என் மலர்
வங்காளதேசம்
- டாக்காவில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி கலிதா ஜியா அனுமதிக்கப்பட்டார்.
- கலிதா ஜியாவுக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
டாக்கா:
அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கலிதா ஜியாவை மேல் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்ல உள்ளோம் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 14 பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- அவரது மருமகளும் பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்-க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புர்பச்சல் நியூ டவுன் திட்டத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அதே வழக்கில், ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மருமகளும் பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்-க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 14 பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மொத்தம் 17 குற்றவாளிகளுக்கு தலா ஒரு லட்சம் வங்கதேச டாக்கா அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், நவம்பர் 27 ஆம் தேதி, இதேபோன்ற ஊழல் குற்றச்சாட்டில் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மற்றொரு வங்கதேச நீதிமன்றம்.
அதற்கும் முன்னதாக கலவரத்தின் போது மனிதகுலத்திற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்து நூற்றுக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்திய வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலமாகி உள்ள நிலையில் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.
- முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 181 ரன்களை குவித்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவரில் 142 ரன்களை மட்டும் எடுத்தது.
சட்டோகிராம்:
வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்களை குவித்தது. ஹாரி டெக்டர் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 69 ரன்கள் எடுத்தார். டிம் டெக்டர் 19 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.
வங்கதேசம் சார்பில் டம்ஜிம் ஹசன் 2 விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் முன்னணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தவ்ஹித் கிரிடோய் தனி ஆளாகப் போராடினார். அவர் 50 பந்தில் 83 ரன் குவித்தார்.
இறுதியில், வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்களை மட்டும் எடுத்தது. இதன்மூலம் 39 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் 1-0 என அயர்லாந்து முன்னிலை வகிக்கிறது.
அயர்லாந்து சார்பில் மேத்யூ ஹப்ரைஸ் 4 விக்கெட்டும், பேரி மெக்கர்தி 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
- ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் புர்பச்சோல் பகுதியில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஹசீனா தற்போது இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாலும், விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை என்பதாலும் நீதிமன்றம் தாமாக விசாரணையை நடத்தி தீர்ப்பை அறிவித்தது.
மூன்று வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வரும் நிலையில் இந்த புதிய தீர்ப்பு வந்துள்ளது.
- முஷ்பிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- தைஜூல் இஸ்லாம் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மிர்புர்:
அயர்லாந்து கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புரில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
வங்கதேசம் முதல் இன்னிங்சில் 476 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்து முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்தன.
211 ரன் முன்னிலை பெற்ற வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 69 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 113.3 ஓவரில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 217 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேசம் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகனாகவும், தைஜூல் இஸ்லாம் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
- வங்கதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
டாக்கா:
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. டாக்காவில் 4 பேரும், நர்சிங்டி பகுதியில் 5 பேரும், நாராயண்கஞ்ச் பகுதியில் ஒருவரும் பலியாகினர். மேலும் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் சதமடித்தார்.
- முஷ்பிகுர் ரஹிமுக்கு இந்த சதம் டெஸ்ட் போட்டிகளில் 100வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்கா:
அயர்லாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 476 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் முஷ்பிகுர் ரஹிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு வங்கதேச வீரராக இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
உண்மையைச் சொல்லப் போனால், நான் அதை கனவிலும் நினைத்ததில்லை. எனவே இது உண்மையிலேயே ஒரு பெரிய சாதனை.
எனக்கு மட்டுமல்ல, எந்த நாட்டைச் சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரருக்கும், இது ஒரு பெருமையான தருணம்.
நான் அந்த நபராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது தெளிவாகிறது. இதன் பொருள் எனது பொறுப்பு இன்னும் பெரியது, நான் அதற்கு ஏற்ப வாழ முயற்சிப்பேன்.
நான் டிரஸ்ஸிங் ரூமை விட்டு வெளியேறும்போது எனது இடைவெளியை நிரப்பக்கூடிய ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்.
100 என்பது ஒரு பெரிய எண் என்று நான் நினைக்கிறேன். எனவே அங்கு செல்லும்போது பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அனுபவத்தைச் சேகரிக்க முயற்சித்தேன், அமைதியாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்.
இது மிகவும் சிறப்பாக இருக்கிறது, எனக்கு உண்மையிலேயே மரியாதையாக இருந்தது. இந்த வகையான அங்கீகாரம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படும் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வரும் முஷ்பிகுர் ரஹிம் தனது 100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வங்க தேசம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
- அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கிறது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாணவர் இயக்கத்தின் போது போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டது போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் திங்கள்கிழமை ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தஸ்லிமா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், "நாசவேலையில் ஈடுபட்டவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனாவை குற்றவாளி என அறிவிக்கும் யூனுஸ் அரசு, அதே செயல்களைச் தாங்கள் செய்யும்போது அவற்றை நீதியானவை என்று அழைக்கிறார்கள்.
யாராவது நாவேலைச் செயல்களைச் செய்தால் தற்போதைய அரசாங்கம் அவர்களைச் சுட உத்தரவிடும்போது, அரசாங்கம் தன்னை ஒரு குற்றவாளி என்று கூறுவதில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசவேலைச் செயல்களைச் செய்தவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனா ஏன் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்?
ஜூலை மாதம் நாசவேலைச் செய்த பயங்கரவாதிகள், மெட்ரோவுக்கு தீ வைத்தவர்கள், மக்களைக் கொன்றவர்கள், காவல்துறை அதிகாரிகளைக் கொன்றவர்கள் ஏன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை?வங்கதேசத்தில் நீதியின் பெயரால் நடக்கும் கேலிக்கூத்து எப்போது முடிவுக்கு வரும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மாணவர் போராட்டங்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வங்க தேசம் அழுத்தம் கொடுத்து வருகிறது. தனது மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்று ஹசீனா குற்றம் சாட்டினார்.
அதேநேரம், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று முகமது யூனுஸ் கருத்து தெரிவித்தார்.
அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக வந்த இந்தத் தீர்ப்பு, வங்கதேச அரசியலில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
முகமது யூனுஸ் ஆட்சியில் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினராக இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் யூனுஸ் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச குற்ற தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
- இதனைத் தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆட்சியும் கவிழ்ந்தது. உடனே ஷேக் ஹசீனா வங்காளதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
வங்காள தேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. புதிய அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அவர் கொல்ல உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.
மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக அவருக்கு எதிரான வழக்கில் இன்று அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்து, மரண தண்டனை அளித்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை ஷேக் ஹசீனா ஏற்கவில்லை. பாரபட்சமானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியா- வங்கதேச இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசை வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அசாதுஸ்மான் கான் கமலையும் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இந்திய தரப்பில் இதுவரை பதில் அளிக்கவில்லை.
- கடந்த ஆண்டு மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது.
- இந்த வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டு.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது. பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார்.
வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசு ஷேக் ஹசீனா மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த குற்றசாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
- முன்னாள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
- மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன் முறையாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது. பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார்.
வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார். இந்தநிலையில் அவர் மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த குற்றசாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்து.
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவயில் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
- வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
- இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனை விவரம் இன்று வெளியிட உள்ளதாக அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதையொட்டி வங்கதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






