வங்கதேச அரசாங்கம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
- ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.
- சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும்.
வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்குப் மலர்மாலை சாற்றி பூஜிக்க, சகல நன்மைகள் பெறலாம். வீட்டில் விளக்கேற்றி வரும் இடம் ஒரே இடமாக இருப்பது நல்லது. அடிக்கடி இடத்தை மாற்றக்கூடாது. காலை, மாலை விளக்கேற்றும் போது கல்கண்டை நிவேதனமாகப் படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
ஏகமுக தீபம்
ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள். சர்வசக்திகளும் தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது. எனவேதான் லலிதா சகஸ்ரநாம பூஜைக்கு ஐந்துமுக தீபமும், துர்கா பூஜைக்கு ஏகமுக தீபமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏகமுக தீபத்தில் ஸ்ரீதுர்க்கா தேவியை ஆவாகணம் செய்து சகஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இந்த தீப வழிபாட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.
மாங்கல்ய பலம் பெருகும்
சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டை செய்ய, செய்ய வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற முடியும். இதனால் குடும்பத்தினர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வார்கள்.
நிம்ப தீபம்
நிம்பதீபம் என்பது இலுப்பை எண்ணை ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு. மேலும் மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும். நிம்ப தீபத்தை புதுஅகண்டம், அகல் இவைகளில் ஏற்ற வேண்டும். வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம்.
பஞ்ச தீப எண்ணை
தேங்காய் எண்ணை, விளக்கு எண்ணை, வேப்ப எண்ணை, இலுப்ப எண்ணை மற்றும் பசு நெய் கலந்த எண்ணையே பஞ்ச தீப எண்ணை எனப்படும். பஞ்ச தீப எண்ணையால் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
இதை ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வெண்குஷ்டம் முதலிய தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுவோர் தங்கள் உபாதைகள் நீங்கிச் சுகம் பெறுவார்கள். நரம்புத் தளர்ச்சி நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த கண் கண்ட மருந்தாகும். தேவி உபாசகர்கள், தங்கள் தேவியை மகிழ்விக்க, பஞ்சமி திதியில் மேற்கண்ட பஞ்ச தீப எண்ணை ஊற்றி, பஞ்ச தீபம்(5-சுடர்) ஏற்றி வழிபட்டு வந்தால் அம்பிகையின் பூரண அருள்கிட்டும்.
மங்களகவுரீ தீப பூஜை
ஆவணி மாதம், செவ்வாய்க்கிழமை அம்பிகை அவதரித்த நாள். அன்று ஒளிமயமானதேவியை தீபத்தில் பூஜிப்பது மிகவும் நல்லது. ஆவணி மாதம் எல்லா செவ்வாய்க்கிழமைகளில் தேவியை தீபத்தில் பூஜிக்க வேண்டும். கன்னியாக இருக்கும் போது தந்தை வீட்டில் ஒரு வருஷமும், கணவர் வீட்டில் நான்கு வருஷங்களும் இந்த பூஜையை விரதமாக ஏற்று முடிக்க வேண்டும். இதற்கு சிரவண மங்கள விரதம் என்று பெயர். தீர்க்க சுமங்கலியாக இருப்பதே இதன் முக்கிய பலன்.
விளக்கொளி பெருமாள்
சிவபெருமான் ஜோதியாக விளங்கியது போல மகாவிஷ்ணுவும் ஜோதியாக விளங்கியிருக்கிறார். இதை உணர்த்த காஞ்சிபுரத்தில் தீபப் பிரகாசர் என்ற பெயருடன் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அங்குள்ள பெருமாளை விளக்கொளி பெருமாள் என்று அழைக்கிறார்கள். தீப பூஜையில் மகாவிஷ்ணுவை ஆவாஹனம் செய்யும்போது இந்தப்பெருமாளை தியானிப்பது மிகவும் விசேஷம். இத்தலத்திற்குத் திருத்தண்கா, தூப்புல் என்ற பெயர் வழங்குகிறது.
தீப பிரசட்சணம்
தீபத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தை பிரதசட்ணம் வருவதில் பெரும் புண்ணியம் உண்டு. கன்னிப்பெண்கள் இப்படி தீபத்துடன் பிரதட்சணம் செய்தால் அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் கைகூடும்.
திருக்கோவிலூர், தபோவனம் ஸ்ரீஞான ஆனந்த சுவாமிகள் மடத்தில் இந்த வழக்கம் தினமும் பின்பற்றப்படுகிறது. அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பு ஒரு கன்னிப்பெண் 5 முகம் ஏற்றிய தீபத்தை கையில் ஏந்திவர அவர்களுடன் எல்லோரும் சேர்ந்து, தீபஜோதியே வருவாய் என்று பாடிக்கொண்டு ஆஸ்ரமத்தை வலம் வருவார்கள்.
திருவிளக்கு தந்த அரச பிறவிஷ
வேதாரண்யம், வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் விளக்கு சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தபொழுது விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யை உண்ணுவதற்காக சென்ற எலி தன முக்கினால் திரியை அப்பால் நகர்த்திவிட தீபம் சுடர்விட்டு எரிந்ததாம். எலியின் செயல் எப்படியிருந்தபோதும், தீபம் சுடர்விட்டு எரியச் செய்த கைங்கரியத்திற்காக அந்த எலியை இறைவன் அடுத்த பிறவியில் மகாபலி சக்கவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்று அப்பர் சுவாமிகள் தனது திருக்குறுகை பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் எழுதியுள்ளார்.
முதலை உணர்த்திய விளக்குத் தத்துவம்
முற்காலத்தில் சாப்பிடும்போது விளக்கு அணைந்தால் அத்துடன் எழுந்து விடுவது வழக்கம். இதற்கு எடுத்துக்காட்டா ஆதிசங்கரர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.
ஆதிசங்கரர் சிறுவனாக இருந்த போது ஆற்றுக்குச் சென்றார். அப்போது இரவுக் காலம். அவருடைய காலை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. அப்போது என் தாயாரிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு சங்கரர் அன்னையிடம் வந்து நடந்ததைக் கூறினார்.
சங்கரர் ஆற்றிற்குத் திரும்பியபோது அவர் அன்னை ஒரு எரிகிற விளக்கை மரக்காலுக்குள் மறைத்துக்கொண்டு வந்தாள். முதலை சங்கரரின் காலைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. பின்னால் நின்ற அன்னை மூடியிருந்த விளக்கை திடீரென்று வெளியே காட்டி உடனே அணைத்து விட்டார். தீய சகுணம் ஏற்பட்டு விட்டதால் முதலை அவரை உண்ணாமல் விட்டது. சங்கரர் உயிர் தப்பினார்.
அகண்ட தீபம்
அகண்ட தீபம் என்பது எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் நிரம்ப விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வதைக் குறிக்கும். இந்தச் சிறப்பு வழிபாடு திருநெல்வேலி, நெல்லையப்பர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
கோடி தீபம்
ஆலயங்களில் உலக நன்மைகாக குறிப்பிட்ட காலத்திற்குள் கோடி தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டு, வரும் பக்தர்களைக் கொண்டு கோடிதீப ஏற்றுவதுண்டு. இதுபோன்று கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனுக்கு உலக நன்மைக்காக கோடி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
- பாரம்பரிய உடையணிந்து, மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவர்.
- நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும்.
மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில், 'துர்க்கா பூஜை' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எருமைத் தலை கொண்ட மகிஷாசுரனை, துர்க்கா தேவி வதம் செய்து வெற்றி கொண்ட தினமான விஜயதசமி, மேற்குவங்காள மக்களின் முக்கியமான திருவிழாவாகும்.
விநாயகர் சதுர்த்தியைப் போன்று. இந்த விழாவின் போது, மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன்கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும். நவராத்திரி விழாக்களின் போது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மாநில மக்கள். பாரம்பரிய உடையணிந்து, மாலை நேரத்தில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள்.
இந்த நவராத்திரி நாட்களில் வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும். பத்தாம் நாளில், நவராத்திரி கொலு வைக்கப்பட்ட துர்க்கை சிலைகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பின்னர் அதனை கடலில் கரைப்பார்கள்.
- வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.
நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.
அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.
அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும்.
இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும்.
அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.
இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும் என்றார்.
இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.
கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள்,
அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.
இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும்
மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.
மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.
- கவுமாரி - மயில்
- நரசிம்மி - சிங்கம்
இந்திராணி - யானை
வைஷ்ணவி - கருடன்
மகேஸ்வரி - ரிஷபம்
கவுமாரி - மயில்
வராகி - எருமை
அபிராமி - அன்னம்
நரசிம்மி - சிங்கம்
சாமுண்டி - பூதம்
- அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
- ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.
இந்தப் பெயர்களை சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி- நோய் தீரும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,
அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.
கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.
- இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.
- அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.
நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.
இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.
புதன் கல்வி ,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.
அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.
இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும்
புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.
புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.
(சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு) கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.
அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை
கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.
- வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
- பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூஜை செய்தல் வேண்டும்.
வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும்
பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று
காலை ஒன்பது மணிக்கு முன் பாறணை செய்தல் வேண்டும்.
இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவு பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து
நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்த,
குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.
தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.
இவ்விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள்
சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள்
என்று காரணாகமம் கூறுவதாக சொல்லப்படுகின்றது.
- திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.
- கடின உழைப்பாளிகள் உழைப்பின் பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
நவராத்திரி முதலாம் நாள் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.
அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.
திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.
அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள்.
சர்வ மங்களம் தருபவள்.
தர்மத்தின் திருவுருவம்.
கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
முதல் நாள் நைவேத்தியம்:- புளியோதரை.
- தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
- சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.
மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.
தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
ஓங்கார சொரூபமானவள்.
சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
வீரத்தை தருபவள்.
இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.
- இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
- சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.
நவராத்திரி மூன்றாம் நாள் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும்.
வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.
சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.
பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.
தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.
இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- தயிர்சாதம்.






