search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishes"

    • மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுகள் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை நகரின் அடை யாளமாக மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் மக்களின் பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது. வருடம் முழுவதும் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தெப்பக்கு ளத்தில் நிரப்பப்பட்டு வருகிறது.

    அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப் பட்டு நிரப்பப்பட்டது. இதன் காரணமாக தெப்பக் குளம் முழுவதுமாக நிரம்பி பிரம்மியாக காட்சி யளிக்கி றது. ஆனால் வைகை ஆற்றில் இருந்து வந்த தண்ணீரில் கழிவுநீரும், குப்பைகளும் கலந்தி ருந்ததால் தெப்பக்குளத்தில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தண்ணீர் சுகாதாரமின்றி இருப்பதால் தெப்பக் குளத்தில் மீன்கள் இறந்து கிடந்தன. கடும் துர் நாற்றத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட் டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தெப்பக்குளத்தில் மிதந்த கழிவுகளை ஊழியர்கள் படகில் சென்று அகற்றினர். முக்கியத்துவம் வாய்ந்த தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காமல் துர்நாற்றம் வீசுவதை தடுத்து சுகாதாரமாக வைத்து கொள்ள நடவ டிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதியில் இயங்கி வரும் தினசரி மீன் மார்க்கெட்டில் பார்மலின் எனும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படு வதாக உணவு பாது காப்புத்துறை அதிகாரி களுக்கு புகார் வந்தது.

    இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராஜ், மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், மீன்வள சார் ஆய்வாளர் அய்யனார் மற்றும் அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதனால் மீன் வியாபாரிகள், அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் நடத்திய சோதனையில் பார்மலின் எனும் ரசாயனம் மீன்களில் கலக்கப்பட வில்லை என உறுதி செய்தனர். மேலும் கெட்டுப்போ ன 12 கிலோ மீன்களை கண்டறிந்து அதனை பினாயில் ஊற்றி அழித்தனர். இது போன்ற கெட்டுப்போன மீன்களை வாங்கி விற்க வேண்டாம் என மீன் வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள் அனைவரும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்றும் இதுபோல ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்து சென்றனர்.இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

    • சங்கரா மீன் கிலோ ரூ.200 முதல் 300-க்கு விற்பன செய்யப்பட்டது.
    • மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால் விலை குறைந்தது.

    தஞ்சாவூர்,

    தஞ்சை கொண்டிராஜபா ளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் மீன்கள் வாங்க அதிகளவில் கூட்டம் இருக்கும்.

    இந்த நிலையில் இன்று உள்ளூரில் பிடிக்கப்பட்ட உயிர் மீன்கள் மற்றும் நாகை, ராமேஸ்வரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால் அவற்றின் விலையும் கணிசமாக குறைந்தது.

    சங்கரா மீன் கிலோ ரூ.200 முதல் 300-க்கு விற்பன செய்யப்பட்டது.

    இதேப்போல் இறால் கிலோ ரூ.250, நண்டு ரூ.250 முதல் 300-க்கும், கெண்டை மீன் ரூ.150, கிழங்கா ரூ.150-க்கு விற்பனையானது. மீன்களில் விலை குறைவாக இருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது .

    காலையில் மழை பெய்தாலும் பொருட்படுத்தாமல் மக்கள் ஏராளமானோர் வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

    இதனால் மீன் மார்க்கெட் பரபரப்பாக இயங்கியது.

    • மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் வரத்து அதிகரிப்பு
    • ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.700-க்கு விற்பனை

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உக்கடம் பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான மீன்கள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    எனவே உக்கடம் சந்தைக்கு தினமும் 3 டன்கள் மட்டுமே மீன்கள் வந்தன. இதனால் உக்கடம் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1000-க்கு விற்பனை ஆனது. இதேபோல பாறை-ரூ.400- க்கு விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தமிழகம், கேரளாவில் தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்து உள்ளது. எனவே மீனவர்கள் மறுபடி யும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகம், கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தததால் கோவை உக்கடம் மார்க்கெட்டுக்கு தினமும் 15 டன் என்ற அளவில் மீன்களின் வரத்து அதிகரித்து உள்ளது.

    இதன்கா ரணமாக அங்கு மீன்களின் விலை தற்போது கணிசமாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உக்கடம் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மீன்களின் விலை விவரம் (ஒரு கிலோ): வஞ்சிரம்-ரூ.700, பாறை-ரூ.200, கருப்பு வாவல்-ரூ.400, வெள்ளை வாவல்-ரூ.600, ஊழி-ரூ.150, மத்தி-ரூ.100, நெத்திலி-ரூ.150, சங்கரா-ரூ.180, செம்மீன்-ரூ.300.

    • ரசாயன கழிவுகள் ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ரயில்வே இருப்புப் பாதை அருகே புட்லூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியும் நீரை கொண்டு 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது

    இந்த புட்லூர் ஏரிக்கு அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்பட்டு மழைக் காலங்களில் மழை நீருடன் கலந்துவிடுவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக ஆண்டுதோறும் கனமழை பெய்யும் வேலைகளில் ரசாயன கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்டு ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக மழை நீருடன் ரசாயனக் கலவையையும் புட்லூர் ஏரியில் விடப்பட்டதால் சுமார் 5 டன்னுக்கும் மேலான மீன்கள் ஏரியில் செத்துமிடந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் புட்லூர் ஏரியைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூண்டில் மற்றும் வலைவீசியும் மீன் பிடித்து வருகின்றனர்.
    • கொசஸ்தலை ஆற்றில் காணப்படும் மீன்கள் நன்கு வளர்ச்சியடைந்து 5 கிலோவுக்கும் மேல் சிக்குகிறது.

    பொன்னேரி:

    தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. பல இடங்களில் 105 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. பருவமழையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்தது. தற்போது கோடைகாலம் என்பதால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த நாப்பாளையம் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர்குறைந்து காணப்படுவதால் மீன்பிடித் தொழில் அதிகமாக நடைபெறுகிறது. ஏராளமான மீனவர்கள் வலை வீசி மீன்பிடித்து வருகிறார்கள். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூண்டில் மற்றும் வலைவீசியும் மீன் பிடித்து வருகின்றனர்.

    மீனவர்களின் வலையில் ஜிலேபி, சொட்டைவாளை, கெழுத்தி கெண்டை, விரால், இறால் உள்ளிட்ட மீன்கள் அதிக எடையுடன் கிடைத்து வருகிறது. சுமார் ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இவை கிலோ ரூ.500 வரை விற்கப்படுகிறது.

    சாதாரண வகை மீன்கள் கிலோ ரூ.200 முதல் ரூ.300-க்கும், விரால் மீன் கிலோ ரூ.500-க்கும், நன்னீர் இறால் ரூ. 800 முதல் ரூ.1000 வரையும் விற்பனை ஆகிறது. ஆற்றுமீனை ஏராளமனோர் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் மீன்வியபாரம் களை கட்டி வருகிறது.

    இதுகுறித்து மதூர் கிராமத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி புலிமணி கூறும்போது, நான் கடந்த 10 வருடத்திற்கு மேலாக ஆறு, ஏரி குளங்களில் மீன் பிடித்து வருகிறேன். தற்போது கொசஸ்தலை ஆறு, நாப்பாளையம், சிம்மாவரம், காரனோடை, பகுதிகளில் வலை போட்டு மீன் பிடிக்கிறேன். கொசஸ்தலை ஆற்றில் காணப்படும் மீன்கள் நன்கு வளர்ச்சியடைந்து 5 கிலோவுக்கும் மேல் சிக்குகிறது. விரால் மற்றும் இறால், மீனுக்கென்று தனி மவுசு உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மீன் விற்பனை ஆகிறது. ஏராளமானோர் ஆற்று மீன்களை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றார்.

    • ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது.
    • சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சேலம் மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், திருமணிமுத்தாறு வழியாக வந்தடைகிறது.

    சமீபத்தில் பெய்த கன மழையால் சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலத்தில் இருந்து வந்த தண்ணீரில் சாயக் கழிவு அதிக அளவில் வந்ததால் மீன்கள் செத்தனவா? அல்லது மர்ம நபர்கள் யாராவது ஏரி தண்ணீரில் விஷம் கலந்தனரா? என்று தெரியவில்லை. எப்படி மீன்கள் செத்தென என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை

    விடுத்துள்ளனர். 

    • பள்ளபாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பள வுள்ள குளம் உள்ளது.
    • நேற்று இந்த குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பள்ளபாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பள வுள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் மீன்கள் வளர்த்து பிடித்து விற்பனை செய்து கொள்வதற்காக, ஒவ்வொரு வருடமும் கபிலர்மலை யூனியன் அலுவலகம் மூலம் டெண்டர் விடப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு குளத்தில் மீன்கள் வளர்ந்து பிடிக்க ரூ. 60 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை எடுத்தவர், சிறுநல்லிக் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவருக்கு அதை கொடுத்துள்ளார். இதையடுத்து ராஜூ சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு வளர்த்து மீன்பிடித்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று இந்த குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்த மீன்பிடி குத்த கைதாரர், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு கலை யரசன், ஜேடர்பாளையம் மீன்வளத்துறை ஆய்வாளர் கோகிலவாணி மற்றும் மாவட்ட தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் வடிவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    மர்மநபர்கள் யாராவது குளத்தில் விஷம் கலந்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஜேடர்பா ளையம் அருகே கரப்பாளை யத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா, கடந்த மார்ச் 11-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு அப்ப குதி விவசாய சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், நித்யாவின் உறவினர்கள் மற்றும் அவ ரது சமூகத்தை சேர்ந்த வர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது குளத்தில் மீன்கள் திடீரென செத்து மிதக்கும் சம்பவம், இப்பகுதியினரி டையே மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பதட்டமான சூழ்நிலையில் உள்ள இந்த பகுதியை அமைதியான சூழ்நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது
    • நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன.

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டப் பட்டுள்ளது. இந்த கதவணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று வலைகளை விரித்து பிடித்துக் கொண்டு வந்து வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மீன்கள் வரத்து சீராக இருப்பதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை மீன் 110 ரூபாய், விறால் மீன் 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன. மீன்களை வாங்க கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், மணவாசி, சேங்கல், பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது.
    • மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மீன்களும், நண்டு, இறால்களும் கிடைக்கும்.

    இதில் எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம். காட்டுகுப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. தொழிற்சாலை கழிவு நீரை ஆற்றில் கலந்ததால் இந்த மாசு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.

    இதற்கிடையே நேற்று மாலை கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மீன்கள் இறப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அதிகாலை 2 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்று விட்டு காலை 8 மணிக்கு வெளியே வருகின்றனர்.
    • மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு முழுக்க முழுக்க மீனவர்களே வசிக்கும் கிராமம் ஆகும். இங்குள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள்.

    மற்ற நாட்களில் அதிகாலை 2 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்று விட்டு காலை 8 மணிக்கு வெளியே வருவதும், ஒரு நாள் முன்னதாக மாலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மறு நாள் காலையில் வெளியே வருவதும், ஒரு சில நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து வருவது என மூன்று பிரிவாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    நாட்டுப் படகு, கட்டுமரம் பயன்படுத்தி தான் அதிகமான மீன்களை இப்பகுதி மக்கள் பிடித்து வருகின்றனர். உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ளமக்கள் கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மணப்பாடுகடற்கரைக்கு காலையிலே வந்துமீன்களை வாங்கி செல்கின்றனர்.

    கடலில் மீன்களை பிடித்து கரைக்கு கொண்டு வந்து உடன் கடற்கரையில் வைத்து ஏலம் போடுவார்கள். ஏலம் போட்ட பின்புதான் மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ்கட்டிகள் போடுவார்கள். மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.

    இதுபற்றி கடற்கரைக்கு மீன் வாங்க வந்த ஒருவர் கூறியதாவது:-

    அசைவ உணவுகளில் மிகவும் சத்தானது மீன்கள் மட்டும் தான். வீதி வீதியாக விற்பனைக்கு வரும் மீன்கள் ஐஸ் கட்டிகளைப் போட்டு பதப்படுத்தி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் இங்கு வந்து வாங்கினால் மணப்பாடு கடலில் பிடித்து வரும் மீன்கள் உயிரோட்டம் உள்ளதாக இருக்கும்.

    மேலும் மணப்பாடு மீன்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. சுவையுண்டு, வாசனை உண்டு. அதனால் தான் நானே சாத்தான்குளத்தில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு இங்கு வந்துள்ளேன். நான் எனது நண்பர்கள் என பலர் சேர்ந்து மீன்களை மொத்தமாக வாங்கி பிரித்து எடுத்து கொள்வோம். மேலும் ஒரு சில நாளில் கனமழை எச்சரிக்கை இருப்பதால் இன்றே மீன்கள் வாங்க வந்து விட்டோம் என்று கூறினார்.

    கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வதற்கு வந்திருந்தனர். இருந்தாலும் சுற்றுப்புற பகுதி கிராமமக்களுக்கு மீன்களை விற்பனை செய்வதில் மணப்பாடு மீனவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

    • தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
    • படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபத்த நாயனார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் மீனை தினமும் சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம்.

    இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் இவரது வலையில் தங்கமீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார்.

    அதிபத்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.

    அதிபத்தநாயனாரின் பக்தியை மெச்சிக்கும் விழா நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெறுவது வழக்கம்.

    தங்க மீன் படைக்கும் விழா நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரையில் நடைபெற்றது.

    நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.

    மீன்களுடன் கரை திரும்பிய சிவனடியார்கள் கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு அதிபத்தநாயனார் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை வைத்து படையல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.

    ×