search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mutton biryani"

    • அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்
    • மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

    கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "ஒரு திரைப்படத்தில் வடிவேல், 'நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்' என கத்துவது போல, நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி கொண்டு உள்ளது.

    திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம், அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு, ஆட்டுக்குட்டி எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம், ஆனால் இந்த தேர்தலுக்கு பின் கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி.

    அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இதை நான் சொல்லவில்லை பாஜகவின் மத்திய நிதியமைச்சர் ஆன நிர்மலா சீதாராமன் கணவரே சொல்லியிருக்கிறார்.

    மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி கூறினால் எடப்பாடியும் ரோட் ஷோ நடத்துங்கள் என்று கூறுகிறார்கள். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்றால் குரங்கு தான் வித்தை காட்ட முடியும். எங்கள் தலைவர் சிங்கம் மாதிரி இருப்பதால் தலைவர் இருக்கும் இடத்திற்கே கூட்டம் தேடி வரும். ஆனால் பாஜகவினர் கூட்டம் இருக்கும் இடத்தை பார்த்து தேடிப்போய் கூட்டம் நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • காஷ்மீரி மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது.
    • பிரியாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    ஆட்டு இறைச்சி புரதச்சத்து நிறைந்தது. இதனை உணவோடு சமைத்து சாப்பிடும்போது கூடுதல் சுவையை தரும். விழா காலங்களில் மட்டன் பிரியாணி சமைத்து சாப்பிட்டிருப்போம். காஷ்மீரி மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது. இது பிரியாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சமையல் பொருட்கள் எல்லாமே பிரியாணிக்கு போடுவதை போலத்தான் இருக்கும் இருந்தாலும் செய்முறை கொஞ்சம் மாறுபட்டது.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் சாறு தயாரிக்க:

    ஆட்டு இறைச்சி கிலோ

    பெரிய வெங்காயம் - 1

    பூண்டு 6 பல்

    தண்ணீர் - 14 லிட்டர்

    சோம்பு - 2 டீஸ்பூன்

    கருப்பு ஏலக்காய் - 3

    பச்சை ஏலக்காய் 6

    கிராம்பு - 5

    மிளகு - ஒருடீஸ்பூன்

    ஜாதிபத்திரி -1

    உப்பு - தேவைக்கு

    புலாவ் தயாரிக்க

    பாசுமதி அரிசி -1கிலோ

    பச்சை ஏலக்காய் 4

    சீரகம் - 1 டீஸ்பூன்

    லவங்கப்பட்டை - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 8

    தயிர் -கால்கப்

    பெரிய வெங்காயம் - 5

    நெய் - 5 டீஸ்பூன்

    தேங்காய் துண்டுகள் (நீளவாக்கில்

    மெலிதாக நறுக்கியது) -8

    பாதாம் (ஊறவைத்து தோல் உரித்தது)-10

    உலர் திராட்சை 20

    எண்ணெய் - தேவைக்கு

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சுத்தம் செய்த ஆட்டு இறைச்சி, முழு வெங்காயம், பூண்டு, சோம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், கிராம்பு, மிளகுதூள், ஜாதிபத்திரி மற்றும் உப்பு சேர்த்து 2 அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். இந்த கலவை ஆறியதும் அதில் இருந்து இறைச்சியை தனியாக பிரித்து எடுத்து வைக்க வேண்டும்.

    வெங்காயங்களை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். இந்த வெங்காயங்களை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் மற்றொரு அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் ஏலக்காய், சீரகம் சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன் இறைச்சியை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் லவங்கப்பட்டை, இஞ்சி பூண்டு விழுது. தயிர், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ௫ நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். அதன்பிறகு ஊறவைத்த அரிசியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி. அதனுடன் இறைச்சி வேகவைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு அந்த கலவையில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவை சேர்த்துக் கிளற வேண்டும். 1௦ நிமிடங்கள் மூடிய நிலையில் வேக வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் பாதாம், தேங்காய், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதை வெந்துக்கொண்டு இருக்கும் கலவையில் சேர்த்துக் கிளறி 5 நிமிடங்கள் குறைவான தீயில் வேகவைத்து இறக்கவும்.

    கடைசியாக மீதமுள்ள பொரித்த வெங்காயத்தை புலாவ் மேல் தூவ வேண்டும். அவ்வளவு தான் சுவையான காஷ்மீரி மட்டன் புலாவ் தயார்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன்  - 1 கிலோ
    அரிசி  - 1 கிலோ
    எண்ணெய்  - 100 கிராம்
    நெய் - 150 கிராம்
    பட்டை  - 2 துண்டு
    கிராம்பு  -  ஐந்து
    ஏலக்காய் - முன்று
    வெங்காயம்  - 1/2 கிலோ
    தக்காளி  - 1/2 கிலோ
    இஞ்சி, பூண்டு விழுது
    கொ. மல்லி  - 1 கட்டு
    புதினா  - 1 கட்டு
    மிளகாய்  - 8
    தயிர்  - 225 கிராம்
    சிகப்பு மிளகாய் தூள்  - 3 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிறிதளவு
    எலுமிச்சை பழம்  - 1

    செய்முறை:

    * முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெட்டிய வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.

    * பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.

    * பிறகு கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்

    * பின்னர் தக்காளி, ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும். எண்ணெயில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.

    * மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.

    * பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைக்கவும்.

    *  அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

    * வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஒவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடிக்க வேண்டும். உடனே தீயை குறைத்து கிரேவியில் கொட்டவும்.

    * கிரேவியையும் அரிசியும் நன்கு சேருமாறு கிளறி சமப்படுத்தி மூடி தம் போடவும்.



    * ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி மூடி வைக்கவும். விரும்புபவர்கள் கலரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

    * அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

    ×