search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புட்லூர் ஏரியில் 5 டன்னுக்கும் மேலாக மீன்கள் செத்து மிதக்கும் அவலம்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    புட்லூர் ஏரியில் 5 டன்னுக்கும் மேலாக மீன்கள் செத்து மிதக்கும் அவலம்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    • ரசாயன கழிவுகள் ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ரயில்வே இருப்புப் பாதை அருகே புட்லூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியும் நீரை கொண்டு 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது

    இந்த புட்லூர் ஏரிக்கு அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்பட்டு மழைக் காலங்களில் மழை நீருடன் கலந்துவிடுவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக ஆண்டுதோறும் கனமழை பெய்யும் வேலைகளில் ரசாயன கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்டு ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக மழை நீருடன் ரசாயனக் கலவையையும் புட்லூர் ஏரியில் விடப்பட்டதால் சுமார் 5 டன்னுக்கும் மேலான மீன்கள் ஏரியில் செத்துமிடந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் புட்லூர் ஏரியைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×