என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
    • வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 3 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி, இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்ற இந்து இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கிக் கொன்றனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.

    விசாரணையில், கொல்லப்பட்டவர் ஆடை தொழிற்சாலை காவலாளியான பிஜேந்திர பிஸ்வாஸ் என்பதும், இச்சம்பவம் மைமன்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்ற இடத்தில் நடந்ததும் உறுதிசெய்யப்பட்டது. அவரை சுட்டுக் கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா என அடையாளம் காணப்பட்டதுடன், அவரிடம் இருந்து சிறிய ரக துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 3 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தீவிரமாக முன்வைத்தவர்
    • இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகத் டாக்கா கூடுதல் கமிஷனர் நஸ்ருல் இஸ்லாம் தெரிவித்தார்.

    வங்கதேசத்தைச் சேர்ந்த 'இன்குலாப் மன்ச்' மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கடந்த டிசம்பர் 12-ம் தேதி தலையில் சுடப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், டிசம்பர் 18 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உஸ்மான் ஹாதி வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர்.

    மேலும், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தீவிரமாக முன்வைத்தவர் என்பதால் இவரது கொலை வங்கதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்திய ஃபைசல் கரீம் மசூத் மற்றும் அவரது கூட்டாளி ஆலம்கீர் ஷேக் ஆகிய இருவரும் மைமென்சிங் பகுதியில் உள்ள ஹாலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகத் டாக்கா கூடுதல் கமிஷனர் நஸ்ருல் இஸ்லாம் தெரிவித்தார்.

    அவர்களுக்கு உதவி செய்த இந்தியர்களான பூர்தி மற்றும் சாமி என்பவர்களை இந்திய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    வங்கதேச காவல்துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மேகாலயா மாநில காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளன.

    எல்லையைத் தாண்டி எவரும் உள்ளே நுழைந்ததற்கான எந்தவொரு ஆதாரமோ அல்லது தகவலோ இல்லை என்று மேகாலயா எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி ஓ.பி. உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

    வங்கதேச அதிகாரிகள் கூறுவது போல, உதவி செய்ததாக யாரையும் தாங்கள் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இல்லை என்று மேகாலயா டி.ஜி.பி இடாஷிஷா நோங்ராங் தெளிவுபடுத்தியுள்ளார்.

    • 17 வருடத்திற்குப் பிறகு வங்கதேசம் திரும்பியுள்ளார்.
    • இவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் ஆணையம் சம்மதம் தெரிவித்துள்ளது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது. முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 17 வருடமாக வெளிநாட்டில் (இங்கிலாந்து) தங்கியிருந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி தனது மனைவி, மகளுடன் நாடு திரும்பினார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தாயாரை சென்று பார்த்தார். பின்னர், தேர்தலுக்கான வேலையில் இறங்கினார். முதற்கட்டாக தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்தார்.

    இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். டாக்கா 17 தொகுதியில் தாரிக் ரகுமான் போட்டியிடுகிறார். ரகுமான் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    • டாக்காவில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13ம் தேதி கலிதா ஜியா அனுமதிக்கப்பட்டார்.
    • அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

    டாக்கா:

    அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர். அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

    கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டார்.
    • இந்தச் சம்பவத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப்பட்டதையடுத்து போராட்டம்- வன்முறை வெடித்தது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமான மாணவர்கள் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய ஷெரீப் உஸ்மான் ஹாடி இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தார்.

    இதையடுத்து இந்திய தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டார். மேலும் இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டார். ராஜ்பாரி மாவட்டம் பாங்ஷா பகுதியில் 29 வயதான அம்ரித் மொண்டல் என்ற சாம்ராட் என்பவர் சிலரால் அடித்து கொல்லப்பட்டார்.

    இதற்கிடையே அம்ரித் மொண்டல் கொலைக்கு மதம் காரணம் அல்ல என்று வங்காளதேச இடைக்கால அரசு தெரிவித்து உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இச்சம்பவம் மதம் தொடர்பானது அல்ல என்றும் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்பு டையது என்றும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், இந்தச் சம்பவத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே போலீசார் கூறும்போது,"அம்ரித் மொண்டல் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவர் சாம்ராட் பஹினி என்ற குற்ற கும்பலின் தலைவராக செயல்பட்டார்.

    அவர் தனது சொந்த கிராமமான ஹொசென் டங்காவில் ஒருவரது வீட்டுக்கு தனது கூட்டாளி களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது கிராமத்தினர் திரண்டு வந்து அக்கும்பலை தாக்கினர். இதில் அம்ரித் மொண்டல் மட்டும் கிராம மக்களிடம் சிக்கி கொண் டார். அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். போலீசார் அங்கு சென்று அம்ரித் மொண்டலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கள் தெரிவித்தனர். அவரது கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன "என்றனர்.

    • ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த வங்காளதேசம் இன்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
    • சிறுபான்மையினரை உயிருடன் எரித்துக் கொல்வது போன்ற கொடூரமான முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

    இந்த நிலையில் வங்காள தேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் மீது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார்.

    சட்டவிரோதமாக அதி காரத்தை கைப்பற்றியுள்ள இடைக்கால அரசாங்கம் சிறுபான்மையினருக்கு கொடுமைகளை இழைத்து வருகிறது. ஒரு காலத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த வங்காளதேசம் இன்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளைப் பின்பற்றும் சுதந்திரத்தில் யூனுஸ் அரசாங்கம் தலை யிடுகிறது. இது சிறுபான்மையினரை உயிருடன் எரித்துக் கொல்வது போன்ற கொடூரமான முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த இருண்ட காலம் இனியும் தொடர வங்காள தேச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

    • வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • சமீபத்தில் இந்து இளைஞர் திபு சந்திர தாசை ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்தது.

    டாக்கா:

    முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல், இந்துக்களின் தொழில்களைக் குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அங்கு தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.

    இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது.மேலும், இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

    வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள வெளிநாடுவாழ் இந்துக்களான ஜெயந்தி சங்கா, பாபு ஷுகுஷில் ஆகியோரது வீடுகளை மர்ம நபர்கள் தீவைத்துக் கொளுத்தினர். இது இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வங்கதேசத்தின் ராஜ்பரி மாவட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவரை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றுள்ளது என அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ராஜ்பரி மாவட்டத்தின் பாங்ஷா உபசிலாவில் உள்ள ஹொசைந்தங்கா சந்தையில் இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர் அம்ரித் மண்டல் என தெரிய வந்தது. அம்ரித் மண்டல் ஒரு உள்ளூர் குழுவின் தலைவராக இருந்தவர். அவர் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த கும்பல் அவரைத் தாக்கியதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது என கூறினர்

    • 2008-ம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து லண்டன் சென்றார்.
    • தாய் உடல்நிலை மோசமாக உள்ளதால் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    இதற்கிடையே ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்காளதேச தேசியவாத கட்சி தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80) விடுதலை செய்யப்பட்டார்.

    சமீபத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து லண்டனில் இருக்கும் அவரது மகன் தாரிக் ரகுமான் (60) வங்காளதேசத்துக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால் தாரிக் ரகுமான் நாட்டை விட்டு வெளியேறி, இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வந்தார். 2008-ம் ஆண்டு தாரிக் ரகுமான் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை அரசாங்கம் விடுவித்த பிறகு 2008-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.

    தற்போது தாரிக் ரகுமான் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு அவர் இன்று வங்காள தேசத்துக்கு திரும்பினார். அவர் தனது மனைவி ஜுபைதா ரகுமான், மகள் ஜைமா ரகுமான் ஆகியோருடன் லண்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்டார்.

    தாரிக் ரகுமான் பயணித்த விமானம் இன்று காலை 10 மணிக்கு சில்ஹெட் உஸ்மானி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

    அங்கு தாரிக் ரகுமானுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வங்காளதேச தேசியவாத கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். சாலையின் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கட்சி கொடியை அசைத்தபடி தாரிக் ரகுமானை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    அதன்பின் அவர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் கலிதா ஜியாவைச் சந்தித்தார். இதற்கிடையே தனது கட்சியினர் மத்தியில் தாரிக் ரகுமான் உரையாற்றினார்.

    அப்போது அவர் "எல்லோரும் இணைந்து நாட்டை கட்டமைக்கும் நேரம் இது. பாதுகாப்பான வங்கதேசத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். வங்கதேசத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என யாராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி, பாதுகாப்பாக வந்து சேர வேண்டும். நாட்டு மக்களுக்காகவும், நாடுகளுக்காகவும் நான் திட்டம் வைத்துள்ளேன்" என்றார்.

    வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடவும் வங்காளதேச தேசியவாத கட்சி செயல் தலைவரான தாரிக் ரகுமான் முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டு கொல்லப்பட்டதால் சமீபத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தாரிக் ரகுமான் நாடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
    • ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார்.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்கள் போராட்டத்தால் கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

    இந்தநிலையில் வங்காளதேச இடைக்கால அரசாங்கம் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் உமர் ஹாடி குற்றம்சாட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனது சகோதரர் கொலைக்கு அதிகாரத்தில் இருப்பவர்களே காரணம். அவரை கொன்றுவிட்டு அதை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்ய விரும்புகிறீர்கள். பொதுத் தேர்தலை சீர்குலைப்பதற்காகவே அதிகாரத்தில் இருப்பவர்களால் இந்தக் கொலை நடத்தப்பட்டது.

    தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, கொலையாளிகள் மீது விரைவாக விசாரணை நடத்தப்படு வதை உறுதி செய்யுங்கள். ஆனால் அரசாங்கம் எந்த வெளிப்படையான முன்னேற்றத்தையும் செய்யவில்லை. ஷெரீப் உஸ்மான் ஹாடிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள் நீங்களும் வங்காளதேசத்தில் இருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
    • வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர்.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர்கள் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதனால் வங்காளதேசத்தில் கடந்த 11-ந்தேதி இரவு இளைஞர்கள் போராட்டங்களில் குதித்தனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

    ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வர் என்பதால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், இந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். நேற்று மாலை பாராளுமன்றத்தை கைப்பற்ற இளைஞர்கள் முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார். வங்காளதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாரும், தொழில் அதிபருமான பெலால் ஹொசைன் பபானிகஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே நேற்று அதிகாலை பெலால் ஹொ சைன் வீட்டுக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். இதில் பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.

    மேலும், பெலால் ஹொ சைனும், அவரது மற்ற 2 மகள்களான சல்மா அக்தர் (வயது 16), சாமியா அக்தர் (14) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே சுட்டு கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடி உடல் அடக்கம் நேற்று மதியம் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டார்.

    மாணவர் இயக்க தலைவர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இடைக் கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பேசும்போது, வங்கா ளதேசம் இருக்கும் வரை ஷெரீப் உஸ்மான் அனைத்து வங்காளதேச மக்களின் இதயங்களிலும் நிலைத்திருப்பார். நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

    அவரது வார்த்தைகளும் தொலைநோக்குப் பார்வையும் தேசத்தின் நினைவில் நிலைத்திருந்து எதிர்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றார்.

    இந்த நிலையில் வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரங்கள், விசா மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த ஹாதி கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.
    • இதனால் கடந்த 2 நாளாக வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தின் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் இளம் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி (32), கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கான மாணவர் எழுச்சி போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர். இவர் வரும் 2026 பிப்ரவரியில் நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட இருந்தார்.

    கடந்த 12-ம் தேதி பட்டப்பகலில் ஆட்டோவில் சென்ற ஹாதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த ஹாதி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.

    இதையடுத்து, கடந்த 2 நாளாக வங்கதேசத்தில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது. ஹாதியின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தக் கோரி நடக்கும் இப்போராட்டம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்தியாவுக்கும் எதிரானதாகவும் நடந்து வருகிறது. ஹசீனா ஆதரவு பத்திரிகைகள், ஊடக அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இடங்களில் வன்முறையால் கடந்த 2 நாளாக தலைநகர் டாக்காவில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.

    இந்நிலையில், உயிரிழந்த மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ஹாதியின் உடல் டாக்காவுக்கு கொண்டு வரப்பட்டு நேற்று அவரது இறுதிச்சடங்கு நடந்தது.

    அவரது குடும்பத்தினர் விருப்பப்படி, தேசிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தெற்கு பிளாசா பகுதியில் தேசியக் கவி காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்வில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸ் பங்கேற்றார்.

    நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி.
    • தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர்.

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை ஒடுக்க நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்ததையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது.

    இதையடுத்து ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவராக இருந்தவர் மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32).

    வங்காளதேசத்தில் வருகிற பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு அதில் போட்டியிட முடிவு செய்த ஷெரீப் உஸ்மான் ஹாடி தனது பிரசாரத்தை கடந்த 12-ந்தேதி மத்திய டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் தொடங்கினார்.

    அப்போது அவர் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஷெரீப் உஸ்மானின் நிலைமை மோசமடைந்ததையடுத்து அவரை மேல்-சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு இடைக்கால அரசாங்கம் அனுப்பியது.

    சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் ஷெரீப் உஸ்மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஏற்கனவே ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், அவர் இறந்த செய்தியை அறிந்ததும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    நேற்று இரவு தலைநகர் டாக்காவில் உள்ள சாலைகளில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ஷெரீப் உஸ்மான் கொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள ஷாபாக் சந்திப்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    ஷெரீப் உஸ்மானை கொன்றவர்களை கைது செய்யத் தவறியதற்காக உள்துறை ஆலோசகரின் உருவ பொம்மையை எரித்தனர்.

    நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் குவிந்ததால் போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. மேலும் நாட்டின் மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியது.

    தலைநகர் டாக்காவில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலோ ஆகிய 2 செய்தி அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் அந்த அலுவலக கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதில் அக்கட்டிடங்களுக்குள் ஊழியர்கள் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டுத் தீயை அணைத்தனர்.

    டாக்கா முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டம்-வன்முறையை கட்டுபடுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன.

    அவர்களை பல இடங்களில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் போராட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

    ராஜ்ஷாஹியில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்திற்கும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதடைந்தன.

    மேலும் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா வீட்டுக் கும் தீ வைக்கப்பட்டது. சிட்டகாங்கில் ஒரு முன்னாள் அமைச்சரின் இல்லத்தையும் தாக்கினர். டாக்கா-மைமன்சிங்கை இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் போராட்டகாரர்கள் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். ராஜ ஷாஹி நகரில், போராட்டக்காரர்கள் இந்தியத் தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்தியத் துணைத்தூதரக அலுவலகம் அருகே கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்தன. சிட்டகாங்கில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    நேற்று முன்தினம் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தது. அப்போது ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

    தாக்குதல் நடத்தியவர்களை திருப்பி அனுப்பும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே ஷெரீப் உஸ்மான் இறந்ததால் இந்திய தூதரகத்தை போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    தலைநகர் டாக்கா, சிட்ட காங் மற்றும் பிற நகரங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தது. இன்று காலை வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    ஆனால் ஷெரீப் உஸ்மான் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராட் டம் தொடரும் என்று மாணவர் இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்காளதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

    ×