என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எர்டோகன்"

    • அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, "அது அசாத்தியம்!" என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.
    • இந்த பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

    காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேற்று உலக தலைவர்கள் எகிப்தில் கூடினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எகிப்து இணைந்து தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் பாகிஸ்தான், துருக்கி, கத்தார் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் புகைப்பிடிக்கும் பழக்கத்தைப் பற்றி துருக்கி அதிபர்  எர்டோகான் கிண்டலாகப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    மாநாட்டில் மெலோனியிடம் பேசிய எர்டோகான், "நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கியபோது பார்த்தேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் கையில் உள்ள சிகரெட் இருந்தது. இந்த பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

    எர்டோகானின் பேச்சைக் கேட்ட அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, "அது அசாத்தியம்!" என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.

    இதற்கு மெலோனியும் அதேபோல வேடிக்கையாகப் பதிலளித்தார். அதாவது, "எனக்குத் தெரியும். ஆனால், நான் புகைப்பிடிப்பதை நிறுத்தினால், எனக்கு எரிச்சல் அதிகமாகி, யாரையாவது ஏதாவது சொல்லிவிடுவேனோ!" என்று அஞ்சுவதாக கூறி சிரித்தார். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    துருக்கியை புகைப்பழக்கம் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் எர்டோகான் அடிக்கடி கூறி வருகிறார்.

    மறுபுறம், வெளிநாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள தனது புகைப்பழக்கம் உதவியதாக மெலோனி முன்பு ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது.
    • இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபையில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆவேசமாக உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, "நம்மில் ஒவ்வொருவரின் கண் முன்னேயும், காசாவில் 700 நாட்களுக்கும் மேலாக இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது. இவை வெறும் எண்கள் அல்ல; ஒவ்வொன்றும் ஒரு அப்பாவியான உயிர்.

    காசாவில் உள்ள மனிதாபிமான பேரழிவு நவீன வரலாற்றில் மிகப்பெரியது. இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் குண்டுவெடிப்புகளால் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.

    குழந்தைகள் பசி மற்றும் மருந்து பற்றாக்குறையால் இறக்கும் உலகில் அமைதி இருக்க முடியுமா?. கடந்த நூற்றாண்டில் கூட மனிதகுலம் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டதில்லை.

    இது மனிதகுலத்தின் மிக மோசமான நிலை. காசாவில் நடப்பது போர் இல்லை. இது ஒரு படையெடுப்பு, ஒரு இனப்படுகொலை, ஒரு மிகப்பெரிய படுகொலை கொள்கை" என்று தெரிவித்தார்.

    பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த எர்டோகன் மற்ற நாடுகளும் தாமதமின்றி செயல்பட வலியுறுத்தினார்.

    காசாவில் உடனடியாக போர்நிறுத்தம், தடையற்ற மனிதாபிமான அணுகல் மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை எர்டோகன் கோரினார்.

    மேலும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை காசா மற்றும் மேற்குக் கரைக்கு அப்பால் சிரியா, ஈரான், யேமன், லெபனான் மற்றும் கத்தாருக்கு விரிவுபடுத்தி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக எர்டோகன் குற்றம்சாட்டினார். 

    • துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எர்டோகனின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் முதன்மையாக  கவனம் செலுத்தப்பட்டது.

    குறிப்பாக எரிசக்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவுடனான மோதலின் போது எர்டோகனின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

     சந்திப்புக்குப் பிறகு, ஷெபாஸ் ஷெரீப் 'எக்ஸ்' மேடையில் பதிலளித்து, "இன்று இஸ்தான்புல்லில் எனது அன்பு சகோதரர் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனைச் சந்தித்தது ஒரு மரியாதை.

    சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா மோதலின் போது எங்களுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்" என்று கூறினார். 

    • துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு ஒரு சான்றாகும்.
    • பாகிஸ்தான்-துருக்கி நட்புறவு நீடூழி வாழ்க!

    இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த துருக்கி நாட்டுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்த பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பைப் பாராட்டி எர்டோகன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

    எர்டோகன் தனது அறிக்கையில், "எனது அன்பு நண்பர் ஷேபாஸ் ஷெரீப் அவர்களே, துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு ஒரு சான்றாகும். உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகைய உறவை பேணுகின்றன. துருக்கியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நாங்கள் விரும்புவது போல, பாகிஸ்தானிலும் அதை விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    சர்ச்சைகளைத் தீர்ப்பதில் பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொள்கையைப் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் "கடந்த காலங்களில் நல்ல மற்றும் கெட்ட காலங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நாங்கள் நின்றது போல, எதிர்காலத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்போம். பாகிஸ்தான்-துருக்கி நட்புறவு நீடூழி வாழ்க!" என்று எர்டோகன் தெரிவித்தார்.

    • துருக்கி அதிபர் எர்டோகன் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
    • ரஷிய அதிபர் புதினுடன், எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய ராணுவத்திற்கு உக்ரைன் வீரர்களும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷிய படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

    இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இரண்டு நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்திருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை புதினையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செயதுள்ளார்.

    அவ்வகையில், ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என புதினிடம் எர்டோகன் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த புதின், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷிய பிராந்தியமாக உக்ரைன் ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக எர்டோகனிடம் கூறியிருக்கிறார். இத்தகவலை ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    புதிய பிராந்தியங்கள் தொடர்பான உண்மை நிலையை கருத்தில் கொண்டு, உக்ரைன் அதிகாரிகளின் நிபந்தனையின் மீது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான ரஷியாவின் திறந்த நிலைப்பாட்டை புதின் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனெட்ஸ், லுகான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை முழுமையான கட்டுப்படுத்தாவிட்டாலும், அவற்றை இணைத்துவிட்டதாக ரஷியா கூறுகிறது.

    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும்.
    • தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது.

    இஸ்தான்புல்:

    துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்தவண்ணம் உள்ளது. உயிரிழப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

    சிரியாவிற்கு அருகிலுள்ள தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது. பனிப்பொழிவால் சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை விரைவாக கொண்டு செல்ல முடியவில்லை.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அதிபர் தாயிப் எர்டோகன். மீட்பு பணிகளை விரைந்து முடிப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.

    100 ஆண்டுகளில் இல்லாத அளவில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எர்டோகனின் அரசாங்கம் மிகவும் மந்தமாக பணி செய்வதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே, எர்டோகன் அதிரடியாக அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

    • துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.
    • எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார்.

    அங்காரா:

    துருக்கியில் கடந்த 15-ந்தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது.

    துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.

    இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும், கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28-ந்தேதி (இன்று) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இன்று துருக்கியில் அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப் பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    எர்டோகன் கடந்த 2003-ம் ஆண்டு முதல் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு 20 ஆண்டுக்கு பிறகு அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் எர்டோகனுக்கு கடும் சவால் அளித்து வருகிறார்.

    2003 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த எர்டோகன், அப்ப தவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமான அதிபர் பதவியை கொண்டு வந்தார். அவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    • துருக்கியில் அதிபர் தேர்தலின் 2வது சுற்று வாக்குப் பதிவு நேற்று நடந்தது.
    • 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
    துருக்கியில் கடந்த 15ம் தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமல் கிலிக்டரோக்லு இடையே கடும் போட்டி நிலவியது.

    துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும்,கெமல் கிலிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

    யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28ம் தேதி (நேற்று) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி நேற்று துருக்கியில் அதிபர் தேர்தலின் 2வது சுற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

    இந்நிலையில் துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

    அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வாக்குகள் பெற்றார்.

    இதன் உறுதியான முடிவு வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

    அவர் ஏற்கனவே துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் 15 ஆண்டு ஜனாதிபதி பதவி சாதனையை முறியடித்துள்ளார்.

    • துருக்கி அதிபராக ஏர்டோகன் 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
    • கொட்டும் மழையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    அங்காரா:

    துருக்கியில் அதிபர் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு கடந்த 28-ம் தேதி நடந்தது. இதில் தற்போதைய அதிபர்  எர்டோகன், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கிலிக்டரோக்லு இடையே கடும் போட்டி நிலவியது.

    இதில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வாக்குகள் பெற்றார்.

    இந்நிலையில், தலைநகர் அங்காராவில் நடைபெற்ற விழாவில் எர்டோகன் துருக்கி அதிபராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, கொட்டும் மழையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது

    துருக்கியின் பிரதமராகவும் அதிபராகவும் கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார்
    • உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வர துருக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டது

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. என்றாலும், இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. ராணுவ உதவி கேட்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்றுள்ளார். துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு அதிபர் எர்டோகன் வரவேற்றார். அப்போது உக்ரைன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் தெரிவித்தார்.

    முன்னதாக, சுவீடன் நேட்டோ படையில் இணைய விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் துருக்கி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடன் நிரந்தர உறுப்பினர் ஆக முடியவில்லை. துருக்கி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் குர்திஷ் மற்றும் இதர குரூப் விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்காததால் சுவீடனுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் பின்லாந்து நேட்டோவில் இணைய ஆதரவு அளித்துள்ளது.

    துருக்கி- ஐரோப்பிய நாடுகள் இடையே உணவு தானியம் குறித்த ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்த ஒப்பந்தம் கருங்கடல் வழியாக உணவு தானியங்களை கொண்டு செல்வது என்பதாகும். இந்த ஒப்பந்தம் வரும் ஜூலை 17-ந்தேதி முடிவடைகிறது. இதை நீட்டிக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என எர்டோகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் தானியங்கள் கருங்கடல் வழியாக எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். சுமார் 30 மில்லியன் டன் உணவு தானியங்கள் வெளிநாடுகளுக்கு உக்ரைனில் இருந்து செல்வதால் உணவு தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.

    ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளதால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா தயக்கம் காட்டுகிறது.

    உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளிடமும் துருக்கி நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக இருக்க உதவியாக இருக்கிறது.

    சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகித்து வந்தன. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது
    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் நீட்டிப்பு குறித்து பேசப்படும் என எதிர்பார்ப்பு

    ரஷிய அதிபர் புதின் சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த மாதம் துருக்கி வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எர்டோகன் கூறுகையில் ''தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், வெளிநாட்டுத்துறை மந்திரி, புலனாய்வுத்துறை அமைப்பின் தலைவர்கள் புதின் வருகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது, இந்த மாதத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன்'' என்றார்.

    கடந்த புதன்கிழமை இரு தலைவர்கள் போன் மூலம் பேசிக்கொண்டனர். அப்போது புதின், துருக்கி வருகையை எர்டோகன் ஏற்றுக்கொண்டார்.

    புதின் வருகையின்போது கருங்கடல் தானிய ஒப்பந்தம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ரஷியா இன்னும் நீட்டிக்காமல் உள்ளது. இதை நீட்டித்தால் துருக்கி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியும்.

    ஜூலை 2022-ம் ஆண்டு துருக்கி, ஐக்கிய நாடுகள், உக்ரைனுடன் தானிய பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தில் ரஷியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் 17-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின் ரஷியா ஒப்பந்தத்தை நீட்டிகக்வில்லை.

    • அமெரிக்காவில் எலான் மஸ்க்- துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு
    • ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை துருக்கி வரவேற்கும்

    துருக்கி அதிபர் எர்டோகன் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார். துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, துருக்கி அதிபர் அலுவலகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    "ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வரவேற்பதாக எலான் மஸ்க் இடம் எர்டோகன் தெரிவித்தார்" என எர்டோகன் அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்போது ஸ்டார்லிங் வழங்க பாதுகாப்பு தொடர்பாக உரிமத்தை பெற ஸ்பேஸ்எக்ஸ் விரும்புவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது எலான் மஸ்க் தனது மகனை கையில் வைத்திருந்தது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

    டெஸ்லாவின் முதலீட்டிற்கான மிகவும் முக்கியமான நாடுகளில் துருக்கியும் ஒன்று என மஸ்க் தெரிவித்ததாக, துருக்கி தொழில்துறை மற்றும் டெக்னாலாஜி மந்திரி மெஹ்மெட் ஃபதிக் கசிர் தெரிவித்துள்ளா். இருவரும் துருக்கியின் ஆயுதமேந்திய வான்வழி டிரோன் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினர் எனக் கூறினார்.

    ×