search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தேங்கும் குப்பைகள்- கழிவு நீரால் கடும் துர்நாற்றம்
    X

    சாலையோரம் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்.


    சாலையில் தேங்கும் குப்பைகள்- கழிவு நீரால் கடும் துர்நாற்றம்

    • திருச்சுழியில் சாலையில் தேங்கும் குப்பைகள், கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகரில் பொதுமக்கள் வந்து போகும் முக்கிய இடங்களாக சார்பதி வாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது.

    திருச்சுழி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரிலுள்ள போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கு வதால் அதிலிருந்து துர்நாற் றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வீசும் காற்று காரணமாக கொட்டப்படும் குப்பைகளா னது அங்கும் இங்குமாக சிதறி காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பை கள் மற்றும் கழிவுநீர் வாறு காலில் தேங்கி வருவதுடன் அங்கிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் மேற்படி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அதனை கண்டு முகம் சுளிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கடும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இது போன்ற குப்பைத்தொட்டி இல்லாத திருச்சுழி நகரின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைத்து குப்பைகள் தேங்காத வண்ணம் ஊராட்சி ஊழி யர்கள் மூலமாக நாள்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்சுழி ஊராட்சி நிர்வாகத்திற்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×