search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durga puja"

    • பாரம்பரிய உடையணிந்து, மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவர்.
    • நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும்.

    மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில், 'துர்க்கா பூஜை' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எருமைத் தலை கொண்ட மகிஷாசுரனை, துர்க்கா தேவி வதம் செய்து வெற்றி கொண்ட தினமான விஜயதசமி, மேற்குவங்காள மக்களின் முக்கியமான திருவிழாவாகும்.

    விநாயகர் சதுர்த்தியைப் போன்று. இந்த விழாவின் போது, மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன்கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும். நவராத்திரி விழாக்களின் போது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மாநில மக்கள். பாரம்பரிய உடையணிந்து, மாலை நேரத்தில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள்.

    இந்த நவராத்திரி நாட்களில் வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும். பத்தாம் நாளில், நவராத்திரி கொலு வைக்கப்பட்ட துர்க்கை சிலைகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பின்னர் அதனை கடலில் கரைப்பார்கள்.

    • 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு துர்கா பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
    • 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜா விழாவில் 9 நாட்கள் விரதமிருந்து 10-வது நாள் துர்கா சிலையை கடலில் கரைப்பார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றன.

    மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் ஒருங்கிணைந்து மாதூகா நார்ய சக்தி என்ற பெயரில் ஆன்மீக அமைப்பை நடத்தி வருகின்றனர்.

    இதன் சார்பில் ஆண்டுதோறும் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜா விழாவில் 9 நாட்கள் விரதமிருந்து 10-வது நாள் துர்கா சிலையை கடலில் கரைப்பார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விழா கொண்டாடப்படவில்லை.

    2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு துர்கா பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது. 9 நாட்களும் விரதம் இருந்து தினமும் பல்வேறு பூஜைகளை முடித்த பெண்கள் வேனில் துர்கா சிலையை வைத்து ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு வந்தனர். வடமாநில இசையுடன் ஆண்கள் துர்க்கா சிலையை கடலில் கரைத்தனர்.

    • துர்கா பூஜைக்காக 3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவி பெறுவார்கள்.

    கொல்கத்தா:

    துர்கா பூஜையை முன்னிட்டு கடந்த ஆண்டு அனைத்து பூஜை குழுவினருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்கு முந்தின ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக இந்த தொகையை மம்தா பானர்ஜி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச உரிமங்கள் மற்றும் 50 சதவீத மின் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்டவையும் கடந்த ஆண்டு சலுகைகளாக அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும்.

    3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவி பெறுவார்கள் என அறிவித்துள்ளார்.

    துர்கா பூஜைக்கு அரசுப் பணம் 28 கோடி ரூபாயை அளிக்கும் மேற்கு வங்காளம் மாநில அரசின் முடிவு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #WBgovernment #DurgaPujaCommittees
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை  மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது.

    இந்த சலுகை அறிவிப்பின் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மம்தா பானர்ஜியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.


    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மம்தா பானர்ஜி அறிவிப்பு விவகாரத்தில் தலையீடு செய்ய இயலாது. உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்ததுடன் நேற்று முன்தினம் வழக்கை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் சவுரவ் தத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரரின் கோரிக்கையின்படி, துர்கா பூஜை குழுக்களுக்கு பணம் அளிக்க தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை நிராகரித்துவிட்ட நீதிபதிகள் இவ்விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்காளம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.  #SC  #WBgovernment #DurgaPujaCommittees
    மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை செய்யும் குழுக்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க கோர்ட் தடை விதித்திருப்பதால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். #BJP #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை வழிபடுவதற்கு பல்லாயிரக்கணக்கான குழுக்கள் அமைக்கப்படுவது உண்டு.

    இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை கொண்டாட மாநில முழுவதும் 28 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த குழுக்கள் தங்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

    மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதை ஏற்று துர்கா பூஜை குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். ஒவ்வொரு குழுவுக்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்ய தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.

    துர்கா பூஜை குழுக்களுக்கு உதவுவதால் மேற்கு வங்க அரசுக்கு ரூ.28 கோடி செலவிடப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து துர்கா பூஜை குழுக்கள் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    துர்கா பூஜைக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படுவதற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த வக்கீல் சவுரப் தத்தா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது துர்கா பூஜைக்கு அரசு சார்பில் நிதி உதவி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    செவ்வாய்க்கிழமை வரை இது தொடர்பாக எந்த வித அடுத்தக்கட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்க மாநில பா.ஜ.க.வும் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்றுள்ளது. மம்தாபானர்ஜி வேண்டுமென்றே இந்துக்கள் வாக்குகளை பெறுவதற்கு இப்படி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டார். அவருக்கு கோர்ட்டு தக்க பாடம் அளித்துள்ளது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள். #BJP #MamataBanerjee
    ×