search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
    • அதில், காலாண்டுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டரால் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப் படுகிறது.

    நாமக்கல்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

    அதில், காலாண்டுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டரால் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப் படுகிறது. அதன்படி, கலெக்டர் உமா, காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு அறையில் வைக்கப்

    பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு கருவிகள் இருப்பில் உள்ளதை ஆய்வு செய்தார்.

    மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 250 வாக்குப்பதிவு எந்திர கட்டுப்பாட்டு கருவிகள் திருப்பூர் மாவட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த ஆய்வின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதவன், தனி தாசில்தார் திருமுருகன், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
    • ஜூன் 14 ந் தேதி பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை திரும்பப்பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 ந் தேதி நடைபெறுகிறது என்று கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- திருப்பூா் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 ந் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 10 ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. ஜூன் 12 ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 14 ந் தேதி பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை திரும்பப்பெறலாம். இதையடுத்து மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 -ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. பின்னா் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இத்தோ்தல் மூலம் மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 உறுப்பினா்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து 10 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இதில், வாக்களிக்கும் வாக்காளா்கள் அடையாளச் சான்று படிவம் 15 ல் தங்களது நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையா், செயல் அலுவலரிடம் இருந்து சான்றொப்பம் பெற்ற பின்னரே வேட்புமனு தாக்கல் செய்யவும், வாக்களிக்கவும் அனுமதிக்கப்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்த எந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நாமக்கல்:

    இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு மற்றும் வழி காட்டுதலின்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள எலக்ட்ரா னிக் வாக்குப்பதிவு எந்தி ரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் நாமக்கல் ஆர்.டி.ஓ அலுவல கத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப் பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    இங்கு, 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த எம்-2 வகை வாக்குபதிவு எந்திரங்கள் 1366, கட்டுப்பாட்டு கருவிகள் 621 மற்றும் எம்-3 வகையிலான பழுதடைந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் 8 மற்றும் வாக்கா ளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி கள் 3 என மொத்தம் 1,998 வாக்குபதிவு எந்திரங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை யில் திறக்கப்பட்டு, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் சரிபார்க்கப்பட்டது.

    பின்னர் இந்த எந்தி ரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரா னிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், நாமக்கல் ஆர்.டி.ஓ (பொறுப்பு) சுகந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் திருமுருகன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.
    • எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார்.

    அங்காரா:

    துருக்கியில் கடந்த 15-ந்தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது.

    துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.

    இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும், கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28-ந்தேதி (இன்று) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இன்று துருக்கியில் அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப் பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    எர்டோகன் கடந்த 2003-ம் ஆண்டு முதல் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு 20 ஆண்டுக்கு பிறகு அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் எர்டோகனுக்கு கடும் சவால் அளித்து வருகிறார்.

    2003 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த எர்டோகன், அப்ப தவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமான அதிபர் பதவியை கொண்டு வந்தார். அவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.
    • தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்காக 15 பேர் கொண்ட சென்னை நகர விற்பனைக் குழு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் அமைக்கப்படுகிறது.

    இதில் 6 பேர் தெருவோர வியாபாரிகளில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் இன்று நடைபெற்றது.

    இந்த தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.

    இந்த தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. காலை முதலே வியாபாரிகள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்.

    சாலையோர வியாபாரிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் சான்றிதழை காண்பித்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

    திருவொற்றியூர் ஜெய் கோபால் கரோடியா அரசினர் உயர்நிலைப்பள்ளி, மணலி மண்டல அலுவலகம், மாதவரம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் உயர் நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல் அரசினர் மேல் நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட் டிருந்த வாக்குச்சாவடிகளில் நடைப்பாதை வியாபாரிகள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

    இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் வாக்கு எண்ணும் மையமான அண்ணாநகர் அம்மா அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில மூடி சீல் வைக்கப்படும்.

    நாளை (28-ந்தேதி) காலை 9 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
    • கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.

    ராய்பூர்:

    சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;

    "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
    • மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

    அகர்தலா:

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது.

    60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

    இங்கு தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    சர்வதேச எல்லைகள், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

    ஆட்சியை பிடிப்பது யார்? இன்று வாக்குப்பதிவு முடிந்தாலும், தேர்தல் முடிவுக்காக 2 வார காலம் காத்திருக்க வேண்டும். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரயிலடியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பது ஜனநாயக கடமை, நிச்சயமாக வாக்களிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    மேலும் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர், ஓ.பி.எஸ், கவச உடையுடன் வந்து வாக்களிப்பு
    • திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    நாடு முழுவதும் உள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர்பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் வாக்களித்தனர். நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகிய எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றிருந்தனர்.

    தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 10 மணிக்கு முதல் நபராக வந்து தனது வாக்கு பதிவு செய்தார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.  


    இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களும் வாக்குகளை பதிவு செய்தனர். 


    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க மாலை 4 முதல் 5 மணி வரை நேரம் அளிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வாக்களித்தனர்

    மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர். மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். வருகிற 25-ந்தேதி அவர் பதவி ஏற்பார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print