search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting"

    • பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது.
    • திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34 தொகுதிகளில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

    சென்னையில் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளில் வடசென்னையில் 60.13 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இங்கு 64.23 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 4 சதவீதம் அளவுக்கு அங்கு வாக்குகள் குறைந்துள்ளன. தென் சென்னையில் 54.27 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

    இதில் தென் சென்னையில் 3 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 5 சதவீத ஓட்டுகளும் கடந்த தேர்தலைவிட குறைவாக பதிவாகியுள்ளன. திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் 68.31 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

    கடந்த தேர்தலில் இங்கு 72.33 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 71.55 சதவீத ஓட்டுகளும் ஸ்ரீபெரும்புதூரில் 60.21 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் 4 சதவீதம் அளவுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சதவீத வாக்குகளும் குறைந்துள்ளன.

    அரக்கோணத்தில் கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் அளவுக்கு குறைந்து 74.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கிருஷ்ணகிரி தொகுதியில் 71.31 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும்.

    தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு 2019-ம் ஆண்டு தேர்தலிலும் 82.33 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. இருப்பினும் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அளவுக்கு குறைவாகவே அங்கு வாக்கு பதிவாகி உள்ளது.

    திருவண்ணாமலை தொகுதியில் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 73.88 சதவீதமும், ஆரணியில் 3 சதவீத வாக்குகள் குறைந்து 75.65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாமக்கல் தொகுதியில் 78.16 சதவீத வாக்குகளும், ஈரோட்டில் 70.45 சதவீத வாக்குகளும், திருப்பூரில் 70.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது.

    இந்த 3 தொகுதிகளிலும் 3 சதவீதம் அளவுக்கு குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளன. நீலகிரி தொகுதியில் கடந்த தேர்தலில் 73.99 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.

    இது 5 சதவீதம் குறைவாகும். கரூர் தொகுதியில் ஒரு சதவீதம் குறைந்து 78.61-ஆக பதிவாகியுள்ளது. திருச்சியில் 2 சதவீத வாக்குகள் குறைந்து 67.45 ஆகவும், பெரம்பலூரில் 77.37 ஆகவும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கடலூரில் 76.48 ஆக இருந்த வாக்கு சதவீதம் 4 சதவீதம் குறைந்து 72.28 ஆக பதிவாகி இருக்கிறது.

    சிதம்பரம், மயிலாடுதுறையில் தொகுதிகளில் 2 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. சிதம்பரத்தில் 75.32 சதவீதமும் மயிலாடுதுறையில் 70.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

    நாகப்பட்டினத்தில் கடந்த தேர்தலில் 76.88 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 5 சதவீதம் குறைந்து 71.55 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சையில் 2 சதவீதம் குறைந்து 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சிவகங்கை தொகுதியில் கடந்த தேர்தலில் 69.87 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது அது 5 சதவீதம் குறைந்து 63.94 ஆக பதிவாகி உள்ளது.

    மதுரை தொகுதியிலும் 5 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. கடந்த தேர்தலில் 66.02 சதவீதமாக இருந்த வாக்குகள் தற்போது 61.92 சதவீதம் குறைந்துள்ளது. தேனி தொகுதியிலும் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 69.87 சதவீதம் பதிவாகியுள்ளன.

    விருதுநகர் தொகுதியில் 2சதவீத வாக்குகள் குறைந்து 70.17 சதவீதமாக பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் 68.35 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 68.18 சதவீதம் ஓட்டு போட்டுள்ளனர்.

    தூத்துக்குடியில் 69.43 ஆக இருந்த வாக்கு சதவீதம் 66.88 ஆக குறைந்துள்ளது. தென்காசியில் 71.37 ஆக இருந்த வாக்கு சதவீதம் 67.55 ஆகவும், நெல்லையில் 67.21 சதவீதமாக இருந்த வாக்குகள் 64.10 ஆகவும் குறைந்து உள்ளன. கன்னியாகுமரியில் 69.83 சதவீதமாக இருந்த வாக்குகள் 65.46 சதவீதமாக குறைந்துள்ளன.

    தமிழகத்தில் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைவிட தற்போதைய தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் 73.74 சதவீத வாக்குகளும் 2019-ம் ஆண்டு 72.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 69.46 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. வாக்கு சதவீதம் குறைவுக்கு கொளுத்தும் வெயில், தொடர் விடுமுறை ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

    மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போடாமல் தவிர்த்திருப்பது அரசியல் கட்சிகள் மீதான கோபத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். இது தேர்தல் முடிவின் போது எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது. மக்களின் இந்த தேர்தல் வெறுப்பு தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    குறைவான வாக்குப்பதிவுகளில் மத்திய சென்னை, மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், தேனி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் 5 தொகுதிகளின் வாக்கு சதவீதம் சற்று அதிகரித்தும் காணப்படுகிறது. வேலூர் தொகுதியில் 71.32 சதவீதமாக இருந்த வாக்குகள் 73.42 ஆக உயர்ந்துள்ளது.

    விழுப்புரத்தில் 74.56 ஆக இருந்த வாக்கு சதவீதம் 76.47 ஆகவும், கள்ளக்குறிச் சியில் 78.77 சதவீதமாக இருந்தது 79.25 ஆகவும், சேலத்தில் 77.86 ஆக இருந்த சதவீதம் 78.13 ஆகவும் கோவையில் 63.86 ஆக இருந்த வாக்கு சதவீதம் 64.81 ஆகவும் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சிக்கிமில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
    • சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடக்கிறது.

    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இம்மாநிலத்தில் 4.65 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். சிக்கிமில் இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில், சிக்கிமில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதியும், பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும் நடைபெறுகிறது.

    • தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இந்த நிலையில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் அ.தி.மு.க.வினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    கள்ள ஓட்டு போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை சீல் வைக்கப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்டனர்.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவி இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அவை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவு.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், மாலை 5 மணிக்கு 59.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

    உத்தரகாண்டில் 53.56 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 57.54 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 63.25 சதவீதமும், மகாராஷ்டிராவில் 54.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
    • வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின.

    இம்பால்:

    நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

    21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    கொங்மேன் மண்டலத்தில் உள்ள 5 தொங்ஜு வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால், தேர்தல் அதிகாரி உடனே வாக்குப்பதிவை நிறுத்தினார். கிழக்கு இம்பாலில் 2 வாக்குச்சாவடியும், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடியும் என மொத்தம் 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூரில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின. பிற்பகல் 3 மணி அவரை அங்கு 63 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணிப்பூரில் காலை 7 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 67.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் துப்பாக்கிச்சூடும், மிரட்டல் சம்பவமும் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    60 சட்டமன்ற இடங்களில் 32 இடங்களை கொண்ட இன்னர் மணிப்பூர் என அழைக்கப்படும் இடத்தில் 71.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அவுட்டர் மணிப்பூர் பகுதியான 28 சட்டமன்ற இடங்களில் 15-ல் 61.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    நாகா மற்றும் குகி மக்கள் வசித்து வரும் சண்டேல் பகுதியில் 85.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீதம் வாக்குகள் பதிவு.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    உத்தரகாண்டில் 45.62 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 47.44 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 53.40 சதவீதமும், மகாராஷ்டிராவில் 44.12 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இந்நிலையில், வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதிகபட்சமாக, சேலத்தில் 46.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதற்கிடையே, சென்னையில் வழக்கம்போல் வாக்குப்பதிவு மந்தமாக பதிவாகியுள்ளது. ஒரு மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தில் சென்னை தொகுதிகள் கடைசி 3 இடங்களை பிடித்துள்ளது.

    இதில், மத்திய சென்னை 32.31 சதவீதமும், தென் சென்னை 33.93 சதவீதமும், வட சென்னை 35.09 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 39.51 சதவீதம் வாக்குகள் பதிவு.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    உத்தரகாண்டில் 37.33 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 37 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 44.43 சதவீதமும், மகாராஷ்டிராவில் 32.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

    அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.

    இதில், மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் தொகுதியில் உள்ள தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வாக்களிக்க வந்தவர்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    உத்தரகாண்டில் 24.83 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 25 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 30.5 சதவீதமும், மகாராஷ்டிராவில் 19.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
    • நடிகர் அஜித், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களிப்பு.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அதன்படி, நடிகர் அஜித், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வருகை தந்தார்.

    விஜய் வருகையால், வாக்குச்சாவடியில் கூட்டம் அலைமோதியது.

    பின்னர், பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட விஜய் வாக்குச் சாவடிக்குள் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×