search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stench"

    குடோனை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் தவ்லத் நகர், தண்டபாணி நகர், தவ்லத் நகர் விரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள குடோனுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை இறக்கி வைக்கும் போது தானியங்கள் சிதறி கீழே விழுகின்றன. மேலும், மழைக்காலங்களில் குடோனை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதால், ஏற்கனவே சிதறி கிடந்த பருப்பு, அரிசி அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நுகர்பொருள் வாணிபக் கழகத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் குடோனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று காலை மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திரண்டு சென்றனர். அங்கிருந்த அதிகாரிகளிடம், அழுகி கிடக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதால் உடனே குடோனை இடமாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அப்போது அங்கிருந்து அதிகாரிகள் மண்டல மேலாளர் இல்லாததால் திங்கட்கிழமை வந்து மண்டல மேலாளரை சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்படி கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், அதிகாரிகளை அழைத்துச் சென்று மழை நீர் தேங்கி நிற்பதையும், அதில் அழுகி கிடக்கும் அரிசி, பருப்புகளில் இருந்து அதிக அளவில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதையும் காண்பித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ரோட்டோரங்களில் அழுகிய நிலையில் முட்டைகள் குவியல் குவியிலாக கொட்டப்பட்டு வருகிறது.
    • அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் சுங்கச்சாவடி அருகில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரங்களில் அழுகிய நிலையில் முட்டைகள் குவியல் குவியிலாக கொட்டப்பட்டு வருகிறது.

    மேலும் அங்கு பல்வேறு கழிவுகளும் வீசப்படுவதால் அந்த வழியே செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்த அழுகிய முட்டைகள் அருகில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து வீசப்படுகிறதா? அல்லது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகங்களில் இருந்து கொண்டு வந்து போடுகின்றனரா? என்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    • மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுகள் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை நகரின் அடை யாளமாக மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் மக்களின் பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது. வருடம் முழுவதும் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தெப்பக்கு ளத்தில் நிரப்பப்பட்டு வருகிறது.

    அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப் பட்டு நிரப்பப்பட்டது. இதன் காரணமாக தெப்பக் குளம் முழுவதுமாக நிரம்பி பிரம்மியாக காட்சி யளிக்கி றது. ஆனால் வைகை ஆற்றில் இருந்து வந்த தண்ணீரில் கழிவுநீரும், குப்பைகளும் கலந்தி ருந்ததால் தெப்பக்குளத்தில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தண்ணீர் சுகாதாரமின்றி இருப்பதால் தெப்பக் குளத்தில் மீன்கள் இறந்து கிடந்தன. கடும் துர் நாற்றத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட் டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தெப்பக்குளத்தில் மிதந்த கழிவுகளை ஊழியர்கள் படகில் சென்று அகற்றினர். முக்கியத்துவம் வாய்ந்த தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காமல் துர்நாற்றம் வீசுவதை தடுத்து சுகாதாரமாக வைத்து கொள்ள நடவ டிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சேறும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் மணவாளன் நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டிவந்தனர்.

    ஆனால் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்பட்டு பின்னர் வெங்கத்தூர், கன்னிமாநகர் பகுதியில் பள்ளி அங்கன்வாடி குடியிருப்புகள் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது.

    இதில் தினம்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் மலை போல் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை தற்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைத்து கொட்டப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான டிராக்டர்கள் மூலம் கொட்டப்படும் கழிவுகள் சாலையோரம் குவிந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனம் மற்றும் பொது மக்கள் சென்று வரும் நிலையில் குப்பை கழிவுகளால் தொற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கழிவுகளில் பிளாஸ்டிக், தெர்மாகோல், மெத்தை, முட்டை கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கால் நடைகள், நாய்கள் அதனை இழுத்து சாலையில் போட்டு சென்று விடுகின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குப்பை கழிவுகளில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    எனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்
    • காட்டுபன்றியை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊணை வாணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டு பாதுகாத்து வருகின்றார்.

    இந்தநிலையில் நேற்று நிலத்திற்கு சென்றார். அப்போது துர்நாற்றம் வீசியது. அருகே சென்று பார்த்தபோது ஆண் காட்டுபன்றி இறந்து கிடந்தது தெரிந்தது.

    இதுகுறித்து ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

    வனத்துறையினர் இறந்து கிடந்த பன்றியின் உடலை மீட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பினர். பின்னர் காட்டுபன்றியை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்.

    • தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
    • மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    சென்னை:

    சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் சமீபத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டது. பெரும்பாலான தெருக்களில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்ட நிலையில் சில இடங்களில் இன்னமும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.

    இந்த பணிகள் காரணமாக சில தெருக்களில் கழிவுநீர் தேங்கும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக முகப்பேர் கிழக்கில் உள்ள நக்கீரன் சாலை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த தெருவில் சுமார் 3 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளன. அந்த தெரு மக்கள் கழிவுநீர் மீதுதான் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் தொடங்கப்பட்ட போது பல தெருக்களில் இதே பிரச்சினை ஏற்பட்டது. கழிவுநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.

    என்றாலும் நக்கீரன் சாலையில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்தது இன்னமும் சரி செய்யப்படவில்லை. மேலும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மழைநீர் கால்வாயில் விடப்படுவதால் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து முகப்பேர் கிழக்கு பகுதியில் பல தெருக்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கும் நிலை நீடிக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    புகார்கள் தெரிவிக்கப்படும் தெருக்களுக்கு அதிகாரிகள் வராமலேயே புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக ஆன்லைனில் தெரிவிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

    குடிநீர் வாரிய அதிகாரிகள் பெரும்பாலான தெருக்களில் தேங்கி உள்ள நீரை அகற்றுகிறார்கள். என்றாலும் அவர்களால் முழுமையாக பணி செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    முகப்பேர் கிழக்கில் 92, 93-வது வார்டுகளில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது. பழுதடைந்த கழிவுநீர் குழாய்கள் இன்னும் 3 நாள் முதல் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    • கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    வடகிழக்கு பருவமழையில் புழல் ஏரி நிரம்பும்போது கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்படும். அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்படும்போது கொசஸ்தலை ஆற்றின் கரையோர குடியிருப்புகளில் புகுந்து பலத்த சேதமும் ஏற்படும்.

    இந்நிலையில் புழல் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திருவள்ளூர் நகர பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    கடந்த வாரம் நாரவாரி குப்பம் ஊராட்சியை சேர்ந்த லாரி ஒன்று புழல் நீர்தேக்கப்பகுதியில் கழிவுகளை கொட்டியதால் சுமார் 250 மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது. இந்நிலை நீடித்தால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்போது கழிவுகளும் அடித்து செல்லப்பட்டு குடியிருப்புகளுக்குள் வர வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து மாதவரம் குடியிருப்பு நலசங்க தலைவர் நீலகண்ணன் கூறும்போது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதேநிலை தான் நீடிக்கிறது. 2019-ல் இப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. பிறகு மீண்டும் இப்பகுதி குப்பை கூடமாக மாறியது. 2020-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுபணித் துறைக்கு நீர்தேக்கத்தை தூர்வாரி அப்பகுதியை சுற்றி வேலி அமைக்க உத்தரவிட்டது. நாரவாரி குப்பம் பஞ்சாயத்து அதிகாரிகள் குப்பைகளை தரம் பிரிக்கும் பகுதி அருகே ஒரு மயானம் உள்ளது. தற்போது அவர்கள் நீர்தேக்கத்தின் அருகிலேயே கழிவுகளை கொட்டுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் இரவு நேரங்களில் தான் கழிவுகளை கொட்டுகின்றனர் என்றார்.

    இதுகுறித்து நாரவாரி குப்பத்தின் நிர்வாக அதிகாரி கூறும்போது, கழிவுகளை அகற்ற வேறு இடங்களை தேடி வருகிறோம். இதற்கான இடம் பாடிய நல்லூரில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
    • நோய் தொற்று பரவும் அபாயம்

    செங்கம்:

    செங்கம் பகுதியில் பொதுமக்களின் நீர்ஆதாரமாக விளங்கும் செய்யாற்றில் தற்போது நீர்வரத்து இல்லை.

    நகரில் பல்வேறு இடங்களில் இருந்து கழிவு நீர் கால்வாய்கள் மூலம் செய்யாற்றில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. குளம் போல் செய்யாற்றில் கழிவுநீரும், மலை போல் குப்பைகளும் தேங்கியுள்ளது.

    இந்த நிலையில் செய்யாறில் குளம் போல் தேங்கி ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரில் பன்றி ஒன்று செத்து மிதந்து கிடக்கிறது.

    இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செய்யாற்றில் செத்து மிதக்கும் பன்றியை அப்புறப்படுத்தி, செய்யாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், அதேபோல் அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளதை அகற்றி சுகாதாரம் பேணி காத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சுழியில் சாலையில் தேங்கும் குப்பைகள், கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகரில் பொதுமக்கள் வந்து போகும் முக்கிய இடங்களாக சார்பதி வாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது.

    திருச்சுழி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரிலுள்ள போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கு வதால் அதிலிருந்து துர்நாற் றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வீசும் காற்று காரணமாக கொட்டப்படும் குப்பைகளா னது அங்கும் இங்குமாக சிதறி காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பை கள் மற்றும் கழிவுநீர் வாறு காலில் தேங்கி வருவதுடன் அங்கிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் மேற்படி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அதனை கண்டு முகம் சுளிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கடும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இது போன்ற குப்பைத்தொட்டி இல்லாத திருச்சுழி நகரின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைத்து குப்பைகள் தேங்காத வண்ணம் ஊராட்சி ஊழி யர்கள் மூலமாக நாள்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்சுழி ஊராட்சி நிர்வாகத்திற்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரசாயன கழிவுகள் ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ரயில்வே இருப்புப் பாதை அருகே புட்லூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 6 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியும் நீரை கொண்டு 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது

    இந்த புட்லூர் ஏரிக்கு அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்பட்டு மழைக் காலங்களில் மழை நீருடன் கலந்துவிடுவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக ஆண்டுதோறும் கனமழை பெய்யும் வேலைகளில் ரசாயன கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்டு ஏரியில் கலக்கப்படுவதால் டன் கணக்கான மீன்கள் செத்து நீரில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக மழை நீருடன் ரசாயனக் கலவையையும் புட்லூர் ஏரியில் விடப்பட்டதால் சுமார் 5 டன்னுக்கும் மேலான மீன்கள் ஏரியில் செத்துமிடந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் புட்லூர் ஏரியைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் துர்நாற்றதால் அவதிப்பட்டு வருகின்றனர். மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நோயாளிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஏராளமான நாய்கள் மருத்துவமனையை சுற்றி வருகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் பெண்கள் வார்டில் நாய்கள் மலம் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

    அசுத்தம் உள்ள பெண்கள் வார்டில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கடந்த மாதங்களில் பெய்த மழையினால் இந்த குளம் நிரம்பியது.
    • குறிப்பாக நன்கு வளர்ந்த நிலையில் இருந்த விரால், ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் இறந்து போயின.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சி முதலியார்பேட்டை கிராமத்தில் ஊருக்கு நடுவில் குளம் உள்ளது. கடந்த மாதங்களில் பெய்த மழையினால் இந்த குளம் நிரம்பியது. இந்த நீரில் பல்வேறு வகையான மீன்கள் தானாகவே வளர்ந்தன. இந்நிலையில் சித்திரை மாதம் கடுமையான வெயில் அடித்தது. சில தினங்களுக்கு முன்பாக சூறாவளி காற்றுடன் வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது. இதில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக குளத்தில் வளர்ந்திருந்த மீன்கள் இறந்து மிதந்தன.

    குறிப்பாக நன்கு வளர்ந்த நிலையில் இருந்த விரால், ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் இறந்து போயின. இவைகள் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் முதலியார்பேட்டை கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அங்குள்ள வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இருந்தபோதும் இதுநாள் வரையில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள் அப்புறப்படு த்தப்படவில்லை. இதனால் இக்கிராமத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி, புதிய நீரை குளத்தில் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலியார்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×