search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெண்ணந்தூர் அருகே சேவூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
    X

    ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதை படத்தில் காணலாம்.

    வெண்ணந்தூர் அருகே சேவூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

    • ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது.
    • சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சேலம் மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், திருமணிமுத்தாறு வழியாக வந்தடைகிறது.

    சமீபத்தில் பெய்த கன மழையால் சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலத்தில் இருந்து வந்த தண்ணீரில் சாயக் கழிவு அதிக அளவில் வந்ததால் மீன்கள் செத்தனவா? அல்லது மர்ம நபர்கள் யாராவது ஏரி தண்ணீரில் விஷம் கலந்தனரா? என்று தெரியவில்லை. எப்படி மீன்கள் செத்தென என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை

    விடுத்துள்ளனர்.

    Next Story
    ×